-
21st April 2012, 05:10 AM
#2991
Senior Member
Veteran Hubber
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
கலாட்டா கல்யாணம்
[12.4.1968 - 12.4.2012] : 45வது ஆண்டு கொண்டாட்ட தினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 20.7.1968

குறிப்பு:
1. 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : சென்னை - சாந்தி[106 நாட்கள்] மற்றும் கிரௌன்[106 நாட்கள்].
2. சென்னை [சயானி]யில் 77 நாட்களும், மதுரை [ஸ்ரீ மீனாக்ஷி]யில் 70 நாட்களும் மற்றும் திருச்சி, சேலம், கோவை போன்ற மாநகரங்களில் ஒவ்வொன்றிலும் முறையே 70 நாட்களும், ஏனைய பல ஊர்களின் அரங்குகளில் 56 நாட்களும் ஓடிய இக்காவியம் ஒரு சூப்பர்டூப்பர்ஹிட் காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
21st April 2012 05:10 AM
# ADS
Circuit advertisement
-
21st April 2012, 07:50 AM
#2992
Junior Member
Newbie Hubber
Pammalaar Sir,
Now only thread is again back to full throttle.What ever we write,your stills are like kumkumam for the women.It attains full grace only after this Galatta Padhivu.
-
21st April 2012, 09:56 AM
#2993
Junior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
Pammalaar Sir,
Now only thread is again back to full throttle.What ever we write,your stills are like kumkumam for the women.It attains full grace only after this Galatta Padhivu.
Grand welcome to pammalar sir. hope vasu sir will be back very soon and we wish for the same. all nadigar thilagam fans should be united and do our small contributions regularly. many more KARNANS are expeccted in big screens
long live NADIGARTHILAGAM FAME AND GLORY.
GREETINGS TO ALL HUBBERS.
-
21st April 2012, 10:04 AM
#2994
Junior Member
Newbie Hubber
சாந்தி- 1965
ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.
பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து
கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.
கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.
உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம் என்றால், யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது? எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான்
ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.அவரை எஸ்.எஸ்.ஆறே விரும்பி இருப்பாரா என்பது சந்தேகம்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.
பார்க்க வேண்டிய படம் என்பதை விட பார்க்க கூடிய படம் என்றே நான் தீர்ப்பு சொல்வேன்.
Last edited by Gopal.s; 24th April 2012 at 03:01 PM.
-
21st April 2012, 12:01 PM
#2995
Junior Member
Newbie Hubber
Ragavendar Sir,
I know you are making a dig at me by attributing the video parikshaikku neramachu.Pl.look at my shortlist on page 279-article No 2784.This movie is figuring in the list.
Last edited by Gopal.s; 21st April 2012 at 02:49 PM.
-
21st April 2012, 12:03 PM
#2996
Junior Member
Newbie Hubber
Friends,
One of you can take it to index all the articles,documents,stills by name or subject for easy access of old articles.This is only my humble suggestion.The index should serve as reference by page/article no.
Last edited by Gopal.s; 21st April 2012 at 02:49 PM.
-
21st April 2012, 12:47 PM
#2997
Junior Member
Newbie Hubber
இரும்பு திரை-1960
முதல் முதலில் தொழில் சார்ந்த தொழிலாளர் பிரச்னையை வலுவாக அக்கறையுடன் சொன்ன வர்த்தக படம்.ஹிந்தி,தமிழ் இரண்டிலும் தயாரிக்க பட்ட ஜெமினி நிறுவனத்தாரின் முதல் சிவாஜி படம்.(உறவு சரியாக இல்லாததால் வாசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் முயற்சிக்கு சிவாஜி ஒத்துழைக்காமல் பிறகு வாசன் கை விட்ட பிறகு பந்துலுவிற்கு கை கொடுத்தார் என்று கேள்வி).ஹிந்தியில் திலிப் ,இரண்டிலும் வைஜயந்தி.ஹிந்தி மிக நன்றாகவும்,தமிழில் சுமார் நன்றாகவும் ஓடியது.வாசன் இயக்கம்.ஜெமினி கதை இலாக்காவின் (முக்கியம் தில்லானா மூல கதாசிரியர் சுப்பு)
நல்ல திரைகதை,வெங்கட்ராமன் இசை(ஷன்முகப்ரியாவில் கண்ணில் குடியுருக்கும் )என்று ஜெமினி யின் நல்ல முயற்சி.திலிப் இதன் மூலம் சிவாஜியின் சுமார் நண்பர் ஆனார்.(இன்றும் சிவாஜியை மிக நல்ல நடிகர் என்று புகழ்வார்)
தொழிலாளர் சங்க தலைவர் சிவாஜி,முதலாளி விசுவாசி சுப்பையா அண்ணா,முதலாளி மகள்-தொழிலாளி காதலி(முதலாளி மாஜி காதலி மகள்) -சிவாஜி என ஒரு முக்கோண காதல்,தங்கவேலுவின் சகிக்க முடியாத காமெடி என போகும் மிக நீஈண்ட படம்.பின்னாளில்(1971) மல்லியம் ராஜகோபால் சார் இதே மாவை மேலும் சுவையான பணியாரம் ஆக்கினார் சவாலே சமாளி என்று.முக்கோணம் தவிர்த்து திருநீலகண்டர் கதை ,நல்ல தங்கை,தங்கையின் முரட்டு கணவன்,நல்ல வில்லன் கம் காமெடியன் என்று நல்ல வெற்றி பெற்றார்.
இரும்பு திரையின் நான் மிக மிக ரசித்த சிவாஜியின் காதல் காட்சி(யதார்த்த நடிப்பின் உச்சம்) ஒன்று.வைஜயதியிடன் செல்லமாக தன் கன்று காதலை சொல்லும் இடம்/.அருமையான கெமிஸ்ட்ரி வைஜயந்தி உடன்.(இந்த ஜோடி நிறைய சேர்ந்து நடித்திருக்கலாம்)அதே போல் நிர்வாகத்தின் ஆட்டு மந்தை புத்தியை சுட்டி காட்டி இந்திய பொறியியல் ஆளர்களிடம் நம்பிக்கை வைக்க சொல்லும் இடம் அருமை.எதிர்பார்த்த திசையில் பயணித்தாலும்
நன்றாக எடுக்கப்பட்ட படம்.கிளைமாக்ஸ் ,வைஜயந்தி தீ பந்தத்துடன் என்று ஞாபகம்.(ச.ச. வில் விஜயகுமாரி அதே தீ பந்தம்)இரண்டிலும் சிவாஜி பழி ஏற்பார்.சரோஜா தேவி கொஞ்சம் டம்மி.ரங்கராவ் நல்ல நடிப்பு வழக்கம் போல்.
படத்தை சிவாஜி கொஞ்சம் இழுத்தடித்தார் என்று கேள்வி.ஆனால் ஜெமினி நிறுவனம்-சிவாஜி உறவு மோட்டார் சுந்தரம் பிள்ளை,விளையாட்டு பிள்ளை என தொடர்ந்தது.வாசன் பிறகு ஏ.வீ.எம் முடன் ஒரு மேடையில் சிவாஜி உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பேசினார்.
சிவாஜி அருமையாக தன் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார்.தூய தமிழ் ரொம்ப உறுத்தாது.
நல்ல படம்-தமிழில் குறிப்பிடத்தக்க முயற்சிகளுள் ஒன்று.தொழில் நகரம் கோவையில் வெள்ளி விழா கண்டது.
-
21st April 2012, 01:52 PM
#2998
Junior Member
Junior Hubber
MUTHTHUKKAL MOONDRU
Last edited by BALAA; 21st April 2012 at 02:16 PM.
-
21st April 2012, 01:55 PM
#2999
Junior Member
Junior Hubber
GOD OF CINEMA
Last edited by BALAA; 21st April 2012 at 02:20 PM.
-
21st April 2012, 02:52 PM
#3000
Senior Member
Regular Hubber
Welcome back pammalar sir
regards
kumareshanprabhu
Bookmarks