-
15th May 2017, 09:02 PM
#11
Senior Member
Devoted Hubber
1960 களின் போது நடிகர் திலகம் எவரும் எட்டமுடியாத உயரத்தில் இருந்தார், " ப" வரிசையில் தொடர்ந்து வெள்ளி விழா படங்கள், உலகின் சிறந்த நடிகர் விருதை கட்டபொம்மன் எகிப்தில் வென்றது, அமெரிக்கா சிறப்பு கலைத்தூதுவராக அழைத்து " நயாக்ரா" நகரின் மேயராக அமர்த்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம், வருடத்திற்கு 10 படங்கள் என வெளியாகி மொத்த கோடம்பாக்கமும் நடிகர் திலகம் மயமாகியது,
இப்படி நடிகர்திலகம் புகழ் உச்சியில் ஏறிக் கொண்டே இருந்தாலும் எதிர்வினை புரிவோர் நடிகர் திலகத்தின் புக...ழை குறைக்க பல வழிகளை கையாண்டனர், அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்று சிவாஜி பெரும் பணக்காரர் அவர் பல சொத்துக்களை கொண்டவர் என்பது, அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் சாந்தித் திரையரங்கை வாங்கி மேம்படுத்தி தென்னிந்தியாவின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றாக உருவாக்கி இருந்தார், மேலும் அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் பணக்காரராக நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, ஆலயமணி, இருவர் உள்ளம், பார் மகளே பார், போன்ற வெற்றித் திரைப்படங்களை பார்த்த சாமான்ய பாமர மக்கள் அந்த நடிப்பை அப்படியே உண்மை என ஏற்றுக் கொண்டனர்,
நடிகர் திலகம் பெரும் பணக்காரர் என பொய்ப் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், பொய் அரசியல் வாதிகள் அதே கால கட்டத்தில் ............... அவர்கள் உருவாக்கிக் கொண்ட ........................................ என நடிகர் திலகத்தின் சொத்துக்களை காட்டிலும் பல மடங்கு மதிப்பினை கொண்டிருந்ததை மறைத்து அவர் ஏழை, ஏழைப் பங்காளன் என்றே மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற் கொண்டன, அதன் விளைவும் ஏழைக் காப்பாளன் போன்ற அதிகப்படியான திரைப்படங்களில்(......... )அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் சாமான்ய பாமர மக்களை நம்பும் படியாகவும் அமைந்து போனது..
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th May 2017 09:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks