-
10th September 2012, 04:30 PM
#11
Senior Member
Veteran Hubber
அருமைச்சகோதரர் பம்மலார் அவர்களைப்பற்றி, நமது ராகவேந்தர் சார் அவர்கள் முன்மொழிந்த பாராட்டுக்களை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வழிமொழிகிறேன்.
காரணம், அவர் சொல்லியிருக்கும் அனைத்தும் உண்மையைத்தவிர வேறில்லை.
பாவ மன்னிப்பு ஆவணப்புதையல்....
'சத்யம்' பேசும்படம் இதழின் நிழற்படத்தொகுப்பு....
நடிகர்திலகத்தின் நாடக ஈடுபாடு பற்றியும், அதற்காக திரைப்பட படப்பிடிப்புக்களில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் பற்றியும் கலாநிகேதன் பாலு அவர்கள் பொம்மையில் எழுதிய கட்டுரையின் ஒரிஜினல் வடிவம்....
என அசத்துகிறார். அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தவிர எதைத்தரப்போகிறோம்?. எதைத்தந்தாலும் ஈடாகாது என்பதே உண்மை.
(இங்கே அவர் தந்துள்ள பாவமன்னிப்பு மற்றும் சத்யம் படங்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. முதலாவது அண்ணனோடு 'எங்க அண்ணி' ஜோடி சேர்ந்த முதல் படம். மற்றது அவ்விருவரும் ஜோடியாக நடித்த கடைசிப்படம். இவற்றுக்கிடையே இந்த ஜோடி நிகழ்த்திய பிரளயம்தான் எத்த்கையது. நேற்றிரவு 'முரசு' தொலைக்காட்சியில் 'ஓகோகோ ஓடும் எண்ணங்களே' பாடலையும், 'சொல்லடா வாய்திறந்து அம்மா என்று' பாடலையும் பார்த்தபோது அவ்விருவரின் கெமிஸ்ட்ரியைப்பார்த்து கண்களில் நீர் கோர்த்தது)
-
10th September 2012 04:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks