-
21st April 2011, 06:48 PM
#1631
Senior Member
Seasoned Hubber
Please read a write-up in The Hindu, Arts-Cinema category, likely to appear on 22nd April 2011.
Raghavendran.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st April 2011 06:48 PM
# ADS
Circuit advertisement
-
21st April 2011, 08:39 PM
#1632
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
எந்தப் பாடகரானாலும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு தன் வாயசைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் ஐக்கியமாகி விடும் ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இதே விதி மற்றவர்களுக்கும் பொருந்தும் ,,, ஏனென்றால் யார் பாடினால் என்ன, நான் வாயசைத்தால் என்ன, மூடிக் கிடந்தால் என்ன என்போரும் உண்டு. பாட்டுக்கெல்லாமா வாயசைத்து மெனக்கெட வேண்டும் என்போரும் உண்டு. பாட்டுக்கு வாயசைத்து நடித்தால் கௌரவக் குறைச்சல் என்று கருதக் கூடிய நடிக நடிகையரும் உண்டு, ரசிகர்களும் உண்டு.
அவர்களுக்காக ஒரு வார்த்தை ...
ஒரு பாடலை உருவாக்க ஒலிப்பதிவாளர், பாடகர், பாடகியர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர், அதனை படத்தில் உயிரோட்டமாக காண்பிப்பதற்கு ஒளிப்பதிவாளர், என எண்ணற்றோர் கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய உழைப்பினை மரியாதை செய்ய நினைப்போர், நிச்சயமாக பாடல் காட்சியில் ஜீவனுடன் நடிப்பர் என்பது உறுதி.
மனோகரா படத்திலிருந்து அருமையான பாடல் வழங்கிய பம்மலாருக்கு நன்றி.
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி!
சிதம்பரம் ஜெயராமன் பாடினால் என்ன, ஏ.எம்.ராஜா பாடினால் என்ன, டி.எம்.எஸ். பாடினால் என்ன, சீர்காழி பாடினால் என்ன, பி.பி.எஸ். பாடினால் என்ன, எஸ்.பி.பி. பாடினால் என்ன, ஜேசுதாஸ் பாடினால் என்ன, மலேசியா பாடினால் என்ன, இன்னும் இது போன்று எத்தனையோ பின்னணிப் பாடகர்கள் நமது நடிகர் திலகத்திற்கு பின்னணியில் பாடியிருக்கிறார்கள், யார் பாடினால் என்ன, முன்னணியில் தானே பாடுவது போல், பாடும் குரலுக்கு ஏற்றாற் போல், பாடலின் தன்மைக்கு ஏற்றாற் போல் கனக்கச்சிதமாகவும் அற்புதமாகவும் வாயசைத்து அதே சமயத்தில் அப்பாடல் காட்சியில் தனது உச்சி முதல் பாதம் வரை உள்ள ஒவ்வொரு அங்கத்தையும், தசையையும் அபாரமாகவும், அபரிமிதமாகவும் நடிக்க வைத்து ஒரு பாடற்காட்சியில் பல நடிப்புப் புரட்சியை செய்து காட்ட நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.
That's why we adore him as THE GREATEST ACTOR OF THE UNIVERSE !
டூயட்டானாலும் சரி, ஸோலோவானாலும் சரி, தான் வாயசைக்காத ஸோலோவாக இருந்தாலும் சரி, நம்மவர் பின்னியெடுத்து விடுவாரே ! மேலும், எந்தவொரு வாத்தியக்கருவியை வாசித்தாலும் [வாசிப்பது போல் நடித்தாலும்], அந்த வாத்தியக்கருவிகளை வாசிக்கும் வித்வான்களே 'நாங்கள் நகல், நடிகர் திலகமே அசல்' என்று வியந்து கூறுமளவுக்கு தூக்கி சாப்பிட்டு விடுவாரே !
இவ்வளவு ஏன்?! மற்றவர்களுக்கு அத்தனை பாடல்களையும் கொடுத்து, கதாநாயகனான தான் ஒரு பாட்டும் பாடாமல் படத்தை வெற்றி பெற வைக்கும் ராஜதைரியம் இவர் ஒருவருக்கே உண்டு ! ஒரு பாட்டு கூட வேண்டாம், 'அந்த [நாள்]' படத்தையும் காலத்தை வென்ற காவியமாக நிற்க வைக்க நமது நடிகர் திலகம் தவிர்த்து யாரால் முடியும் !
அன்புடன்,
பம்மலார்.
-
21st April 2011, 09:46 PM
#1633
Senior Member
Veteran Hubber
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 9
"நான் என்ன சொல்லி விட்டேன்"
நடிப்பு : நடிகர் திலகம், பேரழகி தேவிகா
பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
படைப்பு : கவியரசர் கண்ணதாசன்
திரைக்காவியம் : பலே பாண்டியா(1962)
அன்புடன்,
பம்மலார்.
-
21st April 2011, 09:56 PM
#1634
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
It is nice & thrilling to read tomorrrow's print edition of 'The Hindu' today. Especially, if the write-up is about NT, the happiness is matchless.
I sincerely applaud the names figuring in the article, who are also elite figures in the Sivaji circle - Raghavendran Sir, Distributor Mr.Murali & Mr.M.L.Khan.
Our special thanks to Smt.Malathi Rangarajan & 'The Hindu' for providing us with such a brilliant article about our demi-god.
And Raghavendran Sir, Thanks for sharing it !
Two Corrections in the article:
1. Nadigar Thilagam has acted in exactly 288 films. [excluding guest role appearances]
2. The telugu film he acted was Pembudu Koduku and not as mentioned. This was the first film he acted with Savithiri.
Warm Wishes & Regards,
Pammalar.
-
21st April 2011, 10:34 PM
#1635
Senior Member
Seasoned Hubber
Pammalar,
thanks for the singara painkiliye pesu.Girija was the heroine .. hmmmm she then played second fiddle etc in Manalane mangayin bakkiyam, Raja sevai etc..
-
21st April 2011, 10:47 PM
#1636
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
நான் என்ன சொல்லி விட்டேன் பாடலைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு சிறிய அளவிலான இசை அட்டகாசமாக இருக்கும், கடிகாரத்தின் பெண்டுலம் வழியாக அந்தகாலத்தில் அலாரம் போன்று ஒலிக்கும் அந்த ஒலியை பாடலின் சூழலுக்கேற்ப மெல்லிசை மன்னர் கொடுத்திருப்பார். பிரமாதம். அந்த பொம்மை மிகவும் பிரபலம். இந்தப் படம் வந்த காலத்தில் அந்த பொம்மை எங்கு பார்த்தாலும், குறிப்பாக சென்னை கடற்கரையில் விற்றுக் கொண்டிருப்பார்கள். கடை விரித்து அல்ல, ஆனால் சுண்டல் விற்பவர்களைப் போல ஒவ்வொருவரிடமும் கேட்டுச் செல்வார்கள். அப்போது நான் மிகவும் சிறியவன் என்றாலும் அந்த பொம்மை மட்டும் என் நெஞ்சில் அப்படியே நிலைத்து விட்டது.
ஹிந்து கட்டுரைக்கு மாலதி ரங்கராஜன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி, நடிகர் திலகத்தின் பட வெற்றியைப் பற்றி ஹிந்துவில் வெளிவந்த பிறகு பல விநியோகஸ்தர்களுக்கு அவர் படம் திரையிடும் ஆவல் உண்டாகும் என்பது என் எண்ணம்.
படங்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள் என்னிடம் கேட்கப் படவில்லை. ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்டுள்ள முதல் தேதி, துளி விஷம் படங்கள் ஏற்கெனவே நெடுந்தகடு வடிவில் வெளியாகி விட்டன. இந்த விவரங்களை இன்னும் கொஞ்சம் துல்லியமாக எழுதியிருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை, நம்முடைய இணைய தளம், மற்றும் சகோதரி கிரிஜா இணைய தளம் போன்ற வற்றில் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
மீண்டும் ஹிந்து பத்திரிகைக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st April 2011, 11:33 PM
#1637
Senior Member
Veteran Hubber
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 191
கேட்டல் : சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?
கிளத்தல் : இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்து வரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன ! தொலைந்தென்ன !
(ஆதாரம் : பாவேந்தர் பாரதிதாசனாரின் 'குயில்' பத்திரிகை)
இன்று 21.4.2011 புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 47வது ஆண்டு நினைவு தினம்.
29.4.2011 அன்று அன்னாரது 121வது பிறந்த தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
22nd April 2011, 12:26 AM
#1638
Senior Member
Veteran Hubber
புனர்ஜென்மம் : பொன்விழா நிறைவு [21.4.1961 - 21.4.2011]
முதல் வெளியீட்டு தினமான 21.4.1961 வெள்ளியன்று 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளியான விளம்பரம்

அகவை ஐம்பத்து ஒன்றில் அடியெடுத்து வைத்து 'என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை' என ஆனந்தப் பண் பாடுகிறார் சங்கர்.
அன்புடன்,
பம்மலார்.
-
22nd April 2011, 03:09 AM
#1639
Senior Member
Seasoned Hubber
-
22nd April 2011, 04:41 AM
#1640
Senior Member
Veteran Hubber
Thanks pammalar sir for sharing NT's evergreen classic 'Naan Enna Sollivitten', one of the most lilting duet (eventhough only TMS sir sings) and calms us whenever we hear this song. One of my favorite film too. No words to describe NT's action and his adorable charisma.
Seeing those old posters always makes me nostalgic and remind of my kid days.
Nice insights Raghavendra sir about the song and thanks for sharing the Hindu article, very nice read.
Last edited by V_S; 22nd April 2011 at 07:36 AM.
Bookmarks