-
29th March 2011, 05:46 PM
#1481
Senior Member
Senior Hubber
[QUOTE=goldstar;663215]

Originally Posted by
parthasarathy
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி
Parthasarathy sir,
You have missed an important scene, when NT comes to know Saradha relation with Sri Kanth, he shows anger on banana trees by using knife to cut banana tree, just look at his expression and hand movement, even regular left hand people cannot do that, he cuts each banana tree in such anger each one falls down so forcefully, wonderful performance. As you rightly said no one can touch even NT shadow. Long live his fame.
Cheers,
Sathish
Dear Mr. Sathish,
Thanks very much for your immediate response. However, please read my article fully (though only 40% of Gnana Oli is finished and the balance will get completed shortly) wherein I have clearly mentioned a) the deft and dexterity with which NT uses his left hand so effortlessly as though he himself is a leftie & b) the way he shows his anger by cutting down the banana trees - a new way of emoting and expressing anger - a new acting dimension even after 20 years of his acting career.
Anyway, thanks for your response, which makes me more responsible to fine tune my articles continuously.
Regards,
R. Parthasarathy
-
29th March 2011 05:46 PM
# ADS
Circuit advertisement
-
29th March 2011, 06:23 PM
#1482
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர்கள், சகோதர சகோதரியர் - முரளி ஸ்ரீநிவாஸ், பார்த்தசாரதி, சாரதா, பம்மலார், ப்ளம், சதீஷ், சந்திரசேகர், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள், என் மீது தாங்கள் வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பிற்காக. உண்மையில் சொல்லப் போனால் நம்முடைய இந்த வட்டாரத்திலேயே இளையவரான பம்மலார் அவர்கள் இத்திரியின் எட்டாம் பாகத்தைத் துவக்குவதே சிறந்ததென நான் எண்ணுகிறேன். இளைய தலைமுறையின் மீதான நடிகர் திலகத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக, அவருடைய புகழைப் பரப்புவதில் சிறந்த பணியாற்றும் பம்மலார் அவர்கள் துவக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
தங்கள் அனைவரின் அன்பும் என்றும் வேண்டும்,
ராகவேந்திரன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th March 2011, 07:39 PM
#1483
Administrator
Platinum Hubber
Different facets if NT in one song.... must watch!
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
29th March 2011, 10:08 PM
#1484
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர்கள், சகோதர சகோதரியர் - முரளி ஸ்ரீநிவாஸ், பார்த்தசாரதி, சாரதா, பம்மலார், ப்ளம், சதீஷ், சந்திரசேகர், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள், என் மீது தாங்கள் வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பிற்காக. உண்மையில் சொல்லப் போனால் நம்முடைய இந்த வட்டாரத்திலேயே இளையவரான பம்மலார் அவர்கள் இத்திரியின் எட்டாம் பாகத்தைத் துவக்குவதே சிறந்ததென நான் எண்ணுகிறேன். இளைய தலைமுறையின் மீதான நடிகர் திலகத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக, அவருடைய புகழைப் பரப்புவதில் சிறந்த பணியாற்றும் பம்மலார் அவர்கள் துவக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
தங்கள் அனைவரின் அன்பும் என்றும் வேண்டும்,
ராகவேந்திரன்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் உயர்ந்த உள்ளத்திற்கும், ஈடற்ற பெருந்தன்மைக்கும், எல்லையில்லா அன்பிற்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்!
அடியேன் ஏற்கனவே நமது திரியின் ஆறாவது பாகத்தை தொடங்குகின்ற பாக்கியத்தை பெற்றேன் என்பதனை இவ்வேளையில் மிகுந்த தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.
நமது நடிகர் திலகம் திரியின் எட்டாவது பாகத்தை தயைகூர்ந்து அவசியம் தாங்களே தொடங்கி வைக்க வேண்டும் என்று மிக மிக வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
பணிவுடன்,
பம்மலார்.
-
29th March 2011, 10:29 PM
#1485
Senior Member
Veteran Hubber

Originally Posted by
parthasarathy
அவன்தான் மனிதன் (நடிகன்).
நடிகர் திலகத்தின் எத்தனையோ படங்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களிலோ அல்லது டிவியிலோ பார்த்துக் கொண்டே வந்திருந்தாலும், அதென்னமோ தெரியவில்லை இந்தப் படத்தை மட்டும், நான் டிவியிலோ தியேட்டரிலோ, 1975-க்கப்புறம் பார்க்கும் சந்தர்ப்பத்தை, கடவுள் ஏனோ எனக்கு நேற்று தான் அளித்தார். எனக்குத் தெரிந்து, இந்தப் படம் பெரிய அளவில், சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டதில்லை. அதுவும், ஒரு காரணமாயிருக்கலாம்.
இந்தப் படம் என்னதான் நடிகர் திலகம் அற்புதமாக செய்திருந்தாலும், அளவு கடந்த சோகம் இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் செய்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவன்தான் மனிதனில் வரும் சோகம் இயல்பாக இருந்ததால், படம் பல சென்டர்களில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.
டியர் பார்த்தசாரதி சார்,
"அவன் தான் மனிதன்" பதிவு அருமை.
"வசந்த மாளிகை"க்கு அடுத்த நிலையில் நமது நல்லிதயங்களின் உயிருடனும், உள்ளத்துடனும், உணர்வுடனும் கலந்திருக்கும் ஒப்பற்ற காவியம் "அவன் தான் மனிதன்".
"அவன் தான் மனிதன்" வெள்ளிவிழாக்காவியமோ / மெகாஹிட் காவியமோ இல்லை என்றாலும், ஒரு மாபெரும் வெற்றிப்படம் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. நமது நடிகர் திலகத்தின் 175வது திரைக்காவியம் என்கின்ற பெரும் பெருமையுடன், 1975 தமிழ்ப் புத்தாண்டையொட்டி [11.4.1975], வெள்ளித்திரைக்கு வந்த இத்திரைக்காவியம், 100 நாட்களைக் கடந்த சூப்பர்ஹிட் படம்.
"அவன் தான் மனிதன்" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - சாந்தி
2. சென்னை - கிரௌன்
3. சென்னை - புவனேஸ்வரி
4. மதுரை - சென்ட்ரல்
5. சேலம் - நியூசினிமா
6. திருச்சி - ராஜா
7. யாழ்ப்பாணம் - லிடோ
மேலும், சேலம் மாநகர திரைப்பட வரலாற்றில், ஒரே சமயத்தில் இரு அரங்குகளில் வெளியான படங்களில், ஒன்றில் 107 நாட்களும் [நியூசினிமா], மற்றொன்றில் 35 நாட்களும் [பேலஸ்] ஓடிய முதல் திரைப்படம் "அவன் தான் மனிதன்".
கோவை 'கீதாலயா'வில் 85 நாட்கள் ஓடி வசூல் மழை பொழிந்தது. மேலும் பற்பல ஊர்களிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது.
அயல்நாடான இலங்கையில், கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ' திரையரங்கில் 122 நாட்களும் ஓடி இமாலய வெற்றி அடைந்தது.
சென்னை மாநகரின் சாந்தி(100), கிரௌன்(100), புவனேஸ்வரி(100) ஆகிய மூன்று திரையரங்குகளின், 300 நாள் மொத்த வசூல் ரூ.13,29,727-37பை.
1970களில் ஒரு படம், முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக அரை கோடியை [ரூ.50,00,000/-] ஈட்டினாலே 'சூப்பர்ஹிட்' அந்தஸ்தைப் பெற்று விடும். "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் மொத்த வசூலாக ரூ.55,00,000/-த்தை [ரூபாய் ஐம்பத்து ஐந்து லட்சங்களை] அளித்தது. அன்றைய சில லட்சங்கள் இன்றைக்கு பல கோடிகளுக்குச் சமம்.
"அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் உண்டாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தின் முழு விவரத்தை, நமது திரியின் 8வது பாகத்தில் தனியொரு சிறப்புப் பதிவாகவே தருகிறேன்.
மேலும், மறுவெளியீடுகளாகவும், சிங்காரச் சென்னையில் "அவன் தான் மனிதன்" கணிசமான அளவுக்கு திரையிடப்பட்டுள்ளது. 1988-ல் சென்னையின் பல அரங்குகளை ரெகுலர் காட்சிகளில் அலங்கரித்த காவியம் "அவன் தான் மனிதன்". 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மீண்டும் சென்னையில் வெளியான இக்காவியம் பல அரங்குகளில் House-Full காட்சிகளாக அமோக வரவேற்பு பெற்றது. 'எவ்வளவு தான் உடைஞ்சாலும் ராஜா ராஜா தான்' டயலாக்கிற்கெல்லாம் அரங்குகளின் கூரைகள் பிய்த்துக் கொள்ளும். பின்னர் 1993-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் கூட சென்னையில் ரவிகுமார் வெற்றி உலா வந்திருக்கிறார். மதுரை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் படம் இதுதான். மதுரையில் பல முறை மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டிருக்கிறது. ஏனைய ஊர்களிலும் ரவிகுமார் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஹீரோ தான்!
அன்புடன்,
பம்மலார்.
-
30th March 2011, 12:06 AM
#1486
Senior Member
Veteran Hubber

Originally Posted by
saradhaa_sn
டியர் ராகவேந்தர், பார்த்தசாரதி, பம்மலார், முரளி....
அவன்தான் மனிதன் பற்றிய பதிவுகள் அனைத்தும் அருமை.
சாரதி சொன்னது போல இப்படம் அவ்வளவாக அல்ல, சென்னையில் அறவே மறு வெளியீட்டுக்கு வரவில்லை.
சகோதரி சாரதா,
எனது முந்தைய பதிவில் இதற்கான தகவலை அளித்திருக்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
-
30th March 2011, 01:22 AM
#1487
Senior Member
Veteran Hubber

Originally Posted by
parthasarathy
நெஞ்சிருக்கும் வரை படமும் கிட்டத்தட்ட இந்த அளவு சோகத்தோடு இருந்தாலும், அந்தப் படத்தில் இடை வேளைக்குப் பின்னர் ரொம்பவே சொதப்பியிருந்ததால், படம் தோல்வியைத் தான் தழுவியது.
டியர் பார்த்தசாரதி சார்,
2.3.1967 அன்று நடிகர் திலகத்தின் 111வது திரைக்காவியமாக வெளியான "நெஞ்சிருக்கும் வரை" அதிகபட்சமாக 10 வாரங்கள் ஓடிய ஒரு சராசரி வெற்றிப்படமே.
சென்னை 'சாந்தி'யில் 71 நாட்களும், 'கிரௌன்' திரையரங்கில் 67 நாட்களும், 'புவனேஸ்வரி'யில் 43 நாட்களும் ஓடி நல்ல வெற்றியைப் பெற்றது.
திருச்சி, சேலம் மற்றும் கோவையில் ஒவ்வொரு மாநகரிலும் 50 நாட்கள் ஓடி வெற்றிப்படமாகவே திகழ்ந்தது. மதுரை[43 நாள்], நெல்லை[43 நாள்] இன்னும் இது போன்ற பல ஊர்களிலும் மற்றும் சிற்றூர்களிலும் 4 முதல் 6 வாரங்கள் வரை ஓடி ஒரு சராசரி வெற்றிப்படம் என்கின்ற அந்தஸ்தை எட்டியது.
எனினும் மிகப் பெரிய வெற்றியை எதிர்பார்த்த இத்திரைப்படக் குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் அது கிடைக்காமல் போனது உண்மையே. அதற்கான காரணத்தையும் தாங்கள் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
1960களில், வெற்றிக்கனியை தட்டிப் பறிக்காத நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்:
1. ராஜபக்தி(1960)
2. பெற்ற மனம்(1960)
3. வளர்பிறை(1962)
4. செந்தாமரை(1962)
5. சித்தூர் ராணி பத்மினி(1963)
6. நான் வணங்கும் தெய்வம்(1963)
7. அன்பளிப்பு(1969)
8. குரு தட்சணை(1969)
9. அஞ்சல் பெட்டி 520(1969)
இக்காவியங்கள் ஒவ்வொன்றும் நடிப்பிலும், தரத்திலும் உயர்ந்ததே.
1960களில், "இரும்புத்திரை(1960)" தொடங்கி "சிவந்த மண்(1969)" வரையிலான 76 திரைக்காவியங்களில், இந்த 9 காவியங்கள் மட்டுமே வெற்றியை தவற விட்டவை.
அன்புடன்,
பம்மலார்.
-
30th March 2011, 03:41 AM
#1488
Senior Member
Veteran Hubber
சக்ரவர்த்திகளின் சங்கமம்
டியர் பார்த்தசாரதி சார்,
நடிகப் பேரொளியின் "ஞான ஒளி"யை ஜோதிமயமாக்கி விட்டீர்கள். தங்களின் பதிவில் அத்தனை பிரகாசம். அந்தோணி ரோலுக்கு தாங்கள் கொடுத்திருக்கும் Build-Up அசத்தல். தொடருங்கள்....அசத்துங்கள்....
'தேவனே என்னைப் பாருங்கள்' பாடல் எனது All Time Favourite Number. நடிப்புச் சக்ரவர்த்தி(NT), திரை இசைச் சக்ரவர்த்தி(MSV), பாட்டுச் சக்ரவர்த்தி(TMS), திரைக் கவிதைச் சக்ரவர்த்தி(கண்ணதாசன்), ஒளிப்பதிவுச் சக்ரவர்த்தி(பி.என்.சுந்தரம்) போன்ற சக்ரவர்த்திகள் சங்கமிக்கும் போது சாகாவரம் பெறுகின்ற பாடல் அமைவது சத்தியம்!
அன்புடன்,
பம்மலார்.
-
30th March 2011, 04:08 AM
#1489
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 190
கே: நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிப்பில் யாரோடு ஒப்பிடலாம்? (கே.ஆர்.பாலகுமார், காங்கேயம்)
ப: விழுப்புரம் சின்னையா மகன் கணேசனோடு !
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)
அன்புடன்,
பம்மலார்.
-
30th March 2011, 04:16 AM
#1490
Senior Member
Veteran Hubber
ஏழு பாகங்களை மிக மிக வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து எட்டாவது பாகத்தில் இதே எழுச்சியுடன் இன்னும் வெற்றிகரமாகத் தொடரப் போகும் நமது நடிகர் திலகம் திரி, கலைக்களஞ்சியம் சிவாஜி அவர்களைப் பற்றிய தகவல் களஞ்சியம் !!!
Over to Rasika Thilagam Raghavendran Sir !!!
அன்பு கலந்த வாழ்த்துக்களுடன்,
பம்மலார்.
Bookmarks