-
22nd April 2010, 09:57 AM
#31
- மனிதன் -
இருப்பதை மறந்தும், நல்லதையே பெறவிழையும்
அருமையான உயிரினம்!. பெற்ற ஆறறிவில் பொறுமையாய், ஒன்றை உபயோகித்தாலே போதும்.
பிறரையும் தன்னையும் காக்க இயலாதா?
ஓட்டங்கள் - பின்னணியில் ஒராயிரம் ஆசைகள்.
தட்டிப் பறித்தாவது பொருள், வெற்றி ஈட்டிட வேண்டும் - நீதி, நேர்மை முதலியவை வேண்டா சொற்கள் மனிதனுக்கு.
etthanai kOti inbam vaithAi iraivA.
Seven wonders are the very basic notes.
-
22nd April 2010 09:57 AM
# ADS
Circuit advertisement
-
6th May 2010, 12:52 PM
#32
!ஓ அமைச்சர்'
அமைச்சர் பெருமாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.
தமையும் சொற்பொழி வாற்ற அழைத்தற்கு. அமைதியின்றி
இரண்டு நாட்களாய். பக்கம் பக்கமாய்..
பரபரபான பேச்சுக்கு ஆயத்தம்.
'அந்த' நாளும், வேளையும் வந்ததே.
'சொந்த' காரிலே சொகுசாய் பள்ளிக்கு. எந்த
சிந்தனையும் இல்லை இதைத் தவிர.
உந்தும் உற்சாகமொடு மேடைக்கு..
துள்ளி ஓடிவந்த தலைமை ஆசிரியர்
மெள்ள அவரின் காதில் - 'முதலில் பள்ளி
சிறுவர்களுக்கு பரிசு வழங்குகள், பின்னர்
அருமையான உங்கள் பேச்சென்றார்."
பலமுறை சொல்லியும் கேளாத பெருமாள்.
கலகலப்பாய், பேச்சுக் களத்திலே. நகைச்சுவை துலங்க
தனது ஆற்றலை ஆர்பாட்டமாய் வெளிப்படுத்த;
அனைத்து சிறுவரும் அசையாமலே...
சிரிக்காத, கைதட்டாத மாணவர்களைக் கண்டு
எரியும் சினமொடு ஒருவழியாய் அமர்ந்தார். திரும்பினால்..
" கேட்கும் திறன் கருவி கொடுக்கும்விழா'...
சட்டென உணர்ந்தார் தன்பிழையை.
etthanai kOti inbam vaithAi iraivA.
Seven wonders are the very basic notes.
-
6th May 2010, 01:22 PM
#33
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
11th June 2010, 01:01 PM
#34
தாயே நீயின்றி..
என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.
பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.
எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.
வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...
etthanai kOti inbam vaithAi iraivA.
Seven wonders are the very basic notes.
-
11th June 2010, 03:00 PM
#35
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
14th July 2010, 07:30 AM
#36
Senior Member
Veteran Hubber
.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !.?
அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர் தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி
நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அள்ளைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி
முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி
இளிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி
ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு
அடுத்த நட்சத்திர விடுதி
காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி
உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள்
பூத்திருக்கும் வீதியே விடுதி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.!
- ந. முத்து
கோவை
Courtesy: Web-Dunia Tamil.
.
.
-
15th July 2010, 04:23 PM
#37
Senior Member
Veteran Hubber
.
. கோவை தந்த தமிழ்-மணம்.!!!
தமிழ்-மணம் கமழப் பெற்றோம் ஒரு சிறு துளியே எனினும்
அமிழ்தினும் இனிய தமிழ் ஆனந்தம் கொண்டோம் அம்மா
சிமிழ்-அளவே தந்தார் இங்கே கோவை நகர் ஞாலப்புகழே
குமிழி நீர் போல் சற்றே தோன்றியே மறைந்திட்டாலும்
குமிழவே நினைவு நீங்கா தமிழ்-மணம் தொட்டோம் பொட்டாய்.!!!
.
.
-
11th August 2010, 01:15 PM
#38
Senior Member
Devoted Hubber
Originally Posted by
V.Annasamy
தாயே நீயின்றி..
என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.
பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.
எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.
வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...
மிக அருமை... தங்கலின் அனைத்து கவிதைகலும்
Yohan: Adhyayam Ondru Mission 1: New York City
-
21st August 2010, 05:05 AM
#39
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
varunlss12
Originally Posted by
V.Annasamy
தாயே நீயின்றி..
என்னைக் கண்டதும் பாசமழை பொழிந்தாய்.
சின்னதோர் அசைவையும் கவனித்தாய் உன்னிப்பாய்.
நேற்றுவரை நீயாரோ? என்னைத் தேற்றவும்
போற்றவும் தெய்வம்வேறு தேவையில்லை.
பசியில் அழுதால் பறந்து வந்தாயே.
நிசியும் பகலும் என்னுடன் பேசியே
மொழிகளையும் உறவின் வழிகளையும் முனைப்புடன்
அழியா வண்ணம் தெரிவித்தாய்.
எந்தப் பிறவி தொடரோ? நானறியேன்.
முந்தை வினைப் பயனே. விந்தையாய்,
விரல் பிடித்து வழிநடத்தி வீழாமலெனை
அரவணைத்து 'அன்பினையும்' மகிழ்வித்தாய்.
வளர்த்து ஆளாக்கி, உன்னுடல் தளர்ந்தும்
தளரா மனம் பெற்றவளே. உளமார
வேண்டுகிறேன் படைத்தோனிடம். நானுன் தாயாக
வேண்டும், ஒருதுளி கைமாறாய்...
மிக அருமை... தங்கலின் அனைத்து கவிதைகலும்
Very well composed. It reminds me of a very old song by Great Poet Papanasam Sivan "ammai appaa ungkaL anbai maRaanthEn"
Bookmarks