-
28th April 2016, 11:28 AM
#2531
Junior Member
Platinum Hubber
1963
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th April 2016 11:28 AM
# ADS
Circuit advertisement
-
28th April 2016, 11:31 AM
#2532
Junior Member
Platinum Hubber
1963
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th April 2016, 06:13 AM
#2533
Senior Member
Veteran Hubber
Jugalbandi time - avan /aah 1953.
From avan(1953), Tamil dubbed version of aah(hindi)
aahaa naan indru arindhu konden.
From the Hindi original
jo mein jaanti unkeliye....
Last edited by rajraj; 29th April 2016 at 06:16 AM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th April 2016, 10:50 PM
#2534
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
மதுர கானம் திரியில் தங்களுடைய உள்ளத்தில் குழந்தையடி குறுந்தொடர் தங்களுடைய அபார உழைப்பையும் அதற்கான கருவைத் தேர்ந்தெடுக்கும் தங்களுடைய தனித்திறமையினையும் மிகவும் ரசித்துப் பாராட்டி எழுத வேண்டும் என எத்தனித்தேன். முத்தாய்ப்பாக தலைவரின் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடலும் இடம் பெறும் என எதிர்பார்த்தேன். ஏமாற்றாதது மட்டுமல்ல, இதை விட சிறப்பாக இப்பாடலைப் பற்றி யாரும் எழுதி விட முடியாது என்கிற அளவிற்கு எழுதி இம்மய்யத்தில் தங்களுடைய உயர்ந்த இடத்தை அப்படியே ஸ்திரப்படுத்திக்கொண்டு விட்டீர்கள்.
அது மட்டுமல்ல
அவர் ஆயிரத்தில் ஒருவரல்ல...
லட்சத்தில் ஒருவரல்ல...
கோடியில் ஒருவரல்ல....
அந்த ஒருவர் ஒருவர்தான். வேறு எவரும், எதுவும் அவருக்கு இணை, ஈடு இல்லை.
இந்த வரிகளின் மூலம் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் குளிரச் செய்து விட்டீர்கள்.
உண்மையிலேயே உள்ளத்தில் குழந்தையான நாயகனுக்கு, இப்பாடலின் மூலம் இதை விட சிறந்த அஞ்சலி செய்ய முடியுமா என்பது ஐயமே.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
30th April 2016, 07:47 AM
#2535
Senior Member
Diamond Hubber
இளமை ஜெயமாலினியும், 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' புகழ் நடிகரும், நடன மாஸ்டருமான சின்னி பிரகாஷும் (நினைத்துப் பார்க்கிறேன்... என் நெஞ்சம் இனிக்கின்றது...) பாடும் ஒரு ஜாலியான பாடல்.
பாடலின் ஆரம்ப வரிகளாக வரும் அந்த புரியாத பாஷை வரிகளும் அமர்க்களம்.
ஹோய் லேலே செண்டே கியா
ஹோய் லேலே லூகா கோரா
சொகு தின மொக காரி
கொலேலே
கொலேலே
கொலேலே
ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் மோகமா
மெதுவா சிரிச்சேனே எதுக்கு
தெரியும் உனக்கு
ஜானகியின் டிரேட் மார்க் பாடல். உடன் பாலாவும். இந்த மாதிரிப் பாடல்களுக்கு ராஜாவை விட்டால் யார்? அத்தனை இசைக்கருவிகளும் நர்த்தனம் புரியும். கிடார், டோலக், புல்லாங்குழல், தபலா, பாங்கோஸ், மிருதங்கம் உள்ளிட்ட அனைத்து இசைக்கருவிகளின் பங்கையும் மிகச் சரியாகக் கலந்து கொடுத்திருப்பார் இப்பாடலில் ராஜா. இடையிசையை அனுபவித்துக் கேளுங்கள். வரிகள் சற்று எளிமையாக இருந்தாலும் மியூசிக்கில் அதகளம்தான். பாடலினூடே வரும் கோரஸும் மனம் மயங்க வைக்கும்.
Last edited by vasudevan31355; 30th April 2016 at 07:54 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th April 2016, 08:43 AM
#2536
Senior Member
Diamond Hubber
ஆந்திரப் பெண்மணியாக ஆச்சி எப்படி அசத்துகிறார்? தெலுகும், தமிழும் கலந்து பாடி சொந்தக் குரலில் சொக்க வைக்கிறார். அவருக்கு சொல்லித் தரணுமா? அடி தூள். கூட நீலுவும், சோவும். 'துக்ளக்'கை வெறுப்பேற்ற நீலு விடம் சரசம். 'சோ'வை 'வாரு வாரு' என்று வாரி நக்கல். நீலுவின் அப்பாவி வழிசலைப் பார்த்து புரிந்தவர்கள் உள்ளுக்குள் 'க்ளுக்'குவார்கள்.
கோழி முட்டைக் கண்ணாரு, அரவாடு என்று 'சோ'வை அநியாத்துக்கு கிண்டல் அடிப்பார் ஆச்சி. நீலுவுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படும் தெலுங்குப் படத்தின் பெயரை பாருங்கள். 'சீக்ரெட் ஏஜென்ட் கோடாச்சாரி' யாம்.

(Gudachari 116' என்று கிருஷ்ணா, ஜெயலலிதா நடித்து 1967-ல் ஒரு படம் வந்தது. என் பிரியமான கீதாஞ்சலியும் உண்டு அதான் பக்கெட். ஹி..ஹி.)
இந்தப் படம் பார்க்கத்தான் ஆச்சி ஆசைப்படுகிறார் போல
அதுவும் நாயுடு ஹோட்டலில் டபுள் ரூமாம். கூட துணைக்கு அரைக்கிறுக்கு சோவையும் கூப்பிட்டுகிட்டு போகணுமாம். எப்படி இருக்கு கதை பாருங்கள்!
ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேலே ஆசை எப்படி வச்சாரு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்
ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
எம் மேலே ஆச எப்படி வச்சாரு
அம்மாயி ஊரு இந்தப் பக்கம் நெல்லூரு
அப்பாயி மீரு அந்தப் பக்கம் குண்டூரு
குண்டூர் மாமா நெல்லூர் மாமி
குண்டூர் மாமா நெல்லூர் மாமி
சம்பந்தி ஆனாரு
கொஞ்சுற போதும் கோங்குரா தின்னு
குஸ்திக்கு நின்னாரு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்
அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சி
அரைகுறையாப் போச்சு
அரவாடோடே காதல் செஞ்சேன்
ஆபத்தாப் போச்சு
அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சி
அரைகுறையாப் போச்சு
இந்த அரவாடோடே காதல் செஞ்சேன்
ஆபத்தாப் போச்சு
கொஞ்சிப் பேச ஒச்சாரு
கோழி முட்ட கண்ணாரு
கொஞ்சிப் பேச ஒச்சாரு
கோழி முட்ட கண்ணாரு
குத்துக்கால தரையில நட்டு
குஷியா நின்னாரு
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்
சூலூர்ப்பேட்டைக்கு சாயங்காலம் ஹனிமூன் போத்தாமா
'சீக்ரெட் ஏஜென்ட் கோடாச்சாரி' சினிமா சூஸ்தாமா
நாயுடு ஹோட்டலில் டபுள் ரூம் எடுத்து நாளைக்கு ஒஸ்தாமா
நாயுடு ஹோட்டலில் டபுள் ரூம் எடுத்து நாளைக்கு ஒஸ்தாமா
நமக்குத் துணையா அரவாடயும் கூட்டிட்டுப் போவோமா
மன்ச்சீ நா மனசு
இந்த மாப்பிள்ளை புதுசு
எப்பன்டி செப்பன்டி நம்ம கல்யாணம்
ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு
அட எம் மேலே ஆச எப்படி வச்சாரு
'அருணோதயம்' படத்தில் கொஞ்சம் மறந்து போன பாடல். பார்த்து சிரியுங்கள்.
Last edited by vasudevan31355; 30th April 2016 at 08:49 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th April 2016, 09:13 AM
#2537
Senior Member
Senior Hubber
ஹோய் மாமா ஒரு வாரமா
ஹாய் இருந்தேனே உன் மோகமா// ஆமா வாசு ஏன் ஒரு வாரமா காணோமேன்னு நினச்சா பாட் போட்டுட்டீங்க..( நான் கணக்குல வீக்) பாட் பொறுமையா ஃபுல்லா கேட்டேனாக்கும்.. ஆரம்ப கால ஜெயமாலினி முழுவுடையில் லுக்கிங்க் குட்.. ( எல்லாமே மூடி இருந்தால் தான் அழகு என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்) அதுக்கப்புறம் சட்டையைக் கழட்டினாலும் கண்கள் உறுத்தவில்லை..இயல்பான அழகாய் இருந்தது என அந்தக்காலத்தில் என் சித்தப்பா சொல்லியிருந்தது நினைவில்! ஆமா என்னவாக்கும் படம் பேர் போடவேயில்லையே..
