-
10th January 2012, 10:37 AM
#1861
Senior Member
Veteran Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களின் அடுத்தடுத்த பதிவுகளாக வந்துள்ள 'சுந்தரி சௌந்தரி நிரந்தரியே' மற்றும் 'பனி படர்ந்த மலையின் மேலே' பாடல் ஆய்வுகள் மிகமிகப் பிரமாதம்.
"தூக்கு தூக்கி(1954)" பாடலுக்கு இசை நமது திரை இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன். நமது நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வித்தியாசமான நடிப்பில் மிளிர்ந்த அசல் பக்திப்பாடலாகவே அன்றும், இன்றும் இப்பாடல் பார்க்கப்படுகிறது. பின்னணிப் பாட்டுக்குரலாக டி.எம்.எஸ், பார் போற்றுகின்ற அளவு பரிமளிப்பத்ற்கு, அவருக்கு ஒரு Baseஐ அமைத்துக் கொடுத்த காவியம். "தூக்கு தூக்கி". சௌந்தரராஜனை, வெள்ளித்திரை இசையின் வெண்குலக்குரலோனாக, Soundக்கே ராஜனாக ஒரு 'தூக்கு தூக்கி' விட்டது "தூக்கு தூக்கி". பத்மினி-ராகினிக்கு லீலா-கோமளா பின்னணி பாட, அவர்கள் பாடும்பாங்கிலேயே நடிகர் திலகத்துக்கு பாடகர் திலகம் பாட்டுக்குரல் கொடுக்க, ஆஹா...ஆஹா...அமைந்தால் ஒரு பாடல் இப்படி அமைய வேண்டும். கவிஞர் மருதகாசியின் பக்திமணம் கமழும் வரிகளுக்கு மயிலிறகு மெட்டை வார்த்தெடுத்திருப்பார் ராகதேவன் ராமநாதன். மறைந்த எனது அன்னையாரின் திருப்பெயர் 'சுந்தரி' என்பதால், அவ்வப்பொழுது அவரிடம் என்னுடைய காரியங்களை சாதித்துக் கொள்ள, இந்தப் பாடலை அவர்முன் சென்று அடியேன் பாடுவது வழக்கம். காரியமும் கைகூடிவிடும். அவர் மறைவுக்குபின்னும் அவரது புகைப்படத்தருகே நின்று அவ்வப்பொழுது இப்பாடலை இன்றும் அவர்முன்னே பாடிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுதும் காரியம் சித்தியாகிவிடுகிறது. அன்னை இல்லத்து நாயகரின் அன்புள்ளங்களாகிய நமக்கு, தாய்மேல் கொண்டுள்ள பக்தி என்பது, அவரைப்போலவே, உதிரத்துடன் கலந்த உணர்வு ஊற்றாயிற்றே ! 'சுந்தரி சௌந்தரி' பாடல் ஆய்வுக்காகவே தங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். புயலெனப் புகுந்து இப்பாடலின் வீடியோவை வழங்கிய வீடியோ வித்தகர் வாசு அவர்களுக்கு நமது நன்றி !
திரை இசைத் திலகத்தின் தீர்க்கமான இசையில் வெளிவந்த "இரத்தத்திலகம்(1963)" காவியப்பாடலான 'பனிபடர்ந்த மலையின்மேலே' பாடலில் நமது நடிகர் திலகத்தின் performance, காண்பவரது ஐம்புலன்களையும் ஆக்கிரமித்துவிடும். பின்னணியில் பாடகர் திலகமும் நம்மை ஒரு குலுக்குகுலுக்கிவிடுவார். திராவிட வனவாசம் முடிந்து வந்த கவியரசர், தன் மனவாசத்தில் தேசியத்தை நிலைநிறுத்திக் கொண்டபின் எழுதிய அர்த்தபுஷ்டியுடன் கூடிய வைரவரிகள், நடிகர் திலகத்தின் மிகச்சிறந்த நடிப்பில் மிளிரும்போது, தேசபக்தி என்பது நமக்கு வெள்ளித்திரைமூலமாகவே ஊட்டப்ப்ட்டுவிடுகிறது. அதனை நமக்கு ஊட்டிய தேசிய திலகத்தின் புகழ் என்றென்றும் வாழ்க !
நமது நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வித்தியாசமான நடிப்பில் உருவான பாடல்கள், தங்களின் மிகச் சிறந்த வித்தியாசமான எழுத்துநடையில் பதிவுகளாக உருப்பெறும்போது அவை காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுக்களாக வடிவம் பெற்றுவிடுகின்றன.
தொடர்ந்து புளகாங்கிதத்துடன் தொடரட்டும் தங்களின் திலகப் பாட்டுப்பயணம்...!
[தங்களது கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கும் "மோகனப்புன்னகை" விளம்பரத்தை கண்டு களித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் !]
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 10th January 2012 at 10:43 AM.
pammalar
-
10th January 2012 10:37 AM
# ADS
Circuit advertisement
-
10th January 2012, 12:13 PM
#1862
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கு நன்றி.
'தங்கப்பதுமை' பட விளம்பர ஆவணமும், படம் ஓடிய விவரங்களும், அப்படத்துக்கு ஆனந்த விகடன் விளம்பரமும் பதிப்பித்து களைகட்டச்செய்து விட்டீர்கள். மிக்க நன்றி.
பொங்கல் தினம் நெருங்கும் வேளையில், இப்போதே தங்களின் பொங்கல் துவங்கிவிட்டது அறிந்து மகிழ்ச்சி.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்கப்பதுமை பட நிழற்படங்களும், பாடல்களின் வீடியோ காட்சிகளும் மிக அருமை. சிரத்தை எடுத்து பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.
-
10th January 2012, 06:46 PM
#1863
Senior Member
Diamond Hubber
பாசமலர் பம்மலார் சார்,
தங்கள் அன்பும், பாசமும், உச்சப்பாராட்டுகளும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இந்த அளவுக்குப் பாராட்டிவிட நிச்சயம் நான் ஒன்றும் செய்து விட வில்லை. தங்களுடைய உயரிய பண்பான அன்புப் பாராட்டுதல்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள் கோடி. பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கும் மனம் மகிழ்ந்த நன்றிகள்.
'தங்கப்பதுமை' தென்றல் முதல் வெளியீட்டு விளம்பரம் அபாரப் பதிவு. (இந்த மாதிரி அரிய இதழ்களை சேகரிக்க எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள் என்றெண்ணும் போது மலைப்பாக இருக்கிறது).
ஆனந்தவிகடனின் 'தங்கப்பதுமை' விமர்சனம் அரிய பதிவு. வெகு நாட்களுக்குப் பிறகு பலபேரை இப்போது படித்து சுவைக்கச் செய்தததற்கு ஆத்மார்த்தமான நன்றிகள். அது தங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.
தங்கப் பதுமை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட வெற்றிகளை அழகான குறிப்புகளாய் அளித்து அசத்தியதற்கு அருமை நன்றிகள்.
அன்பு பார்த்தசாரதி சாருக்கு தாங்கள் எழுதியுள்ள பதிவில் தங்கள் தாயாரைப் பற்றிக் குறிப்பிட்டு கூறியிருந்தது கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த சுந்தரித்தாய் எங்களுக்கும் அன்புத் தாய்தானே! அவர்கள் இப்படி ஒரு முத்தைப் பெற்றெடுத்து எங்களுக்குக் கொடுத்ததற்காக காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டவர்கள் அல்லவா! அவர் ஈன்றெடுத்த அந்த நன்முத்து மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கிக் கொண்டு, நடிகர் திலகத்தின் புகழ் வெளிச்சத்தை உலகுக்கெல்லாம் பரவச் செய்து கொண்டிருப்பதையே தன் தலையாய கடமையாய் நினைத்து, அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறதே ! அப்படிப்பட்ட அந்த முத்தான முத்தை உலகுக்களித்த அந்த தியாகத் தாய்க்கு என்றும் எங்கள் அன்பு அஞ்சலியை செலுத்திக் கொண்டே இருப்போம். த(எ)ங்கள் தாயின் நினைவாக இதோ ஓர் அற்புதப் பாடல் நம் தெய்வமகனின் வாயிலாக.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 10th January 2012 at 07:08 PM.
-
10th January 2012, 07:01 PM
#1864
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
முகத்தில் முகம் பார்க்கலாம். ஆம். நம் தலைவரின் முகத்தில் நம் முகத்தைக் காணலாம். அந்த அளவுக்கு வெண்பளிங்கு போன்ற முகம் அது. பார் போற்றும் பாடலைத் தந்தமைக்கு பாராட்டுக்கள்.
இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே! ஏனென்றால் தங்கப்பதுமையின் 54-ஆவது பிறந்தநாள் தொடக்கமல்லவா! எல்லோர் மனதிலும் புது வெள்ளத்தை இந்தப்பாடலின் மூலம் பொங்க வைத்த தங்களுக்கு தங்கப் பாராட்டுக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
10th January 2012, 07:04 PM
#1865
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
தங்கப்பதுமை பதிவுகளுக்காக தங்க மனம் கொண்ட தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
10th January 2012, 07:37 PM
#1866
Senior Member
Diamond Hubber
-
10th January 2012, 08:02 PM
#1867
Senior Member
Diamond Hubber
நெய்வேலியில் பேயாட்டம் ஆடிய தானே புயல் வீடியோஸ்.
துயரத்துடன் ,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 10th January 2012 at 08:19 PM.
-
10th January 2012, 09:46 PM
#1868
Senior Member
Devoted Hubber
டியர் வாசுதேவன் சார்,
தானே புயலின் கோர தாண்டவத்தை தாங்கள் புகைப்படமாகவும் விடியோவாகவும் வெளியிட்டதை பார்க்கும் போது நெஞ்சம் கனத்தது, அப்பகுதி மக்கள் விரைவில் மீண்டு வர ஆண்டவனை வேண்டுகிறேன்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
10th January 2012, 10:50 PM
#1869
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் பதிவிட்ட புகைப்படங்களும், வீடியோக்களும், நெய்வேலியில் 'தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பை கண்முன்னே நிறுத்தி கண்களில் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்துவிட்டது. தங்கள்பகுதிவாழ் குடிமக்கள் எல்லாத் துயரங்களிலிருந்தும் சீக்கிரமே மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனையும், நமது இதயதெய்வத்தையும் மனமார வேண்டுகிறேன். எல்லோருக்காகவும் அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
கனத்த இதயத்துடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
10th January 2012, 11:32 PM
#1870
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
பாசமலர் பம்மலார் சார்,
தங்கள் அன்பும், பாசமும், உச்சப்பாராட்டுகளும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இந்த அளவுக்குப் பாராட்டிவிட நிச்சயம் நான் ஒன்றும் செய்து விட வில்லை. தங்களுடைய உயரிய பண்பான அன்புப் பாராட்டுதல்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள் கோடி. பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கும் மனம் மகிழ்ந்த நன்றிகள்.
'தங்கப்பதுமை' தென்றல் முதல் வெளியீட்டு விளம்பரம் அபாரப் பதிவு. (இந்த மாதிரி அரிய இதழ்களை சேகரிக்க எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள் என்றெண்ணும் போது மலைப்பாக இருக்கிறது).
ஆனந்தவிகடனின் 'தங்கப்பதுமை' விமர்சனம் அரிய பதிவு. வெகு நாட்களுக்குப் பிறகு பலபேரை இப்போது படித்து சுவைக்கச் செய்தததற்கு ஆத்மார்த்தமான நன்றிகள். அது தங்களால் மட்டுமே முடிந்த ஒன்று.
தங்கப் பதுமை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட வெற்றிகளை அழகான குறிப்புகளாய் அளித்து அசத்தியதற்கு அருமை நன்றிகள்.
அன்பு பார்த்தசாரதி சாருக்கு தாங்கள் எழுதியுள்ள பதிவில் தங்கள் தாயாரைப் பற்றிக் குறிப்பிட்டு கூறியிருந்தது கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த சுந்தரித்தாய் எங்களுக்கும் அன்புத் தாய்தானே! அவர்கள் இப்படி ஒரு முத்தைப் பெற்றெடுத்து எங்களுக்குக் கொடுத்ததற்காக காலமெல்லாம் அவர்களுக்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டவர்கள் அல்லவா! அவர் ஈன்றெடுத்த அந்த நன்முத்து மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கிக் கொண்டு, நடிகர் திலகத்தின் புகழ் வெளிச்சத்தை உலகுக்கெல்லாம் பரவச் செய்து கொண்டிருப்பதையே தன் தலையாய கடமையாய் நினைத்து, அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறதே ! அப்படிப்பட்ட அந்த முத்தான முத்தை உலகுக்களித்த அந்த தியாகத் தாய்க்கு என்றும் எங்கள் அன்பு அஞ்சலியை செலுத்திக் கொண்டே இருப்போம். த(எ)ங்கள் தாயின் நினைவாக இதோ ஓர் அற்புதப் பாடல் நம் தெய்வமகனின் வாயிலாக.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்கள் பதிவின் மூலமும், பாடலின் வீடியோ மூலமும் என்னை உணர்ச்சிப்பிழம்பாக்கிவிட்டீர்கள். இதற்கு மேல் எழுதுவதற்கு எனக்கு வார்த்தைகள் வரவில்லை. தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !
உணர்ச்சிப்பெருக்கில்,
சுவாமிநாதன்.
Bookmarks