Page 166 of 305 FirstFirst ... 66116156164165166167168176216266 ... LastLast
Results 1,651 to 1,660 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1651
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள கோபால் சார்,

    இது நடிகர்திலகத்தின் புகழ்பாடும் திரி என்பதால் இங்கு இசையமைப்பாளர்களைப்பற்றிய விவாதம் தேவையில்லையென்றாலும் நீங்கள் துவக்கிய விவாததத்துக்கு ஒரு சிறு விளக்க்மேனும் தந்து முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நீங்கள்தான் அளவுக்கு அதிகமாக கே.வி.மகாதேவன் மாமாவுக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவரது சாதனைகளனைத்தும் புராணப்படங்களில்தான். சமூகப்படங்களில் அவரது வெற்றியென்பது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வசந்தமாளிகை வெற்றிகள் அப்படித்தான்.

    விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடி பிரிந்தபின், யாரால் அந்த ஜோடி முன்பு ஸ்திரம் பெற்றிருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியானது. பிரிந்தபின் மெல்லிசை மன்னர் வருடத்துக்கு 20 படங்கள் கொடுக்க, ராமமூர்த்தியோ தனியாக மொத்தமே 26 படங்களைத்தான் கொடுத்துள்ளார். பிரிந்தபின் தனியாக நின்ற மெல்லிசை மன்னரைக்கூட மாமாவால் வீழ்த்த முடியவில்லை. அதிலும் கே.வி.எம். அறுபதுகளின் துவக்கத்தில் சின்னப்பா தேவர் படங்களுக்கு இசையமைத்த படங்களில், படத்தின் டைட்டிலை மாற்றிவிட்டால் எந்தப்பாடல் எந்தப்படம் என்று புரியாது அந்த அளவுக்கு வெரைட்டி இல்லாமல் ஒரே மாதிரியாக அடித்துத் தள்ளினார்.

    தனியே பிரிந்த பின் மெல்லிசை மன்னர் கொடுத்த ஊட்டிவரை உறவு, இருமலர்கள், அன்பே வா, ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில், உயர்ந்த மனிதன், செல்வமகள், சிவந்த மண், நம்நாடு, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், காவியத்தலைவி (எழுபதுகளில் வந்த அனைத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படப்பாடல்களும்) அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மனமத லீலை, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான பாடல்களைக்கேட்டபின்னும், "த்னியே வந்தபின் எம்.எஸ்.வி. ஜொலிக்கவில்லை" என்று நீங்கள் சொல்லியிருப்பதை இந்த ஆண்டின் சிறந்த ஜோக்காக எடுத்துக்கொள்கிறேன்.

    மேற்கொண்டு விவாதிப்பதென்றால் மெல்லிசை மன்னர் திரிக்குப் போகலாம். இங்கே விவாதித்து நடிகர்திலகத்துக்கு நாம் இடைஞ்சல் தர வேண்டாம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1652
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள கோபால் சார்,

    இது நடிகர்திலகத்தின் புகழ்பாடும் திரி என்பதால் இங்கு இசையமைப்பாளர்களைப்பற்றிய விவாதம் தேவையில்லையென்றாலும் நீங்கள் துவக்கிய விவாததத்துக்கு ஒரு சிறு விளக்க்மேனும் தந்து முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நீங்கள்தான் அளவுக்கு அதிகமாக கே.வி.மகாதேவன் மாமாவுக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவரது சாதனைகளனைத்தும் புராணப்படங்களில்தான். சமூகப்படங்களில் அவரது வெற்றியென்பது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வசந்தமாளிகை வெற்றிகள் அப்படித்தான்.

    விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடி பிரிந்தபின், யாரால் அந்த ஜோடி முன்பு ஸ்திரம் பெற்றிருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியானது. பிரிந்தபின் மெல்லிசை மன்னர் வருடத்துக்கு 20 படங்கள் கொடுக்க, ராமமூர்த்தியோ தனியாக மொத்தமே 26 படங்களைத்தான் கொடுத்துள்ளார். பிரிந்தபின் தனியாக நின்ற மெல்லிசை மன்னரைக்கூட மாமாவால் வீழ்த்த முடியவில்லை. அதிலும் கே.வி.எம். அறுபதுகளின் துவக்கத்தில் சின்னப்பா தேவர் படங்களுக்கு இசையமைத்த படங்களில், படத்தின் டைட்டிலை மாற்றிவிட்டால் எந்தப்பாடல் எந்தப்படம் என்று புரியாது அந்த அளவுக்கு வெரைட்டி இல்லாமல் ஒரே மாதிரியாக அடித்துத் தள்ளினார்.

    தனியே பிரிந்த பின் மெல்லிசை மன்னர் கொடுத்த ஊட்டிவரை உறவு, இருமலர்கள், அன்பே வா, ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில், உயர்ந்த மனிதன், செல்வமகள், சிவந்த மண், நம்நாடு, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், காவியத்தலைவி (எழுபதுகளில் வந்த அனைத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படப்பாடல்களும்) அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மனமத லீலை, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான பாடல்களைக்கேட்டபின்னும், "த்னியே வந்தபின் எம்.எஸ்.வி. ஜொலிக்கவில்லை" என்று நீங்கள் சொல்லியிருப்பதை இந்த ஆண்டின் சிறந்த ஜோக்காக எடுத்துக்கொள்கிறேன்.

    மேற்கொண்டு விவாதிப்பதென்றால் மெல்லிசை மன்னர் திரிக்குப் போகலாம். இங்கே விவாதித்து நடிகர்திலகத்துக்கு நாம் இடைஞ்சல் தர வேண்டாம்.
    விஸ்வநாதன் சார் தனியாக இசையமைத்த மற்ற படங்கள் (எனது பிடித்தம்)-1965 -1975 .
    கலங்கரை விளக்கம்(அனைத்தும் ),அன்பே வா(அனைத்தும் ),நாடோடி(அனைத்தும்),ரகசிய போலீஸ்(அனைத்தும்),குடியிருந்த கோவில்(அனைத்தும்),சந்திரோதயம்(அனைத்தும்),பறக் கும் பாவை(அனைத்தும்)காவல் காரன்(நினைத்தேன் வந்தாய்),செல்வ மகள்(அனைத்தும்),நிமிர்ந்து நில்(அனைத்தும்),குடியிருந்த கோவில்(அனைத்தும்), கண்ணன் என் காதலன்(பாடுவோர்,மின்மினியை),நான் ஆணையிட்டால்(கொடுக்க கொடுக்க),ஒளி விளக்கு( நாங்க புதுசா,நான் கண்ட,மாம்பழ),நம் நாடு(ஆடை முழுதும்),காவிய தலைவி(அனைத்தும்),குமரி கோட்டம்(நாம் ஒருவரை,எங்கே அவள்),உலகம் சுற்றும் வாலிபன்(அவள் ஒரு,நிலவு ஒரு),அவளுக்கு என்று ஓர் மனம்(அனைத்தும்),எங்கள் தங்கம்(நான் அளவோடு,தங்க பதக்கத்தின்),தேடி வந்த மாப்பிள்ளை(நாலு பக்கம்,சொர்கத்தை),உரிமை குரல்(அனைத்தும்).அபூர்வ ராகங்கள்(அனைத்தும்)
    ராமமூர்த்தி சார் தனியாக எனது பிடித்தம்.
    தேன் மழை(கல்யாண, விழியால்,என்னடி ),நான்(அனைத்தும்),மறக்க முடியுமா(அனைத்தும்),தங்க சுரங்கம்(அனைத்தும்),எங்களுக்கும் காதல் வரும்(கள்ள பார்வை).காதல் ஜோதி(சாட்டை, உன்மேலே),மெட்ராஸ் டு பாண்டிசேரி (என்ன என்ன, ஹாய் கன்னியர்க்கு ,பயணம்),மூன்றெழுத்து(காதலன் வந்தான், ஆடு)
    Last edited by Gopal.s; 12th October 2012 at 06:13 AM.

  4. #1653
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    As written by Mr.Partha sarathy,
    (Quote)
    திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
    Unquote

    சாரதி சார்,
    நீங்கள் தகுதிக்கு மீறியே விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவர்கள் trend -setter என்பது தவறான தகவல்.1952 இல் சுப்பராமன் மறைவுக்கு பிறகு ஒன்று சேர்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி உருப்படியாக 52 - 60 இல் தந்த படங்கள் புதையல்,பதிபக்தி, சிவகங்கை சீமை,பாகபிரிவினை, மன்னாதி மன்னன்,மாலையிட்ட மங்கை ஆகியவை மட்டுமே. நீங்கள் சொன்ன trend -setter பட்டத்துக்கு தகுதியானவர்கள் சுப்பராமன்,ஜி.,ராமநாதன், ஏ.எம்.ராஜா,மகாதேவன் ஆகியோரே.இவர்கள்தான் சரியான விகிதத்தில் கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டேர்ன்,folk கலந்து தமிழ் பட மெல்லிசையை தூக்கி பிடித்த நால்- வேந்தர்கள்.(trend -setters )
    ஆனால், 60 களில்,மெல்லிசை மன்னர்கள் ,வடக்கில் சங்கர்-ஜெய்கிஷன்,நவஷாத்,நய்யார்,பர்மன்,,சலீல் சௌதரி,மதன் மோகன்,லட்சுமி-பியாரி இவர்கள் அத்தனை பேருடைய சாதனையையும் மிஞ்சி, அத்தனை variety கொடுத்தனர். பீம்சிங்,ஸ்ரீதர், சங்கர்,பந்துலு,ராமண்ணா, கோபாலக்ருஷ்ணன்,வேலுமணி ,சிவாஜி படங்களில் இசை ராஜ்ஜியம் தான். இதே காலகட்டத்தில் மாமா மகாதேவன் சாதனையும் அளப்பரியது.
    ஆனாலும், 60 இல் இருந்து 65 வரை வருடம் நான்கு படங்கள் சராசரியாக கொடுத்து தங்கள் ஜோடியை ஆதரித்த சிவாஜியிடம், தனியாக வந்த பிறகு ,விஸ்வநாதன் நன்றி பாராட்டினாரா என்பது கேள்வி குறியே.தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை.
    டியர் கோபால் சார்,

    நான் பொதுவாக, சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொடுவதில்லை. (மனதில் பட்டதை சொல்வதானாலும் கூட!). சரி பரவாயில்லை.

    நான் மெல்லிசை மன்னர்கள் 1961-க்குப் பிறகு தான் trend setters என்று சொல்லியிருக்கிறேன். ஒருவன் துவக்கத்திலிருந்தே மேதாவியாயிருப்பான் என்பது நடிகர் திலகம் போன்ற 50 கோடியில் ஒருத்தருக்குத்தான் சாத்தியம். (ஏன் அவரே கூட, அவரை மெல்ல மெருகேற்றிக் கொண்டு தான் வந்திருக்கிறார் கால மாற்றத்துக்கும் இயைந்து!) எல்லோரும் மெல்ல மெல்ல அனுவபத்தின் மூலம் அறிவுத்தெளிவு பெற்று கொஞ்ச காலம் கழித்து, அவர்களுடைய அனுபவம் மற்றும் உள்ளார்ந்த அறிவு மூலம் மேதாவிகளாகின்றனர், அதற்கேற்ற மனமிருந்தால்! அதே போல், மெல்லிசை மன்னர்களும், 1953 - "பணம்" படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து தான் "பாவ மன்னிப்பு" படத்தின் மூலம் புதிய இசை வடிவத்தைக் கொண்டு வந்தனர். இந்த இசை வடிவம் தான், இன்றும் வேறு வேறு பரிமாணங்களில் கையாளப் படுகின்றது. இந்த இசை வடிவம் தான் முக்கியம்.

    இரட்டையர்களாயிருந்த வரை, அவர்களிடமிருந்து வந்த இசைக்கும், பிரிந்த பின் வந்த இசைக்கும், தரத்தில் இறக்கம் இருந்தது எல்லோரும் ஒப்புக் கொண்டு விட்ட விஷயம் தான். ஆனால், இருவரில், யார் பெரியவர் என்பது மறுபடியும் சர்ச்சைக்குரிய விஷயம் தான். இதை நான் தொட விரும்பவில்லை. எங்கோ கொண்டு விட்டு விடும். சில விஷயங்களில், என்ன நடந்தது என்பது மிகச் சரியாக ஆதாரபூர்வமாகத் தெரியாத போது, அதைப் பற்றி சொல்ல நான்(ம்) யார்? இருப்பினும், மெல்லிசை மன்னர் அவரிடமிருந்த நிறைய திறமைகளின் மூலம், அவருடைய இடத்தை சற்றேறக்குறைய தக்க வைத்துக் கொண்டார். இதற்காக, ராமமூர்த்தி அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் முகம் காட்டாது போயிருக்கலாம்.

    இதன் மூலம், மேதை ஜி. ராமனாதனையோ, திரை இசைத்திலகத்தையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது, நான் உட்பட!

    என்னாலும் வருட வாரியாக, பாடல் வாரியாக, பக்கம் பக்கமாக வாதிட முடியும். இருப்பினும், இது ஒரு பெரிய, நீண்ட வருடங்கள் பிடிக்கும் ஒரு டாப்பிக் என்பதாலும், அனாவசிய சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்பதாலும், இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.

    (என்னடா இது, திரு. கார்த்திக் அவர்களின் ஆதங்கத்தைப் போக்கலாம் என்று பார்த்தால், ஒரு சர்ச்சையில் வந்து மாட்டிக் கொண்டோமே!),

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 12th October 2012 at 01:56 PM.

  5. #1654
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அக்டோபர் 2011 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' மாத இதழில் அட்டகாச புகைப்படங்களுடன் வந்த, இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளரும், நடிகர் திலகத்தின் இனிய நண்பருமான B.H.அப்துல் ஹமீத் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி அளித்த அற்புதக் கட்டுரை.



    முன் அட்டைப்படம்











    பின் அட்டைப்படம்



    இணைப்பு: B.H.அப்துல் ஹமீத் அவர்கள் நடிகர் திலகத்தை இலங்கையில் வானொலிக்காக கண்ட பேட்டி.







    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 12th October 2012 at 11:23 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1655
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அப்டியா?!
    It is totally a wrong perception to conclude that Viswanathan lacked his talent since he splited from Ramamurthy. There are plenty of examples to proof that, and everybody knows that. Even with Ramamurthy, he was the main creator of all the successful 60's movie songs, Ramamurthy was the main violinist, I hear. He probably helped MSV with tunes and the orchestra but not the main composer. As for KVM, he was very good in religious movies (mind you MSV marvelled in that too. e.g: Karnan) but not for movies like 'Engal Thanga Raja' etc. Hearing some songs form that movie, couldnt help me thinking, it should have been MSV composing for that sort of situations. The songs would have been much more youthfull and melodious with westernized rythms.
    Last edited by Vankv; 12th October 2012 at 01:53 PM.

  7. #1656
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கிடைத்தற்கரிய பொக்கிஷம் .... நம் பொதிகை தொலைக் காட்சியில் வெள்ளி தோறும் இரவு 7.05 மணிக்கு ஒளிபரப்பாகும் கனவுலக பிரம்மாக்கள் தொடரில் தற்போது நடிகர் திலகம் ஒரு பல்கலைக் கழகம் ஒளிபரப்பாகிறது. இது தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.



    பொதிகைக்கு நன்றி.

    அன்புடன்
    Last edited by RAGHAVENDRA; 12th October 2012 at 07:56 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1657
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள கோபால் சார்,


    தனியே பிரிந்த பின் மெல்லிசை மன்னர் கொடுத்த ஊட்டிவரை உறவு, இருமலர்கள், அன்பே வா, ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில், உயர்ந்த மனிதன், செல்வமகள், சிவந்த மண், நம்நாடு, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், காவியத்தலைவி (எழுபதுகளில் வந்த அனைத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படப்பாடல்களும்) அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மனமத லீலை, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான பாடல்களைக்கேட்டபின்னும், "த்னியே வந்தபின் எம்.எஸ்.வி. ஜொலிக்கவில்லை" என்று நீங்கள் சொல்லியிருப்பதை இந்த ஆண்டின் சிறந்த ஜோக்காக எடுத்துக்கொள்கிறேன்.

    Certainly. Even composing with Ramamurthy who probably helped MSV with the orchestra, especially violin, MSV was the main man. The standard of these songs mentioned here are not less than the one's he composed with Ramamurthy, which cleary shows who was the creator.

    மேற்கொண்டு விவாதிப்பதென்றால் மெல்லிசை மன்னர் திரிக்குப் போகலாம். இங்கே விவாதித்து நடிகர்திலகத்துக்கு நாம் இடைஞ்சல் தர வேண்டாம்.
    Of course, we are going out of context here. Just concentrate on Sivaji Ganesan, the great. Please publish more write-ups about NT's songs here!

  9. #1658
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த மக்களின் ரசனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. திருப்பித் திருப்பி சில படங்களைத் தாண்டி அந்த வட்டத்தைத் தாண்டி வருவேனா என்கிறார்கள். மிகவும் பிரபலமான படங்களைக் காட்டிலும் இன்னும் சிறப்பான நடிப்பை பல படங்களில் நடிகர் திலகம் வெளிப் படுத்தி இருப்பார். அவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அடுத்த தலைமுறைக்கு அவருடைய நடிப்பின் பல பரிணாமங்களைக் காட்ட வேண்டியது ரசிகர்களாகிய நமது கடமை. அந்த வரிசையில் அதிகம் பிரபலமாகாத ஒரு படத்தின் பாடலை இங்கே நாம் பகிர்ந்து கொள்வோமா. படம் பிரபலமாகவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் சந்தடி சாக்கில் வந்து சென்று விட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் வெற்றிக் கூட்டணியின் கடைசி படம். பீம்சிங் நடிகர் திலகம் கூட்டணியில் வெளிவந்த படம். சன்பீம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பாதுகாப்பு அருமையான படம். மற்ற பீம்சிங் படங்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் குறையாத படம். விறுவிறுப்பு சற்றே குறைந்த காரணத்தால் எடுபடவில்லை எனலாம்.

    இந்தப் படத்தைப் பற்றிப் பின் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம். இப்போது இதில் நடிகர் திலகத்திற்கு அமைந்த அட்டகாசமான பாடல். பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் குரலில் திரை இசைச் சக்கரவர்த்தி விஸ்வநாதன் இசையில் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டுகிறார் நடிகர் திலகம்.

    சோலோ பாடலான இதில் என்ன பெரிசாக செய்யப் போகிறார் என நினைப்பதற்கு இடம் தராமல் இதிலும் நுணுக்கமான விஷயங்களைப் புகுத்தி இருப்பார் நடிகர் திலகம். வெவ்வேறு தோற்றங்களில் வரும் போது அந்தப் பாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தி இருப்பது மிகச் சிறப்பு. கோட் சூட் அணிந்து பணக்கார வாலிபனாக வரும் போது அந்தக் காலத்தில் அந்த வாலிபனுக்கே உரிய பணத்திமிரும் அவனுக்கே இயல்பாக சற்றே இருக்கும் ஜாக்கிரதை உணர்வையும் ஒரு சேர உணர்த்தி இருப்பார். ஒரு மண்டபத்தின் மேல் அவர் நிற்க ஜெயலலிதா கீழே இறங்கி சுற்றி வந்து மேலே ஏறி திரும்ப மண்டபத்திற்கு வரும் காட்சியில் ஜாக்கிரதை உணர்வோடு ஒரு கை அந்த மண்டபத்தின் தூணைப் பிடித்திருக்க மற்றொரு கை ஜெயலலிதாவின் கையைப் பிடித்திருக்க அதனை அவர் பற்றியவாறு சுற்றி வருவார். அதே போல் கச்சை கட்டி வரும் காட்சியில் அவர் வேகமாக படி யிறங்க நம்மவர் மிகவும் நிதானமாக நளினமாக இறங்குவது, அதே போல் படகில் லூங்கி கட்டி வரும் போது, அதிலும் ஒரு நாகரீகத்தை வெளிப் படுத்தி கடலோரமாக நிதானமாக இருவரும் நடந்து வருவர். இந்த நளினத்தை அவர் கடைப் பிடிக்கக் காரணம் அந்தப் பாடலில் மெல்லிசை மன்னர் புகுத்தியிருக்கும் அதே பாவனைதான். டி.எம்.எஸ். குரலிலும் அந்த மென்மை, நளினம் இவையெல்லாம் பிரதிபலிக்க இவர்களை நாம் தூக்கி சாப்பிட வேண்டும் காட்சியை நிறுத்த வேண்டும் என்கிற தொழில் பக்தியை இந்த பாடலிலும் காட்டி யிருப்பார்.

    இத்தனைக்கும் இது ஒரு கனவுப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது. கனவுப் பாடல் தானே என்று இஷ்டத்திற்கு பாத்திரத்திற்குப் பொருந்தாத உடைகளை அணிந்து பார்ப்பவர்களை பயமுறுத்தும் கண்றாவி கலரையெல்லாம் உடுத்தாமல் அவர் நடித்திருப்பது அவருடைய நடிப்பின் ஆழத்தை உணர்த்துவதாகும்.

    அதிகமாக எழுதி விட்டோனோ. பாடலைப் பார்ப்போமே..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1659
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Can anyone provide me pammalar/esvee/barrister mobile numbers please?
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  11. #1660
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    It is totally a wrong perception to conclude that Viswanathan lacked his talent since he splited from Ramamurthy. There are plenty of examples to proof that, and everybody knows that. Even with Ramamurthy, he was the main creator of all the successful 60's movie songs, Ramamurthy was the main violinist, I hear. He probably helped MSV with tunes and the orchestra but not the main composer. As for KVM, he was very good in religious movies (mind you MSV marvelled in that too. e.g: Karnan) but not for movies like 'Engal Thanga Raja' etc. Hearing some songs form that movie, couldnt help me thinking, it should have been MSV composing for that sort of situations. The songs would have been much more youthfull and melodious with westernized rythms.
    நண்பர்களே,
    இந்த விவாதம் முற்று பெற்றதில்லை. பல உண்மைகள் எனக்கு தெரியும். ஆனாலும் கார்த்திக் சாரின் மேலுள்ள பெரு மதிப்பினால் நான் விவாதத்தை தொடர போவதில்லை. நண்பர்களும் இந்த திரியில் மேற்கொண்டு விவாதிக்க வேண்டாமே!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •