உலக சினிமா வரலாற்றில் என்றுமே ஒரே வசூல் சக்ரவர்த்தி எங்கள் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் ஒருவர் தான் உங்களை போல எங்களுக்கு எல்லாம் பொய் எழுத வராது சார்
http://i1170.photobucket.com/albums/...psw0wedx6f.jpg
Printable View
உலக சினிமா வரலாற்றில் என்றுமே ஒரே வசூல் சக்ரவர்த்தி எங்கள் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் ஒருவர் தான் உங்களை போல எங்களுக்கு எல்லாம் பொய் எழுத வராது சார்
http://i1170.photobucket.com/albums/...psw0wedx6f.jpg
யுகேஷ் பாபு சார்
நாம் பரஸ்பரம் கருத்து பரிமாறாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறன்.
காரணம்....வழக்கத்தில் சந்தேகம் வரலாம் ...ஆனால் சந்தேகமே வழக்கமாகிவிட்டால் என்ன செய்வது !
என் வரையில் எனக்கு தெரியும் எனக்கு காமாலை இல்லை ஆகவே பார்பதெல்லாம் மஞ்சளாக தெரிவதில்லை.
நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்...! உண்மையாக இருக்கும்பட்சத்தில் யார் சொன்னாலும் நான் ஒத்துகொள்வேன்....உண்மைக்கு புறம்பாக இருக்கும்பட்சத்தில் எவ்வளவு agressive ஆக பதிவிட்டாலும் நான் ஒத்துகொள்ளமாட்டேன்...! அதில் உறுதியாக இருக்கிறேன், இருப்பேன் என்றும் !
அன்றே கூறியதை போல....உங்கள் நம்பிக்கை உங்களுக்கு....எங்கள் நம்பிக்கை எங்களுக்கு !
நன்றி !
யுகேஷ் பாபு சார்
உங்கள் எண்ணம் தவறு சார்...காலம் கனியும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்னை. அதுவரை என்னை பற்றி நீங்கள் இரு எண்ணம் கொண்டவராகவே இருக்கலாம்.
நிச்சயமாக மக்கள் திலகத்தை பற்றி அப்படி எல்லாம் வரும்காலத்தில் நான் கேட்கவோ, கூறவோ மாட்டேன் சார்......காரணம் நான் நடிகர் திலகத்தின் ரசிகன்...உண்மையை மறைக்கும் மறுக்கும் பழக்கம் எந்த ஒரு உண்மையான சிவாஜி ரசிகனுக்கும் கிடையாது !
நான் அரசியலிலும் இல்லை...கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. நாங்கள் மக்கள் திலகம் அவர்களை பற்றி பேச்சு வரும்போது அவரின் மதிப்பினை மாண்பினை பெருமையினை அறிந்துதான் பேசுகிறோம், பேசுவோம்..!
ஆனால் நீங்கள் கூறினீர்களே சற்று முன் " மக்கள் திலகம் என்று ஒருவர் இருந்தாரா என்று பிற்காலத்தில் உங்களை போன்றவர்கள் கேட்பார்கள் என்று..." அதனை செய்பவர்கள் இப்போதைய ஆட்சியாளர்கள் தான் சார்.....எந்த ஒரு ஆளும்கட்சி சுவரொட்டி அல்லது BANER பார்த்தால் பூதகண்ணாடி வைத்து பார்க்கும் அளவிற்கு மக்கள் திலகம் அவர்கள் புகைப்படத்தை ஸ்டாம்ப் சைஸ் அளவிற்கு மட்டுமே பயன்படுத்துவது நான் சொல்லிதான் தெரியவேண்டுமா ? பிற்காலத்தில் அவர்கள் வேண்டுமானால் கூறலாம் !
அப்படி பிற்காலத்தில் ஒரு சம்பவம் நடக்கும் பட்சத்தில்கூட உங்களுக்கு எள்ளளவும் சந்தேகமே வேண்டாம்...உங்களுடன் முதல் வரிசையில் நாங்களும் உண்மையை ஸ்தாபிக்க முழுவீச்சில் போராடுவோம் !! அப்படி ஒன்று பிற்காலத்தில் அரசியல் ரீதியாக நடந்தால்....அப்போது நாங்கள் இயற்க்கை எய்தாமல் இருந்தால் !
ஒரு சாதாரண எவருக்குமே பயன் இல்லாத வசூல் சமாசாரத்தை வைத்து இப்படி என்னை எடை போட்டுடீங்களே யுகேஷ் பாபு சார் !
I do not know what made you to think that I will stoop down to that low level ! It really pains the way you are making a wrong judgement always, about me, JUST for the simple reason that I am responding whenever there is a debatable point raised !!
I leave it to you sir !
Only time has to heal things and make you understand and then change your opinion !
Regards
RKS
யுகேஷ் சார்
உங்களை போல தான் நாங்களும்
எங்களுக்கு தெரிந்த ஒரே கலை உலக சித்தரும் ,
கலை அவதாரமும் ,
கலைத்துறை செழிப்புற தம்மை அற்பணித்தவரும்
மறந்துபோகவிருந்த சுதந்திரபோராட்ட த்யாகிகளை, மறவர்களை, சைவ வைணவ சித்தாந்த வேதாந்திகளை என்றும் தமிழகம் நினைவில் கொள்ளும்வண்ணம் தேசிய தெய்வீக எண்ணம் கெடாமல் காத்த கடவுளும் ,
தமிழர்களை, தரனியெங்கும் தலை நிமிர வைத்தவரும்,
இந்தியாவை அடக்கியாண்ட வல்லரசர்களை தமிழகம் தேடி ஓடி வரவைத்து உலகறிய மரியாதை செய்யவைத்த , கலைவாணியால் அருள் பெற்ற எங்கள் நடிகர் திலகம் தான் !
Rks
29.8.1970
flash back.
முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. \பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போதுரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்பு
சோ வின் காமெடி கலக்கல் என்று செல்லும் வேலையில் மக்கள் திலகம் -விஜயஸ்ரீ
சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .
அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .
மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை அமைந்தது