-
30th March 2011, 09:04 PM
#1501
Senior Member
Devoted Hubber
I want to share my experience with a die-hard MGR fan.
He is a typical character who takes things very easily and does not attach any importance to even rare events. He had the opportunity of travelling with NT in train from Tanjore to Chennai, some 15 years ago, but he behaved very casually with NT, as an ordinary co-passenger. Had it been MGR he would have jumped and hit the roof of the train.
Such a person, while we were passing through the Marina Beach road, some three years back, remarked after seeing NT's statue that "I JUST COULD NOT BELIEVE WHEN I HEARD THAT NT IS NO MORE. EVEN NOW I FEEL THAT, SUCH AN ACTOR CAN NOT DIE, THOUGH I KNOW THAT DEATH IS INEVITABLE. I AM UNABLE TO GULP THE REALITY THAT HE IS NO MORE". From his body language and facial expressions while making this comment, I could feel that he was speaking from his heart.

Originally Posted by
Murali Srinivas
Dear Rakesh,
Nice one liners. Reminds me of NT's own one liners about his movies. As Saradhaa had rightly pointed out you had confused Deivappiravi with Kai Kodutha Deivam. So much so that even Swami has been caught napping [a very rare occasion].
ராகவேந்தர் சார்,
பாலாடை படப் பாடலுக்கு நன்றி. விரைவில் டிவிடி ஆகவும் வெளிவரும் என நம்புவோம்.
டிவிடி என்று சொன்னதும் நினைவிற்கு வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு ஏவிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான Sound Zone என்ற கடைக்கு சென்றிருந்தேன் [TTK சாலை]. ஒரு சில படங்களின் டிவிடி கிடைக்குமா என்று கேட்பதற்காக. நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் மும்முரமாக டிவிடிகளை எடுத்துக் கொண்டிருந்தார். சில படங்களின் பெயரை சொல்லி அவை இருக்கிறதா என்று கேட்டு கேட்டு எடுத்தார். இறுதியில் 25-க்கும் மேற்பட்ட டிவிடிகளை வாங்கியிருந்தார். பில் போடும்போது கவனித்தேன். அனைத்து டிவிடிகளுமே நடிகர் திலகம் நடித்த படங்கள். மருந்துக்கு கூட வேறு படங்கள் இல்லை.
அந்த தளத்தின் மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்ன செய்திகள். இப்போதெல்லாம் இது போன்ற டிவிடி கடைகள் ஓடிக் கொண்டிருப்பதே பழைய படங்கள் மூலம்தான். புதிய படங்களின் டிவிடிகள் விற்பனை மிக குறைவு. அதே நேரத்தில் பழைய படங்களின் டிவிடிகள் அமோகமாக விற்பனையாகிறது. குறிப்பாக அதில் முன்னணியில் நிற்பது நடிகர் திலகத்தின் படங்களே. அநேகமாக அவரின் அனைத்து படங்களுமே விற்று விடுகின்றன. நடிகர் திலகத்தின் படங்களின் டிவிடிகள் சில நல்ல பிரிண்டில் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் கூட அந்த டிவிடிகளின் விற்பனையில் தேக்கம் இல்லை. அவர்களின் கடையைப் பொறுத்தவரை [ஏவிஎம் என்பதால்] டிவிடி பிரிண்ட் சரியில்லை என்றால் அதை வாங்கும் வாடிக்கையாளரிடம் முன்பே சொல்லி விடுவார்களாம். அப்படியிருந்தும் என்ன கொஞ்சம் கட் கொஞ்சம் ஜம்ப் இருக்கும் அவ்வளவுதானே பரவாயில்லை என்று சொல்லி வாங்கி போகிறார்களாம்.
பலரும் வந்து அவர்களுக்கு வேண்டிய நடிகர் திலகத்தின் படங்களை லிஸ்ட் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று சொன்னவர் ஒரு குறிப்பிட்ட ரசிகர், நடிகர் திலகத்தின் படங்களில் இதுவரை வெளிவராத டிவிடிகளை ஒரு நோட் புக்கில் எழுதிக் கொடுத்துவிட்டு போயிருப்பதை எடுத்துக் காட்டினார். அதில் இதுவரை டிவிடியாக வெளியாகாத நடிகர் திலகத்தின் ஆரம்பகாலப் படமான கண்கள் முதல் பூ பறிக்க வருகிறோம் வரை வரிசைகிரமமாக வருடவாரியாக வெளியான படங்கள் எழுதப்பட்டிருந்தன. நடிகர் திலகம் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களைகூட விடாமல் எழுதியிருந்தார். அந்த ரசிகரை பற்றி விசாரித்த போது மறைந்துவிட்ட ஒரு பிரபல தமிழக அரசியல்வாதியின் சகோதரர் என்பது தெரிந்தது. இந்தப் படங்களின் டிவிடி கிடைத்தால் என்ன விலை கொடுத்தும் வாங்க தயார் என்று சொல்லியிருக்கிறாராம். கடையை விட்டு கிளம்புவதற்கு முன் அவர் சொன்ன இரண்டு விஷயங்கள்.
டிசம்பர் இறுதியில் பெண்ணின் பெருமை மற்றும் விடிவெள்ளி டிவிடிகள் வெளியாகின. இந்த மூன்று மாதத்தில் மட்டும் அவர் இந்தப் படங்களின் 1000 டிவிடிகள் விற்றிருக்கிறார். [எண்ணிக்கையை மீண்டும் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டேன்].
இரண்டாவது விஷயம் அப்படியே அவரின் வார்த்தைகளிலேயே "சார், கணேசன் இருக்கும் போது அவரின் பெருமைகள் பலருக்கும் தெரியவில்லை. இப்போது உணர்கிறார்கள். இனியும் உணர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்". இத்தனை விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்ட அவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டது தான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் என்று.
அன்புடன்
-
30th March 2011 09:04 PM
# ADS
Circuit advertisement
-
31st March 2011, 07:39 AM
#1502
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் திரி-க்கு இது ஒரு பொற்காலம் என்றால் அது மிகையல்ல ..இந்த அளவுக்கு ஆச்சரியப்படுத்தும் அலசல்கள் , அசரடிக்கும் தகவல்கள் , ஆராய்ச்சிக்கு நிகரான படைப்புகள் அள்ளி வழங்குவதற்கு அற்புதமான ஜாம்பவான்களை கொண்டியங்கும் கால கட்டம் இது . இவைகளை படித்து இன்புறும் உணர்வுக்கு நிகரில்லை ..தொடரட்டும் பெருமக்கள் தொண்டு . படரட்டும் எங்கும் நம் நடிகர் திலகம் புகழ்
-
31st March 2011, 01:13 PM
#1503
Senior Member
Senior Hubber

Originally Posted by
raghavendra
அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
ராகவேந்திரன்
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்கள் மற்றும் ஏனைய நண்பர்களே,
நேற்று நடிகர் திலகத்தின் எட்டாவது திரி துவங்கப்பட்டு, அதில் சாரதா மேடம் அவர்கள் சிறிய பதிவையும், நான் என்னுடைய சிறிய பதிவையும், இட்டு, அவை அந்த எட்டாவது திரியில் வந்தது. இருப்பினும், நேற்று இரவு முதல், எட்டாவது திரி மீண்டும் இணைப்பில் வர மறுக்கிறது. அதனால், புதிதாக எந்த விஷயத்தையும் பதிய முடியவில்லை. இதற்கிடையே, ஏழாவது திரி 150 பக்கங்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஏழாவது திரியினை 150 பக்கங்கள் முடிந்ததால், மேற்கொண்டு தொடராமல், நிறுத்தி விட்டு, எட்டாவது திரியினைத் திரு ராகவேந்தரின் பொற்கரத்தால் துவங்க முடிவெடுத்து, அந்தத் திரியும் நேற்று இனிதே அவரால் துவங்கப் பட்டுவிட்டதால், மேற்கொண்டு ஏழாவது திரியில் நான் எதுவும் பதியாமல் இருக்கிறேன் (இந்த ஒரு பதிவினைத் தவிர்த்து, வேறு வழியில்லாததால்.) - திரு. தனுசு அவர்கள் ரொம்ப நாட்களுக்குப் பிறகு இந்தத் திரியில் வந்து, என்னை வரவேற்கவும் செய்து, ஒரு மக்கள் திலகம் ரசிகருக்கு நடிகர் திலகத்தின் மேல் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் பற்றிப் பதிந்திருக்கிறார். அவருக்கும் பதில் பதிய வேண்டும்.
ஆவன செய்ய வேண்டுகிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 31st March 2011 at 01:16 PM.
-
31st March 2011, 06:53 PM
#1504
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பணிவான வணக்கங்கள்.
தங்களைப் போலவே நானும் வியப்புற்றேன். 8ம் பாகம் துவக்கினோமே, அவையாவையும் 7ம் பாகத்திலேயே தொடர்கிறதே என்கிற கேள்வி என்னுள்ளும் எழுந்தது. ஏதேனும் நிர்வாக ரீதியான காரணங்களால் அவை இங்கேயே தொடரப் பட்டிருக்கலாம் என நான் யூகிக்கிறேன். ஏனென்றால் முந்தைய கட்டமைப்பில் 100 பக்கங்கள் தாண்டியபிறகு நம்மால் அடுத்த பாகத்தைத் துவங்க முடிந்தது. தற்போதைய கட்டமைப்பு உலக அளவிலான நியதிப் படி அமைக்கப் பட்டிருக்கலாம், அதில் ஏதேனும் குறிப்புகள் அல்லது விதிகள் இருக்கலாம், அதனடிப்படையில் 7ம் பாகம் தொடரப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய யூகம். இருந்தாலும் நிர்வாக அமைப்பினர், அதாவது மாடரேட்டர் அவர்கள் இதனை விளக்கினால் தான் நமக்கு தெரியவரும்.
அது வரையில் நாம் இதிலேயே நம்முடைய கருத்துப் பகிர்வுகளைத் தொடரலாம் என்று நான் எண்ணுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st March 2011, 09:03 PM
#1505
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரர் ஐயா,
மன்றத்துக்கு புதிய வடிவம் வந்த பிறகு ஒரு திரிக்கு 100 பக்கங்கள் என்பது போன்ற வரைமுறைகள் இல்லை .அது மட்டுமல்ல , இப்போதுள்ள வடிவத்தில் எல்லோருக்கும் பக்கங்களின் எண்ணிக்கை ஒன்று போல தெரியாது ..அவரவர் ஒரு பக்கத்தில் எத்தனை இடுகைகள் இருக்கலாம் என தெரிவு செய்து வைத்திருக்கும் கணக்குக்கு ஏற்ப பக்கங்களின் எண்ணிக்கை தெரியும் ..உதாரணமாக இந்த பக்கம் என்னைப் பொறுத்தவரை 51-வது பக்கம் ..ஆனால் உங்களுக்கு வேறு மாதிரி இருக்கலாம்.
இப்போதைக்கு ஒரு திரி கட்டற்ற வகையில் தொடர முடியும் என்பதால் அடுத்த பாகங்கள் தனியாக தொடங்க தேவையில்லை என்பது நான் புரிந்து கொண்டுள்ளது .ஆனால் நாமாகவே ஒரு வரைமுறை வைத்து புதிய திரி தொடங்கலாம் என்றே நினைக்கிறேன்.
-
31st March 2011, 09:28 PM
#1506
Senior Member
Seasoned Hubber
அன்பிற்கினிய ஜோ அவர்களுக்கு (தங்கள் பெயரைத் தூய தமிழில் எழுதினால் ஒரு பிரபல பத்திரிகையாளர் நடிகர் பெயர் வருகிறது, எனவே ஜோ என்றே விளிக்கிறேன்)
தங்களுடைய பதிவில் உள்ள விளக்கமே போதுமானது என எண்ணுகிறேன். தாங்கள் கூறியது மற்றும் நான் யூகித்தது போல், கட்டமைப்பு உலாவிகளின் அமைப்பையும் பொறுத்ததாக இருக்கலாம். எனவே இந்த புதிய கட்டமைப்பில் வரைமுறை இல்லாத காரணத்தினை யொடடி நாம் இதிலேயே தொடரலாம். இதுவும் வரவேற்கத் தக்க அமைப்பே ஆகும். என்னுடைய உலாவியில் இது 151ம் பக்கமாக வருகிறது. பொதுவான கட்டமைப்பு என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரி வரலாம். ஆனால் அவரவர் தத்தம் வசதிக்கேற்ப உலாவியினை வடிவமைத்திருந்தார்களானால், தாங்கள் சொல்வது போல் இந்தப் பக்க எண்ணிக்கை மாறு படலாம். எனவே வரைமுறை வடித்துக் கொள்வது கூட சற்றுக் கடினமாக இருக்கலாம். அனைவரின் கருத்துக்களையும் அறிந்து, அதன் பின் இதைப் பற்றி யோசிக்கலாம்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st March 2011, 09:36 PM
#1507
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
என்னுடைய உலாவியில் இது 151ம் பக்கமாக வருகிறது.
General settings என்ற பகுதியில் Number of Posts to Show Per Page: 30 என நான் வைத்திருக்கிறேன் ..நீங்கள் 10 என வைத்திருக்கிறீர்கள் ..எனவே தான் எனக்கு 51-வது பக்கம் உங்களுக்கு 151- ஆக இருக்கிறது
-
31st March 2011, 09:40 PM
#1508
Senior Member
Seasoned Hubber
சமீபத்தில் மோசர் பேர் நிறுவனம் நடிகர் திலகத்தின் மூன்று படங்களடங்கிய ஒரு நெடுந்தகட்டினை வெளியிட்டுள்ளது. மூன்று படங்களும் ஏற்கெனவே வெளியிடப் பட்டவை தான் - அண்ணன் ஒரு கோயில், நவராத்திரி மற்றும் பொன்னூஞ்சல் - ஆகிய மூன்று படங்கள். இருந்தாலும் இதில் ஒரு சிறப்பம்சம் என்ன வென்றால் முகப்பில் வெளியிடப்பட்டுள்ள ஸ்டில் ஆகும். இதில் வளர்பிறை படத்தின் ஸ்டில் வெளியிடப் பட்டுள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது. தங்கள் பார்வைக்கு அந்த முகப்பு இதோ.

அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st March 2011, 09:41 PM
#1509
Senior Member
Diamond Hubber
Just 32 rs
-
1st April 2011, 10:50 AM
#1510
Senior Member
Senior Hubber
அன்புள்ள பம்மலார் அவர்களே,
நடிகர் திலகத்தின் ஒப்பற்ற காவியங்களுள் ஒன்றான ஞான ஒளியைப் பற்றிய என் பதிவிற்கு (பாதி தான் முடிந்திருக்கிறது) தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். கூடவே, அந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்களையும் உடனுக்குடன் அளித்து வழக்கம்போல் அசத்தி விட்டீர்கள்.
அது மட்டுமல்லாமல், நெஞ்சிருக்கும் வரை பற்றிய அரிய தகவல்களையும் தந்து அசரடித்து விட்டீர்கள். அதாவது, நான் எழுதியதுபோல், அந்தப் படம் தோல்விப்படம் இல்லை. ஒரு சராசரியை மீறிய வெற்றிப் படமே என்றும் கூறி மகிழ வைத்து விட்டீர்கள். ஏற்கனவே கூறியது போல், திரு ஸ்ரீதர் மட்டும் இடைவேளைக்குப் பின் சரியான கணக்கு போட்டிருந்தால், மாபெரும் வெற்றிப்படமாகியிருக்கும். நடிகர் திலகத்தின் ஒப்பற்ற களஞ்சியங்கள் - அதாவது மாபெரும் வெற்றியடைந்த கலைப்படைப்புகளில் ஒன்றாக - நெஞ்சிருக்கும் வரையும் அமைந்திருக்கும். இந்த வாய்ப்பை - அதாவது - நடிகர் திலகம் என்ற அந்த அட்சய பாத்திரத்தை - சரியாகப் பயன்படுத்தத் தவறிய இயக்குனர்களின் வரிசையில் இடம் பெறாது போயிருப்பார் - இழந்து போகாமல் இருந்திருப்பார், இயக்குனர் திரு. ஸ்ரீதர். அந்த வகையில், Mr. Sreedhar only is the loser; not NT.
நன்றியுடன்,
பார்த்தசாரதி
Bookmarks