எல்லா landmark படங்களுமே முத்திரை படைப்புகளாய் , வெற்றி படங்களாய் அமைந்த ஒரே உலக பாக்ஸ் ஆபீஸ் Emperor நமது நடிகர் திலகம் மட்டுமே.
1 பராசக்தி
25 கள்வளின் காதலி
75 பார்த்தால் பசி தீரும்
100 நவராத்திரி
125 உயர்ந்த மனிதன்
150 சவாலே சமாளி
175 அவன்தான் மனிதன்
200 திரிசூலம்
225 தீர்ப்பு
275 புதிய வானம்
விதி விலக்குகள்- 50 சாரங்கதாரா 250 நாம் இருவர் .இதிலாவது 50 கு பதில் 51 ஆகிய சபாஷ் மீனாவை ஐம்பதாக்கி இருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் 250 ?? இதற்கு பதில் 251 ஐ 250 ஆக்கி இருக்கலாமே என்று நினைத்தால்? 250 தேவலாம். compare பண்ண பெஞ்ச்மார்க் இல்லை அட்லீஸ்ட்.
251 இன்னும் கேவலமான படம். படிக்காத பண்ணையார் திறைமை சாலிகளின் மொத்த அணிவகுப்பு சிவாஜி, விஜயா, கல்கத்தா விஸ்வநாதன், கே.எஸ்.ஜி.,இளைய ராஜா இப்படி.
ஆனால் தரம்?
கே.எஸ்.ஜி தன்னுடைய மிக சிறந்த படைப்புகளில் ஒன்றான கண்கண்ட தெய்வம் படத்தை ரீமேக் என்ற போர்வையில் சொதப்போ சொதப்பு என்று சொதப்பி அருவருக்க வைத்திருந்தார். ஹும்... ரங்கா ராவ், சுப்பையா,பத்மினி, மாமா, இவர்களை நினைத்து பெருமூச்சு தான் விட முடியும்.
Last edited by Gopal.s; 29th October 2012 at 04:44 PM.
எனக்கு சில மனக்குறைகள் உண்டு. அதில் முக்கியமான குறை டைம்ஸ் வெளியிட்ட சிறந்த நூறில் ஆங்கில படங்களின் பிரதி-தழுவலான நாயகன் இடம் பெற்றதுதான். சில மேட்டுக்குடி லாபி எப்பவுமே வலுவானவை. ஆனால் அதில் இடம் பெற்றிருக்க வேண்டிய அசலான ஒரே இந்திய படம் தில்லானா மோகனாம்பாள்தான் என்று அடித்து கூற முடியும்.
ஆனாலும் நாயகன் ஒரு சிறந்த படம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.(அதிலும் வயதான வேலு நாயக்கர்,நமது NT யின் திருவருட்செல்வர் நடையை பின் பற்றி நடித்திருப்பார்). முக்தா ஸ்ரீநிவாசன் எடுத்ததிலேயே சிறந்த படம் நாயகன்தான்.
இப்போது அவர்களுக்குள் நடந்து வரும் காரசாரமான வாக்குவாதங்கள், பதில்களை விட சிறந்த கேள்விகளையே நம் முன் எழுப்புகின்றன. திரைப்பட உருவாக்கத்தில் மிக சிறந்த முறை studio instituted ஹாலிவுட் முறைதான். ஆனால் தமிழ் பட உலகம் நட்சத்திர பிடியில் சிக்கிய பிறகு, ஒரு நடிகர் என்பதையும் மீறி, ஒரு கதாநாயக நடிகர் , சக நடிகர்கள்,கதை-வசனகர்த்தாக்கள்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,இயக்குன ர் போன்றவர்களை தேர்ந்தெடுத்து அனைத்திலும் பங்கு பெற்று, வியாபார ,வெளியீட்டு விஷயங்களிலும் பங்கு பெற வேண்டிய அவசியங்கள் உருவானது .(விரும்பதகாததெனினும்).இந்த முறையில் மிக பாதிப்படைந்த ஒரு மகா மேதை நம் NT போன்றவர்கள். NT ,ஒரு தயாரிப்பாளரின்,இயக்குனரின் நடிகர். எந்த விதமாகவும்,அவரை உபயோகித்து,மிக சிறந்த படைப்புகளை உருவாக்கி ,உலகையே திரும்பி பார்க்க செய்திருக்க முடியும்.ஆனால் அந்த அப்பாவி மேதை ,பல உப்புமா தயாரிப்பாளர்களுக்கு பணம் பண்ணும் இயந்திரமாக, ஓயாது உழைத்து , வியாபார உத்திகளன்றி, மாதம் ஒன்றாக நடித்து குவித்தார். ஆனால் இவ்வளவு தடைகளை மீறி பேர் சொல்லும் 50 மிக மிக தரமான படங்கள் நமக்கு கிடைத்தது சிவாஜி என்ற ஒரே ஒரு உலக மேதையின் (One man Army ) சாதனை என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.
சில கேள்விகள்-
1) சூழ்நிலை புரிந்து ,தான் நடிகர் என்பதை மீறி மற்ற திறமைகளை வளர்த்து உபயோகிப்பவர்களால் மட்டுமே, மிக தரமான ,வித்தியாசமான, வியாபார நோக்கத்தையும்,கலையையும் இணைத்து படங்களை தர முடிந்தது.(ராஜ் கபூர்,குருதத், கமல்)
2)இவர்கள் யாருமே ,நடிப்பு திறமை என்ற அளவு கோலில் மட்டும் வைத்து பார்த்தால் NT யை நெருங்கும் அருகதை கூட அற்றவர்கள். ஆனால் என்ன செய்வது?திரை படங்கள் தனி நடிப்பு போட்டியல்லவே?
3)இந்தியர்களின் மனோபாவமே, வலுவான தலையீடு இருந்தால் மட்டுமே ஒழுங்காக பணி புரிவேன் என்பது.(ஒரு இசை மேதை வாரா வாரம் மெகா டிவியில் இதை சொல்லியே தன்னையும் தரம் தாழ்த்தி கொண்டுள்ளார்).இந்த நிலையில் ,நான் எதிலும் தலையிடாமல் என் வேலையை மட்டுமே பார்ப்பேன் என்று இருப்பது சரியான strategy தானா?(ஊரோடு ஒத்து போ)Holly wood முறை இந்தியர்களுக்கு பொருந்தாது.(வாசன் விதிவிலக்கு)
4) இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரின் பணியில் தலையிட்டு,நல்ல படத்தை கொடுப்பதில் என்ன தவறு? பிசைதலுக்கு இசைதல் என்பது இந்திய சூழ்நிலையில் சரியா?ஸ்ரீநிவாசன் இஷ்டத்துக்கு விட்டிருந்தால், நாயகனுக்கு பதில் இரு மேதைகளாய் வந்திருக்கும்.
5) ஆனால்,இவ்வளவுதான் என்னால் முடியும் என்கிற தயாரிப்பாளர்களிடம்,முதலில் ஒரு budget கொடுத்து விட்டு, பிறகு ஒவ்வொரு சுமையாக ஏற்றுவது ethical விதிகளின் படி முரணானது. தப்பாட்டம். இதைத்தான் கமலும், மணியும் செய்துள்ளனர்.
Last edited by Gopal.s; 29th October 2012 at 04:39 PM.
என்னை விட்டு விடுங்கள். எனக்கு தமிழ் படம் இயக்கும் எண்ணமே இருந்ததில்லை. ஆனால், ஒரு சத்யஜித்ரே,பிமல் ராய்,மிருனாள் சென்,அடூர் கோபாலக்ருஷ்ணன்,ஷாம் பெனேகல்,மகேந்திரன்,பாலு மகேந்திரா, இப்படிப்பட்ட இயக்குனர்கள் கையில் nt .........
ஹும்.... மீண்டும் பெருமூச்சுதான்.
ராகவேந்தர் ஐயா,
எனக்கும் சிவாஜி தவிர வேறு உலகம் வேண்டாம். தினமும் இரு முறையாவது அவர் படங்களையோ,பாட்டுக்களையோ பார்க்கா விட்டால் தூக்கம் வராது. ஆனால் ஒரு சில பதிவுகள், நம் எழுத்துக்களில் உள்ள உண்மை தன்மையை குறைக்கும் என்று வலுவாக நம்புபவன். I am genuine . 306 படங்களும் ஒரே தரத்தில் நிலை நிறுத்த பட வேண்டியவை என்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் தங்கள் மேல் உள்ள மரியாதையால்,இந்த எச பாட்டை நிறுத்தி கொள்கிறேன். நான் என் வழியில் தான் தொடர்வேன்.
Last edited by Gopal.s; 8th November 2012 at 09:54 AM.
ஆனால் ஜால்ரா பதிவுகள், நம் எழுத்துக்களில் உள்ள உண்மை தன்மையை குறைக்கும் என்று வலுவாக நம்புபவன். I am genuine
இந்த பதிலை உங்களுக்கு ஆதரவாக வரக்கூடிய பதிவுகளுக்கான விளக்கம் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
தயாரிப்பு: கமலா பிலிம்ஸ்
இயக்கம்: ஏ.பீம்சிங்
வெளியான தேதி: 16-06-1967
நகரத்திலே மிக பிரபலமான சிவில் இஞ்சீனியர் சேகர். சேகரின் மனைவி ஜானகி. மனமொத்த தம்பதிகள். ஆனால் ஒரே குறை திருமணம் ஆகி பத்து வருடங்களாகி விட்டன, ஆனால் குழந்தை இல்லை. அந்த வீட்டில் சேகரின் சித்தப்பா அவர்களுடன் தங்கியிருக்கிறார்.
ஜானகியின் தங்கை சாந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். ஜானகி மற்றும் சாந்தாவிற்கு பெற்றோர்கள் இல்லாததால் சேகரின் பராமரிப்பில் சாந்தா படிக்கிறாள். படிப்பு முடிந்து வரும் அவள் அக்காவின் வீட்டிலேயே தங்கி விடுகிறாள்.
ஒரு நண்பரின் வீட்டிற்கு செல்லும் சேகர் தம்பதியினரிடம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளும்படி நண்பர் கேட்க அப்போதுதான் குழந்தை இல்லாத குறை அவர்கள் மனதை வாட்டுவது நண்பருக்கு தெரிய வருகிறது. டாக்டரிடம் சென்று காண்பிக்குமாறு நண்பர் சொல்ல தம்பதியர் குடும்ப டாக்டரை சென்று பரிசோதனைக்கு உட்படுகிறார்கள்.
சேகர் வெளியே காத்திருக்க ஜானகியை பரிசோதனை செய்யும் டாக்டர் அவளிடம் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்ற விவரத்தை சொல்கிறார். இதைக் கேட்டு இடிந்துப் போகும் ஜானகி தன் கணவரிடம் இதைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறாள். கணவனிடம் டாக்டர் கவலைப்பட வேண்டாம் குழந்தை நிச்சயமாக பிறக்கும் என்று சொன்னதாக சொல்லி விடுகிறாள். அதை கேட்டு சந்தோஷமடையும் சேகர் வழக்கம் போல் தன் வேலைகளில் ஈடுபட ஜானகியோ மனதில் பெரும் பாரத்துடன் காலம் தள்ளுகிறாள்.
ஒரு நாள் சேகர், ஜானகி மற்றும் சாந்தா ஒரு பொருட்காட்சிக்கு செல்ல அங்கே குடும்பத்துடன் வந்திருக்கும் டாக்டரை சந்திக்கிறார்கள். பெண்கள் எல்லோரும் கடைக்குள் சென்று விட டாக்டரின் மகனுடன் சேகர் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் அது உங்கள் மனதையும் வாழ்க்கையும் பாதிக்காமல் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தும் நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று டாக்டரின் மகன் சொல்ல ஜானகி மறைத்த உண்மை பளாரென்று சேகரை தாக்குகிறது.
மனதில் இதை நினைத்து மருகி கொண்டே வீட்டிற்கு வரும் சேகர் ஜானகியிடம் நேரிடையாக பேசாமல் யாரோ ஒருவருடன் பேசுவது போல் தன ஆதங்கத்தை கொட்டி தீர்க்க பதில் சொல்ல முடியாமல் ஜானகி சேகரிடம் மன்னிப்பு கேட்டு அழுகிறாள். குழந்தை இல்லை என்ற குறை தனக்கு எப்போதும் வராது என்று ஜானகியை தேற்றுகிறான் சேகர். இதைப் பற்றி எதுவும் தெரியாமல் அவர்களிடம் வழக்கம் போல் கேலியும் கிண்டலுமாக உறவாடுகிறாள் சாந்தா.
ஒரு நாள் இரவு தூக்கம் பிடிக்காமல் மாடியிலிருந்து இறங்கி வரும் சேகர் ஓடிக் கொண்டிருக்கும் ரேடியோவை நிறுத்த ஏன் என்று கேட்க வரும் சாந்தாவிடம் தான் கண்ட ஒரு கனவைப் பற்றி கூறுகிறான். அந்த கனவில் நிகழ்ந்தவை என சேகர் கூறும் விஷயங்கள் அவன் மனதில் குழந்தை மீது எத்துனை ஆசை வைத்திருக்கின்றான் என்று வெளிப்படுத்துகிறது. கணவனை காணாமல் ஹாலிற்கு வரும் ஜானகியும் கணவனின் கனவைப் பற்றி பேசுவதை கேட்டு விடுகிறாள். அவள் மனம் பல வித யோசனைகளில் ஆழ்கிறது.
இறுதியாக ஒரு முடிவிற்கு வரும் ஜானகி முதலில் சேகரின் சித்தப்பாவிடம் அதை கூறுகிறாள். பின்னர் சாந்தாவை பூஜையறைக்கு அழைத்து செல்லும் ஜானகி அங்கே தன நிலைமையை கூறி தன கணவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்கைப்படுமாறு தங்கையை வேண்டுகிறாள். முடியவே முடியாது என கூறும் தங்கையிடம் தன நிலையையும் அந்த குடுமபத்தின் வாரிசு பரம்பரை தொடர வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி சம்மதம் பெறுகிறாள்
அடுத்து கணவனிடம் செல்கிறாள். தன் வேண்டுகோளை சொல்கிறாள். வெகுண்டு எழும் சேகர் அவளை சத்தம் போட, முன்னொரு நாளில் தான் என்ன கேட்டாலும் அதை வாங்கி தருவதாக சேகர் கொடுத்த அந்த சத்தியத்தை நினைவுப்படுத்தி தான தங்கையை மணக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறான்.
திருமணம் முடிகிறது. முதல் இரவிற்கு தன தங்கையை அனுப்பி வைக்கிறாள். இது நாள் வரை ஒரு குழந்தையாக பார்த்த மனைவியின் தங்கையை மனைவியாக பார்க்க முடியாமல் சேகர் தடுமாற அவனை தன நகைச்சுவை பேச்சால் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறாள் சாந்தா. முதலிரவிற்கு கணவனையும் அவனை மணமுடித்த தங்கையையும் அனுப்பி வைத்துவிட்டு தன அறைக்கு வரும் ஜானகிக்கு தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுகிறாள். டாக்டர் வந்து பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டு ஜானகி கர்ப்பம் தரித்திருக்கும் சந்தோஷ செய்தியை சொல்கிறார்.
வெகு நாட்களாக காத்திருந்து தனக்கு இனிமேல் கிடைக்காது என நம்பிக்கை இழந்த ஒன்று தனக்கு வரப்பிரசாதமாய் கிடைத்திருக்கும் மகிழ்வு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்த பாக்கியம் தன்னுடைய கணவனின் குடும்பத்திற்கு வேண்டுமென்பதற்காக தானே தன தங்கையை தன கணவனுக்கு கட்டி வைத்துவிட்ட வருத்தம் ஒரு புறம். யோசனையின் முடிவில் யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.
இந்த நிலையில் வெளியூரில் ஒரு அணைக்கட்டு கட்டிட வேலைக்கு சேகர் செல்ல நேரிடுகிறது. அவனுடன் சாந்தாவையும் அனுப்பி வைக்கிறாள் ஜானகி. அங்கே சென்றவுடன் சேகர் வேலையிலே கவனமாகி விட அவனால் சாந்தாவை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. மனதில் அந்த குறை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாந்தா நடமாடுகிறாள்.
இந்நிலையில் வீட்டிற்கு வரும் நர்ஸ் மூலமாக ஜானகி கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்ற செய்தி சேகரின் சித்தப்பாவிற்கு தெரியவர அதை வர சேகருக்கு தெரியப்படுத்துகிறார். அந்த கடிதத்தை படித்தவுடன் சேகர் உடனே சென்னைக்கு ஓடோடி வந்து விடுகிறான். வெளியே சென்றிருந்த சாந்தாவை அப்படியே மறந்து விடும் சேகர் சென்னைக்கு ஓடி வந்து விட அது ஜானகிக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விடுகிறது. சேகரை திருப்பி அனுப்பி அவளை கூட்டி வர செய்கிறாள்.
ஆனால் ஜானகி கர்ப்பம் என்று தெரிந்தவுடன் சேகரின் attitude மாறி விடுகிறது. எப்போதும் அவளைப் பற்றிய சிந்தனை,பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய கனவுகள் அவற்றைப் பற்றிய பேச்சுக்கள் என்று அவன் உலகம் சுழல ஆரம்பிக்க சேகரின் இந்த போக்கு சாந்தாவை தனிமைப்படுத்த தொடங்குகிறது.
ஒரு கட்டத்தில் சாந்தா இந்தக் குடும்பத்தில் தான் தேவையில்லாமல் நுழைந்துவிட்டதால் வந்த குழப்பங்கள்தான் இவை என்ற முடிவிற்கு வருகிறாள். எனவே சேகர் ஜானகி இடையே தான் இருக்க வேண்டாம் என நினைத்து ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள். சாந்தா இப்படி ஒரு முடிவு எடுக்கும் போது, தான் இந்த நேரத்தில் கர்ப்பம் ஆனதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என நினைக்கும் ஜானகி குடும்ப டாக்டரிடம் சென்று தன கர்ப்பத்தை கலைக்குமாறு வேண்டுகிறாள். இதனை காலத்திற்கு பின் கர்ப்பம் தரித்திருக்கும் நீ இதை செய்ய சொல்லலாமா என கேட்டு டாக்டர் மறுக்க அந்நேரம் அங்கே வரும் சேகர் மனம் உடைந்து போகிறான். இனி இப்படி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லும் சேகரிடம் அவன் இனிமேல் சாந்தவை சந்தோஷமாக் கொள்ள வேண்டும் என பதில் சத்தியம் கேட்கிறாள் ஜானகி. வீட்டை விட்டு வெளியேறிய சாந்தவை கண்டுபிடித்து கூட்டி வரும் சேகர் நடந்தவற்றையெல்லாம் சாந்தாவிடம் கூறுகிறான்
ஜானகிக்காக சத்தியம் செய்துக் கொடுத்தாலும் சேகரால் சாந்தாவிடம் சந்தோஷமாக நடந்து கொள்ள முடியவில்லை. வெளியில் இருவரும் நடிக்கிறார்கள். இதனிடையில் ஜானகிக்கு பிரசவ நேரம் நெருங்குகிறது. சேகர் சாந்தா சந்தோஷத்தைப் பற்றி சந்தேகப்படும் ஜானகி மற்றும் சித்தப்பா இருவரும் இதை பற்றி கேள்வி கேட்க கல்யாணமான நாள் முதல் தாங்கள் ஒரு நாள் கூட சந்தோஷமாக் இருந்ததில்லை என்ற உண்மையை சாந்தா போட்டு உடைக்க அதை தாங்க முடியாமல் அறையை விட்டு வெளியே ஓடிவரும் ஜானகி மாடிப்படிகளில் தவறி விழுந்து அடிபடுகிறாள். டாக்டரை அழைக்க கார் எடுத்து செல்லும் சாந்தா வழியில் விபத்தில் சிக்கிக் கொள்கிறாள்
அக்கா தங்கை இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் குழந்தையை பெற்று எடுத்துவிட்டு ஜானகி இறந்து போக சாந்தா பிழைத்துக் கொள்கிறாள்.
பிறந்தவுடன் பெற்ற தாயை இழந்த அந்த குழந்தைக்கு தாயாகும் சாந்தா அதற்கு பாலாடை மூலமாக பாலூட்ட படம் நிறைவு பெறுகிறது.
(தொடரும்)
அன்புடன்
Last edited by Murali Srinivas; 30th October 2012 at 01:01 AM.
க்கு சில மனக்குறைகள் உண்டு. அதில் முக்கியமான குறை டைம்ஸ் வெளியிட்ட சிறந்த நூறில் ஆங்கில படங்களின் பிரதி-தழுவலான நாயகன் இடம் பெற்றதுதான். சில மேட்டுக்குடி லாபி எப்பவுமே வலுவானவை.ஆனால் அதில் இடம் பெற்றிருக்க வேண்டிய அசலான ஒரே இந்திய படம் தில்லானா மோகனாம்பாள்தான் என்று அடித்து கூற முடியும்.
"பிரதி-தழுவலான" - what is this? pradhiya? thazhuvalaa? dont confuse yourself and others!
Originally Posted by Gopal,S.
ஆனால் தமிழ் பட உலகம் நட்சத்திர பிடியில் சிக்கிய பிறகு, ஒரு நடிகர் என்பதையும் மீறி, ஒரு கதாநாயக நடிகர் , சக நடிகர்கள்,கதை-வசனகர்த்தாக்கள்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,இயக்குன ர் போன்றவர்களை தேர்ந்தெடுத்து அனைத்திலும் பங்கு பெற்று, வியாபார ,வெளியீட்டு விஷயங்களிலும் பங்கு பெற வேண்டிய அவசியங்கள் உருவானது .(விரும்பதகாததெனினும்).இந்த முறையில் மிக பாதிப்படைந்த ஒரு மகா மேதை நம் NT போன்றவர்கள். NT ,ஒரு தயாரிப்பாளரின்,இயக்குனரின் நடிகர். எந்த விதமாகவும்,அவரை உபயோகித்து,மிக சிறந்த படைப்புகளை உருவாக்கி ,உலகையே திரும்பி பார்க்க செய்திருக்க முடியும்.ஆனால் அந்த அப்பாவி மேதை ,பல உப்புமா தயாரிப்பாளர்களுக்கு பணம் பண்ணும் இயந்திரமாக, ஓயாது உழைத்து , வியாபார உத்திகளன்றி, மாதம் ஒன்றாக நடித்து குவித்தார். ஆனால் இவ்வளவு தடைகளை மீறி பேர் சொல்லும் 50 மிக மிக தரமான படங்கள் நமக்கு கிடைத்தது சிவாஜி என்ற ஒரே ஒரு உலக மேதையின் (One man Army ) சாதனை என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.
Does that mean Shivaji Ganesan did not have any say in selecting his co-stars and technicians?
Bookmarks