Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    ராயல் தியேட்டரில்



    டவுன்ஹால் பகுதியில்

    கர்ணன் யார்?
    இந்தக்கேள்வியைக் கேட்டால் சிறு குழந்தை கூறி விடுமே பதிலை.
    அப்படியிருக்க கர்ணனின் முகத்தை மறைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட வேண்டியதின் காரணம் என்ன? நான் பார்த்த இரண்டு போஸ்டர்களை மட்டுமே படம்பிடித்து பதித்துள்ளேன்.இன்னும் எத்தனை இடங்களில் இந்த குளறு படிகளோ?
    அதுவும் இரண்டு வேறு வேறு போஸ்டர்கள் இணைத்து ஒட்டப்பட்டுள்ளன.இதனால் இரண்டு போஸ்டர்களின் மீதி பாதி பழைய பேப்பர்கடைக்குச் சென்றுவிடும்.இல்லையென்றால் காழ்ப்புணர்ச்சியில் கிழிக்கப்பட்டுவிடும்.
    போஸ்டர் ஒட்டிகளுக்கு கூட இன்னும் இவ்வளவு காலம் ஓடியும் கூட அந்த சரித்திர சாதனையாளர் மேல் என்ன வெறுப்போ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.ஒன்றை மட்டும் அவர்கள் புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.அல்லது பகுத்தறிவை மூளையில் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்களா? எதுவும் விளங்கவில்லையே?அவருடைய படங்களின் போஸ்டர்களை ஒட்டியதால் எத்தனை குடும்பங்கள் நிரந்தர வருமானம் பெற்றிருக்கும்?அதுவும் அரை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக அல்லவா?
    நல்ல படம்.நல்ல கருத்துக்கள்.மிகச் சிறந்த நடிப்புக்கு நாங்கள் பயன்பட மாட்டோம் என்பது எந்த கொள்கையில் சேர்த்தி என்பது விளங்கவில்லை.

    கோவை ராயலில் கர்ணன்.
    --------------------------------------------------
    படம் திரையிடப்பட்ட விவரமே பெரும்பான்மையோர்க்கு தெரியவில்லை.டவுன்ஹால் அதனை சார்ந்த பகுதிகளில் மட்டுமே போஸ்டர்களையே காண முடிந்தது.நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கே படம் திரையிடப்பட்டது தெரியவில்லை.வருகை புரிந்த ரசிகர்கள் பத்து பேர் மட்டுமே.அப்படியும் பொதுமக்கள் 100 நபர்களுக்கு மேல்
    வந்திருந்தனர்.வழக்கமாக வரும் தீவிர சிவாஜி ரசிகர்கள் ஒருவர் கூட இல்லை.போன் செய்து வரவில்லையா?என கேட்டால் படம் திரையிடப்பட்டுள்ளதா என ஆச்சரியக் கேள்வியை பதிலாக தந்தனர்.
    இதற்கு முன் திரையிடப்பட்ட படம் ஒன்று நகரில் எல்லா இடங்களிலும் ஆக்கிரமித்திருந்தது. ஆனால் இவருடைய படங்களுக்கு மட்டும் ஏன் விளம்பர தணிக்கைககள்?
    இந்த செயல்கள் இந்தப்படத்திற்கு மட்டுமல்ல.பல வருடங்களாகவே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.அதற்காகத்தான் இந்தப் பதிவு.
    இதை காழ்ப்புணர்ச்சி என்று கொள்வதா?இன்னும் அவரால் செய்யப்படும் சாதனைகளை ஏற்க முடியாத மன திடம் என்று கொள்வதா?தங்களது அர்ப்பணிப்பு உணர்வைஇப்படி வெளிப்படுத்தி அதன்மூலம் தங்களுக்கு ஒரு சிற்றின்பம் கிடைக்கின்றது என்ற எண்ணங்களா?
    மந்தையில் திரிந்து சந்தைக்கு மட்டுமே வரும் ஆடு மாடுக் கூட்டங்களையா அவர் வளர்த்து விட்டார்.பெரும்படை, அதிகாரம் பலம் ஏதுமின்றி உண்மையாயும் உழைப்பிலேயும் வந்த பணத்தாலே வளர்ந்த கூட்டத்தை சீண்டுவதே வாடிக்கையாகி விட்டது சிலருக்கு. இதுவே அவரின் புகழ் மங்கி விடவில்லை என்பதற்கான அத்தாட்சிதானே.இதுவே அவர் பெற்ற வெற்றியல்லவோ.சிவகாமியின் செல்வன் சொல்கிறானே அதற்கு சாட்சி.

    பார்வைக்கு:
    1.திரு.சாந்தி சொக்கலிங்கம்
    2.அனைத்து சிவாஜி மன்றங்கள்
    3.பொது ஜனம்.
    Last edited by senthilvel; 6th June 2016 at 06:27 PM.

  2. Likes Harrietlgy, sss, Russellmai, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •