-
4th January 2012, 08:29 AM
#11
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தாங்கள் வழங்கிய சிறப்பான பாராட்டுதல்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றிகள் !
2011-ம் ஆண்டு நமது திரிக்கு ஒரு பொன்னான ஆண்டு என்று கூறினால் அது மிகையன்று. திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தாங்களும், திரியின் சுப்ரீம் ஸ்டாரான வாசுதேவன் அவர்களும் நமது திரிக்குள் வந்து அசத்தத் தொடங்கிய ஆண்டாயிற்றே ! இங்குள்ள அனைவரும் தெரிவித்ததுபோல நம் அனைவரது பங்களிப்பாலும், 2012லிருந்து நமது திரி மேலும் மேலும் பொலிவடையப்போகிறது என்பது திண்ணம் !
சக்கை போடு போட்டுத் துவங்கிய தாங்கள் அடுத்ததாக அண்டபகிரண்டத்தைக் காக்கும் கலையுலகப் "பராசக்தி"யின் 'கா..கா..கா' பாடலோடு கம்பீரமாக வந்துள்ளீர்கள். காலஞ்சென்ற எனது தாயார், இந்தப்பாடல் எப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும், அவர்கள் அப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியேவிட்டுவிட்டு, இப்பாடலை முழுவதும் பார்த்து ரசித்துவிட்டு, அதன் பின்தான் அந்த விட்ட வேலையைத் தொடர்வார்கள். அவர், ஒவ்வொரு முறையும், இப்பாடலை கண்டு களிக்கும் போதெல்லாம் சொல்லும் வாசகம், 'முதல் படத்திலேயே என்னமாய் நடிச்சிருக்கார் பாரு..அவர மாதிரி இனியொருத்தர் பொறந்து வரணும்' என்பார். இவையெல்லாம் எனது நினைவுத்திரையில் நீங்காமல் இடம்பெற்றிருப்பதால், தங்களுடைய 'கா..கா..கா' பாடல் பதிவைப் படித்தவுடன், அப்படியே எழுத வந்துவிட்டது.
உடுமலை நாராயண கவிராயரின் உண்மையை உரக்க உரைக்கும் உன்னத வரிகள், சுதர்சனம் அவர்களின் சுகமான சங்கீதம், இசைச் சித்தரின் இங்கிதம்கலந்த குரல்ஜாலம் எல்லாம் "பராசக்தி" கணேசரின் performanceஸோடு இணைந்து பரிமளிக்கும் போது, அந்தப்பாடல் எவ்வளவு பெரிய உயரத்தை அடையும் என்பதற்கு இந்தப்பாடல் ஒரு சிறந்த முன்னுதாரணம். மாருதிராவின் கேமராவும் இப்பாடலில் திலகத்தைப் படம்பிடிப்பதில் மலைப்பை ஏற்படுத்தியிருக்கும். சிதம்பர ரகசியமாக இருந்த சிதம்பரம் ஜெயராமனின் பாட்டுக்குரல் பட்டி-தொட்டியெங்கும் ஒலிக்கும் பிரபலக்குரலானதும் "பராசக்தி" கணேசரின் performance பலத்தால்தான் !
அருமையான ஆய்வுப்பதிவை அழகுற அளித்த தங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் !
தங்களுக்காகவும் மற்றும் இங்குள்ள அனைவருக்காகவும் 'கா..கா..கா' பாடலின் வீடியோ:
அன்புடன்,
பம்மலார்.
-
4th January 2012 08:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks