டியர் பம்மலார்,
பொன்விழா ஆண்டைப்பூர்த்தி செய்து, இன்றளவும் புதுமை மாறாமல் பொலிவுடன் திகழும் பொற்காவியமாம் 'பாவ மன்னிப்பு' திரைக்காவியம் பற்றிய முத்தான, சத்தான, அத்தனை தகவல்களையும் 51 கேப்ஸ்யூல்களில் அடைத்து வழங்கியிருக்கிறீர்கள்.
தகவல்களை திரட்டிய, தொகுத்த, அழகுதமிழில் வழங்கிய உங்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள். அடேயப்பா, பாவமன்னிப்பு பற்றி எத்தனையெத்தனை தகவல்கள்...!!!!!. எதையும் விட்டுவிடாமல் சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள். அப்படம் பற்றிய எந்த செய்திக்கும் உங்களுடைய இப்பதிவை அணுகினால் போதும் என்கிற அளவில் முழுமையாக அமைந்திருக்கிறது.
டியர் முரளி,
பாவமன்னிப்பு திரைக்காவியம் பற்றிய உங்கள் பதிவு, பம்மலாரின் நீண்ட பதிவுக்கான முன்னுரை போல சிறப்பாக அமைந்திருக்கிறது. இவ்வளவு சிறப்புக்களைத் தாங்கி வந்த அப்படத்தை, தமிழக மக்கள் மாபெரும் வெற்றிப்படமாகவும் ஆக்கி மேலும் சிறப்பு சேர்த்தனர். ஒரே ஆண்டில் பாவமன்னிப்பு, பாசமலர் என்ற வெள்ளிவிழாக்காவியங்களையும், பாலும் பழமும் என்ற 20 வாரங்கள் படத்தையும் ஆதரித்த தமிழ் ரசிகப்பெருமக்கள், அந்த ஆண்டு தீபாவளிக்கு எங்கே போனார்கள்?. (1061 தீபாவளியை நான் மறக்க விரும்புகிறேன்).
டியர் ராகவேந்தர்,
முரளியார், பம்மலார் ஆகியோரின் சிறந்த பதிவுகளுக்கு மேலும் சிறப்புச்சேர்க்கும் வகையில் நீங்கள் வழங்கியுள்ள 'பாவமன்னிப்பு' செய்தித்தாள் விளம்பரங்களுக்கும், பாடல் காட்சிக்கும் மிக்க நன்றி.
'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல் காட்சியிலேயே, படத்தின் முக்கிய பாத்திரங்களையும் அவர்களின் பின்னணியையும் குழப்பமில்லாமல் நமக்கு அறிமுகப்படுத்தும் பீம்சிங் போல இன்னொரு பீம்சிங் வருவது சாத்தியமேயில்லை.
குடிசைகளை காலிசெய்துகொண்டு அனைவரும் வெளியேறும்போது, தன் கைத்தடி ராமாராவிடம், "பெருமாளு, நீ அந்தப்பக்கம் போய்ப்பாரு. எவனாவது மண்ணை வெட்டி அள்ளிக்கிட்டு போயிடப்போறான்" என்று சொல்லும் நடிகவேள் போல மட்டும் இன்னொருவர் வந்துவிடுவாரா என்ன.
Bookmarks