-
23rd June 2016, 12:50 PM
#37
Junior Member
Platinum Hubber
the hindu -tamil mgr -100 ...comments portion
ஒரு உயர்ந்த மனிதன். அவரை பற்றி பெரும்பாலும் செவி வழியாக கேட்டு இருக்கிறோம், பல கற்பனை என்று எண்ணி இருப்போம். அவற்றை எல்லாம் தொகுத்து, சான்றுகளுடன் வழங்கிய ஸ்ரீதர் சாமிநாதனையும் தமிழ் ஹிந்துவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தன்னை தானே தம்பட்டம் அடிப்பவர்கள், ஆட்சியாளர்கள் மத்தியில் தனி ஒருவராக இருந்து வெற்றி பெறுவது அவ்வளவு சாமானிய வேலை அல்ல.
எம்ஜியார் தமது படங்களில் தாய்க்கு மரியாதை தரும் விதமாக பல பாடல்களை அமைத்து நடித்திருக்கிறார். 'தாய்யிலாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை' - வெற்றிமீது வெற்றிமீது என்னை சேரும், அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும்' - ' தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை"... என நிறைய பாடல்கள், எல்லாம் தாய் அய் போற்றி.
தங்கள் இந்த சிறப்பு தொடரை புத்தகமாக விழாவில் வெளியிடுங்கள் .
என் போன்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வணங்கி வாங்கி மீண்டும் ரசிப்பார்கள்.
பல பாடங்களை பலருக்கும் மானசீகமாக கற்றுக் கொடுத்துக்கொண்டுள்ள இத்தொடர் இன்னும் 10 நாட்களில் முடிய உள்ளது என நினைக்கும்போதே மனம் கனக்கிறது . தொடரை நீடித்தால் இந்துவின் இத்தொடர் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மனம் இனிக்கும். நன்மை நடக்கும்
"தாய் மேல் ஆணை! தமிழ் மேல் ஆணை! குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்! தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்!" - 'நான் ஆணையிட்டால்' படத்தில் ஓங்கி ஒலித்த குரல் வழியே, எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து 10 ஆண்டுகள், ஊழல் நரியினை ஓரங்கட்டி, வீட்டிலேயே உட்கார வைத்தார்! எம்.ஜி.ஆர் தமிழகத்துக்கு ஏதாவது நல்லது செய்து விடுவாரோ? நம்மால் மீண்டும் முதல்வராக வர முடியாமல் போய் விடுமோ? என்று குள்ளநரி செய்த தந்திர வேலைகளை எல்லாம் முறியடித்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில், இந்தியாவில் அந்நிய முதலீடு கொள்கைகள் தாராளமாக்கப்படவில்லை! உலக வர்த்தக சந்தை நிறுவனத்தில் இந்தியா உறுப்பினராகவில்லை! காவேரி நீருக்கும் (விவசாயத்திற்கு) நிலக்கரிக்குமே (மின்சாரத்திற்கும்) கையேந்த வேண்டிய நிலையிலும் மிகத்திறமையாக (மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்றியே) செயல்பட்டு, சத்துணவு திட்டத்திற்காக மக்களிடமும் (திரையுலகினர் உட்பட) கையேந்தி உதவி பெற்று, தமிழகத்தை சிறப்பாக ஆண்டார் எம்.ஜி.ஆர்! அதனால் தான், அவரால் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடிந்தது. நினைத்தை முடித்தவர் அவர் தான்!
அவரது நெஞ்சில் ஈரம் இருந்த காரணத்தால் மட்டுமே அவரைப்பற்றிய காரியங்களை எழுதும் நம் தூரிகைகளிலும் ஈரம் காய்வதே இல்லை . எழுத எழுத புதிதாய் வந்துகொண்டே இருக்கிறது முடிவு சொல்ல முடியாத நல்ல செயல் அனைத்துக்கும் அவர்தான் முதல்மகன் , தமிழக தாய்மார்களின் தலைமகன் , அன்னை சத்யாவின் திருமகன் m g r .
" உள்ளத்தில் இருப்பதை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் " எப்போதும் வாழ்வில் உண்மையாய் வாழ்ந்தவர் !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks