Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post

    3. சோ

    இவரும் புரட்சித் தலைவர் இருந்தபோது அவரை தனது பத்திரிகையிலும் பேட்டியிலும் கூட்டங்களிலும் எவ்வளவு கேலி செய்திருக்கிறார். அவரது ஆட்சியை கேலி செய்தார். சத்துணவு திட்டத்தை குறை கூறினார். 1980வது வருசம் தேர்தலில் மட்டும் புரட்சித் தலைவரை ஆதரித்தார். தேர்தலுக்குப் பின் மறுபடியும் புரட்சித் தலைவரை குறை கூறினார்.

    பின்னர், புரட்சித் தலைவியை ஆதரித்தார். 1996 தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தாலும் பின்னர் மறுபடியும் புரட்சித் தலைவியை சோ தீவிரமாக ஆதரித்தார். கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதையும் ஆதரித்தார். புரட்சித் தலைவியின், அதிமுகவின் ஜால்ரா பத்திரிகை துக்ளக் என்ற அளவுக்கு அவரது செயல்பாடுகள் அமைந்தன. புரட்சித் தலைவி இலவச திட்டங்களை கொண்டு வந்தபோதும் ஆதரித்தார். நமது நாட்டில் ஏழைகள் உள்ளவரை இதுபோன்ற திட்டங்கள் தேவை என்றார். சத்துணவுத் திட்டமும் நல்ல திட்டம் என்பதை இப்போது உணர்கிறேன் என்றார். புரட்சித் தலைவர் இருந்தபோது இதை உணரவில்லை. புரட்சித் தலைவருக்கு ரிக்க்ஷாக்காரன் படத்துக்காக பாரத் பட்டம் கொடுக்கப்பட்டதை கூட தனது பத்திரிகையில் விமர்சித்தார். அதை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை.

    போனவாரம் கூட சோவின் மகன் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்வரின் உடல்நிலையை விசாரித்தார் என்ற செய்திகள் வந்தது. இதில் அரசியல் பார்க்கக் கூடாது. மனிதாபிமானம்தான். ஆனால், இந்த சோவின் மகன் புரட்சித் தலைவியின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையின் இயக்குநர்களில் ஒருவர் என்று சில மாதங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த கம்பெனி நிர்வாகிகளில் சோவின் மகன் பெயர் உள்ளதை அந்த கம்பெனியின் சான்றிதழோடு போட்டோ காப்பியை வெளியிட்டார்கள். அந்த பத்திரிகைக்கு சோ மறுப்பு தெரிவிக்கவில்லை. துக்ளக் பத்திரிகையிலும் மறுத்து எழுதவில்லை.

    புரட்சித் தலைவர் ஆட்சியில் எரிசாராய ஊழல் நடந்ததாக சோ துள்ளிக் குதித்தார். பின்னர், விசாரணை கமிஷனில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று தீர்ப்பு வெளியானது. அந்த சமயத்தில் சோவின் தந்தை எரிசாராய ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று புரட்சித் தலைவர் குற்றம் சாட்டினார். அதையும் இப்போது மிடாஸ் மதுபான ஆலையில் சோவின் மகன் ஒரு நிர்வாகியாக இருப்பதையும் நினைத்துப் பாருங்கள். அதற்காக மிடாஸ் மதுபான ஆலையில் ஊழல் என்று நான் சொல்லவில்லை. முறைப்படி அனுமதியோடு நடத்துகிறார்கள். ஆனால், சாராய ஆலை என்றாலே சோ குடும்பத்துக்கு தீட்டு என்று அர்த்தமில்லை, அதிலும் 1996-ம் ஆண்டு புரட்சித் தலைவி ஊழல் செய்கிறார் என்று திமுகவை ஆதரித்தவர் இப்போது தன் மகன் அவர்கள் நிறுவனத்தில் பங்கேற்றதை தவறாக நினைக்கவில்லை என்பதைப் பாருங்கள்.

    ஆனால் ஒன்று, புரட்சித் தலைவரின் வள்ளல்தன்மையை சோ எப்போதும் பாராட்டி வந்திருக்கிறார். 6-7-2016 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையில் புரட்சித் தலைவரின் தர்ம சிந்தனை வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்று வாசகர்களின் கேள்விக்கு தானே பதில் அளிக்கும் கேள்வி பதில் பகுதியில் சோ பாராட்டியுள்ளார். அதை இங்கே தருகிறேன்.




    இப்போதும் இரா. செழியன் பேட்டி மூலம் புரட்சித் தலைவருக்கு ஆதரவான கருத்துக்களை தனது பத்திரிகையில் சோ வெளியிடுகிறார்.

    ஆக இதிலிருந்து ஒன்று புரியுது. புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் தூற்றியவர்கள் இப்போது அவரது பெருமையை உணர்ந்து வாழ்த்துகிறார்கள். இந்த பெருமை எல்லாருக்கும் கிடைக்காது.

    தர்மம் தலைகாக்கும் படத்தில் தர்மம் தலைகாக்கும்... என்ற பாடலில் ‘மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல நீங்கிவிடும். நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்’ என்று புரட்சித் தலைவர் பாடுவார்.

    அதுபோல புரட்சித் தலைவரை நல்லபடி வாழவிடாமல் செய்யும் முயற்சியில் (அப்போதே அதிலும் இவர்கள் தோல்விதான் கண்டார்கள்) இறங்கியவர்கள் இப்போது அவர் வாசலில் வணங்கி நிற்கிறார்கள். அதனால்தான் புரட்சித் தலைவர் சாதாரண மனிதர் இல்லை. மனித உருவத்தில் வந்த தெய்வமாக விளங்குகிறார்.

    மனித வடிவில் வந்து வாழ்ந்து காட்டிய தெய்வம் புரட்சித் தலைவர், எதிரிகள் உட்பட எல்லாருக்கும் அருள் தருவார்.

    போன அக்டோபர் மாதம் 21ம் தேதி புரட்சித் தலைவரை தூற்றிய கருணாநிதி, வீரமணி, சோ போன்றவர்கள் இப்போது போற்றுகிறார்கள் என்று நான் போட்ட பதிவில் இது ஒரு பகுதி. சோ அவர்களைப் பற்றி மட்டும் உள்ள பகுதி.

    சோ அவர்களின் மறைவு வருத்தம் தரக்கூடியதுதான். ஆனால், முன்னர் அவர் புரட்சித் தலைவரைப் பற்றி எழுதியதையும் கிண்டல் செய்ததையும் மறக்க முடியவில்லை. அடிப்படையிலேயே, அவர் திமுக எதிர்ப்பாளர். அது அவரின் ரத்தத்தில் ஊறிய பரம்பரை குணம். அவரது அப்பாவும் திமுக எதிர்ப்பாளர். பழைய காங்கிரஸ்காரர். அந்த குணம்தான் புரட்சித் தலைவர் திமுகவில் இருந்ததால் அவர் மீதும் சோவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

    ஆனால், கால மாற்றத்தில் 1980ம் ஆண்டு தேர்தலில் புரட்சித் தலைவரை சோ ஆதரித்தார். திமுகவில் இருந்து தலைவர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கிவிட்டார் என்பதும் காரணம். தேர்தலுக்குப் பின் புரட்சித் தலைவரைப் பற்றி மீண்டும் கிண்டல் கேலி தொடர்ந்தது. திமுகவைத்தான் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தாச்சே. அப்புறம் என்ன? 1984ம் ஆண்டு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. விருப்பப்பட்டவர்களுக்கு வாசகர்கள் சிந்தித்து ஓட்டளியுங்கள் என்றார். புரட்சித் தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எப்படியும் அவர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார், திமுக தோற்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.

    தலைவர் மறைந்தவுடன் 1989-ல் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தார். 1991-ல் புரட்சித் தலைவி தலைமைக்கு ஆதரவு. 1996-ல் புரட்சித் தலைவி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அப்போது புரட்சித் தலைவியை ஆதரித்தால் தன் நடுநிலை பிம்பம் சிதறிவிடும் என்பதால் திமுகவுக்கு ஆதரவு அளித்தார். மூப்பனார் தமாகாவை தொடங்க தூபம் போட்டு அவருக்காக அறிவாலயம் சென்று பேசினார். ஏதோ அதற்குமுன் மூப்பனாருக்கும் கருணாநிதிக்கும் அறிமுகமே கிடையாது, இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார் என்பதைப்போல.

    எல்லாம் சீட் பேரத்துக்குத்தான். தலைவர்களுக்கும் இவ்வளவு சீட் கொடுங்கள் என்று நேரடியாக கேட்கவும், இவ்வளவுதான் கொடுப்போம் என்று நேரடியாக சொல்வதற்கும் தயக்கம் இருக்கும். சோ போன்றவர்களை தூதராக பயன்படுத்திக் கொள்வார்கள். 2001-ம் ஆண்டு மீண்டும் நம் பக்கம் வந்துவிட்டார். அதே மூப்பனாரை பேசிப் பேசி நமது கூட்டணிக்கும் கொண்டு வந்துவிட்டார். அப்போதில் இருந்து கடைசி வரை தீவிர அதிமுக ஆதரவாளராகவே சோ இருந்தார். அதாவது தமிழகத்தைப் பொறுத்தவரை. அகில இந்திய அளவில் அவர் பா.ஜ.க. ஆதரவாளர். அந்த விசுவாசத்துக்காக ராஜ்யசபா எம்.பி. பதவியும் பெற்றார். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக ஆதரவாளர்.

    2011 தேர்தலில் விஜயகாந்தை சந்தித்துப் பேசி அதிமுக பக்கம் கொண்டு வந்தார். சுருக்கமாக சொன்னால் சோ ஒரு பவர் புரோக்கர். இந்த வருசம் ஜனவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டு விழாவிலும் வரும் சட்டசபை தேர்தலில் (அதாவது போன மே மாதம் நடந்த தேர்தல்) அதிமுகவே வெற்றி பெற்று புரட்சித் தலைவி முதல்வராக வேண்டும் என்று பேசினார்.

    இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஊழல்வாதி என்று புரட்சித் தலைவியை 1996-ல் சொன்ன அதே சோ – தான் பின்னர் தீவிரமாக ஆதரித்தார். இதற்கு காரணம், ஒன்று புரட்சித் தலைவி நிரபராதி, ஊழலே செய்யாதவர் என்று அவர் நம்பியிருக்க வேண்டும். அல்லது திமுகவை தோற்கடிப்பதற்காக புரட்சித் தலைவியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும் இல்லையா? இரண்டாவதுதான் அவரது நிலைமை. ஆக,அவரைப் பொறுத்த அளவில் தன்னால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றாலும் தேவை என்றால் ஊழலில் சமரசம் செய்து கொள்ளக் கூடியவர்தான் சோ என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

    புரட்சித் தலைவியின் தோழி சசிகலா குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ள மிடாஸ் மதுபான ஆலை உட்பட 9 நிறுவனங்களுக்கு எம்.டி.யாக இருந்தார் சோ. இதைச் சொன்னவர் சாதாரணர் இல்லை. ஆம் ஆத்மி கட்சியில் இருந்த இந்தியாவின் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண். சென்னையிலேயே வைத்து இதைச் சொன்னார். அந்த செய்திக்கான லிங்க் :
    http://tamil.oneindia.com/news/tamil...98-269198.html

    அதை சோ மறுக்கவில்லை. இப்போதும் மிடாஸ் நிறுவனத்தில் சோவின் மகன் ஒரு இயக்குநர். நான் ஏற்கனவே மேலே உள்ள பதிவில் சொன்னபடி சில மாதங்கள் முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் இது செய்தியாக வந்தது. இதையும் சோ மறுக்கவில்லை. சோ, மற்றும் அவரது மகனின் வியாபாரத் தொடர்பை காட்டும் வரைபடம். நக்கீரன் பத்திரிகையில் வந்தது.



    இதற்கும் சோ மறுப்பு தெரிவிக்கவில்லை.

    சசிகலாவின் மதுபான ஆலையில் தானும் பங்கு வகித்து தன் மகனும் பங்கு பெற்று வரும் நிலையில், புரட்சித் தலைவியோ சசிகலாவோ ஊழலே செய்யவில்லை என்றாவது சோ கூறினாரா என்றால் இல்லை. வெண்டைக்காயை விளக்கெண்ணையில் தோய்த்த மாதிரி விளக்கங்கள். நேற்று (7-ம் தேதி) மறைந்த சோவின் உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த செய்திக்கான தினத்தந்தி பத்திரிகை லிங்க்:

    மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
    http://www.dailythanthi.com/News/Sta...a--tribute.vpf

    என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மண் மணக்கும் மதுரையில் சுப்பிரமணிய சாமி போட்டிபோட்டபோது அவருக்கு ஓட்டுப் போட வாசகர்களை தனது துக்ளக் பத்திரிகையில் கேட்டுக் கொண்டார். சு.சாமி எவ்வளவு பெரிய ஜெகஜால புரட்டர் என்று இந்தியாவுக்கே தெரியும். யாராவது அப்படியா? என்று கேட்டால் விவரங்களைத் தரத் தயாராக இருக்கிறேன். அந்த சு.சாமி, சோவுக்கு நண்பர். அந்த சு.சாமிக்கு மறைந்த சந்திரா சாமி என்ற சாமியார் நண்பர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளியை கிளப்பி விட்டு ஊரை ஏமாற்றியவர் சந்திரா சாமி. அவரும் ஒரு அரசியல் புரோக்கர்.

    இப்படிப்பட்ட சோ, கடந்த காலங்களில் புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் இப்போது திமுகவையும் காங்கிரசையும் பார்த்து ஊழல் என்று கூப்பாடு போட்டார் என்றால், அதைச் சொல்ல சோ போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தயவு செய்து சிந்தியுங்கள்.

    இப்போது எதற்கு இதெல்லாம் என்று தோன்றலாம். கடைசி காலத்தில் சோ நமது கட்சிக்கு ஆதரவாகத்தான் இருந்தார் என்றாலும் கடந்த காலங்களில் இவர், அதுவும் நேர்மையாளர் நடுநிலையாளர் என்ற போர்வையில் புரட்சித் தலைவரையும் புரட்சித் தலைவியையும் பற்றி பேசியதும் எழுதியதும் மனதில் ரணமாக உள்ளன. அதனால்தான் இந்தக் குமுறல்.

    என்றாலும் ஒருவர் இறந்துவிட்டால் எதிரியாவே இருந்தாலும் இரங்கல் தெரிவிப்பது தமிழனின் பண்பாடு. சோ-வின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    Last edited by SUNDARA PANDIYAN; 8th December 2016 at 02:53 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •