-
14th December 2016, 05:56 PM
#3521
Junior Member
Platinum Hubber

Originally Posted by
jaisankar68
super stills. Thanks Jai sir
-
14th December 2016 05:56 PM
# ADS
Circuit advertisement
-
15th December 2016, 07:41 PM
#3522
Junior Member
Diamond Hubber
Makkalthilagam- Emperor of Cine World presents "Rahasiya Police 115" Digital version now screening @ Thanjai--- Thiruvalluvar DTS Daily 4 Shows...
-
16th December 2016, 07:10 PM
#3523
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ''ஒளிவிளக்கு '' 10.12.2016 முதல் 16.12..2016
கடந்த வாரம் சென்னை கிருஷ்ணவேணி திரை அரங்கில் 6 நாட்கள் ஓடியது .
மொத்த வசூல் ரூ 93,000. விநியோகஸ்தரின் பங்கு ரூ 40, 000.
இன்று முதல் அகஸ்தியா அரங்கில் தினசரி 2 காட்சிகள் . மதியம் காட்சிக்கு 450 பேர்கள் கண்டு களித்தார் கள் .
மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடர்கிறது .
நன்றி . இனிய நண்பர் திரு லோகநாதன் - சென்னை அனுப்பிய தகவல் .
-
17th December 2016, 01:33 PM
#3524
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் ''ஒளிவிளக்கு '' 10.12.2016 முதல் 16.12..2016
கடந்த வாரம் சென்னை கிருஷ்ணவேணி திரை அரங்கில் 6 நாட்கள் ஓடியது .
மொத்த வசூல் ரூ 93,000. விநியோகஸ்தரின் பங்கு ரூ 40, 000.
இன்று முதல் அகஸ்தியா அரங்கில் தினசரி 2 காட்சிகள் . மதியம் காட்சிக்கு 450 பேர்கள் கண்டு களித்தார் கள் .
மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடர்கிறது .
நன்றி . இனிய நண்பர் திரு லோகநாதன் - சென்னை அனுப்பிய தகவல் .
தகவலுக்கு நன்றி
-
18th December 2016, 11:38 AM
#3525
Junior Member
Platinum Hubber
தமிழக முன்னாள் அமைச்சர், காளிமுத்து எழுதிய, 'வாழும் தெய்வம்' என்ற நூலிலிருந்து:
ஒருமுறை, எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும் போது, வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள், ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்
எம்.ஜி.ஆர்.,
'எல்லாரும் நல்லா இருக்கீங்களா...' என்று, எம்.ஜி.ஆர்., விசாரித்த போது, அவர்கள், 'மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும்; நாங்க நல்லா இருப்போம்...' என்று சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டனர். அவர்களின் கைகளை பற்றி நெகிழ்ந்து போனார், எம்.ஜி.ஆர்.,
அவர்களிடம் விடைபெற்று காரில் பயணித்த போது, நெகிழ்ந்த குரலில், 'நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்ன்னு சொல்ற இந்த மக்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப் போறேன்...' என்றார்.
மக்கள், தன் மீது காட்டிய பாசத்தை போலவே, அவரும் மக்கள் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் அன்று நேரில் பார்த்தேன்.
அவரது ஆட்சியின் போது, ஒருமுறை, ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை; குடியிருப்பு பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர்., அவருடன் நானும் சென்றேன்.
சேறும், சகதியுமான வீதிகளில் கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களை பார்த்ததுமே, காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., சிறிதும் யோசிக்காமல், வேட்டியை மடித்துக் கட்டி, முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க, பதறிப் போன மக்கள், 'அய்யா... எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல; உங்கள பாத்ததே போதும்; சகதியில் நடக்காதீங்க...' என்று தடுத்தும் கேளாமல், அவர்கள் அருகில் சென்று, ஆறுதல் கூறினார்.
பின், மின்னல் வேகத்தில், நிவாரணப் பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல; தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர், எம்.ஜி.ஆர்.,
முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அமரராகும் வரையிலான, 11 ஆண்டுகளில், ஒரு சென்ட் நிலமோ, வீடோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம், திரையுலகில் தான் சம்பாதித்த சொத்துகளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என, தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்தார். அவர் போல் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர், வேறு யாரும் இல்லை. ஏனெனில், தான் சம்பாதித்த மாபெரும் சொத்து, மக்களின் செல்வாக்கு என நினைத்தார்; அதை மதித்ததுடன், கடைசி வரை கட்டிக்காக்கவும் செய்தார்.
இதற்கு உதாரணமாக, இன்னொரு சம்பவத்தையும் கூறலாம்.
ஒருமுறை எம்.ஜி.ஆருடன் காரில் சென்றேன். அவரது காரைப் பார்த்ததும், சாலையின், இருபுறமும் திரண்ட மக்கள், 'தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர்., வாழ்க...' என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., என்னிடம், 'இவங்க எல்லாருமே எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு வாழ்த்தறாங்களே தவிர, ஒருத்தர் கூட, முதலமைச்சர் வாழ்கன்னு ஏன் சொல்லலன்னு தெரியுமா?' என்று கேட்டார்.
'உங்க மூன்றெழுத்து பெயர்; அவங்களுக்கு மந்திரம் மாதிரி; அதனால் தான்...' என்றேன்.
'அதுமட்டுமல்ல; முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா, அது பதவியை வாழ்த்துற மாதிரி.
எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு சொன்னா தான், என்னை வாழ்த்துற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதை நான் பத்திரமா காப்பாத்தியாகணும்...' என்றார்.
இறுதி வரை, அவர் சொன்னது போலவே நின்றார்.
to day dinamalar.
-
19th December 2016, 06:49 PM
#3526
Junior Member
Platinum Hubber
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு ஜெயா குழும தொலைக்காட்சிகளில் கடந்த 14 நாட்களாக மக்கள் திலகத்தின்
ஆயிரத்தில் ஒருவன்
குமரிக்கோட்டம்
அரசகட்டளை
பட்டிக்காட்டு பொன்னையா
அன்னமிட்ட கை
ராமன் தேடிய சீதை
ஒரு தாய் மக்கள்
புதிய பூமி
தேர்த்திருவிழா
கணவன்
தனிப்பிறவி
11 படங்களை சுழற்சி முறையில் பல முறை ஒளிபரப்பினார்கள் .ஜெயா மியூசிக்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்களின் பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பினார்கள் .இன்னமும் தொடர்கிறது .
மற்ற ஊடகங்களிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த பல படங்களை ஒளி பரப்பினார்கள் .
24.12.2016 அன்று மக்கள் திலகத்தின் நினைவு நாள் முன்னிட்டு மேலும் பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்களையும் , சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள் .
-
19th December 2016, 06:56 PM
#3527
Junior Member
Platinum Hubber
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் .
மறைந்த தமிழக முதல்வருக்கு அஞ்சலி செய்ய வரும் பல்லாயிரக்கணக்கான
மக்கள் அனைவரும் புரட்சித்தலைவரின் சமாதியில் அஞ்சலி செய்து வருகிறார்கள் .
-
19th December 2016, 07:16 PM
#3528
Junior Member
Platinum Hubber
என்ன பொருத்தம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல் வரிகள்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்ஆஹா..
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
நான் உனக்காகப் பிறந்தவள்
உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
உன்னை ஒருபோது தழுவி
மறுபோது உருகிதனியாகத் துடிப்பவள்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனியாருக்கு இங்கே கிடைக்கும்
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
யாருக்கு யார் என் எழுதியவன் -
என்னைஅவனுக்குத்தான் என எழுதிவிட்டான்
நேருக்கு நேரே பார்க்க வைத்தான் -
நானேதான் உனக்கு விழிகாட்டி -
உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
உலகை அதனால் மறந்தவள்தானே
இறைவன் அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே
சத்தியமாக எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
விடிய விடிய வீசு -
உன் விழியை எடுத்து வீசு
உன் கைகளில் நான் குடியிருந்தால்
உலகம் எனக்கு தூசு
நீங்க நெனச்சா நடக்காதா
நான் நெனச்சது கெடைக்காதா
உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கருத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற
மேனியை பாரு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு
கூறடி கூறு
எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் -
ஒருகொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
-
19th December 2016, 08:46 PM
#3529
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு ஜெயா குழும தொலைக்காட்சிகளில் கடந்த 14 நாட்களாக மக்கள் திலகத்தின்
ஆயிரத்தில் ஒருவன்
குமரிக்கோட்டம்
அரசகட்டளை
பட்டிக்காட்டு பொன்னையா
அன்னமிட்ட கை
ராமன் தேடிய சீதை
ஒரு தாய் மக்கள்
புதிய பூமி
தேர்த்திருவிழா
கணவன்
தனிப்பிறவி
11 படங்களை சுழற்சி முறையில் பல முறை ஒளிபரப்பினார்கள் .ஜெயா மியூசிக்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்களின் பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பினார்கள் .இன்னமும் தொடர்கிறது .
மற்ற ஊடகங்களிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த பல படங்களை ஒளி பரப்பினார்கள் .
24.12.2016 அன்று மக்கள் திலகத்தின் நினைவு நாள் முன்னிட்டு மேலும் பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்களையும் , சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள் .
Thanks Vinod sir.
-
19th December 2016, 08:57 PM
#3530
Junior Member
Diamond Hubber
Bookmarks