என் பிரியமான கீதாஞ்சலியு// ம்ம் கிருஷ்ண குமாரிலருந்து கீதாஞ்சலியா கு வில் யார்..குமாரியா ((விஜயவை வெட்டி விட்டு)
பட் அருணோதயம் ரிலீஸின் போது கண் சின் பையன். எனில் ஈ பாட் நினைவில் இல்லை..ரீரன்னில் பார்த்தபோது கூட கோல்ட் ஃப்ளேக் ப்ளெய்ன் பெட்ட்ர் எனப் பட்டதால் வெளியே சென்றுவிட்ட நினைவு..(இப்பக்கூட ஈ பாட் பார்க்கத்தோணலை ஸாரி) நன்றி ஃபார் த ரைட் அப்ஸ்..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th April 2016, 09:24 AM
#2538
Senior Member
Senior Hubber
உ கு வில் தேவயானி பஃப் கை பாட் முதல் தடவை கேட்கிறேன்.. ம் அந்த ஆடவரை முன் பார்த்த நினைவில்லை
பிரதாப் போத்தன், சுரேகா நடித்த 'தகரா' மல்லு தமிழில் 'ஆவாரம்பூ' ஆனது. இரண்டுமே கவர்ச்சியை அள்ளித் தெளித்தவை. தமிழைவிட மலையாளத்தில் சுரேகா கூடுதல்.
ஆனால் பாடல்களில், இசையில் ராஜா பிளந்து கட்டினார். ஒவ்வொரு பாடலும் பெரும் வரவேற்பை பெற்றன. // நதியோரம் கரையோரம் பாட் டும் முதலில் இப்போ தான் கேக்கறேன்.. நைஸ்.. அதில் வேறொருபாட் உண்டோன்னோ. பட் நந்தினிக்கும் இதன் பின்னர் வாய்ப்பெதுவுமில்லை.. தகரா போஸ்டர் பார்த்த நினைவு..இந்த சுரேகா ஈ நாடு தானே..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th April 2016, 09:33 AM
#2539
Senior Member
Senior Hubber
ஜெய், நிர்மலா ஒன்று சேர்ந்து அண்ணி பிரமிளாவை வெறுப்பேற்றும் பாடல் ஒன்று உண்டு. இதில் நம் தொடர் நாயகர் பாடுவார். .
ஈஸ்வரி ரகளைகள் டாப். பாலா கம்பீரக் குழைவில் அட்வைஸ் அளிப்பார். கடற்கரை காட்சிகள் கண்ணுக்கு இதம். ஆனால் பிரமிளா வதம். ஜெய் சுறுசுறு. நிர்மலா தாவணி கடலைவிட குளிர்ச்சி என்று சொல்லாவிடில் சின்னா வைவார்.
பிரமாதமான பாடல் ஒன்றுமில்லைதான். ஆனால் கணக்கில் சேருமே!// ஓய் பிங்கி பிங்க்கி பாங்க்கி என ரோஸ்கலர்ல எழுதினா சின்னா எப்படிப் படிக்கும்... இந்த பாட் ரொம்ப சுமார் தான் அப்புறமா கேட்கலாம்னு இருந்தேனா..இப்பதான் பார்த்தேன்.. தாவணி போட்டிருந்தாலும் லாங்க் ஷாட்டில் போட்டது தப்பு என ஆன்றோர்கள் சொல்வார்கள்.. 
ஸ்ரீதேவி தான் என நினைக்கிறேன் பிழிபய் பிழிய அழுகை.. சின் வயதில் பார்த்தது தான் பின் ரீரன்னெல்லாம் பார்க்கவில்லை..
ஹப்புறம் உ.கு ல் நடுவில் நைஸாக ஏதோ சாமி ஸ்லோகம் கேட்டதே..என்ன ஒரு ஐரனி..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th April 2016, 10:41 AM
#2540
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஹப்புறம் உ.கு ல் நடுவில் நைஸாக ஏதோ சாமி ஸ்லோகம் கேட்டதே..என்ன ஒரு ஐரனி..

நான் வரல நைனா இந்த கோ(பா)லாட்டத்திற்கு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks