-
5th June 2012, 09:52 PM
#3791
Senior Member
Diamond Hubber
dear gopal sir,
thank u very much and very kind of u.
-
5th June 2012 09:52 PM
# ADS
Circuit advertisement
-
6th June 2012, 02:11 AM
#3792
Senior Member
Veteran Hubber

Originally Posted by
joe
பம்மலார்,
கருணாநிதி என்றாலே காழ்ப்புணர்வும் வெறுப்பும் கரைபுரண்டோடும் இந்த காலகட்டத்திலும் கருணாநிதி - நடிகர் திலகம் தொடர்பான ஆவணங்களை பதிந்த உங்களை பாராட்டுகிறேன்.
டியர் ஜோ சார்,
தமிழ்நாட்டின் இலக்கியம், கலை, அரசியல் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்புகளை நல்கியவர் கலைஞர். இந்திய அரசியலில் இன்றும் அவர் ஒரு மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்கிறார். என்னைப் போன்று தாய்த்தமிழ் மேல் பற்றுள்ளவர்களுக்கு, அத்தமிழையே பெற்ற தாய்க்கும் மேலாகப் போற்றுகின்ற கலைஞர் அவர்களை எப்படிப் போற்றாமல் இருக்க முடியும். மேலும், கலைஞர் அவர்களின் அயராத உழைப்பு, அசாத்திய பொறுமை, அபார நினைவாற்றல், அரசியல் ராஜதந்திரம், இன்னும் இதுபோன்ற எத்தனையோ அவரது சிறப்பியல்புகள், எல்லாத் தலைமுறையையும் ஈர்க்கக் கூடியவை.
பெருந்தன்மைக்கும், நட்புக்கும் சிறந்த இலக்கணமாகத் திகழும் நமது நடிகர் திலகம், கலைஞர் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட உயரிய இடத்தை தனது உள்ளத்தில் அளித்திருந்தார் என்பதற்கு கலைஞரின் பவளவிழா நிகழ்வு போன்று பல நற்சான்றுகள் உள்ளன. மக்கள் திலகத்தை, நமது நடிகர் திலகம் 'அண்ணன்' என ஒரு மரியாதை கலந்த பாசத்தோடு அழைப்பார். ஆனால் கலைஞர் அவர்களை மிகவும் உரிமையோடு 'மூனாகானா' என்றே கூப்பிடுவார். கலைஞர் மீதும், எம்.ஜி.ஆர். மீதும் சிவாஜி அவர்கள் கொண்டிருந்த அடிப்படை அன்பு மற்றும் பாசம் (Basic Love & Affection) என்றுமே குறைந்திருந்ததில்லை. அந்தக் கள்ளங்கபடமற்ற குழந்தை உள்ள அன்பில் ஆரம்பித்திலிருந்தே கட்டுண்டதால்தான், எம்.ஜி.ஆர். அவர்கள் பின்னாளில் நடிகர் திலகத்தை சந்திக்கும் போதெல்லாம் கண்கள் குளமாகி உணர்ச்சிப்பிழம்பாகி விடுவார். அத்தகையதொரு கலைக்குரிசிலின் கலப்படமில்லா பாசத்தில் கலைஞரும் கட்டிப்போடப்பட்டதால்தான் இன்றும் நடிகர் திலகத்தை நினைவுகூரும்போது கலைஞர் அவர்கள் உணர்ச்சிமயமாக ஆகி விடுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நிகழ்வே இதற்கு சரியான சான்று.
மேலும் எம்.ஜி.ஆர். அவர்களும் சரி, கலைஞர் அவர்களும் சரி, "நமது நடிகர் திலகம் - இந்தியத் துணைக்கண்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும்பெருமை தேடித் தந்த - ஒரு கலை உலகப் பொக்கிஷம்" என்பதில் ஒருமித்த கருத்து உடையவர்களாகயிருந்தனர்.
தமிழ்த் திரையுலகின் திசைகளையே மாற்றியமைத்த பெரும் பெருமைக்குரியது, சிவாஜி-கலைஞர் நடிப்பு-எழுத்து கூட்டணி. நானிலம் போற்றும், நட்புக்கு இலக்கணமாகத் திகழும் இவர்களின் நட்பை, நெருக்கத்தை, நல்லுறவை பதிவு செய்தது என் பாக்கியம்.
ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை, அரசியல் அரங்க மாபெரும் சாதனையாளரை, அரசியல் உலக பீஷ்மரை, உலகத்தமிழர்களின் உள்ளங்களில் ஏதோ ஒருநல்லவிதத்தில் உயர்ந்த இடம் பெற்றிருக்கும் நமது உன்னத கலைஞரைப் பற்றி அவரது பிறந்தநாள் சமயத்தில், பாராட்டிப் பதிவுகள் அளித்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.
2006-ல், ஐந்தாவது முறையாக, தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனவுடன், தமிழக அரசு சார்பில், நமது சிங்கத்தமிழனுக்கு தமிழகத் தலைநகரில் சிலை நிறுவிய முத்தமிழறிஞருக்கு, இதுகூட செய்யாவிட்டால் நான் நன்றிமறந்தவனாவேன்.
இதில் வெறுப்புக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் ஏது?!
தங்களின் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி..!
அன்புடன்,
பம்மலார்.
-
6th June 2012, 02:27 AM
#3793
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பம்மலார்,
ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்ற தங்கை திரைக் காவியத்தின் விளம்பரத்தை இட்டு அசத்தியுள்ளீர்கள். நவமணி, பிராட்வே டைம்ஸ், மெயில், மூவிலேண்ட் போன்ற பத்திரிகைகளைப் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளவும் இவ்விளம்பரம் உதவுகிறது. மூவீலேண்ட் பத்திரிகை பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் நடத்திதாகும். அதனுடைய ஏதாவது ஒரு பிரதி தங்களிடம் இருந்தால் அட்டைப் படத்தை இங்கு வெளியிடலாம்.
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் பாராட்டுக்கு பணிவான நன்றி..!
'மூவிலேண்ட்' சினிமா சஞ்சிகை என்னிடத்தில் இருக்குமாயின், தாங்கள் குறிப்பிட்டுள்ளதை அவசியம் செய்கிறேன்..!
அன்புடன்,
பம்மலார்.
-
6th June 2012, 05:15 AM
#3794
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Mgr Raju B S
அவற்றில் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள்
2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்
4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள்
(ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)
பம்மலார் அவர்களே,
நீங்கள் போட்ட கர்ணன் பட 100 நாள் ஓடிய குறிப்பில் சென்னை ,பிரபாத் ,மற்றும் சயானி இப் படம் 100 நாட்கள் ஓடவில்லை பொய்யான தகவல் ரெண்டு அரங்கிலும் எட்டு வாரம் மட்டுமே ஓடியது ,அது மட்டுமல்லாமல் ஒம்பது அரங்கில்தான் ஐம்பது நாள் ஓடியது தவறை திருத்திகொள்ளவும் .
டியர் திரு. Mgr Raju B S,
தங்கள் வருகைக்கு நன்றி..!
பொய்யான தகவல்களையோ, சந்தேகத்துக்குட்பட்ட தகவல்களையோ, எனது பதிவுகளில், எனது அறிவுக்கு எட்டியவரை, நான் என்றுமே அளித்ததில்லை, அளிக்கப்போவதுமில்லை.
"கர்ணன்" காவியம், சென்னை 'பிரபாத்' மற்றும் 'சயானி'யில் 100 நாட்கள் ஓடவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது மிகமிகத் தவறான தகவல். ஏனென்றால், "கர்ணன்" 100வது நாள் சென்னை விளம்பரத்தை என் கண்களால் பார்த்தவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு நூலகத்தில் [இப்போது அந்த நூலகம் இல்லை], 1964-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் 'THE MAIL' ஆங்கில மாலை நாளிதழின் தொகுப்பைப் பார்க்க நேர்ந்தது. அதில் "கர்ண"னின் 100வது நாளன்று [22.4.1964 : புதன்], சென்னையில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் [சாந்தி, பிரபாத், சயானி], 100 நாட்கள் ஓடுவதாக மூன்று அரங்குகளின் சார்பாகவும் மூன்று தனித்தனி விளம்பரங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டிருந்தன. அந்த ஒவ்வொரு விளம்பரத்தின் அளவும், Book-Notebookக்கு நாம் ஒட்டும் Labelலின் அளவைவிட சற்றுகுறைவாக இருக்கும். அந்த விளம்பரத்தில் என்ன இருந்தது என்பதையும் கூறி விடுகிறேன்.
முதல் விளம்பரத்தில்,
SHANTI
Deluxe Air-Conditioned
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
இரண்டாவது விளம்பரத்தில்,
PRABHAT
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
மூன்றாவது விளம்பரத்தில்,
SAYANI
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
இத்தகைய தகவல்கள் அந்த விளம்பரங்களில் இருந்தன.
இன்னொன்று, காலை நாளிதழ்களில் வரப்போகும் திரைப்பட விளம்பரங்கள் பெரும்பாலும் மாலை நாளிதழ்களில் அதற்கு முந்தைய நாளே வந்துவிடும். ஆனால், "கர்ண"னைப் பொறுத்தவரை, அதன் 100வது நாள் விளம்பரங்கள், 'THE MAIL' மாலை நாளிதழில் 22.4.1964 அன்று மாலைதான் வெளியானது. அந்த நூலகத்தில், பார்த்தவற்றை, குறிப்புகள் எடுத்து எழுதிக் கொள்ளலாமே தவிர, நகல் (xerox) எடுக்க அனுமதிக்கமாட்டார்கள். அப்படி எனக்கு நகல் கிடைத்திருந்தால், "கர்ண"னின் வெற்றி குறித்த கேள்வியே எங்கும் எழாது.
"கர்ணன்", 22.4.1964 அன்று, சென்னையில் இந்த மூன்று திரையரங்குகளில் [சாந்தி, பிரபாத், சயானி] 100 நாட்கள் ஓடியதோடு நிறைவு. 23.4.1964 வியாழன் முதல், இந்த மூன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்:
சாந்தி - Son of Samson(English)
பிரபாத் - ஆத்மபலம்
சயானி - Mere Mehboob(Hindi).
மேலும், "கர்ணன்", 'பிரபாத்' மற்றும் 'சயானி'யில் 56 நாட்கள் மட்டுமே ஓடியதாக கூறினீர்களே..எப்படி சார்..?
"கர்ணன்", 50வது நாளைப் பூர்த்தி செய்தது 3.3.1964 செவ்வாயன்று. 100வது நாளைத் தொட்டது 22.4.1964 புதனன்று. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எந்தப் புதிய தமிழ்த் திரைப்படமும் இந்த இரு அரங்குகளில் வெளியாகவில்லை.
3.3.1964 முதல் 22.4.1964 வரை வெளியான புதிய தமிழ்த் திரைப்படங்கள்:
(சென்னையில் வெளியான அரங்குகளுடன்)
அல்லி - 5.3.1964 - கெயிட்டி, ஸ்ரீமுருகன், ராக்ஸி, ராம்
நல்வரவு - 5.3.1964 - வெலிங்டன், மஹாராஜா, கிருஷ்ணவேணி
என் கடமை - 13.3.1964 - பிளாசா, கிரௌன், புவனேஸ்வரி, சீனிவாசா
பச்சை விளக்கு - 3.4.1964 - வெலிங்டன், மஹாராணி, ராக்ஸி, நூர்ஜஹான்
சித்ராங்கி - 10.4.1964 - பாரகன், மஹாராஜா, புவனேஸ்வரி
நானும் மனிதன் தான் - 13.4.1964 - காமதேனு, மஹாலக்ஷ்மி, பிரைட்டன், ஜெயராஜ்
தவிர, எந்தவொரு வேற்றுமொழித் திரைப்படமோ அல்லது டப்பிங் படமோ கூட, இந்த காலகட்டத்தில், இந்த இரு அரங்குகளில் வெளியாகவில்லை.
"கர்ணன்", முதல் வெளியீட்டில், சென்னையில் 'சாந்தி', 'பிரபாத்', சயானி' ஆகிய மூன்று திரையரங்குகளில், ஒவ்வொன்றிலும் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. மேலும் மதுரை 'தங்க'திலும் 108 நாட்கள் ஓடி சூப்பர்ஹிட். இதுவே மிகமிகச் சரியான தகவல்.
"கர்ணன்" சென்னைப் பதிப்பு 100வது நாள் விளம்பரத்தை தேடும் எனது தொடர் முயற்சிகளில் வெற்றி கிட்டியவுடன் தாங்கள் அளித்த தகவல் தவறு என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.
மேலும், 11 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் உணமை. சில வருடங்களுக்கு முன்னர் அந்தந்த ஊர்களிலுள்ள திரையரங்குகளைத் பலமுறை தொடர்பு கொண்டு, அதற்குப்பின்னர் அவர்கள் சொன்ன தகவல் சரிதானா என்பதனைப் பலமுறை சரிபார்த்து அதன்பின் பதிவிடப்பட்ட தகவல் இது. மேலும், வேலூர் முதற்கொண்ட இன்னும் 4 ஊர்களில், "கர்ணன்" 50 நாட்கள் ஓடியுள்ளதாக தகவல் உள்ளது. அவை இன்னும் சந்தேகத்துக்குட்பட்டவையாக இருப்பதால், வெளியிடப்படவில்லை.
தாங்கள் அளித்த தவறான தகவல்களைத் திருத்திக் கொள்ளவும்.
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 6th June 2012 at 05:34 AM.
pammalar
-
6th June 2012, 05:53 AM
#3795
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
சத்யம்
[6.5.1976 - 6.5.2012] : 37வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : மதி ஒளி : 1.5.1976

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
6th June 2012, 05:55 AM
#3796
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே,
கலைஞரின் பிறந்தநாள் பதிவுகளின் முத்தாய்ப்பாக, நடிகர்திலகத்தின் உணர்ச்சி பொங்கும் உரை கண்களில் நீரை வரவழைத்தது. அரசியல் எல்லைகளைத்தாண்டி எப்பேற்பட்ட நட்புணர்வு அவர்களிடையே இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
அதே சமயம் ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல, அறுபதுகளின்போது (குறிப்பாக 67 தேர்தலின்போது), தங்களிடம் இருந்த 'இன்னொரு சக்தி'யின் உதவியுடன் நமது நடிகர்திலகம் எப்படியெல்லாம் கேலி செய்யப்பட்டார், அவமானத்துக்குள்ளாக்கப் பட்டார் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. அந்த இன்னொரு சக்தியே அவருக்கு சத்ருவான போதுதான் உண்மையான நட்பின் மகிமை அவர்களுக்குப் புரிந்தது. அதே சமயம் அந்த இன்னொரு சக்தியுடன் நடிகர்திலகம் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய நேர்ந்ததெல்லாம், தான் சார்ந்திருந்த கட்சிக்காக சகித்துக்கொண்ட காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறில்லை. அதைவிட இவர் தனிக்கட்சி துவங்கி அவரது துணைவிக்கே துணையாகப்போனது மகா பெரிய கொடுமை.
'தங்கை' படத்தின் விளம்பரங்கள் அருமை. குமுதம் பத்திரிகைக்கு விளம்பரத்திலேயே கொடுத்த சூடு, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று விமர்சிப்போருக்கு நல்ல பாடம்.
'தியாகம்' 100வது நாள் விளம்பரத்தில் விகடன், இதயம் பத்திரிகைகளுக்கு பாலாஜி கொடுத்த சாட்டையடி நினைவிருக்கிறது. இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது தங்கையிலேயே அதைத் துவங்கி விட்டார் என்று தெரிகிறது.
அரிய ஆவணங்களை அள்ளி வழங்கியமைக்கு மிக்க நன்றி.
தங்களின் பாராட்டுக்கும், உணர்வுபூர்வமான பதிவுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள், mr_karthik..!
-
6th June 2012, 05:57 AM
#3797
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்,
ஆக்ஷன் & செண்டிமெண்ட் களேபரம் 'தங்கை' விளம்பரப் பதிவுகள் தங்கம். தங்கைக்கான குமுதம் விமர்சனம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. என்ன நினைத்து அந்த விமர்சனம் எழுதப்பட்டது? அந்தப் படத்தை இதுவரை யாரும் குறை கூறி நான் கேட்டதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் தலைவர் ஆக்ஷன் மூவிகளில் நடிக்க அடித்தளமிட்டு பின்னாட்களில் தான் ஆக்டிங் கிங் மட்டுமல்ல ஆக்ஷனிலும் கிங்தான் என்று நிரூபிக்க வைத்த சூப்பர் டூப்பர் படம் அது.
(குறிப்பு: விரைவில் 'தங்கை' திரைப்படத்தில் தலைவர் தூள்பரத்திய ஸ்டைலான ஒரு சண்டைக்காட்சியை வீடியோவாக நம் அன்பு நேயர்களுக்காக பதிவிடுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பதிவுகள் தொடர்ச்சியாக நடிகர் திலகம் கலைஞரைப் பற்றி ஆற்றிய உணர்வுபூர்வமான பாராட்டுரை ஒரு நிஜமான பாசவுரை. படித்து முடித்ததும் கண்கள் பனித்தன. ஆரம்பத்தில் கலைஞரை அவர் என்று குறிப்பிட்ட நடிகர் திலகம் பின்னுரையின் போது நட்பின் மிகுதியில் கலைஞரை உன், உன்னுடைய என்ற ஒருமை வார்த்தையில் விளித்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நட்பின் ஆழத்தை நன்கு உணர்த்துகிறது.
பதிவுத்திலகமான தங்களுக்கு பலகோடி நன்றிகள்.
தங்களின் பாராட்டுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள், வாசு சார்..!
"தங்கை" ஆக்ஷ்னைக் காண ஆவல் மேலிடுகிறது....!
-
6th June 2012, 05:59 AM
#3798
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
திரு எம்.ஜி.ஆர். ராஜு அவர்களே,
யாருடைய புள்ளி விவரத்தில் குறை காண்கிறீர்கள்..?.
ஒரு படம் ஒரு தியேட்டரில் எந்த தேதியில் திரையிடப்பட்டது, எந்த தேதி வரை எத்தனை நாள் அங்கு ஓடியது, அந்தப்படம் தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்ட மறுநாள் அங்கு எந்தப்படம் திரையிடப்பட்டது என்ற புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவரிடமா..?.
கர்ணன் 100-வது நாள் விளம்பரத்தைப் பதிவிடும்வரை (இப்போதைய ரீ-ரிலீஸ் 100 நாள் விளம்பரத்தை அல்ல, 1964-ம் ஆண்டு விளம்பரத்தை பதிவிடும்வரை) இப்படி புலம்பிக்கொண்டுதான் இருப்பீர்கள்.
டியர் mr_karthik,
தாங்கள் என்மேல் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கைக்கு எனது இருகரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றிகள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
6th June 2012, 06:01 AM
#3799
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
திரு எம்.ஜி.ஆர். ராஜு அவர்களே
திரிக்கு புது வரவான தங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.
முதல் பதிவையே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அளித்திருக்கிறீர்கள். பொய் மூட்டையையும் , புளுகு மூட்டையையும் அவிழ்த்துவிட அவசியம் பம்மலாருக்கு இல்லை. உண்மையான புள்ளி விவரங்களை தருவதற்கு பம்மலார் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகள் தங்களைப் போன்றவர்களுக்கு தெரிய நியாயமில்லைதான். பொய் புரட்டிற்கு நடிகர் திலகம் திரியில் வேலையுமில்லை. அதற்கென்று சில பேர் வேறு சில திரிகளில் முழுநேர வேலையாகவே அதை செய்து வருகிறார்கள். உங்களிடம் ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள். தயவு செய்து வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதாதீர்கள்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் என்மேல் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கைக்கு எனது இருகரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றிகள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
6th June 2012, 06:42 AM
#3800
Junior Member
Newbie Hubber
பம்மலார் சார்,
நீங்கள் ஒரு சேவையாக செய்து வரும் தொண்டினை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. இது ஆத்ம திருப்திக்காக நீங்கள் செய்து வரும் அளப்பரிய தொண்டு. திருவள்ளுவர்,கம்பன், பாரதி வரிசையில் வைத்து போற்றத்தக்க ஒரு மாபெரும் மனிதருக்கு ,அவரின் சரித்திரத்தை ஆதாரத்துடன் பதிவு செய்யும் தங்கள் மேன்மையை ,குறைக்க முயலும் யாரும் ,தங்களையே தரம் தாழ்த்தி கொள்கின்றனர். தமிழ் இனத்தை இந்த இழிவுகள்தான் தாழ்த்தி ,நமக்கு நாதியற்று ,அழிவுகளை அளித்து வருகிறது.இன்று இந்தியாவிலே அனாதையான மாநிலம் தமிழகம்.(சுற்றி நட்பு இல்லாத மாநிலங்கள்).
இலங்கை கதை , எல்லோரும் அறிந்த சோகம்.நம் சரித்திர புருஷர்களை நாம் போற்றி ,நம் தமிழ் பற்றை உலகம் உணர செய்ய வேண்டாமா?
இலக்கியம்,கலை,அரசியல்,தொண்டு, எல்லாவற்றிலும் நமது உன்னதங்களை போற்றி பெருமை கொண்டால்தான் நமக்கு மீட்சி உண்டு.நாம்தான் மொழியையே மறந்தவர்கள் ஆயிற்றே?
நீங்கள் உங்கள் உன்னத பணியை தொடருங்கள்.நாங்கள் எல்லாம் உங்கள் பின்னால்.
Bookmarks