-
13th April 2016, 09:31 PM
#11
Senior Member
Senior Hubber
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிரைவா நின்ற வளை
என்ன அர்த்தமாம்..
என் ஆளு இருக்கானே.. செம்ம.. ரொம்ப ச் சமர்த்து...அழகன் ஹேண்ட்ஸம்.. அவன் பார்த்து ரசிக்கணும்னு நான்பார்த்துப்பார்த்து காசுகொடுத்து இந்த வளையல்களை வாங்கி என் கையிலிட்டு அழகு செய்தேன்.. அவையும் கம்பீரமாய்ச் சிரித்து கலகலவென்றிருந்தன..
ஆனா என் ஆளு என்னை விட்டுப் போய்ட்டான்.. அது எனக்குத் தெரியலை..இந்த வளையல்களுக்குத்தெரிஞ்சுடுத்து போல..என் கைகளிலிருந்து நழுவி விழுந்துவிட்டன.. அப்படி விழும்போதாவது... அடி பெண்ணே..உன் தலைவன் உன்னை விட்டுப் போய்ட்டான்னு ஒரு கோடி..சொல்லியிருக்க வேணாமோ சொல்லலையே
எனப் புலம்புகிறாள் தலைவி...எனச் சொல்கிறார் வள்ளுவர்..
அது சரி..இதையே ஒரு பாட்டில கண்ண தாசன் சொல்றார்..என்னவாக்கும்..
கையிலே வளையலில்லை
கண்ணிரண்டில் தூக்கமில்லை
கட்டியுள்ள ஆடைகளும் ,கடலலையே -என்
சிற்றிடையில் தங்கவில்லை கடலலையே
பாவம் இந்தப் பொண்ணுக்கு தலைவன் பிரிந்திருந்த துக்கத்தில் உடல் இளைத்து கட்டியிருந்த ஆடைகளும் நெகிழ்கின்றனவாம்.. ம்ம்
பாட் சுசீலாம்மா.. ஆடியோ தான் கிடைச்சது..
-
13th April 2016 09:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks