-
6th April 2012, 04:56 PM
#2631
Senior Member
Seasoned Hubber
[QUOTE=RAGHAVENDRA;841615]டியர் பம்மலார், வாசுதேவன், சந்திரசேகர்,
தங்களுடைய ஆவணப் பதிவுகள், காட்சிப் பதிவுகள் மற்றும் நிகழ்ச்சிப் பதிவுகளைக் காண நடிகர் திலகம் இல்லையே என்கிற குறை மனதில் ஏற்படுகிறது. பாராட்டுக்கள்.
/QUOTE]
Dear Ragavendran Sir
Thanks for your appreciation
-
6th April 2012 04:56 PM
# ADS
Circuit advertisement
-
6th April 2012, 04:59 PM
#2632
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar
சிங்கத்தமிழன் குறித்த சிறந்த கட்டுரை
வரலாற்று ஆவணம் : துக்ளக் : 5.11.2003
பக்தியுடன்,
பம்மலார்.
Dear Pammalar,
Very Nice Article. Thanks for the post.
-
6th April 2012, 06:34 PM
#2633
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்புப் பாராட்டிற்கு உளம் கனிந்த நன்றி!
இங்கேயும் ஒரு குட்டி கோ-இன்சிடென்ஸ். நடுவில் விட்டிருந்த வாக்கிங்கை கடந்த மூன்று நாட்களாக தொடர ஆரம்பித்துள்ளேன். இன்று வாக்கிங் செல்வதற்கு முன்னால் ஜஸ்ட் திரியை ஒரு பார்வை பார்க்கும் தருணத்தில் தாங்கள் வழங்கியிருந்த வாக்கிங் பற்றிய கட்டுரைக்கான லிங்கை கிளிக் செய்தேன். அருமையான நடைபயணத்தின் சிறப்பை விளக்கும் கட்டுரை. என்ன ஒரு டைமிங்! மகிழ்ச்சியுடன் வாக்கிங் புறப்பட்டேன். அருமையான தகவலுக்கு நன்றி!
அன்புடன்
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 6th April 2012 at 08:09 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
6th April 2012, 11:18 PM
#2634
Junior Member
Seasoned Hubber
This s a article I found in Dinamalar.Pl clarify.
"கர்ணன்" நடிகர் திலகம் சிவாஜி நடித்த இந்தபடத்தை ரீரிலீஸ் செய்த வகையில் அதன் இப்போதைய பட அதிபர் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவரது மனைவி சாந்தி சொக்கலிங்கம் இருவருக்கும் 3.5 கோடி லாபமாம். வெறும் 35 லட்சம் ரூபாய் மட்டும் செலவு செய்து 3.5 கோடியை ஈட்டிய இவர்கள் அந்தப்படத்தை ரீரிலீஸ் செய்ய பக்கபலமாக இருந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனிடமே நஷ்டக் கணக்கு கண்பித்து கண்துடைப்பு செய்து வருவதுதான் ஹைலைட் காமெடியாம்.
திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தம்பதிகள் மீது ஏற்கனவே எம்.ஜி.ஆர்., படங்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து செம துட்டு பார்த்து, அந்த காசில் சிவாஜியின் கர்ணனை ரிலீஸ் செய்வதா? என எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் செம கோபத்தில் துண்டு பிரசாரம் எல்லாம் விநியோகித்து வர இப்பொழுது சிவாஜி படத்தின் ரீரிலீசால் லாபம் பார்த்தும் நஷ்டக்கணக்கு காண்பிப்பதால் சிவாஜி ரசிகர்களின் சாபத்தையும் வாங்கி கட்டிக்கொள்வார்கள் போல?
-
6th April 2012, 11:22 PM
#2635
Junior Member
Seasoned Hubber
Still how to make these ppl believe the BO success of NT. All Everest success achieved by NT are treated like St. Thomas mount success. Found in various sites against Karnan. Something has to be done 4 these.
unusual walk, shouting , unnatural acting,no quick and smart action,unfit hairstyle, no individuality, always depending multi star - this is sivaji in karnan. only the photography, music by msv-ramamurthy, and tms and kannadasan save this karnan some extend. karnan made comfortable collection after making 40lacs convertions expenses and more t han pulicity in medias and papers and above all charity shows by compulsions by some groups who involved in the rerelease investors. by allthe way they created false propaganda and ads this karnan REALLY NOT MADE ANY ACHIVEMENT. Karnan is not only Sivaji, So many big star cost in this movie with NTR , Ashokan,Mudhuraman, Savithri & Devika and many more,above all this movie re release big sport for chokalingam Ramkumar(Sivaji son-a milliner), Yg. Mahendern,osscar films ravichanderan spend so many money for media & publicity.
-
6th April 2012, 11:51 PM
#2636
Ragul,
I don't know from where you got this second news but it is very clear that it is a clear case of stomach burning that has been written by a novice who doesn't know who is who [Surprised how of all people Oscar Ravichandran got figured here] and any right thinking person would see through all these. One kind request - don't give publicity for these cheap remarks by pasting it here. Hope you understand.
Regards
-
6th April 2012, 11:54 PM
#2637
சுவாமி,
எப்போதாவது ஒரு முறைதான் சில நல்ல கட்டுரைகள் வாசிக்க கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு கட்டுரைதான் நீங்கள் பதிவிட்டிருக்கும் துக்ளக் கட்டுரை. எப்படி நடிப்பை நன்கு உணர்ந்த நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகரால் மட்டுமே செய்ய முடியும் என்று ஒரு சில உதாரணங்களோடு கட்டுரையாசிரியர் விவரிக்கிறாரோ அதே போன்று சினிமாவின் மொழி தெரிந்த, நடிப்பை நன்கு ரசிக்க தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே அதை எழுத்தில் வடிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு லாவகம் வண்ண நிலவன் போன்ற தேர்ந்த எழுத்தாளருக்கு கை வந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
பலருக்கும் தெரியாத செய்தி. அன்றைய நாட்களில் [80-களில்] சமூக இலக்கிய சினிமா தளங்களில் காணப்பட்ட சீர்கேடுகளை சமூக நலத்திற்கு எதிரான போக்குகளை தன் சுட்டெரிக்கும் எழுத்துக்களால் துக்ளக் இதழில் துர்வாசர் என்ற புனை பெயரில் அவர் சாடி எழுதிய கட்டுரைகள் மிக பிரபலம்.
நல்ல ஒரு கட்டுரையை வாசிக்க கொடுத்ததற்கு மீண்டும் உங்களுக்கு நன்றி.
அன்புடன்
-
7th April 2012, 02:33 AM
#2638
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்.
தங்களுடைய பாராட்டிற்கு மனம் குளிர்ந்த நன்றிகள்.
5.11.2003 துக்ளக் இதழில் வெளிவந்த வண்ணநிலவன் அவர்களின் 'சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்' கட்டுரையைப் படித்ததும் மனம் உற்சாகத்தில் குதூகலித்தது. இதை விட புகழாரம் நடிகர் திலகத்திற்கு சூட்ட முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். மிகைப்படுத்தப்படாத வெகு நேர்த்தியான கட்டுரை. வண்ணநிலவனுக்கு நிலவை பரிசாக வழங்கலாம். வண்ண நிலவனின் கட்டுரையைப் பாதுகாத்து இப்போது வெளியிட்டு மனம் குளிரச் செய்த தங்களுக்கு என்ன பரிசு வழங்கலாம் என்றுதான் தெரியவில்லை.(பரிசுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பம்மலார் ஆகி விட்டீர்கள்). அற்புதமான கட்டுரையை அகம் குளிர பதிவு செய்தததற்கு எண்ணிலடங்கா நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களது அன்பான பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் !
வான்மழை போல் பேரன்பையும், பாசத்தையும் தாங்கள் என் மீது பொழியும்போது அதைவிட சிறந்த பரிசு வேறென்ன வேண்டும் !
நானிலம் போற்றும் டிஜிட்டல் கர்ணனின் நான்காவது வார விளம்பரம் டாப் !
'புனித வெள்ளி' பதிவு உணர்ச்சிமயம் !
இதர பதிவுகளும் எப்பொழுதும் போல் அருமை !
அன்புடன்,
பம்மலார்.
-
7th April 2012, 03:57 AM
#2639
Senior Member
Veteran Hubber

Originally Posted by
sivajidhasan
திரு. பம்மலார் அவர்களுக்கு,
"சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்" கட்டுரை மிகவும் அருமை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதன் நூறாவது நாள் வெற்றி விழாவிற்கு தலைமை தாங்க பேரறிஞர் அண்ணா அவர்களை அழைத்தார்களாம். அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டு, விழாவில் பேசுவதர்காக, ஒரு நாதஸ்வர வித்வானை அழைத்து, கணேசன் இந்த படத்தில் என்னென்ன நுணுக்கங்களை கையாண்டு இருக்கிறார் என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த நாதஸ்வர வித்வானோ, இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற மாதிரி நடிக்கவில்லை. நாதஸ்வரத்தை அவரே வாசித்திருக்கிறார் என்றாராம். மேலும், நடிகர் திலகம் நாதஸ்வரம் வாசிக்கிற போது, நாதஸ்வரத்தில் எந்த ஓட்டையை அடைத்தால் எந்த சுரம் வருமோ, சரியாக அந்த ஓட்டையை அடைத்து வாசித்திருக்கிறார். அவர் வாசித்ததற்கு மாறாக அதை வாசிக்க முடியாது என்றும், நாதஸ்வர வித்வான்கள் வாசிக்கும்போது மேலுதடு நாதஸ்வரத்தில் ஒட்டியிருக்கும். கீழுதடுதான் அசையும். அதை மிக லாவகமாக நடிகர் திலகம் செய்திருக்கிறார் என்றாராம். ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனாராம் அண்ணா! இதையெல்லாம் இன்றைய தலைமுறை கூர்ந்து கவணிப்பதாக தெரியவில்லை. இல்லையென்றால் 35 வருட அனுபவமுள்ள நடிகர் ஒருவர் அவருடைய கடைசிப் படத்தில் கிட்டார் வாசிக்கிற போது இடது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலது கையில் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தார். இதையும் நடிப்பென்று ஒப்புக் கொள்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!
நட்புடன்!
டியர் சிவாஜிதாசன் சார்,
தங்களது நல்ல பதிவுக்கு நயமிகு நன்றி !
தங்களது பதிவில் காணப்படும் ஒரு தகவலில் ஒரு சிறுதிருத்தம். "தில்லானா மோகனாம்பாள்" திரைக்காவியத்தின் 100வது நாள் [3.11.1968] விழாவில் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர் அவ்வமயம் மிகுந்த உடல்நலக்குறைவு காரணமாக லண்டனில் தீவிர சிகிச்சையில் இருந்தார். அதற்குப்பின்னர் ஓரளவுக்கு உடல்நலம் தேறி தாயகம் திரும்பியதும் அவர் நமது நடிகர் திலகத்தின் 125வது படவிழாவான "உயர்ந்த மனிதன்" படவிழாவில் கலந்து கொண்டு நடிகர் திலகத்துக்கு புகழாரம் சூட்டினார். இந்த விழா "உயர்ந்த மனிதன்" வெளியான 17வது நாளான 15.12.1968 ஞாயிறன்று சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தனது நீண்ட பாராட்டுரையில் அண்ணா அவர்கள் "தில்லானா மோகனாம்பாள்" காவியம் குறித்தும் பேசினார். அந்தப் பகுதி மட்டும் இங்கே தங்களின் அன்பான பார்வைக்கு:
"திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பதை அன்று கணேசன் பார்த்திருந்து, மனதில் பதிய வைத்திருந்த காரணத்தால்தான், "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் இன்று சிறிதுகூடக் குறைவின்றி நாதஸ்வரம் வாசித்ததைப் பார்த்தேன். எங்கேனும் ஓரிடத்திலாவது மேலுதடு கீழுதடு பிசகுமோவெனக் கூர்ந்து கவனித்தேன். அறவே இல்லை. அப்படி ஒரு முத்திரையை அவரது நடிப்பில் கண்டேன்."
"உயர்ந்த மனிதன்" படவிழா பற்றி ஜனவரி 1969 'பொம்மை' இதழில் வெளிவந்த முழுமையான விழாத் தொகுப்பு அடியேனால் ஏற்கனவே நமது திரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைக் கீழ்க்காணும் சுட்டியில் வாசித்து மகிழவும்:
http://www.mayyam.com/talk/showthrea...Part-8/page178
குறிப்பு:
"தில்லானா மோகனாம்பாள்" காவியத்தின் 100வது நாள் : 3.11.1968. 100வது நாள் விழா அந்த மாதத்தில் என்று நடந்தது என்பதனை அன்றைய ஆவணங்களை சரிபார்த்துவிட்டு விவரம் அளிக்கிறேன். "தில்லானா மோகனாம்பாள்" 100வது நாள் விளம்பரத்தைக் காண வேண்டுமா, சுட்டி இதோ:
http://www.mayyam.com/talk/showthrea...-Part-8/page65
அன்புடன்,
பம்மலார்.
-
7th April 2012, 04:07 AM
#2640
Senior Member
Veteran Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
தாங்கள் வழங்கிய பாராட்டுக்கு நன்றி !
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது பாராட்டுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks