-
19th July 2016, 09:23 AM
#11
Junior Member
Newbie Hubber
ஹிட்லர் கடைசி நாட்கள் பற்றி வாசு விவரம் கேட்டான்.நான் எழுதிய திரைக்கதை கரையானால் பறி போனது. (நெய்வேலியில்)
ஆனால் நினைவில் உள்ளது ,கடைசி 30 நாட்கள்,அதில் அடங்கும்.அது படமாகி இருந்தால் சிவாஜிக்கு oscar நிச்சயம். பாடல்கள் கிடையாது.
32 பக்கங்களில், மற்றோர் பேசும் வசனங்கள் 24 பக்கங்கள் . 8 பக்க வசனம் நடிகர்திலகத்துக்கு. அதிக பட்சம் 5 வாக்கியங்கள் தான் தொடர் வசனம்.மிச்சம் ஓரிரு வாக்யங்களே.
முதலில் ஹிட்லரின் முழு ஆளுமை. - தேச பக்தன், அஞ்சாநெஞ்சன், தான் நினைத்ததை சாதிப்பவன்,திட்டமிடுபவன்,கம்பீரன் ,பேச்சாளி,ஆளுமை மிகுந்தவன். ஆனால் hysteria நோய் ,வயிற்று கோளாறு,கொலை வெறி,personality disorder இவற்றால் அவதி. சைவன், நாய்களின் மீது பிரியம், பெண்களின் மீது நாட்டமின்மை,ஆனால் இனவொழிப்பில் ஈடு பட்டவன்.
ஆனால் கடைசி சில நாட்கள்.
ஹிட்லரின் ஆளுமை படி படியாய் சிதையும். மற்றோர் ஆலோசனை கேளாமல் ,தப்பிக்க எண்ணாமல் கடைசி வரை நம்பிக்கை விதைப்பான். ஆனால் சோர்வு,நம்பிக்கை குலைவு சிறிதே தெரியும். கடைசி நிமிடங்களில் ரகசியமாய் உடைந்து அழுதுள்ளான் .வெளியே காட்டாமல். கடைசி நிமிடங்கள் ஈவா பிரவுன் திருமணம். பிறகு தற்கொலை . என்று உணர்ச்சிகளை அள்ளி தெறிக்கும் படிப் படி நிலை. நடிகர்திலகத்தை தவிர யாருமே செய்திருக்க முடியாது.
அப்போதைய உடல்வாகு ஒத்துழைத்திருக்கும்.
என்ன செய்வது ,அப்போது எனக்கு வயது 14. வாசனும் மறைந்திருந்தார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
19th July 2016 09:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks