டியர் பார்த்தசாரதி சார்,
ஏன் இப்படி நடக்கிறது?...அவரும் அவர் ரசிகர்களும் என்ன பாவம் செய்தார்கள்? நல்லதையே நினைத்து, நல்லதைப் பாராட்டி, நல்லதையே செய்து திறமை யாரிடம் இருந்தாலும், எங்கிருந்தாலும் பாரபட்சமின்றி ஓடிச் சென்று பாராட்டும் சுபாவம் யாருக்குப் புரிகிறது?...தான் கடந்து வந்த பாதையை நன்றியோடு திரும்பிப் பார்க்க இந்த ஜாம்பவான்களுக்குக் கூடவா தெரியவில்லை?...சரி விடுங்கள்...ஒற்றை விரலால் சூரியனை மறைக்க முடியாது.
நீங்கள் குறிப்பிட்டிருந்த 'ராமன் எத்தனை ராமனடி' திரைக்காவியத்தின் அந்த அற்புத சோகப் பாடலான 'அம்மாடி....பொண்ணுக்குத் தங்க மனசு...தங்க மனசு'.... தங்கமனசு.....பாடலில் அவர் அந்த தலையின் சைடில் ஸ்டைலாக இடது கையை வைத்து, லேசாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, பழைய நினைவுகளில் மூழ்கியபடியே அந்த ஸ்டிக்கை வைத்துக்கொண்டு நடக்கும் அழகை! ...... வேண்டாம் சார்.... கண்கள் குளமாகிறது.... தங்களைப் போலவே ஆயிரம் முறை அந்த குறிப்பிட்ட காட்சியை அனுபவித்து, அனுபவித்து ரசித்தவன் என்ற முறையில், என் மனதில் நீங்கா இடம் பெற்ற அந்தக் காட்சி தங்கள் மனதிலும் எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கியிருக்கும் என்று பரிபூரணமாக என்னால் உணர முடிகிறது. நன்றி சார்...
கண்களில் நீருடன்,
நெய்வேலி வாசுதேவன்.




Bookmarks