-
10th September 2012, 06:07 AM
#1141
Senior Member
Veteran Hubber
-
10th September 2012 06:07 AM
# ADS
Circuit advertisement
-
10th September 2012, 03:20 PM
#1142
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
பாலும் பழமும், பாவ மன்னிப்பு, சத்யம், ரிலீஸ், 100வது நாள் விளம்பரங்கள், பேசும் பட பக்கங்கள் என ஆவண அணி வகுப்பு அட்டகாசம். தங்களைப் பாராட்ட வேண்டும் ஆனால் எப்படி, புதியதாக ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு அதில் விற்பன்னராகி அதில் கவிதை எழுதும் அளவிற்குத் தேர்ச்சி பெற்று , அதன் பின் அந்த மொழியில் தங்களைப் பற்றிப் பாராட்டு ஒரு கவிதை எழுத வேண்டும் என்பதே ஆசை. எப்போது கற்பது, எப்போது எழுதுவது, ... காரணம் தங்களைப் பாராட்டத் தமிழில் எனக்கு வார்த்தையோ வாக்கியமோ நினைவுக்கு வரவில்லை.
தெரிந்த ஒரு வார்த்தை ... நன்றி ..
தெரிந்த மற்றோர் வார்த்தை - பாராட்டு ...
தங்களுக்கு அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2012, 03:23 PM
#1143
Senior Member
Seasoned Hubber
1973ல் சென்னை பிளாசாவில் பொன்னூஞ்சல் திரையிடப் பட்டிருந்த போது அந்த திரையரங்கின் நுழைவாயில் சூரியகாந்தி திரைப்படத்தில் இடம் பெறும். அதற்கு எதிர்த்தாற்போல் பொன் வண்டு பேனர் வைக்கப் பட்டிருந்தது. அதனுடைய நிழற்படங்கள் நம் பார்வைக்காக.

நிழற்படம் சற்று மங்கலாகத் தோன்றுகிறது. முடிந்த வரை சரி செய்யப் பட்டுள்ளது. அதில் நாம் காணும் படத்தில் நுழைவாயிலின் வலப் புறத்தில் சிலர் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அங்கே தான் அந்தப் பெரியவர் அமர்ந்திருப்பார். அவரிடம் தான் அனைத்து நடிகர் நடிகைகளின் ஸ்டில்களும் கிடைக்கும்.
பிளாசா திரையரங்கினுள் வைக்கப் பட்டிருந்த பொன்னூஞ்சல் பட போஸ்டர்

பொன் வண்டு பேனர்
Last edited by RAGHAVENDRA; 10th September 2012 at 03:26 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2012, 04:30 PM
#1144
Senior Member
Veteran Hubber
அருமைச்சகோதரர் பம்மலார் அவர்களைப்பற்றி, நமது ராகவேந்தர் சார் அவர்கள் முன்மொழிந்த பாராட்டுக்களை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வழிமொழிகிறேன்.
காரணம், அவர் சொல்லியிருக்கும் அனைத்தும் உண்மையைத்தவிர வேறில்லை.
பாவ மன்னிப்பு ஆவணப்புதையல்....
'சத்யம்' பேசும்படம் இதழின் நிழற்படத்தொகுப்பு....
நடிகர்திலகத்தின் நாடக ஈடுபாடு பற்றியும், அதற்காக திரைப்பட படப்பிடிப்புக்களில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் பற்றியும் கலாநிகேதன் பாலு அவர்கள் பொம்மையில் எழுதிய கட்டுரையின் ஒரிஜினல் வடிவம்....
என அசத்துகிறார். அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தவிர எதைத்தரப்போகிறோம்?. எதைத்தந்தாலும் ஈடாகாது என்பதே உண்மை.
(இங்கே அவர் தந்துள்ள பாவமன்னிப்பு மற்றும் சத்யம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. முதலாவது அண்ணனோடு 'எங்க அண்ணி' ஜோடி சேர்ந்த முதல் படம். மற்றது அவ்விருவரும் ஜோடியாக நடித்த கடைசிப்படம். இவற்றுக்கிடையே இந்த ஜோடி நிகழ்த்திய பிரளயம்தான் எத்த்கையது. நேற்றிரவு 'முரசு' தொலைக்காட்சியில் 'ஓகோகோ ஓடும் எண்ணங்களே' பாடலையும், 'சொல்லடா வாய்திறந்து அம்மா என்று' பாடலையும் பார்த்தபோது அவ்விருவரின் கெமிஸ்ட்ரியைப்பார்த்து கண்களில் நீர் கோர்த்தது)
-
10th September 2012, 05:33 PM
#1145
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார்,
அவ்வப்போது எதையாவது கொளுத்திப்போட்டு பழைய நினைவுகளில் மூழ்கடித்து விடுகிறீர்கள். இப்போது லேட்டஸ்ட் விஷயம் பிளாசா தியேட்டர், பொன்னூஞ்சல் பேனர்கள், வாசலில் அமர்ந்திருக்கும் பெரியவர்.
பேனருக்குப்ப்பின்னே தெரியும் 'சர்ச்'சுக்குப்பின்னால்தான் தியேட்டர். மிக நீண்ட நுழைவாயில். எல்லிஸ் ரோட்டிலிருந்து வருபவர்களுக்கு ஏதோ டிக்கட் கவுண்ட்டர் நுழைவாயில்போல இரண்டு சிறிய வாசல்கள். தியேட்டருக்கு வெளியிலேயே கவுண்ட்டர்கள் அமைந்திருந்ததால், முன்கூட்டியே கவுண்ட்டர்களின் கியூவில் போய் நின்று கொள்ளும் வசதி, தியேட்டருக்கு எதிரே விசாலாமான கிரவுண்ட் என்று பிளாசா தியேட்டரின் அமைப்பே ஒரு தனிரகம். எப்போது உள்ளே நுழைந்தாலும் அந்த முதியவரைத் தாண்டி சட்டென்று போய்விட முடியாதபடி அபூர்வ நிழற்படங்களை பார்வைக்கு வைத்து நம்மை சுண்டியிழுப்பார். ஒரு கணமேனும் நின்று பார்வையிட்டுச் செல்வது, தேவைப்பட்டால் வாங்கிக்கொள்வது வழக்கம்.
பிளாசா தியேட்டரில் ஒரு குறைபாடு என்னவென்றால், அந்தத்தியேட்டரில் எத்தனையோ நடிகர்திலகத்தின் படங்கள், மக்கள்திலகத்தின் படங்கள், மற்றவர்கள் படங்கள் சிலவும் 100 நாட்களுக்குமேல் ஓடி வெற்றியடைந்திருதாலும், அவற்றின் ஷீல்டுகளை மக்களின் பார்வைக்கு வைக்க மாட்டார்கள். அந்த வகையில் தேவி காம்பெளெக்ஸ் தியேட்டர்களை அடித்துக்கொள்ள முடியாது. (சாந்தியிலும் அவை இருந்தாலும் அங்கு முதல்வகுப்புக்கு பால்கனிக்குச் செல்வோர் மட்டுமே காண முடியும்).
தேவி காம்ப்ளெக்ஸில் நான்கு தியேட்டர்களிலுமே தனித்தனி கண்ணாடிக்கதவிட்ட ஷீல்டு கேலரிகள். அரங்குகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து படங்களின் ஷீல்டுகளும் எல்லா வகுப்பு ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் அழகுற அடுக்கி வைத்திருப்பார்கள். (இப்போதும் இருக்கிறதா?. நான் பார்த்து நாளாயிற்று).
அப்போதெல்லாம் திரைப்படங்களில் மவுண்ட் ரோடைக்காட்டும்போது, அங்கேயுள்ள தியேட்டர்களிலும் மற்றும் பொதுஇடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களையும் கட்-அவுட்களையும் காண்பிப்பது வழக்கம். பட்டிக்காடா பட்டணமாவில் வரும் 'ராஜா' கட்-அவுட் ரொம்ப பேமஸ். சிலநாட்களுக்குமுன் சகோதரர் வாசுதேவன் அவர்கள் இங்கு பதித்திருந்தார். முத்துராமன் நடித்த 'கண்ணம்மா' வண்ணப்படத்தின் டைட்டிலில் மவுண்ட்ரோட்டைக் காண்பிக்கும்போது குளோப் தியேட்டர் வாசலில் எம்.ஜி.ஆரின் 'நான் ஏன் பிறந்தேன்' கட் அவுட், பிளாசா தியேட்டர் வாசலில் மு.க.முத்துவின் 'பிள்ளையோ பிள்ளை' கட் அவுட், சாந்தியில் தலைவரின் 'பட்டிக்காடா பட்டணமா' கட் அவுட் ஆகியவற்றைக்காணலாம். நாணல் படத்தில் வரும் 'விண்ணுக்கு மேலாடை' பாடலின் இடையிசையில் காரில் பயணிக்கும் கேமரா, இடையிசை முடியும்போது அப்படியே திரும்பி, சாந்தி வாயிலில் இருக்கும் 'திருவிளையாடல்' பேனரில் போய் நிற்பதாகக் காண்பித்திருப்பார் கே.பாலச்சந்தர். அந்தக்காட்சிக்காகவே அப்பாடலின் அந்தக்கட்டம் வரும்போது கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பேன்.
நான் முதலிலேயே சொல்லவில்லையா, எதையாவது கொளுத்திப்போட்டு விட்டு புலம்ப விட்டுவிடுவீர்களென்று.
-
10th September 2012, 05:49 PM
#1146
Junior Member
Senior Hubber

Originally Posted by
mr_karthik
அருமைச்சகோதரர் பம்மலார் அவர்களைப்பற்றி, நமது ராகவேந்தர் சார் அவர்கள் முன்மொழிந்த பாராட்டுக்களை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வழிமொழிகிறேன்.
காரணம், அவர் சொல்லியிருக்கும் அனைத்தும் உண்மையைத்தவிர வேறில்லை.
பாவ மன்னிப்பு ஆவணப்புதையல்....
'சத்யம்' பேசும்படம் இதழின் நிழற்படத்தொகுப்பு....
நடிகர்திலகத்தின் நாடக ஈடுபாடு பற்றியும், அதற்காக திரைப்பட படப்பிடிப்புக்களில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் பற்றியும் கலாநிகேதன் பாலு அவர்கள் பொம்மையில் எழுதிய கட்டுரையின் ஒரிஜினல் வடிவம்....
என அசத்துகிறார். அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தவிர எதைத்தரப்போகிறோம்?. எதைத்தந்தாலும் ஈடாகாது என்பதே உண்மை.
(இங்கே அவர் தந்துள்ள பாவமன்னிப்பு மற்றும் சத்யம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. முதலாவது அண்ணனோடு 'எங்க அண்ணி' ஜோடி சேர்ந்த முதல் படம். மற்றது அவ்விருவரும் ஜோடியாக நடித்த கடைசிப்படம். இவற்றுக்கிடையே இந்த ஜோடி நிகழ்த்திய பிரளயம்தான் எத்த்கையது. நேற்றிரவு 'முரசு' தொலைக்காட்சியில் 'ஓகோகோ ஓடும் எண்ணங்களே' பாடலையும், 'சொல்லடா வாய்திறந்து அம்மா என்று' பாடலையும் பார்த்தபோது அவ்விருவரின் கெமிஸ்ட்ரியைப்பார்த்து கண்களில் நீர் கோர்த்தது)
Nanbar kartik has reminded me about neelavanam. my mind rolls back to neelavanam release day as usual our house we send our maid to stand in ques by 1oam to what ever movie we want to go and later on we jion . we had a b ig team of peole who loves watching on the first day.
this time unlike palum paamum we could not get tikets at MAHARANI theatre. i was more tense time is moving fast as the song oadum ennangale was out earlier mounting tension started suddenly our maid was disappearing from the scene.
inside the thetre sivaji release has just going, lot of allaparais with wehisles heard outside.
there comes our maid with a tiket f saying thambi will be very upset if he doen't see movie firstday. she somehow manged to get one for me by approahing canteen people who are known to her.
marakka mudiyada suvaiyana anubhavam. thanks to LAKSHMY an honest person we have come across.
Last edited by Subramaniam Ramajayam; 10th September 2012 at 06:48 PM.
-
11th September 2012, 02:40 AM
#1147
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
பழுத்த-அனுபவம் தோய்ந்த மூத்த ரசிகராகிய தங்களின் இதயபூர்வமான-உச்சமான பாராட்டுதல்களையெல்லாம் அடியேன் பெறுவது என் வாழ்வின் பேறு..! தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..!
தாங்கள் பதித்த "பொன்னூஞ்சல்" பேனர், "பொன்னூஞ்சல்" போஸ்டர், "பொன்வண்டு" பேனர் மூன்றும் முக்கனி..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
11th September 2012, 02:52 AM
#1148
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
அடியேனின் ஆவணப்பதிவுகளைப் பாராட்டி, ஒவ்வொரு முறையும் தாங்கள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வழங்கும் உச்சமான-உயர்வான பாராட்டுக்களுக்கு நான் எவ்வளவு நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்தாலும் போதுமானதாக இருக்காது. இருப்பினும், தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுக்கு என்னுடைய இதயம் நிறைந்த நன்றிகள்..!
"பாவமன்னிப்பு" விளம்பரத்தையும், "சத்யம்" நிழற்படங்களையும் பதிவுகளாக அடியேன் நேற்று அளிக்கும்போது, பேரழகி தேவிகா அவர்களைக் குறிப்பிட்டு, இரண்டுக்கும் முடிச்சுபோட்டு தங்களிடமிருந்து நிச்சயமாக ஒரு பதில் பதிவு இன்று வரும் என்று நினைத்திருந்தேன். அப்படியே நடந்துவிட்டது. நமக்குள் என்னே ஒரு டெலிபதி எஃபெக்ட் சார்..!
'நமது ராகவேந்திரன் சார் எதையாவது கொளுத்திப்போட்டுவிட்டு புலம்பவைத்து விடுகிறார்' என்று எழுதியிருந்தீர்கள்..! எனக்கு உடனே நமது சிவாஜிபெருமான் புலவராக தருமியிடம் பேசும் "திருவிளையாடல்" ['நீ புலம்பியது என் காதில் விழுந்தது]' டயலாக்தான் ஞாபகத்திற்கு வந்தது. அதுசரி, நீங்கள் புலம்பினால் தகவல்களெல்லாம் அல்லவா கொத்துகொத்தாக வந்து விழுகின்றது. எந்தப் படத்தினுடைய எந்தக் காட்சியில் எந்தப் படத்தின் பேனர் வரும் என தங்கள் பதிவில் ஒரு reference guideஐயே அல்லவா தந்துவிட்டீர்கள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
11th September 2012, 05:03 AM
#1149
Senior Member
Veteran Hubber
முத்தமிழ் வித்தகர் உதிர்ந்த முத்துக்கள் : 3
பொக்கிஷாதி பொக்கிஷம்
நடிப்புக்கலையில் என்றென்றும் தனக்குள்ள அசைக்கமுடியாத ஈடுபாடு குறித்து....
'பூ முகம்' இதழ் : 1987

பக்தியுடன்,
பம்மலார்.
-
11th September 2012, 05:26 AM
#1150
Senior Member
Veteran Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
நமது நடிகர் திலகம் புகழ்பாடுகின்ற சுவர் விளம்பரங்களைக் காண்பதென்பது மிகமிக அரிதாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், நடிகர் திலகத்தின் 85வது ஜெயந்தி விழாவுக்காக, மலைக்கோட்டை மாநகரின் முக்கிய பகுதிகளிலுள்ள சுவர்களில், திருச்சி சிவாஜி பேரவை சார்பில், ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதாக தீட்டப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரம், அறுசுவை விருந்தாகத் திருப்தியளித்தது. விழா அழைப்பிதழும் வழக்கம்போல் கனஜோர்..! திருச்சி சிவாஜி பேரவையைப் பொறுத்தமட்டில், 'A single man can make a difference' என்கின்ற கூற்று மிகச் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்..! அந்த 'சிங்கிள் மேன்' நமது அன்புச்சகோதரர் திரு. எஸ்.அண்ணாதுரை அவர்களைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்..! திருச்சி சிவாஜி பேரவையின் செயலாளராக இதுவரை, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று சிவாஜி ஜெயந்தி விழாக்களை, திரு. அண்ணாதுரை அவர்கள் மிகமிக வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார். தற்பொழுது நான்காவது ஆண்டு ஜெயந்தி விழாவையும் மிகச் சிறப்பாக நடத்த பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இறைவன் திருவருளாலும், நமது இதயதெய்வத்தின் அருளாசிகளாலும், திருச்சி சிவாஜி பேரவை செயலாளர் அண்ணாதுரை அவர்களின் பெருமுயற்சிகளாலும், அவருக்கு பக்கபலமாக இருந்து ஊக்கமளிக்கும் அன்புள்ளங்களின் ஒத்துழைப்பாலும், வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி விழா நிச்சயம் சிறப்பாக நடைபெறும். அதற்கு என் சார்பிலும், நமது நடிகர் திலகம் திரியின் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks