Page 261 of 305 FirstFirst ... 161211251259260261262263271 ... LastLast
Results 2,601 to 2,610 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2601
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Vanaja Madam,

    Do continue your postings on NT with a spirit of come what may.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2602
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #2603
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி-வாணிஸ்ரீ: தமிழ்த்திரையுலகின் நாகரிகக் காதல் ஜோடி

    இந்த தளத்தில் சிவாஜிக்குச் சரியான ஜோடி யார் என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்து அதில் சிவாஜி-பத்மினி ஜோடி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றது. சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடி runner-up! சிவாஜி-பத்மினி ஜோடி பலவிதங்களில் மிகப் பொருத்தமாக இருந்தாலும் stylish, elegant & majestic pair சிவாஜி-வாணிஸ்ரீ தான். இருவருக்குமிடையேயுள்ள வயது வித்தியாசம் 20 வருடங்கள் (1928-1948) என்றாலும் அது திரையில் தெரியாதது, அச்சோடியின் வெற்றியைப் பலப்படுத்துகிறது. இவர்கள் இணைந்து ஏறக்குறைய 10 படங்கள் நடித்திருந்தார்கள்.

    இந்த ஜோடிக்கிடையிலான screen chemistry யைப் பார்த்துத்தானோ என்னவோ அவர்களை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் காதல் படங்களையே கொடுத்தார்கள். அதற்கு ஏற்றால்போல வசந்தமாளிகையும் பெரும் வரவேற்பைப்பெற்றது .

    தனது எல்லாவிதமான நடிப்பு பரிமாணங்களைப்போலவே நடிகர் திலகம் காதலை வெளிப்படுத்துவதிலும் expert தான்! இதில் காதல் மன்னர்களும் இளவரசர்களும் தற்போதைய திரையுலக இளம் ஹீரோக்களும் கூட கிட்ட நெருங்கமுடியாதென்பது எனது கருத்து. அவர்களின் காதல் அணுகுமுறையில் காமம் தெரிகின்ற அளவுக்கு காதல் வெளிப்படுத்தப்படுவதில்லை . இதில் திடீரென்று குத்துப்பாட்டு என்கின்ற over acting வேறு!. (ஆம்! இவர்கள் தான் அந்தரத்தில் எழும்பி அடிப்பது, குத்துக்கரணம் போடுவது என்று over acting செய்துகொண்டிருக்கிறார்கள் ) சிவாஜியோ அந்தந்த கதாபாத்திரங்களின் சமூகத்தகுதிகளுக்கேட்ப காதலை மிதமாகவோ அதீதமாகவோ கோமாளித்தனமாகவோ அல்லது கம்பீரமாகவோ வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பண்டரிபாயிலிருந்து ராதா வரையிலான சிவாஜியின் கதாநாயகியர்களைப் பார்க்கும்போது, வாணிஸ்ரீயினது (காதல்) நடிப்பு சற்றே வித்தியாசமாகவும் stylish ஆகவும் இருக்கும். சிவாஜியின் ஆரம்பகாலக் கதாநாயகியர்கள் சற்று அதீதமாக நாணுவதும் கோணுவதுமாக இருக்கையில், வாணிஸ்ரீ அதையே சற்று நளினமாகவும் மிதமாகவும் செய்திருந்தார்.

    வசந்தமாளிகையில் ஆனந்தின் மனத்திலிருப்பது என்னவென்று லதாவுக்குத் தெரிந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல், she played down her emotions towards Anand . அதே நேரத்தில் தன்னை woman of easy virtue என்று ஆனந்த் நினைத்துவிடக்கூடாதென்பதிலும் லதா கவனமாகவிருந்தாள்; considering his reputation among 'easy' women! அந்த அவளது ego, கடைசியில் ஆனந்த் விஷம் குடித்தபின்னர் உடைந்து போனது.

    சிவகாமியின் செல்வன் பலவிதங்களில் வசந்தமாளிகையை விடவும் சிறந்த காதல் காவியம் என்றே நான் சொல்வேன்.

    ஆராதனாவின் நிழல் அதன் மீது படிந்து , அப்படம் அடைந்திருக்கவேண்டிய வெற்றியை குறைத்திருந்தாலும், ஆரம்ப கட்டத்திலிருந்தே அசோக் - சிவகாமிக்கிடையில் பூத்துவிட்ட இனிமையான காதலை சிவாஜியும் வாணிஸ்ரீயும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருந்தனர். (except அந்த 'எத்தனை அழகு' பாடல் காட்சி. அது கொஞ்சம் நீளமாகப்போய்விட்டது. "just get on with it!" என்று சொல்லத்தோன்றும்! )

    அவர்களுக்கான வசனங்களை ஏ எல் நாராயணன் மிகவும் இயல்பாகவும் இனிமையாகவும் எழுதியிருந்தார்.

    ஆனந்த் -லதா வுக்கிடையே வந்துவிட்ட storming relationship ஐ விடவும் அசோக்-சிவகாமிக்கிடையிலான பரஸ்பரம் ஆழ்ந்த அன்புடனான, மிதமான காதல் ஒரு படி மேலானதேன்றே சொல்லலாம். அதுவும் படம் முழுவதும் மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாணிஸ்ரீ அதை மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார்.

    இந்த ஜோடிக்கு போதுவாகப் படங்களில் ஏற்படும் love -hate relationship ஐ வைத்து பின்னர் நல்லதொரு குடும்பத்தை எடுத்தனர். அப்படத்தின் பின்பகுதி நன்றாக இருக்கவில்லை என்றாலும் இந்த ஜோடி தமது பங்கைச்சிறப்பாக செய்திருந்தனர். அதுபோலவேதான் ரோஜாவின் ராஜாவும்.

  5. #2604
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    Sister VANAJA,

    I am not telling that you should not write anything here or you no need to give your contributions.

    Only thing I mentioned is, the main point in your post, that is "80s and 90s directors spoiled Shivaji sir's career" has been discussed in every 10 pages of this thread. So, it is nothing but a 'repeatuuuuu'. Is it true or not. Thatswhy I used as 'pazhaiya kallu'.

    Paaraattu varumbothu sandhoshap paduvadhu pola, criticism varumbodhum accept panna manasu vendum.
    I'm not at all annoyed, adhiram! I've just been sarcastic, that's all. I knew it had been mentioned in earlier threads where I got the info from, I admit it. But I tried to give it in 'my way'. I bet all the other NT fans share my feelings in a sense that he was wasted in the 80's. Everybody said that before, now its my turn to emphasize it, that's all. I want to say that too, you know! No hard feelings!

  6. #2605
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    This is Fun! Sasi says; 'you're in 'The Hub' for one minute, and you've already started a fight!!'
    Last edited by Vankv; 3rd January 2013 at 12:35 PM.

  7. #2606
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Sister VANAJA,

    I accept and appreciate your approach that 'Sivakamiyin Selvan' is better than 'Vasandha Malligai'. That is true also.

    But, because of the reasons that Vasandha Maligai is a huge hit, and Sivakamiyin Selvan is met a normal result (due to the reason of comparing it with Aradhana), everybody is shouting 'Vasandha Maligai... Vasandha Maligai... Vasandha Maligai...'

    But I am in your way that Sivakamiyin Selvan is definitely better than Vasandha Maligai, in love aspect. Regarding the songs, it is NO WAY less than Aradhana or Vasandha Maligai. MSV did in his own way, without touching the hindi tunes.

  8. #2607
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் இன்று: 3rd January

  9. #2608
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரி வனஜா ,
    தங்கள் சிவாஜி-வாணிஸ்ரீ காதலை மையமாக்கிய பதிவு மிக மிக அற்புதமான ரசனைக்குரிய ஒன்று. தொடருங்கள் சகோதரி,

  10. #2609
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரும்புத்திரை (iron curtain )- 1960- பகுதி-1

    எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
    படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
    மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார். அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
    தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
    இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
    சுபம்.
    (தொடரும்)

  11. #2610
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Vanaja Madam,

    Do continue your postings on NT with a spirit of come what may.
    Thank you Mr Vasu

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •