-
11th May 2016, 02:32 PM
#1111
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.
டியர் கோபால் சார்,
ஒரு சிவாஜி ரசிகனால் மட்டுமே இப்படிப்பட்ட எழுத்துக்களை எழுதமுடியும். படிப்பதும்கூடத்தான்... சபாஷ்.....
-
11th May 2016 02:32 PM
# ADS
Circuit advertisement
-
11th May 2016, 02:35 PM
#1112
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி சார்,
சில நாட்கள் வெளியூர் சுற்றுப்பயணத்தின் காரணமாக திரியைப் பார்க்கவில்லை. தற்போதுதான் பார்த்தேன். தங்களுடைய சிவகாமியின் செல்வன் பற்றிய பதிவு அருமை. சிறிது நாட்கள் கடந்து வந்தாலும், தங்களின் எழுத்துக்களின், வர்ணனையின் வலிமை, அப்பப்பா!!! நன்றி.
-
11th May 2016, 02:36 PM
#1113
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
முரளி சாரின் சிவகாமியின் விமர்சனப் பதிவுக்கு வலிவூட்டும் விதத்தில் தாங்கள் பதிவிட்டுள்ள விளம்பரங்கள் மற்றும் அருமையான புகைப்படப் பதிவுகள் சிறப்பு. நன்றி.
-
11th May 2016, 02:39 PM
#1114
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Aathavan Ravi
மதுரை-சென்ட்ரல் திரையரங்கில் பச்சை விளக்கு
பார்க்கப் போன இன்றைய மதியப் பொழுது,மகிழ்வான, நெகிழ்வான தருணம் எனக்கு.
டியர் ஆதவன் ரவி சார்,
தங்களுடைய கவிதை, நடிகர்திலகத்தைப் பற்றிய வர்ணனை, எழுபது வயது முதியவரை மட்டுமல்ல, ஏழு வயது சிறுவனையும் கவரும். இடையிலிருக்கும் எங்களையும் கவரும். அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
தங்களுக்கு வாழ்த்துக்கள்.... தொடருங்கள்.....
-
12th May 2016, 12:32 AM
#1115
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th May 2016, 07:57 AM
#1116
Junior Member
Newbie Hubber
முரளி,
தங்கள் தமிழை விட ஆங்கிலம் அழகானது. ஆனாலும் தமிழில் தாங்கள் சினிமா,அரசியல் இணைத்து போடும் பதிவுகள் படிக்கும் சுகமே அலாதி.ஸ்ரீதர் என்ற கலைவேந்தன் போன்றோரின் முறையற்ற ,சார்புள்ள,உண்மைக்கு புறம்பான ,நேர்மையற்ற பதிவுகள் போல இல்லாமல், தங்கள் பதிவுகள் அச்சு அசலான உண்மை பதிவுகள். சில அறிவிலிகள் கிருஷ்ணசாமி என்பதை சாமிகிருஷ்ணா என்று எழுதி விட்டார் என்பது போன்ற குழந்தைத்தனமான குற்றசாட்டுக்களை வைத்து, வடிவேலு பாணியில் நம்மை சிரிப்பூட்டினர்.
இன்றும் சொல்கிறேன் ,என்னை திரிக்கு இழுத்து வந்தவை உங்கள் பதிவுகள்(non -linear விவரிப்புகள்,சம்பத்தப்பட்ட சுற்று வட்டார அனைத்து விவரணங்கள்),சாரதா(விமரிசன சுவாரஸ்யம்),கார்த்திக்(ரசிப்பு திலகம்,அற்புத கால விவரணை),சாரதி(பாட்டு ஸ்பெஷல் ), வாசு(விஸ்தார விவரணை),பம்மலார் (ஆவணம் மட்டும்.எழுத்து ஐயகோ) .
நம் பதிவர்கள் சுவாரஸ்யம் மிக்க திறனாளிகள் .. சவ சவ என்று இருபதாயிரமும்,முப்பதாயிரமும் தொடுவதை விட குறைந்த பதிவுகளில் நிறைவு என்றே நம் பதிவர்கள் பயணிக்கின்றனர். வாழ்த்துக்கள். ஆதவன் ரவி, கவிதைகள் போதும் ,எழுதுங்கள். உங்கள் கவனிப்பு திறன் அலாதி. சிவாஜி செந்தில்,ஒப்பீடு போதும் ,வேறு பாணி மாற்றுங்கள். ஆளில்லாத கடையில் டி ஆற்றுவது போல ஜெமினி திரியில் நேர விரயம். இங்கே சுவாரச்யமாக ஏதாவது எழுதுங்கள் டாக்டர். செந்தில்,ஆவணங்கள் தொடரட்டும். வாசு, கதாநாயகியர், ஆடை அழகர் தொடர்கள் என்னவாயின? ராகவேந்தர் ,தங்களின் வழக்கமான உபயோக பங்களிப்புகள் போதும்.
Last edited by Gopal.s; 12th May 2016 at 08:01 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th May 2016, 08:09 AM
#1117
Junior Member
Newbie Hubber
சோ சார் ஒன்றரை பக்க நாளேடுகளை மிகவும் ரசித்தவன் என்ற விதத்தில்,அதை பின்பற்றி நம் திரி நண்பர்களை வைத்து ஒரு parody பண்ணினால்?இது ஒரு உயர் ரக நகை பாணி.யார் மனதையும் புண் படுத்த வாய்ப்பே இல்லை .
நம் திரியில் தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு ,பதிவாளர்களின் பாணி ஓரளவு பரிச்சயம் என்பதால் பெயர் சொல்லாமல் பதிவிட்டு ஊகத்துக்கு விடுகிறேன்.(தயவு செய்து சிரிக்க மட்டுமே)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th May 2016, 08:15 AM
#1118
Junior Member
Newbie Hubber
பதிவு எண் -1
அப்போதுதான்,ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து ,வசதியான கல்லூரி கால ஜீன் ,டி.ஷர்ட் துறந்து,படவைக்கு மாறிய நேரம்(அம்மா சொல்படி).கொஞ்சம் சோகமாக இருந்தாலும் பழகியது.அப்போது ஹரிதாஸ் ரிலீஸ் ஆகி எம்.கே.டி.பாகவதர் சிறை சென்றிருந்த நேரம்.ஹரிதாஸ் படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு ,எனது சித்தப்பா,பெரியப்பா இருவருக்கும் இரண்டு பாஸ்கள் மட்டுமே வழங்க பட்டிருந்தது,.நான் இந்த படத்தை 20 முறைகளுக்கு மேல் பார்த்தவள் என்பதால்,பாஸை தியாகம் செய்யவே மனமில்லாத அவர்களிடம் போராடி நானும் ,என் சித்தப்பா பையன் மணியும் விழாவிற்கு கிளம்பினோம்.
அப்போது அண்ணா சாலை,மவுண்ட் ரோடு என்று அழைக்க பட்டது.இப்போது இருக்கும் l .i c கட்டிடம் அப்போது காலி மனை. அங்கேதான் பந்தல் போட்டு விழா.ஒரே தள்ளு முள்ளுதான்.என் சித்தப்பா மகன் சைக்கிளை நானே ஓட்டும் வசதிக்காக அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜீனுக்கு மாறி,சுலபமாய் இரு கால்களையும் போட்டு சீட்டில் உட்கார்ந்து பின்னாடி மணியையும் உட்கார வைத்தேன்.
பந்தலுக்குள் கூட்டமான கூட்டம்.பீ.யு.சின்னப்பா,வசந்த கோகிலம்,டி.ஆர்.ராஜகுமாரி ஜி.ராமநாதன்,பாபநாசம் சிவன்(அடுத்ததடுத்து ஹிட் படங்களை தந்த ஜோடி அசோக் குமார்,சிவகவி,ஜகதல பிரதாபன்,ஹரிதாஸ் இப்படி),அந்த நாள் கவர்ச்சி புயல் தவமணி தேவி,எம்.எஸ்.பாக்கியம் என்று அதுவரை பிரமிப்போடு திரையில் கண்டு களித்த நட்சத்திரங்கள் நேரில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு.பாகவதரை நினைவு கூறும் விதமாக ஜெயில் வடிவிலேயே பிரம்மாண்ட மேடை.தம்பிக்கு ஏக பட்ட நண்பர்கள்.சமீபத்தில் வந்த வசந்த சேனா படத்தின் ரிசல்ட் திருப்தியளிக்கவில்லை என்று வருத்த பட்டனர்.நண்பர்கள் என்னை பற்றி விசாரிக்க,என் அக்கா ,இப்பதான் காலேஜ் முடிச்சா என்று அறிமுக படுத்தினான் மணி.
அப்போது ஒருவர் ஹெர்குலிஸ் சைக்கிளில் வந்து இறங்கினார்.(அவர்தான் பட இயக்குனர் என்று காதில் முணுமுணுத்தான் மணி).என்னையும் என் தம்பியையும் பார்த்து ,அட்லஸ் சைக்கிள் நல்ல வண்டிதான் என்று தட்டி கொடுத்து விட்டு மேடையேறினார். விழா தொடங்கி களை கட்டியது.
அடுத்த பதிவில் ,நான் பள்ளியில் படிக்கும் போது ,பாவாடை சட்டையுடன் ,என் அப்பா கைப்பிடித்து அழைத்து சென்ற கல்தூண் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டங்களை பற்றி எழுத இருக்கிறேன்.
பதிவு எண் -2.
உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக
பிரம்மாண்டமாய் புதிய சகாப்தம் படைக்க,
இதுவரை அச்சிலே எழுத்து வடிவிலே மட்டுமே வந்த "சரோஜாதேவி"
பட வடிவில் (வண்ணம்),வித விதமான கோணங்களில்,போஸ்களில்....
கண்கள் பிதுங்க, இதயம் இனிக்க,
பொக்கிஷாதி பொக்கிஷம்.
இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
பிரதி ஒன்றின் விலை ரூபாய் 10,000.
பணத்தை இன்றே அனுப்பி விடவும்.
வெளிவரும் நாள்/தேதி/வருடம்-வெகு விரைவில் இந்த நூற்றாண்டு முடிவுக்குள்.
உலக விநியோக உரிமையாளர்- டி.டபுள்யு . (பெங்களூர்)
பதிவு எண் -3.
ஈந்த பாடம் எங்க ஆமா ஆப்பு கூட நேத்து காட்டில் பத்தேன் .சீவஜீ ஆந்த வாருஷாம் நலு முலு நீல படத்தில் அடித்திருந்தார் .
நல்ல தடிப்பு.கானிலூயெ தடிப்பு தரியும் .
முத்தத்தில் சுமங்கிலி ...முழ சூமங்காலி ஈல்ளை .
பதிவு எண் -4.
இஸ்கி புஸ்கியின் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது டுபாகூர் பாணி.(சிஷ்யன் என்றாலும்)இஸ்கி புஸ்கி every action should have reaction and verse versa என்றதற்கு மாறாக டுபாகூர் action is behaving என்றார்.
உதாரணம் (உங்களுக்கு புரிய)நீங்கள் ஒரு குடிகாரர் என்று வைத்து கொள்ளுங்கள்.குடித்து விட்டு இரவு வீடு செல்கிறீர்கள்.உங்கள் மனைவி "இன்னாய்யா ,நீயெல்லாம் ஒரு மனுசனா "என்று திட்டிய பிறகு உதைத்தால் reaction .தூங்கி கொண்டிருக்கும் மனைவியை அப்படியே காலால் உதைத்தால் behaving .
இப்போது என்னை தொடருங்கள்.
ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றாருண்டோ பாட்டில் ஒரு முத்தம் என்றதும் ராஜகுமாரி ,பாகவதர் கையில் முத்தம் கொடுப்பது இஸ்கி புஸ்கி பள்ளி என்றாலும்,பாகவதர் மரக்கட்டை போல உட்கார்ந்து பாடுவது டுபாகூர் பள்ளி சார்ந்ததே.
இயக்குனர் ,அந்த காலத்திலேயே ,எல்லா பள்ளிகளையும் சார்ந்த நடிப்பை ,நடிகர்களிடம் வெளிக்கொண்டு வந்தது,நட்கர்னியின் சாதனையில் ஓர் மகுடம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th May 2016, 08:26 AM
#1119
Junior Member
Veteran Hubber
Thank you Mr.Gopal for your interlude on my postings in GG thread.
Sure I will adhere to your piece of advice.
However, even though there is no other posting in GG thread except mine I take it as a privilege to glorify the contributions of Shri.Gemini Ganesan as a part and parcel of my thanks giving duty on behalf of NT in commemoration of their long time on and off screen friendship with understanding. I will sure resume my postings in our thread but presently I think it is my commitment to complete at least one full pledged thread for a second to none category of actor GG!!...of course for my personal satisfaction too!
