-
5th January 2013, 11:19 AM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
muthraman
நடிகர் திலகம் அவர்களின் சாதாரண ரசிகன் நான் .எனக்கு மக்கள் திலகத்தின் படங்களும் பிடிக்கும் . காதல் மன்னன் ஜெமினியின் படங்களும் பிடிக்கும் .
நடிப்பு என்று வந்து விட்டால் அதில் ஒப்பீடு செய்வதில் பயனில்லை .
நடிகர் திலகம் எந்த கதையின் பாத்திரம் ஏற்றாலும் அதில் அவரது தனி தன்மை பிரகாசிக்கும் .
சிவகாமியின் செல்வன் கதை வேறு . வசந்த மாளிகை கதை வேறு .
பிடிக்கும் - பிடிக்காது என்பது அவரவர் ரசனையை பொறுத்தது . யார் மீதும் திணிக்க கூடாது .
ஒரு ரசிகனாக பின்பு குற்றம் - குறை தவிர்ப்பது நலம் .
நான் ஆறு வருடங்களாக நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து படித்து வருகின்றேன் .
குறிப்பாக திரு முரளி - திரு கோபால் -திரு நெய்வேலி வாசுதேவன் - திரு ராகவேந்திரன் .திரு சுவாமிநாதன் .- திரு பார்த்தசாரதி - மற்றும் பலருடைய பங்களிப்பு விலை மதிப்பற்றது .
மேடம் சாரதா - திரு கார்த்திக் -திரு கல்நாயக் - திரு ஆதிராம் மறக்க முடியாத நால்வர் அணி .சூப்பர் ஆய்வுகள் - பதிவுகள் . இருந்தாலும் இந்த நால்வரின் முகமும் ஒரு முகம் தானோ ?
மனிகட்டியாகிவிட்டது . தெரிய வேண்டியது சம்பந்த பட்டவர்கள் .
ரசனை தொடரும்
நான் பாட்டுக்கும் ஏழே-ன்னு (அதாங்க செவென்-ஏன்னு) இருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ இங்கே வந்து*படிப்பேன். என்னை இப்படி தூண்டிவிட்டால் அரிதாய்*எழுதுவேன். என்னைப்*போயி ஒரு முகம்தானோ-ன்னு சாரதா மேடம்-கூடவும், கார்த்திக் சார் கூடவும், தற்போது கலாய்த்துகொண்டிருக்கும் சகோதரர் ஆதிராம்*கூடவும், கவுண்டமணி-செந்தில் *வாழைப்பழ நகைச்சுவை போல அவர்தாண்ணே இவரு, அவர்தாண்ணே இவரு - ன்னு சொல்றீங்களே. நெய்வேலி வாசுதேவன் சாரும், பம்மலாரும் சற்று*ஓய்வில் இருப்பதால் மற்றவர்களை எழுத வைப்பதற்கு*இப்படியெல்லாம் காமெடி பண்ணத் தோணுதோ?*இன்னும் சிறிது நாட்கள் பலர்*ஓய்வில் இருந்தால் இங்கு எழுதுபவர்கள் பலர் அல்ல! ஒரே ஒருவர்தான்!!! அப்படின்னு கூட கூசாமல் சொல்லுவீங்க போல இருக்கே!!! நல்லவேளை முரளி சாரும், * ராகவேந்திர சாரும் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.*****புதிதாக வந்து பட்டையை கிளப்பும் சகோதரி வனஜாவிற்கு வாழ்த்துகள்!!! தாங்களும் நீங்கள் சொல்வது போல இல்லாமல் புதிதாக வந்திருந்தால் என்னுடைய வரவேற்பு வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள்.*
-
5th January 2013 11:19 AM
# ADS
Circuit advertisement
Bookmarks