-
6th June 2012, 06:42 AM
#11
Junior Member
Newbie Hubber
பம்மலார் சார்,
நீங்கள் ஒரு சேவையாக செய்து வரும் தொண்டினை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. இது ஆத்ம திருப்திக்காக நீங்கள் செய்து வரும் அளப்பரிய தொண்டு. திருவள்ளுவர்,கம்பன், பாரதி வரிசையில் வைத்து போற்றத்தக்க ஒரு மாபெரும் மனிதருக்கு ,அவரின் சரித்திரத்தை ஆதாரத்துடன் பதிவு செய்யும் தங்கள் மேன்மையை ,குறைக்க முயலும் யாரும் ,தங்களையே தரம் தாழ்த்தி கொள்கின்றனர். தமிழ் இனத்தை இந்த இழிவுகள்தான் தாழ்த்தி ,நமக்கு நாதியற்று ,அழிவுகளை அளித்து வருகிறது.இன்று இந்தியாவிலே அனாதையான மாநிலம் தமிழகம்.(சுற்றி நட்பு இல்லாத மாநிலங்கள்).
இலங்கை கதை , எல்லோரும் அறிந்த சோகம்.நம் சரித்திர புருஷர்களை நாம் போற்றி ,நம் தமிழ் பற்றை உலகம் உணர செய்ய வேண்டாமா?
இலக்கியம்,கலை,அரசியல்,தொண்டு, எல்லாவற்றிலும் நமது உன்னதங்களை போற்றி பெருமை கொண்டால்தான் நமக்கு மீட்சி உண்டு.நாம்தான் மொழியையே மறந்தவர்கள் ஆயிற்றே?
நீங்கள் உங்கள் உன்னத பணியை தொடருங்கள்.நாங்கள் எல்லாம் உங்கள் பின்னால்.
-
6th June 2012 06:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks