-
20th July 2016, 11:51 AM
#11
Junior Member
Newbie Hubber
Ganpat
கலைஞர்கள் புரவலர்கள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள்..
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தோன்றி வரும் தலைமுறைகள் பட்ட /படும் அவதி மனித இனத்தில் வேறு எப்பொழுதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.
முதலில் கலாசார மாற்றம்
.பிறகு ஆட்சி முறை மாற்றம்.
பிறகு விஞ்ஞான மாற்றம்.
பிறகு தொழில் நுட்ப மாற்றம்
தற்பொழுது பொருளாதார மாற்றம் ..
இதனூடே பின்னிப்பிணைந்துள்ள கலாசார மாற்றம்.
என ஒரு நூற்றிருபது ஆண்டுகளுக்குள் சுனாமி போன்ற மாற்றங்கள்..
பல தலைமுறைகளாக கலைஞர்களை ஆதரிப்பது எனும் பெயரில் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெண்களை சீரழித்து வந்தனர்.இது ஒரு வடிகட்டிய அயோக்கியத்தனம்.இதற்கு தேவதாசி எனும் ஒரு இனிப்பு தடவிய பெயர் வேறு!!இது தேவரடியார்கள் என மருவி மேலும் என்னென்னவோ ஆகி, இவ்வினத்தவர் ஆண்களுக்கு இசைந்தால் இசைசொல்லாகவும்,மறுத்தால் வசை சொல்லாகவும் ஆகிப்போனது.1920 களில் இதை எதிர்த்து,ஒழிக்க கோரி சென்னை சட்ட சபையில் ஒரு சரித்திர புகழ் பெற்ற விவாதம்.Dr.Muthulakshmi Reddy அம்மையார் கடுங்கோபத்துடன் விவாதம் செய்ய காங் தலைவர் திரு சத்யமூர்த்தி அவர்கள் தேவதாசி முறை சமுதாய சுமுகமான போக்கிற்கு அத்தியாவசியமானது அதை நீக்குவது பேராபத்து என்றும் பேச,எழுந்தார் அம்மையார்.."மதிப்பிற்குரிய சத்யமூர்த்தி அவர்கள் தங்கள் குடுமபத்திலிருந்து ஒரு பெண்ணை இந்த நல்ல முறைக்கு நாட்டின் நன்மை கருதி அனுப்பி வைக்க இசைந்தால் இந்த மசோதாவை நான் வாபஸ் பெறுகிறேன் என கர்ஜிக்க முன்னவர் முகத்தில் ஈயாடவில்லை.அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தேவதாசி முறையும் ஒழிந்தது.
சரி இனி மோகனாவின் கதை.
அவள் ஒரு குணவதி.தன் இனத் தொழிலை வெறுப்பவள்.சண்முகத்திடம் ஒரு நல்ல மனிதன் மற்றும் கலைஞனைக்கண்டு அவனை நேசிக்கிறாள்.அவனும் அப்பாவி.மோகனாவின் நிலை அறிந்து அவளை நேசிக்கிறான்.
ஆனால் இயல்பு காரணமாக அவ்வப்பொழுது சந்தேகம் தலை தூக்குகிறது.அதன் அடிப்படையில் அமைந்தது தான் இந்த திரைக்கதை.இதில் வடிவு எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்திடமிருந்து தூர எடுத்து செல்லவும்,ஜில் ஜில்
எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்தின் அருகே கொண்டு வரவும் மட்டுமே கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.
வடிவு தன மகளின் அழகையே மூலதனமாக பார்க்கிறாள்.அவள் கலையைப்பற்றி அவ்வளவு அக்கறையில்லை.ஆனால் மகளின் மனதை மாற்ற அவள் நேசிக்கும் கலையையே ஒரு tool ஆக பயன் படுத்தி அவளை வெற்றிகொள்ள பார்க்கிறாள் முடிவில் தோல்வி அடைகிறாள்.அவளுக்கு தன survival மட்டுமே top priority.
இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)
எனவே வடிவு எனும் பாத்திரம் ஒன்றும் போற்றத்தக்க ஒன்றல்ல.சுயநலம் மிகுந்து தன மகளின் வாழ்வும் தன் வாழ்வு போல ஆவதில் தவறில்லை என நினைக்கும் தாய்.இந்தப்போக்கை,சண்முகம் எனும் ஒரு அற்புத கலைஞனை ,சுந்தர புருஷனை பார்ப்பதற்கு முன் வேண்டுமெனில் ஓரளவு நியாயப்படுத்தலாம்.ஆனால் தன மகள் அவனுடன் மனைவி எனும் பெருமையுடன் இணைவதை விட ,ஒரு செல்வந்தனுடன் தாசி எனும் பட்டத்துடன் இணைவதே தனக்கு நல்லது எனும் கருத்தில் செயல்பட்ட அவள் ஒரு வில்லியே!
PR
Quote Originally Posted by Ganpat View Post
இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)
ரமாமணியாரின் சுய-அபிப்ராயத்தில் தவறென்ன கண்டீர்?
கலையில் மேல்-கீழ், உயர்ந்தது/தாழ்ந்தது என்ற தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன?
கர்நாடக சங்கீதத்தோடும், பரநாட்டியத்தோடும் ஒன்றி ரசிக்க முடியாதவர்களுக்கு ஒரு உலகமே இருந்தது என்று ஏபிஎன் சிறப்பாக பதிவு செய்கிறார். குதிர குதிர பாய்ச்சலு...இங்கே கொட்டாயில கூச்சலு
அவளை ரசிக்க சனம் உண்டு: அவுஹ ஆடுனாத்தான் பாப்பாஹளா, நான் ஆடுனா கண்ணை மூடிக்குவாஹளா
படாடோபம் மிக்க உயர்குடிகள் அங்கு வருவதே இழிவாக நினைக்கிறார்கள். மாமனார் கடம்பவனம் மருமகன் 'ஏன் அங்கே வந்திருக்கிறான்' என்பதை அங்கு வரும்வரை முழுவதுமாக அறியவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது. கோச்சுவண்டி அங்கு வந்து நிற்பதே, சிங்கபுரம் மைனர் கூத்தாடும் இடத்துக்கு வந்ததே அவருக்கு அசூயை ஏற்படுத்துகிறது!
"வருசாவருசம் இங்கன நான்தான் ஆடிக்கிட்டு கிடந்தேன்...இந்த வருசம் என்ன நினைச்சாரோ செட்டியாரு திருவாரூர்லேர்ந்து புதுசா ஒரு செட்டைக் கொண்டுவந்து இறக்கிட்டார்..ஏஏன்" என்று வெகுளியாக இழுத்துக் கேட்கிறாள்
"அந்த மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாஹன்னு பார்த்துட்டு வாரேன்" என்று வீம்பாக சொல்லிச் செல்கிறாள்
I find it moving. நினைத்துப் பாருங்கள்: மோகனாவுக்கும் பலகண்ணாடி அலங்கார முதல் ஃப்ரேம்...ரமாமணி'க்கும் அலங்காரம் செய்துகொண்டு தயாராகும் முதல் ஃப்ரேம்! மேடையில் ஆட ஆயத்தமாக இருக்கும் அலங்காரங்களுடன் சென்றவள்- கசப்பின் சுவடே தெரியாமல் பூரணமாக ரசிக்கத் துவங்கிவிடுகிறாள்!
என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th July 2016 11:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks