Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும்'



    'நீலவான'த்தில் கள்ளமில்லாமல் சிரித்து வட்டமிட்டு பறக்கும் தேவிகா சிட்டு. மகன் வயிற்றில் வளருகிறான் என்ற பொய் சேதி அறியா உண்மை சந்தோஷத்தில் உறவினர், உற்றார் மத்தியில் தோழிகளின் கிண்டல்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மத்தியில் தேவிகாவின் அந்த முகத்தில்தான் கைகள் மூடிய, எத்தனை நாணம் கலந்த மகிழ்ச்சி! சும்மாவா சொன்னார் நடிகர் திலகம் 'நீலவானம்' படம் பற்றி. 'தேவிகாவின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்' என்று. 'நடிப்பின் இமய'மே பாராட்டு படித்து விட்டதே தேவிகாவைப் பற்றி.

    பொய் வளைகாப்பு நடப்பதைப் பார்த்து கமுக்கமாகக் கண்ணீர் விடும் சீதாலஷ்மி, சஹஸ்ரநாமம் பரிதாபம்.

    குமாரி பத்மினியும், ராஜஸ்ரீயும் சுசீலா, ராட்சஸி குரலில் இந்த அற்புதமான பாடலைப் பாட சுவையோ சுவை. சுசீலா, ஈஸ்வரியில் யாருக்கு மார்க் போடுவது என்றே தெரியவில்லை. போட்டா போட்டி இருவருக்கு. வெற்றி நமக்கு. பாடலின் பரிதாபமான சிச்சுவேஷனை ஆரம்ப ஷெனாயின் லேசான சோகமே காட்டிக் கொடுத்து விடும்.

    'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் வந்து கைகள் கலந்தாட
    மஞ்சள் முகத்தினில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட'

    என்ன தமிழ்! என்ன தமிழ்!

    'சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக'

    வரிகள் சுசீலா குரலில் மிளிரும் அழகை எப்படி வர்ணிக்க? அப்படியே தெள்ளத் தெளிவான வெண்கலக் குரல் பஞ்சர் பஞ்சராக்கிவிடும் நம்மை. 'ஆஹா! சுசீலாதான் டாப்' என்று மனதுக்குள் சர்டிபிகேட் தந்து கொண்டிருக்கும்போதே 'இதோ நான் இருக்கிறேன்... அதற்குள் முடிவெடுத்து விடாதே' என்று என் ராட்சஸி அடுத்த வரிகளை கேப்ச்சர் பண்ணி அமர்க்களப்படுத்தும் போது மனம் படும் பாட்டை சொல்லிவிட முடியாது.

    'தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக....மல்லிகைச் செண்டாக' என்று முடிவில் ராட்சஸி அதிர்வுகள் கொடுக்கும் போது 'ஈஸ்வரிதான் டாப்' என்று எழுந்து நின்று கத்தத் தோணும்.

    ரெண்டு பேரும் சேர்ந்து வேர்வையை நீண்டு வழிந்தோடச் செய்யும் அழகு.

    'வேர்வை வழிந்தோ......ட'

    குழந்தை வளரும் கர்ப்பப்பையை 'தாமரைக் கோவில்' என்று கற்பனை செய்து பார்த்த கவிஞனின் திறமைதான் என்ன!

    குமாரி பத்மினி குடும்பக் குத்துவிளக்கு என்றால் ராஜஸ்ரீ சற்றே கவர்ச்சி விளக்கு. ரெண்டுமே அழகுதான்.

    ஒன்றை நிச்சயம் கவனியுங்கள்.

    இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக் கூடிய அந்த சில வினாடிக் காட்சி. தூக்கிச் சாப்பிடுபவர் யார்? வேறு யார்? நடிகர் திலகம் அல்லாமல் வேறு யார்?



    பொய் வளைகாப்பு அங்கே தேவிகாவுக்கு நடந்து கொண்டிருக்க, இங்கே டெல்லியில் அகில உலக டாக்டர்கள் மகாநாடு புற்றுநோய் மருத்துவத்திற்காக நடந்து கொண்டிருக்க, தேவிகாவின் புற்றுநோய் குணத்திற்காக டாக்டர்கள் ஒன்று கூடியிருக்கும் கான்பிரன்ஸ் ஹாலின் வெளியே தவிப்புடன் புகை பிடித்தபடி ஒரு ஸ்டைல் வாக் கொடுக்கும் நடிகர் திலகம் அந்த ஒரு நிமிடத்தில் நான் முன்பு சொன்ன அத்தனை ஜாம்பவான்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார். அதாவது முதல் சரணத்திற்கு முன்பாக ஒலிக்கும் இடையிசையில் கான்பிரன்ஸ் ஹாலின் கதவுப்பக்கம் திரும்பி நிற்பவர் அப்படியே திரும்பி சற்றே லாங்க்ஷாட்டிலிருந்து படிக்கட்டுகளின் கீழ் இருக்கும் காமிராவை நோக்கி வருவார். காமெரா கீழிருந்து நடிகர் திலகத்தை ஃபோகஸ் செய்தபடி இருக்கும். சிகரெட்டை வாயில் வைத்து ஒரே ஒரு 'பப்' இழுத்தபடி அவர் ஸ்டைலாக அந்த சோக நிலையிலும் நடக்கும் அந்த வாக். அடடா! கைகளோடு கரெக்ட்டாக பிட்டாகியிருக்கும் அந்த கனகச்சிதமான கருப்பு கலர் ஷர்ட் அவரை இன்னும் அழகாக காண்பிக்கும். 'தம்'மை வாயிலிருந்து கைகளால் எடுத்து சிகரெட்டைப் பிடித்திருக்கும் அந்த அழகு நம்மை நிலைகுலைய வைத்துவிடும். சோகத்திலும் சுகம் அளிக்கக் கூடிய மூன்றே வினாடி ஜோரான காட்சி இது.

    ஒரு விநாடிக் காட்சியை ரசிக்க வைத்து ஓராயிரம் பக்கங்களுக்கு அதை எழுத வைக்க நடிகர் திலகத்தை விட்டால் யாருண்டு?

    தவிப்புடன் 'தம்'மடித்து, தன்னிலை கொள்ளாமல் நடை பயிலும் நடிகர் திலகத்தின் அந்த நடைக்கு ஈடு இணை எதுவும் சொல்ல முடியுமா?

    இரண்டாவது சரணம் தொடங்குமுன் வரும் இடையிசையிலும் அவர் டாக்டர்கள் கைவிட்ட நிலையில் அவர்களிடம் அண்ணியாருக்காக வருத்தமாகக் கெஞ்சுவதும், விரக்தியாக முகபாவங்கள் காட்டுவதும் ஏ.ஒன்.

    அற்புதமான பாடல். லிட்டில் பிளவரும், 'ஓடும் எண்ணங்'களும் 'ஹோ'...'ஓஹோஹோ' என்று இன்றுவரை பிரம்மாண்டம் படைக்க, இந்த வளைகாப்பு பாடல் சற்று பின்தங்கியிருந்தாலும் சற்றும் குறைவில்லாத பாடல்.

    'நீலவான'த்தின் மூன்று பாடல்கள் எப்படி ஆரம்பிக்கின்றன என்று பாருங்கள்.

    'ஓ லஷ்மி...ஓ ஷீலா'

    'ஹோ...லிட்டில் பிளவர்'

    'ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே!'

    எல்லாமே 'ஓஹோஹோ'தானே!

    'சொல்லடா வாய் திறந்து' சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.

    'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் வந்து கைகள் கலந்தாட'


    Last edited by vasudevan31355; 20th June 2016 at 04:48 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •