-
26th April 2016, 09:16 AM
#2511
Senior Member
Veteran Hubber
vasu : Plan on enjoying 'Grand Canyon' next year !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th April 2016 09:16 AM
# ADS
Circuit advertisement
-
26th April 2016, 10:27 AM
#2512
Senior Member
Diamond Hubber
நன்றி ராகவேந்திரன் சார்.
மறக்கமுடியாத கலைஞர்களை அவர்கள் பிறந்த நாளில் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் நினைவு கூர்ந்து நாமும் சந்தோஷமடைந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த மதுரகானங்களுக்கு தனி இடம் உண்டு. தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
http://freetamilmp3.in/index.php?dir...Pen&p=1&sort=0
ஆமா. 'நீதான் மோகினியா?' உண்டா... இல்லை அதுவும் கத்தரிக்கு இரையானதா?
-
26th April 2016, 11:01 AM
#2513
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th April 2016, 12:47 PM
#2514
Junior Member
Seasoned Hubber
I will also join if there is any plan for Sathanur Dam tour by our friends.
-
27th April 2016, 07:00 AM
#2515
Senior Member
Veteran Hubber
Bhakthi - yezhumalai irukka
From thirumalai dheivam (1973)
yezhumalai irukka enakkenna manak kavalai.........
I still remember a concert by K.B.SundarambaL I attended in 1954 in Mayavaram (Mayiladuthurai). It lasted nearly six hours. Compare that to two hour cncerts these days !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th April 2016, 08:22 AM
#2516
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajraj
vasu : Plan on enjoying 'Grand Canyon' next year !

அருமை ராஜ்ராஜ் சார்.
இப்போதே என்னுடைய சந்தோஷத்துடன் கூடிய வாழ்த்துக்கள். ஜமாயுங்கள். உங்களுக்காக ஒரு முன்னோட்டம். பிரம்மாண்டத்தின் அடையாளமோ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th April 2016, 08:45 AM
#2517
Senior Member
Veteran Hubber
Thanks vasu !
. I have visited Grand Canyon three or four times. If you are visiting I will definitely accompany you. I don't drive long distance these days. You will have to learn American driving ! 

Originally Posted by
vasudevan31355
அருமை ராஜ்ராஜ் சார்.
இப்போதே என்னுடைய சந்தோஷத்துடன் கூடிய வாழ்த்துக்கள். ஜமாயுங்கள். உங்களுக்காக ஒரு முன்னோட்டம். பிரம்மாண்டத்தின் அடையாளமோ?
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
27th April 2016, 09:03 AM
#2518
Senior Member
Diamond Hubber
வாசு ஜி... ஒரு கௌபாய் டிரஸ், தொப்பி வாங்கிக்கிட்டு குதிரை சவாரியும் கத்துகிட்டால்... கர்ணன் இயக்கிய பட ஹீரோவைப் போல் டகடக் டகடக்னு கிராண்ட் கான்யானை வலம் வரலாம்.... ( ராட்சசி குரலில் பாடிக்கிட்டு ஆட யாரும் வரமாட்டாங்க ... ஆமாம் சொல்லிட்டேன் )
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th April 2016, 10:06 AM
#2519
Senior Member
Diamond Hubber
'உள்ளத்தில் குழந்தைகளடி'
மதுரை, தஞ்சை ஊர் பாடல்கள் ஓய்ந்தன.
இப்போது கொஞ்சம் வேறு எடுக்கலாம்.
தமிழ்ப் படங்களில் நாயகனோ, நாயகியோ மனவளர்ச்சி குன்றி குழந்தைகள் போல குறும்புகளும், குழப்பங்களும் செய்ய அவர்களுக்கு ஆதரவாக, அன்பாக இன்னொரு கதாபாத்திரம் இருக்குமல்லவா? அந்த கதாபாத்திரம் இந்த வாலிபக் குழந்தைகள் எது செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவர்கள் மேல் அன்பைப் பொழியும். பாசத்தைப் பிழியும். அப்படிப்பட்ட சில பாடல்களை பார்த்தால் என்ன என்று தோன்றியது.
முதலில் 'கை கொடுத்த தெய்வம்'.
குழந்தை போல மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள்.
'களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ!
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்
ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்'
என்று கோபம் தலை உச்சிக்கேற, ஊரார் அவளை 'புரிந்து கொள்ளவில்லையே' என்ற ஆதங்கத்தில் கடிந்து கொள்வதைப் பாருங்கள். வேட்டியை சற்றே உயர்த்திப் பிடித்து, உள்மனதில் ஊராரின் பொய்யுரைகளை நினைத்து நெஞ்சடைத்து, ஆத்திரம் பொங்க, சாவித்திரி குழந்தைக்காக 'பாவிகளா! அப்படியெல்லாம் அந்தப் பெண் மீது அபாண்டப் பழி சுமத்தாதீங்கய்யா... உருப்படவே மாட்டீங்க' என்று உயர்த்திய வேட்டியை கால்களுக்கு மத்தியில் சைட் போஸில் லாவகமாக செருகி, ஆட்காட்டி விரலை உயர்த்தி, அதிலேயே கடுங்கோபத்தைக் காட்டி, அதற்கு மேல் விழி பெருக்கி, கண்களின் உருட்டல்களிலேயே அவள் புனிதமானவள் என்று ஊரார்க்கும், நமக்கும் உணர்த்தி, அந்த வெகுளிப் பெண்ணுக்காக உருகுவதை கண் இமைக்காமல் பாருங்கள்.
அடுத்து
'கண்ணன் என்ன சொன்னான்? சிறு பிள்ளையே! கண்ணீர் வர காரணம் ஏன் கொடி முல்லையே?' என்று ஜெயதேவி அழும் 'குமாரி' ஸ்ரீதேவி குழந்தையை மடியில் கிடத்தி, 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்று ஆறுதல் கானம் இசைப்பதை பாருங்கள். பாடலின் பல்லவி வரிகளின் டியூன் இன்னும் என்னை ஆச்சர்யப்படுத்தும். அப்படியே சாதரணமாக ஆரம்பித்து அப்படியே எங்கெங்கோ அந்த பாடலின் டியூன் போகும் போது 'ராஜா'வுக்கு ஓடிச் சென்று ரோஜாச் செண்டு கொடுத்தால் என்ன என்று தோன்றும். அப்படியே அதிலிருந்து சில ரோஜாக்களை எடுத்து இசையரசிக்கும் கொடுத்து விடலாம். அற்புதம்.
அதே 'ச்சுப்பிரமணி' ஸ்ரீதேவிக் குழந்தையை மடியில் கிடத்தி 'மூன்றாம் பிறை' நாயகன் உதடு வெதும்பி 'கண்ணே! கலைமானே!' என்று கண்கள் கலங்க பாடி, தன்னுடைய குருவுக்கு சிஷ்யனாக நடிப்பில் பரிமளிப்பதையும் காணுங்கள்.
காதலியின் எதிர்பாரா தீ மரணத்தில் அதிர்ச்சிப் பைத்தியமாகி விட்ட இந்த வெகுளியை குணப்படுத்த 'எங்கிருந்தோ வந்த' 'கலைச்செல்வி' அறையிலேயே அடைபட்டுக் கிடக்கும் அந்த அழகு வாலிபனை இயற்கை எழில் சூழும் இடங்களுக்கு இட்டுச் சென்று அவனை குதூகலிக்க வைப்பதைக் காணுங்கள். (பின்னால் சின்னத்தம்பி 'அரண்மனை அன்னக்கிளி'யை எழில் பிரதேசங்களுக்கு கூட்டிச் சென்று 'போவோமா ஊர்கோலம்' பாடினார்) அவனுக்குப் பக்கத் துணையாய் இருப்பதையும் கவனியுங்கள். இருவரின் 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதம்'தானே!
'உள்ளத்தில் குழந்தையடி' என்று இருக்கும் ஸ்ரீப்ரியாவிடம் பாசம் கா(கொ)ட்டும் அண்ணனும் அண்ணியும்.
'கண்ணுக்கு நீ ஒரு கன்னிப் பொண்ணு...என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு... உண்ணடியோ சோறு உண்ணடியோ...ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ?' என்று தேங்காயும், அண்ணியும் (யார் ஸ்ரீவித்யாதானே?) அன்பொழுக பாடுவதைக் கேளுங்கள். பாடல் வரிகள் அற்புதம். சீர்காழி, வாணி ஜெயராம் காம்பினேஷன் அரிதான தூள். 'இயக்குனர் திலகம்' படம் என்று நினைவு.
இது கொஞ்சம் வேறு. மனவளர்ச்சி குன்றிய இவன் உருவத்திலே மனிதன் என்றாலும் இவனுக்கு பின்னணியில் ஒலிக்கும் ஜேசுதாஸின் குரலே துணை.
சிரிப்பைத்தவிர வேறேதும் அறியா அன்பன். ஆனால் ஒரே முறை அழுதான். 'யாருக்காக அழுதான்'? விம்ம வைக்கும் வித்தியாச நாகேஷ். ஜெயகாந்தன் பட்டறையின் வைரம். மனம் முழுக்க பாரம்.
இனி நண்பர்கள் வேறு குழந்தைகளைத் தேடித் தரலாம்.
Last edited by vasudevan31355; 27th April 2016 at 10:19 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th April 2016, 01:09 PM
#2520
Senior Member
Senior Hubber
ஹாய் வாசு.. கலக்கல் தான் போங்க உங்க குழந்தை உள்ளம்.. ஹப்புறம் கேட்டுச் சொல்றேன். ஸிமிலர்லி ஐ டிண்ட் ஹியர் த எஸ்பிபி சாங்க் ஆல்ஸோ.. கேட் சொல்றேன்..ம்ம்
குழந்தை உள்ளம் மனமுதிர்ச்சி அடையாத நபர் என்றெல்லாம் பார்த்தால் இன்னொரு கமல் நினைவுக்கு வருவாரே..
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா..சிப்பிக் முத்
Bookmarks