Any way thanks again Mr Gopal!
By the by, Kalai Nilavu Ravichandran is also one of the yester years' successful silver jubilee hero for whom you are also making your postings!! I wish you may also kindly concentrate in that thread and I will also come and interact so that we can at least have one full pledged thread for him too,as part of honoring his association with our NT and our thanks giving culture!
Last edited by sivajisenthil; 12th May 2016 at 08:18 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th May 2016, 08:29 AM
#1120
Junior Member
Newbie Hubber
பதிவு எண் -5.
அப்போது பாகவதருக்கும்,சின்னப்பாவிற்கும் போட்டி உச்சத்தில் இருந்த நேரம்.மகாலிங்கம்,ராமசந்திரன் போன்றோர் வளர்ந்து கொண்டிருந்தனர்.ஹொன்னப்ப பாகவதர்,கிட்டப்பா போன்றோர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்று விட்ட நிலையில்,போட்டி என்றால் முதலில் கூறிய இருவருக்குள்தான் ,நிறைய ரசிகர்களை கொண்டிருந்ததால் ,ரசிகர்களுக்கும் போட்டிதான்.(அதிலும் மதுரை மண் தனிதான்).பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.
அப்போது நாங்கள் அல்லோல கல்லோல புரத்தில் குடியிருந்தோம். ஆண்டியடியில் என்னை விட எட்டு வயது மூத்த என் கசின்.
மேல கூசி தெருவில் இருந்து,நடு ஊசி தெரு பிரியும் சந்தில் இருந்த வெள்ளி திரையரங்கில் சின்னப்பா நடித்த தர்ம வீரன் படம் 23.2.41 இல் ரிலீஸ்.பாகவதரின் திருநீலகண்டர் 14.1.41இல் (13.8.40 இல் பூஜை போட்டது)ரிலீஸ் ஆவதாக இருந்து,வெற்றிலை பாக்கு கடை வைத்திருந்த முருகேஷ் என்ற சின்னப்பா ரசிகர் ,இந்த படம் வெளியாக இருந்த அலங்கோல் தியேட்டர் அத்தனை சேர்களையும் கொளுத்தி நாசம் செய்து விட்டதால்,அந்த படமும் ரிலீஸ் தள்ளி போய் ,23.2.41 அன்று கார்னெர் தியேட்டரில் ரிலீஸ்.
ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.
அப்போதைய அரசியல் நிலவரத்தை கூர்ந்து கவனித்தவர்களுக்கு ,தெரிந்த விஷயம்,சுதந்திர போராட்டம் உச்ச நிலையில் இருந்த நேரம்.அப்போது ஆங்கிலேயரை ஆதரித்த ஜஸ்டிஸ் கட்சி சார்பாக k .முதலியாரும்,காங்கிரஸ் சார்பாக எஸ்.செட்டியாரும் தேர்தலில் போட்டியிட்டனர்.அப்போது சென்னை கன்னிமரா ஹோட்டல் அறையில் அவர்கள் தங்கியிருந்த போது , தற்செயலாய் அங்கு வந்த சின்னப்பா முதலியாருக்கு வணக்கம் சொல்ல,இன்னொரு தற்செயலாய் இன்னொரு இடத்தில் பாகவதர் செட்டியாரை தற்செயலாய் வணங்க ,வெவ்வேறு திசையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த செட்டியாரும்,முதலியாரும் ஒருவரையொருவர் பார்க்காமல் தற்செயலாக மோதி விட ,இந்த மோதல் சின்னப்பா-பாகவதர் ரசிகர்களை கொதிப்படைய செய்து ,இருவர் ரசிகர்களும் மோதி கொண்டதில் 2500 பேர் சம்பவ இடத்திலேயே மரிக்க (சின்னப்பா ரசிகர்கள் 602 பேர்,பாகவதர் ரசிகர்கள்-1898 பேர்),35008 பேருக்கு காயம். (சின்னப்பா ரசிகர்கள் முன்னணி)
இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம்,இந்த நேரத்தில் ,இந்த இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் பதட்டத்தை உண்டு பண்ணியிருந்தது.நாங்கள் உஷாராக எதற்கும் தயாராகவே இருந்தோம்.அப்போது ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள்,சனி ஞாயிறு 3 காட்சிகள்.(வாரம் 16 ஷோ,மாதம் 64 ஷோ).பின்னாளில் 27/4/1963 முதல் தினசரி 3 காட்சிகள் ,சனி ஞாயிறு 4 காட்சிகள் பழக்கத்திற்கு வந்தது.நிறைய இட்லி கடைகள் மூட பட்டு மதுரையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி விட்டதால்,1980 இல் தினசரி 4 காட்சிகள்,சனி ஞாயிறு 5 காட்சிகளாயிற்று.வெள்ளி தியேட்டரில் 861.5 இருக்கைகள்.(865 இல் 3 உடைந்தும்,ஒன்று பாதி உடைந்தும்).கார்னெர் தியேட்டரிலோ 675 இருக்கைகள். (அத்தனை சேரும் உடைந்திருக்கும்)அதனால் எல்லா வகுப்புகளும் நின்று கொண்டே பார்ப்போம்.
இந்த நிலையில்தான் ,அந்த செய்தி நம் ரசிகர்களை இடி போல தாக்கியது.
(தொடரும்)
பதிவு எண் -6
சின்னப்பா ஒரு சிறந்த internaliser என்பது என் அபிப்ராயம்.பாத்திரத்துக்குள் தன்னை நுழைத்து அதுவாகவே மாற பார்க்கும் சிறந்த கலைஞர் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.எதையும் கூர்ந்து கவனித்து ,ஆராய்ந்து அணுகும் திறன் ,அவர்க்கு கலைமகள் அளித்த வரமாகும்.
சில நாட்கள் முன்பு ,நமது நண்பர் கிருஷ்ணப்பா ஒரு காட்சியை தரவேற்றி இருந்தார்.அதில் சின்னப்பாவின் அந்த காட்சியை பார்த்தவர்கள்,அவர் நெற்றியில் குங்கும பொட்டை கவனித்தார்களா என்று தெரியாது.(இந்த படம் கன்னடத்தில் ஹூவு ஹோன்ன ஹேவு ,தெலுங்கில் மீறு செப்பின காவு படங்களின் re -make )அந்த காட்சியின் ஆரம்பத்தில் அவர் பொட்டு சிறிய அளவிலும்,காட்சி நடுவில் பெரிதாகவும் இருக்கும்.பெரிய பொட்டு 46 இல் வந்த பிரித்திவிராஜன் படத்தில் வைத்தது.இதன் படி பார்த்தால் 44 இல் வெளிவந்த இந்த படத்தின் காட்சியின் ஒரு பாதியை 41 இலும் ,மீதியை 46 இலும் ஷூட் பண்ணி இருக்க வேண்டும்.சிறிய பொட்டுடன் "ஆமாம் அம்மா" என்று பேசி,பெரிய பொட்டுடன் "இல்லை அம்மா"என்பார்.5 வருட இடைவெளியில் எடுக்க பட்ட இந்த காட்சியில் எப்படி ஒரு பரிபூரணதுவத்தை அந்த மேதை காட்ட முடிந்தது.
கேதுசெந்தன் அவர்களே,அந்த காட்சியை பதித்து ,எங்கள் நெஞ்சை நிறைய செய்யுங்கள்.
பதிவு எண் -7
சின்னப்பா படங்கள் வருடத்திற்கு மூன்று. (நமக்குதான் அந்த ராசி.எதிர்முகாமை பாருங்கள் 2 வருடத்திற்கு ஒரு படம் )ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். சென்னையில் அப்போது இருந்ததோ 8 திரையரங்குகளே.அப்போது அண்ணா நகர்,கே.கே.நகர்,வேளச்சேரி,பெசன்ட் நகர் எல்லாம் கிடையாது.அபிராமி,உதயம் காம்ப்ளெக்ஸ் ,தேவி,சாந்தி இவையெல்லாம் கூட கிடையாது.சித்ரா,பிராட்வே ,அசோக் (இப்போது இடிக்க பட்டு விட்டது)இவை போல ஒரு சில திரையரங்குகளே.இப்போது போல கம்ப்யூட்டரில் ரிசர்வ் பண்ணும் வசதியெல்லாம் இல்லை.கியூவில் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்க வேண்டும்.
பிரித்திவி ராஜன் பட ரிலீஸ் அன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து ,வழியில் எதிர்பட்ட பிச்சை காரர்களிடம் எல்லாம் சில்லறை வாங்கி,நோட்டாக திருப்பி கொடுப்போம்.சில்லறை நிறைய சேர்ந்ததும் சித்ரா திரையரங்கை அடைந்தோம்.அப்போது சின்னப்பா முதல் காட்சியில் தோன்றும் போது சின்னப்பா வாழ்க வாழ்க என்று கத்தி சத்தமிட்டு எழுந்து நின்று சில்லறை வாரி இறைப்போம்.
இதனால் சின்னப்பா ரசிகர்களை போலிஸ் கைது செய்வது வழக்கமான நிகழ்வாகி போனது. இரண்டு முறை சின்னப்பா போலிஸ் ஸ்டேஷன் வந்து எங்களை பார்த்து ,வீணாக இறைக்கும் சில்லறையை தன்னிடம் நேரில் கொடுத்திருக்கலாமே என்று சொன்னது எங்களுக்கு பசுமையாக நினைவிருக்கிறது.
இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது.மாட்டினி ஷோ புல் .நாங்கள் பொடி நடையாக பிராட்வே சென்று ,அங்கும் டிக்கெட் கிடைக்காமல் ,அசோக் சென்றோம்.தியேட்டர் மேனேஜர் தெரிந்தவராகையால்,படம் ரிசல்ட் எப்படி என்று விசாரிக்க,சூப்பர் பா என்று கட்டை விரல் உயர்த்திய பாணியிலேயே,படம் சூப்பர் ஹிட் என்று முடிவானது.பிறகு மீண்டும் சித்ரா தியேட்டருக்கே வந்து மாலை காட்சிக்கு காத்திருந்தோம்.மாட்னி முடிந்து வெளியில் வந்த ரசிகர்கள் அனைவருமே படம் ரொம்ப ஜோர் என்று சொல்ல,ஒரு ரசிகர் எங்களிடம் வந்து முழு கதையையும் ஒவ்வொரு சீனாக விவரிக்க தொடங்கி விட்டார்.
மாலைக்காட்சிக்கு முன் துடைப்பத்துடன் பணியாளர்கள் சென்று குப்பை வாரிய பிறகு,நாதஸ்வரம் போட பட்டது.மாலை காட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரிந்தது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் காட்சி .வரிசையாக சின்னப்பாவின் மூன்று பாடல்கள்.மேலே ஒன்றுமே போடாமல் வேட்டி மட்டுமே கட்டி ஜொலிப்பார்.சின்னப்பாவை நோக்கி சில்லறைகளை வீசினோம்.
சித்ராவில்தான் அந்த படம் அதிக நாட்கள் ஓடியது.
ஆஹா ..நினைக்கும் போதே இனிக்கும் தெவிட்டாத நாட்கள்...
யாரவது எங்களை அந்த நாட்களுக்கு திருப்பி அனுப்ப மாட்டார்களா?
இந்த படத்திற்கு சகோதரி .......... அவர்களின் ஆய்வு ஒன்றின் மீள் பதிவினை இத்துடன் பதிவு செய்கிறேன்.
பதிவு எண் -8
காலையில் தூக்கம் முழித்ததும் , பல் விளக்கி விட்டு டீ சாப்பிட ,எதிரே இருந்த கடைக்கு சென்றேன் .கடை ஒனர் தெரிந்தவர் என்பதால் ,டீ கிளாசை கழுவி ,டீயை போட்டு பாலை விட்டு , என்னிடம் கொடுத்தார். சார் ,எனக்கு ஒரு காவலுக்கு வாட்ச்மேன் வேண்டுமே என்றார். எந்த மாதிரி வாட்ச்மேன் என்று கேட்டதும், பெரிய மீசை வைத்திருக்க வேண்டும்.வீரமாய் நடக்க தெரிய வேண்டும்.அரச உடைகள் அணிந்திருக்க வேண்டும்.வாள் ஒன்று உரையில் தொங்க வேண்டும்.வானம் பொழிகிறது ,பூமி விளைகிறது என்று யாரவது திருடன் வந்தால் பேச வேண்டும் என்றார்.
அவர் கேட்பது வீர பாண்டிய கட்டபொம்மனையே என்று தெரிந்து கொண்டு ,அந்த வீரனை நினைவு கூர்ந்தேன்.
மீதி பகுதிகளாக பிரித்து பழசிலிருந்து cut paste .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks