தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் சந்தோஷ நன்றிகள். கர்ணனைப் பற்றிய தங்களது ஆதங்கம் நியாயமானதே. சூர்யபுத்திரரின் வெற்றியை
பொய் மேகங்கள் மறைத்து விட முடியாது.
12-ஆவது வார கர்ணன் விளம்பரம் பக்கா.
நடிகர் திலகத்தின் படங்கள் தொலைக்காட்சிகளில் என்னென்ன என்று தெரிவித்திருப்பது என் போன்றவர்களுக்கு மிகுந்த பயன் உடையதாய் இருக்கிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Last edited by vasudevan31355; 31st May 2012 at 01:46 PM.
AVM
1. Parasakthi- Krishnan Panju
2. Andha Naal- veenai S. Balachander
3. Uyarantha Manithan-Krishnan Panju
4. Anbulla Appa- A. C. Trilok
5.Paartaal Pasi theerum
Out of these 5 movies by AVM Parasakthi was a Silver Jubliee
2.partaal Pasi Theerum celebrated 100 days
3.Antha Naal was a decent hit movie though it is a cult still now
4. Uyarntha Manithaan- 100 days movie( Parasakthi celebrated 100 days in it re reun on the release of Uyarantha Manithan in the year 1968)
5.Anbulla Appa- 75 days movie
Out of these 5 movies Parasakthi, Anbulla Appa, Uyarantha Manithan are being telecasted atleast once in a year in tv
நடிகர் திலகத்தின் கொள்கை / தத்துவப் பாடல்கள் - தொடர்ச்சி
முன்னர் நடிகர் திலகத்தின் பாடல்கள் இத்தலைப்பில் இடம் பெற்றன. அதன் தொடர்ச்சியாக அடுத்தது.
நீ..............ண்ட நாட்களுக்குப் பின்னர் காணொளி்யாக நாம் அனைவரும் ஆவலுடன் விரும்பி விரும்பிப் பார்க்கும் கேட்கும் பாடல்.
தங்கை படத்தில் டி.எம்.எஸ். அவர்களின் குரலில், மெல்லிசை மன்னரின் இசையில், கவியரசரின் வரிகள்.
கதைப் படி கதாநாயகன் ஏழை என்று சொல்ல முடியாவிட்டாலும் அடித்தட்டு மக்களில் ஒருவன். அவனுடன் தன் மகளான கே.ஆர்.விஜயா பேசிப் பழகுவது செல்வந்தரான மேஜருக்கு பிடிக்கவில்லை. காரில் பயணம் செல்லும் போது அவரை வண்டியை விட்டு இறக்கி விடுகிறார். அந்த சூழ்நிலையில் தன்னுடைய மனம் தளராமல் தன் நிலையை உணர்ந்து வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் இனிமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனோ பாவத்துடன் பாடிக் கொண்டே செல்வதாக காட்சி. எதையும் கவலைப் படாமல் செல்லும் இளைஞனின் மன ஓட்டத்திற்கேற்ற வாறு மெட்டமைத்து இசையமைத்திருந்தார் மெல்லிசை மன்னர். அதைத் தன் குரலால் சிறப்பாக வடித்திருந்தார் டி.எம்.எஸ். தங்கை திரைப்படம் சித்ரா திரையரங்கில் வெளியான போது இந்தப் பாடல் காட்சியில் அரங்கில் ஆர்ப்பரிப்பு அடங்க வெகு நேரமாகும். அந்த அளவிற்கு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட படம். இன்றைய தலைமுறை சிவாஜி ரசிகர்கள் பலர் இப் படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள், அல்லது குறைந்த பட்சம் இந்தப் பாடல் காட்சியைப் பார்த்திருக்க மாட்டார்கள். தொலைக் காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பப் படாத பாடல். வரிகளில் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும் அளவிற்கு கண்ணதாசன் கருத்துக்களைப் புகுத்தி யிருப்பார்.
இதோ பாடல் வரிகள்
பல்லவி
இனியது இனியது உலகம்
புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
சரணம் 1
பருவம் போகும் வழியோடு
பயணம் போகும் விழியோடு
ரசிகன் என்னும் நினைவோடு
நாளும் பொழுதும் நடை போடு
ராகத்தோடு தாளத்தோடு பாவத்தோடு
விளையாடு
நினைத்தெல்லாம் முடித்த பின்னே
அடுத்த வாழ்வில் அடி போடு
சரணம் 2
அச்சம் கொண்டால் சுகமில்லை
அடிமை வாழ்வில் சுவையில்லை
தூங்கும் கண்ணில் ஒளியில்லை
துள்ளி நடந்தால் வழியில்லை
நமது வாழ்வு
நமது சொந்தம்
நமது என்னும் உணர்வோடு
நாளைப் பொழுது யாருக்கென்று
கேள்வி கேட்டு பதில் தேடு
பாடலைப் பாருங்கள் ... கேளுங்கள்... நடிகர் திலகத்தின் ஸ்டைலில் மீண்டும் மீண்டும் பார்ப்பீர்கள்...
இப்பாடலுக்காக யூட்யூப் இணைய தளத்திற்கும் தரவேற்றியவருக்கும் நமது உளமார்ந்த நன்றி.
புதையலுக்கு (1957 )பின் வந்த பொழுதுபோக்கு சித்திரம் தங்கை(1967 ) . நடிகர்திலகத்தை நோக்கி இளைஞர்களை,கிராமத்தினரை ஈர்க்க வைக்க வந்த துவக்க முன்னோடி. எனக்கு இந்த கார் சீன் ,அதை தொடர்ந்த இனியது பாடல் பிடித்த ஒன்று.
நன்றி ராகவேந்தர் சார்
Bookmarks