-
14th November 2015, 01:40 PM
#11
Senior Member
Senior Hubber
இறை கிறுக்கனின் பார்வையில்
ஒன்றே இறை என்ற
மறைகளில் குறை உண்டோ
புரிதலின் குறை
புனிதத்தின் குறையாமோ
இறையை எடுத்துகாட்ட
வழியில்லை எனினும்
மனிதனின் கண்டுபிடிப்பை(உருவாக்கவில்லை)
இனைத்து பார்க்கிறேன்
மின்சாரம் இறைப்போல்
நிறமற்றது உருவற்றது
உயிருள்ளது அளர்பரியது
உணர மட்டுமே முடியும்
மின்சாரமே முதன்மை
அதனால் மின்சாதனம்
பொய்யென ஆகிடுமோ
மின்சாரம் இல்லா
மின்சாதனமே பொய்
மின்சாரம் ஒன்றே
அதன் பயன்
மின்சாதனத்தை பொருத்தே
வினை வெளிப்படும்
மின்சார நுகர்தலில்(உருவாக்கவில்லை)
பல விதம் உண்டு
காற்றில் நீரில்
கடலில் சூரியனில்
எதில் எடுத்தாலும்
அதன் சுயம் ஒன்றே
மின்சாதனம் பொய்யென்பாரும்
மின்சாதனமே மெய்யென்பாருமே
மிகுதியாய் உளர்
கிறுக்கனின் பார்வையில்....
-
கிறுக்கன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th November 2015 01:40 PM
# ADS
Circuit advertisement
Bookmarks