-
7th July 2016, 10:28 PM
#1111
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகம் - திரையுலக சக்கரவர்த்தி வழங்கும் கற்பக விருட்சம் - "ரிக்க்ஷாக்காரன் " புதிய பரிமாணத்தில் 2k தரத்தில் டிஜிட்டல் முறையில் விரைவில் வெளியாக இருப்பது நம் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக அமையும் ... இக்காவியம் பிரம்மாண்ட வெற்றி காண ஒன்று சேர்ந்து களப்பணி காண்போம்...
-
7th July 2016 10:28 PM
# ADS
Circuit advertisement
-
7th July 2016, 10:39 PM
#1112
Junior Member
Diamond Hubber
வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகம் வழங்கும் காவியங்களில் டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் தகவல் பட்டியல்... ரகசிய போலீஸ் 115, நாடோடி, அரசகட்டளை, அன்பே வா, நேற்று இன்று நாளை, மாட்டுக்கார வேலன், எங்க வீட்டு பிள்ளை, நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி--- விபரங்கள் சரியா தோழர்களே...
-
8th July 2016, 01:17 AM
#1113
Junior Member
Seasoned Hubber
எம்.ஜி.ஆர் 100 தொடரை வெளியிட்டதற்காக தி இந்து –வுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்து 30 ஆண்டுகள் ஆகியும் மக்களிடையே எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அப்படியே இருந்து வருகிறது என்றாலும் ஊடகங்களில் அவருக்கு உரிய அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்காத நிலையே இது வரை இருந்து வந்தது. அரசியல் தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது காமராஜருக்குப் பிறகு ஒரு சிறந்த தலைவர் தமிழ்நாட்டில் இருக்கவில்லை என்றும் காமராஜர் ஆட்சிக்குப் பின் ஒரு நல்லாட்சி தமிழ்நாட்டில்அமையவில்லை என்றும் எழுதுவதும் பேசுவதும் வழக்கமாகிவிட்டது.
காமராஜர் ஆட்சி நல்லாட்சி என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் எந்தக் காலக்கட்டத்தில் அத்தகைய நல்லாட்சியைத் தர முடிந்தது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குப்பாடுகள் அதன்பின்னும் சிறிது காலம் நீடித்தன. கடமை உணர்வு மிக்க அதிகாரிகள் , கண்ணியத்தைப் போற்றிய மக்கள், கட்டுப்பாடு நிறைந்த கட்சிகள் இருந்த காலத்தில் காமராஜரின் நல்லாட்சி நடைபெற்றது. இந்தப் பண்புகள் குன்றி இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைந்தது. அந்தச் சூழ்நிலையைத் திறம்படக் கையாண்டு நல்லாட்சி நடத்தினார் எம்.ஜி.ஆர். இந்த உண்மையை உணராமலோ, உணர விரும்பாமலோ, ஊடகங்கள் எம்.ஜி.ஆரைக் குறைத்தே மதிப்பிட்டு வந்தன. இந்த நிலையில் அவரது பல்வேறு சிறப்புகளையும் பெருமைகளையும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்த ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கும் வெளியிட்ட திஇந்துவுக்கும் நன்றி
தொடர் குறைந்த பட்சம் இன்னமும் 50 அத்தியாயங்களாவது வந்திருக்கலாம் . நிறைவடைந்து விட்டது. எனினும் அவ்வப்போது எம்.ஜி.ஆர் பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தொடரை புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன். புத்தகமாக வெளியிடும் போது இன்னமும் விரிவாக பல செய்திகளை தொகுத்து வெளியிட்டால் மிகவும் நலம் பயக்கும். நன்றி.
-
8th July 2016, 10:25 AM
#1114
Junior Member
Veteran Hubber

Originally Posted by
suharaam63783
வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகம் வழங்கும் காவியங்களில் டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் தகவல் பட்டியல்... ரகசிய போலீஸ் 115, நாடோடி, அரசகட்டளை, அன்பே வா, நேற்று இன்று நாளை, மாட்டுக்கார வேலன், எங்க வீட்டு பிள்ளை, நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி--- விபரங்கள் சரியா தோழர்களே...
" நினைத்ததை முடிப்பவன் " காவியம் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் இல்லை.
இதர காவியங்கள் பற்றிய தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்தாலும், உறுதியாக சொல்ல முடிய வில்லை.
" அரச கட்டளை " காவியம், நல்ல பிரிண்ட் கிடைத்த பின்பு டிஜிட்டலில் தயாராகும் என்று கேள்விப்பட்டேன்.
பட்டியலில், முற்றிலும் வித்தியாசமாக, பிரம்மாண்டமான தொழில் நுட்ப முறையில் தயாராகி வரும் " உலகம் சுற்றும் வாலிபன் " மற்றும் வண்ணத்தில் மின்னவிருக்கும் "நாடோடி மன்னன் " காவியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
-
8th July 2016, 11:48 AM
#1115
Junior Member
Platinum Hubber

9.7.1965
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வெளிவந்த கடல் கொள்ளை சம்பவம் கொண்ட பிரமாண்ட வண்ணப்படம் .
மக்கள் திலகத்தின் படங்களிலே அதிக முறை மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களால் அதிக முறை பார்க்கப்பட்ட வெற்றி காவியம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
அட்டகாசமான சண்டை காட்சிகள்
இனிமையான பாடல்கள் -மெல்லிசை மன்னர்களின் பிரமாதமான பின்னணி இசை .
மக்கள் திலகத்தின் கட்டழகு -புதுமையான உடை அலங்காரம்
எழில் கொஞ்சும் கார்வார் -கோவா கடற்கரை படப்பிடிப்பு
விறுவிறுப்பான காட்சிகள்
அருமையான வசனங்கள்
பிரமாண்ட படைப்பு
பந்துலுவின் இயக்கம்
பத்மினி நிறுவனத்தின் என்றென்றும் அமுத சுரபி
1965ல் எங்க வீட்டு பிள்ளை சரித்திர சாதனை படைத்த பின் வந்த அடுத்த வெற்றி படைப்பு ''ஆயிரத்தில் ஒருவன் ''
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த நேரத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவனின் ஓட்டம் பற்றி கேட்கவே வேண்டாம் .திரையிடாத அரங்கமே இல்லை என்ற அளவிற்கு 51 ஆண்டுகள் ஓய்வில்லாமல் மணிமாறன் மக்களை மகிழ்வித்தார் .
மக்கள் திலகம் தன்னுடைய நடிப்பை மிகவும் சிறப்பாக
காட்சிக்கு காட்சி பலவித பரிமாணங்களில் பிரகாசமாக நடித்து காண்போர் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .
எந்த கோணத்தில் பார்த்தாலும் எத்தனை கோணத்தில் பார்த்தாலும் நம் மக்கள் திலகம் இந்த படத்தில் அத்தனை கோணத்திலும் ஜொலித்திருப்பார்
படம் வெளியான நேரத்தில் அத்தனை பத்திரிகைகளும் -திரை உலக பிரமுகர்களும் - விநியோகஸ்தர்களும் - ரசிகர்களும் - பொது மக்களும் - திரை அரங்கு உரிமையாளர்களும் என்று எல்லா தரப்பினரும் மனமகிழ்வுடன் படத்தை பார்த்து மீண்டும் மீண்டும் படத்தை பல முறை பார்த்து ஒரு சரித்திர நிகழ்வினை நடத்தி காட்டினார்கள் .
எம்ஜிஆர் படங்களில் மிகவும் பொழுது போக்கு படமாக கருத பட்ட படம் .
படத்தின் தலைப்பிற்கு தக்கவாறு 'ஆயிரத்தில் ஒருவன் ''
என்று வாழ்ந்த ஒரு மாபெரும் உலக பேரழகன் எங்கள் எம்ஜியார் இன்று உலகமெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்கிறார் என்றால் அந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு
.
-
8th July 2016, 02:15 PM
#1116
Junior Member
Platinum Hubber
8.7.1977
-
8th July 2016, 02:20 PM
#1117
Junior Member
Diamond Hubber

Courtesy - Mr.kalaimani - Facebook
-
8th July 2016, 09:54 PM
#1118
Junior Member
Platinum Hubber
இன்று முதல் (08/07/2016) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் " திரைப்படம், தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது .

தகவல் உதவி : நண்பர் திரு. நசீர் அகமது
-
8th July 2016, 09:57 PM
#1119
Junior Member
Platinum Hubber
-
8th July 2016, 09:59 PM
#1120
Junior Member
Platinum Hubber
Bookmarks