-
8th February 2016, 10:13 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
abkhlabhi
என் மறைவிற்கு பிறகு என்னைப் பற்றி புரிந்துக் கொள்வார்கள் என்று பேசியிருக்கிறீர்களே , இப்படிப் பட்ட வார்த்தைகளை கூறி பதற வைக்க வேண்டுமா ?
என்று வாசகர் ஒருவரின் கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில் :
"தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும் . வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும் . பகலிருந்தால் இரவு இருக்கும் . செயலிருந்தால் விளையவிருக்கும் . இளமை இருந்தால் முதுமை இருக்கும் . பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும் .
ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப் படும் . எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் , அது அமரர் பேறிஞர் அன்னவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன் .....
நன்றி Face book and Kishore K Swamy
நிதர்சனமான உண்மை. புரட்சித்தலைவர் உயிருடன் இருந்த போது, அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் தற்போது அவரது பெருமையை உணர்ந்து, அவரின் பொற்கால ஆட்சியை வானளாவ புகழ்கின்றனர்.. திரைக்காவியங்களில் இடம் பெற்ற அவரது போதனைகளையும் போற்றி மகிழ்கின்றனர்.
அவரது பக்தர்கள்,மற்றும் ரசிகர்களாகிய எங்களை பெருமைப்பட வைத்த ஒரு மகத்தான மாபெரும் சக்தி படைத்த தலைவர்தான் நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்கள் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th February 2016 10:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks