-
20th July 2016, 10:23 AM
#11
Junior Member
Newbie Hubber
கடவு(ள் )
நின்னை இமய மலை என்போம்
நடிப்பு கடல் என்போம்
உன் மூச்சு காற்றே நடிப்பென்போம்
உன் வீரம் ஆவேச நெருப்பென்போம்
நீயிருக்கும் நிலத்திலே நிற்பதை கொடுப்பென்போம்.
நடிப்பின் பிரம்மா என்போம்.
சினிமா தொழிலையே காத்த விஷ்ணு என்போம்.
வேடம் புனைந்ததால் நீயே சிவனென்போம்
கலையில் சரஸ்வதி எடுத்த பிறவி என்போம்
குரலில் நடையில் சிம்மம் என்போம்
நடையில் யானை எருதென்போம்
கட்டபொம்மன் என்போம்,சிதம்பரம் என்போம்,
கர்ணன் என்போம் நாவுக்கரசர் என்போம்
நீதியின் காவலன் என்போம், காவலர் என்போம்
மருத்துவர் என்போம் ஆசிரியன் என்போம்
திலகம் என்போம் அனைத்து மதங்களையும்
நடித்து கடந்தவன் என்பதால் வசதி படி எண்ணி கொள்வோம்
வெற்றியும் நீயே திறமையும் நீயே
மேதைமையும் நீயே உழைப்பும் நீயே
நேரத்தின் காலத்தின் காவலனும் நீயே
காலம் கடந்த புகழின் காதலனும் நீயே
அதிர்ஷ்டமும் நீயே தமிழகத்தில் பிறந்த
துரதிருஷ்டத்தின் வடிவும் நீயே
நடிப்பின் வடிவென்போம் வாழ்வில்
நடிக்கவே தெரியா பேதையென்போம்
எங்களின் நிரந்தர போதை என்போம்
உன்னை கடவுள் மனிதன் பஞ்சபூதங்கள்
குணங்கள் உருவ அருவ விவரணங்கள்
தொழில்கள் என்று எங்கும் நீக்கமற
நிறைந்திருக்கும் பரம் பொருளாய் தொழுவோம்
ஆனால் உன்னதமான ஒன்றாய் நான் மதிப்பது
அன்னை பிதா மனைவி மக்கள் இவர்களை மீறி
உண்மை தமிழர் அனைவரின் கடவு சொல்லாய்
நித்தமும் நிலைத்திருக்கும் கலை திலகமே
நீயே கடவு சொல்லாயினும் ,உன்னை எண்ணியும்
கடவா தினமாக இருபத்து ஒன்றை ஆக்கி
தொப்புள் கொடி அறுத்த காலனை
நண்பனென்று எண்ணி கூட போன
எங்களின் நிரந்தர வாதையா நீ
இரண்டை மறைத்து ஒன்றுக்கு காத்திருப்போம்
Last edited by Gopal.s; 20th July 2016 at 10:27 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 7 Likes
-
20th July 2016 10:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks