-
14th April 2016, 07:54 AM
#2311
Senior Member
Veteran Hubber
.
Happy Tamil New Year !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th April 2016 07:54 AM
# ADS
Circuit advertisement
-
14th April 2016, 07:56 AM
#2312
Senior Member
Diamond Hubber
-
14th April 2016, 08:29 AM
#2313
Senior Member
Diamond Hubber
'டக்'கென்று இந்தப் பாடல் மூளையின் ஒரு மூலையில் மின்னியது.
வித்தியாசம் கொஞ்சம் தெரியும். மலையாள பாலச்சந்திரனும், நம்ம பேவரிட் கீதாஞ்சலியும் ஊட்டி ஹேர்பின் பெண்டுகளில் காரில் உல்லாசப் பயணம். உபயம் 'தெய்வத்தின் தெய்வம்'. பாடலும் விறுவிறு. டியூனும் ஜோரான ஜோர்.
பிபிஎஸ் 'லிலி லிலி லிலி லி' ஹம்மிங் தரும்போது 'க்ளுக்' என்று சிரிக்காமல் இருக்க முடியாது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th April 2016, 10:21 AM
#2314
Senior Member
Senior Hubber
//சிக்கா.. ராகவ்ஜி சொல்றது என்னன்னா... அப்பர் படத்துக்கு போயிட்டு ஏன் லோயர் போர்ஷனை கவனிச்சீங்க... அப்படின்னுதான்.. வேற ஒண்ணுமில்லே..//
ஓய்.. தோள்ல தான் அவங்க ஸ்கின் போட்டிருப்பாங்கன்னு நினைவு.. ஸோ நானும் தோளைத் தான் சொன்னேன்..
-
14th April 2016, 10:22 AM
#2315
Senior Member
Senior Hubber
//எனக்கென்னவோ 'sin of adam and eve' படம் மனசுல 'பாவமா' ஓடுது.// நம்ம தோஸ்த் கோபால் இருந்தார்னா இதப் பத்தி ஒரு வியாசமா ஏதாவது எழுதியிருப்பார்.. நான் இந்தப் படம்லாம் பார்த்ததில்லையே..ம்ம்..
-
14th April 2016, 10:59 AM
#2316
Senior Member
Senior Hubber
அந்தக் காலத்தில.. ச்ச்சின்னக் கண்ணன் வேலை சேர்ந்த புதிதில்
இருந்த இளம் மலையாளப் பெண்ணிடம் தயங்கிய வண்ணம் இன்னிக்கு
உங்களுக்கு விஷூ தானே ஹாப்பி விஷூன்னு சொன்னானா..அதுக்கு
அந்த சேர நனனாட்டிளப் பாவை வெள்ளரிக் கீற்றை வெள்ளியில் வடித்தாற்போல
பளீர்ச்சிரிப்பு க் கொடுத்து யெஸ் கண்ணுன்னு சொல்லி கை குலுக்கினாளா
சடனா நினைவுக்கு வந்துச்சா.. இதை எழுதிட்டேனா..( நம்பணும்ங்க.)
ஆமா மெனச்சொல்லி அல்லிவிழி மேலுயர்த்தி
தாமாகக் கைகொடுத்த தண்ணிலவே - போனாலும்
நீங்கா திருக்கிறதே நின்நினைவு நெஞ்சத்தில்
பாங்காய்ச் சிரிக்கிறதே பார்....
//மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளத்தில் நீ பொங்க// ம்ம்.. டி. ராஜேந்தர்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th April 2016, 11:48 AM
#2317
Junior Member
Newbie Hubber
ஏதோ ஒரு புண்ணியவான் அருமையாக மிக்ஸ் செய்து ஒரு காட்சி விரிகிறது. பாலும் பழமும் சாந்தியுடன் இணைத்து பார்க்க முடியாவிட்டாலும் ,பாட்டின் துடிப்பில் இணைய முடிகிறது. மூல படத்தில் சௌகாரை வைத்து படமாகியிருந்ததாக ஞாபகம்.இதுவும்,காதலெனும் வடிவம் கண்டேன் பாடலும் சுசீலா (கின்னஸ் சாதனை நாயகி) குரலில் அப்படி....அப்படி...இருக்கும். ஒரு இளம் பெண் தண் மனத்தை கட்டுக்குள் வைக்காமல்,மணத்தில் வைத்தால் இப்படித்தான் என்ற இலக்கணம் ,தேன் குரலில் சொல்ல படும் அதிசயம்.(ராட்சசிக்கும் அம்மம்மா கருப்பு பணம் உண்டே?)
http://youtubehd.in/watch/ptyn9VWa_MA
Last edited by Gopal.s; 14th April 2016 at 12:27 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th April 2016, 05:37 PM
#2318
Junior Member
Platinum Hubber
P.SUSEELA'S MELODY VOICE.
-
14th April 2016, 07:11 PM
#2319
Senior Member
Diamond Hubber
கோ,
நாம் இது பற்றி போனில் நிறைய தடவை பேசியிருக்கிறோம். அந்த இரண்டுடன் இதையும்தான் நான் சேர்த்துக் கொள்வேன். இரண்டுக்கும் இது இளைத்ததல்ல...சளைத்ததல்ல. இரண்டுமே இன்பத் தென்றல்கள் தாம்.
இது இன்னும் உற்சாகம் கொப்பளிக்கும் தென்றல்.
கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா
காணும் உலகம் புரிந்ததா
காணும் உலகம் புரிந்ததா
'ஹஹ..ஹஹா... ஒஹொஹொஹோ...ஹோஹோஹஹோ'
இந்த ஹம்மிங் ஹசத்தல்தானே!
இதோ இதோ இந்த பூமியிலே
எத்தனை ஜாலங்கள் பாதையிலே
அதே அதே நிலை நீ அறிந்தால்
ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே
சிலை சிலை ஒன்று நேரினிலே
சிரிப்பதன் காரணம் புரிகின்றதா
அலை அலை என்று கண்களிலே
ஆயிரம் கலைகள் தெரிகின்றதா
மலர் மலர் மணம் வருகின்றதா
மயக்கத்திலே மனம் அசைகின்றதா
இனம் இனம் அது புரிகின்றதா
இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா
பாடலின் ஆரம்பத்தில் வரும் சுசீலாவின் ஹம்மிங் கொஞ்சம் 'நெஞ்சம் மறப்பதில்லை'யை நினைவூட்டத்தான் செய்யும்.
பாடலின் மூன்று சரணங்களின் முதல் வரிகளில் ஒரே வார்த்தை இரண்டாக இனியவளின் குரலில் ஒலித்து இனிக்கும் சுவையை நாம் பெற என்ன தவம் செய்தோமோ!

கோபுரக் கொண்டையில் காட்டுவாசிப் பெண் வேடம் பத்மினிக்கு பரிமளிக்காதுதான். யெஸ்.ஜோடியும் பொருந்தாதுதான். ('ராஜா'வுக்கு 'ராணி'யை ஜோடியாய் பார்த்துவிட்டு ராஜேந்திரனுக்கு எப்படி பார்ப்பதாம்!)
மலைப்பாங்கான இடங்களின் வெளிப்புறப் படப்பிடிப்ப்பின் ஜாலமும், பாடலின் நாயகி குரலும், உற்சாக இசைவெள்ளமும், தவழ்ந்து படர்ந்து செல்லும் பனி மேக மூட்டங்களும் பரவசம் அடைய வைக்கும்தானே!
மாமாவின் முத்திரையைப் பற்றி கேட்கவே வேண்டாம். அது பற்றி உங்களுக்கு நான் சொல்லுவதா?
'இனம் இனம் அது புரிகின்றதா
இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா'
என்று இன்பம் நிறைந்த வாழ்க்கையின் நிலையை ரசிக்கக்கூடிய, முகம் சுளிக்க முடியாத இரண்டே வரிகளில் 'நாட்டு' நாயகனுக்கு 'காட்டு ரோஜா' விளக்கி விடுவது தனி அழகுதானே!
இப்போ ஆடியோ மட்டும் வீடியோவில் கேளுங்கள். மனம் மறுநாள் வரை உற்சாகம் குறையாமல் இருப்பதையும் கவனியுங்கள்.
இப்போது வீடியோவைத் திறவுங்கள். காட்சி தெரியாது. கானம் மட்டுமே.
Last edited by vasudevan31355; 14th April 2016 at 07:37 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
14th April 2016, 08:29 PM
#2320
Senior Member
Senior Hubber
ஹாய் வாஸ்ஸூ நீவிர் போட்ட பாட் ஏற்கெனவே போட்டாச் போட்டாச்சாக்கும்.. நெய்வேலி யானையும் மஸ்கட் பூனையிடம் சறுக்குமாக்கும்.. இருப்பினும் கோ வைக் கொஞ்சி தாங்கள் செய்த வர்ணனை யாமும் ரசித்தோம்.. நன்றி ந்றி றி...
http://www.mayyam.com/talk/showthrea...AF%8D-5/page52
Last edited by chinnakkannan; 14th April 2016 at 08:39 PM.
Bookmarks