Swamy sir,
I hope this time we will group photo?
Printable View
Due to hectic works I could not come this thread for the past few days. When I gone through this, I noticed that NT Three Films are re - relasing this week. In fact I am coming to Chenni Sunday Morning . but sad part , I am leaving by afternoon train itself. I booked tkt 10 days back itself. If I know this I could have postpone from afternoon to night. At this moment I don't get night train ticket also. If possible, I wil postpone and will l try to be there at Shanti on sunday.
நடிகர் திலகத்தின் கடைசிப் படமான பூப்பறிக்க வருகிறோம், தற்போது நெடுந்தகடாக வெளியிடப் பட்டுள்ளது.
http://i872.photobucket.com/albums/a...overs/PPVF.jpg
http://i872.photobucket.com/albums/a...overs/PPVR.jpg
அன்புடன்
சென்னை சாந்தியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி, கட்டப்பட்டுள்ள மன்ற பேனர், மற்றும் பட பேனர்
http://i872.photobucket.com/albums/a...osterRRD01.jpg
http://i872.photobucket.com/albums/a...rs/fcbnr01.jpg
http://i872.photobucket.com/albums/a...s/BnrFront.jpg
ஞாயிறு மாலை திரு ஒய்.ஜீ.மகேந்திரா தம் நண்பர்கள் புடைசூழ வருவதாக செய்தி.
அனைவரும் அன்று சந்திப்போம்
அன்புடன்
நம்முடைய நடிகர் திலகம் இணையதளம் சார்பாக அரங்கின் வாயிலருகே வைக்கப் பட்டுள்ள பேனரின் பிரதி
http://i872.photobucket.com/albums/a...ntisitebnr.jpg
அன்புடன்
ராகவேந்தர் சார்,
நடிகர்திலகத்தின் கடைசிப்படமான 'பூப்பறிக்க வருகிறோம்' பட டிவிடி உரையையும், சாந்தி திரையரங்கத்தில் ரங்கதுரையின் கம்பீர தோற்றத்தையும், நமது இணையதளத்தின் அட்டகாசமான பேனரையும் பதித்து அசத்தி விட்டீர்கள்.
நடிகர்களின் பட்டியலில் தேசிய நடிகர் சசிகுமார் பெயரைக் காணோமே என்று பார்த்தால், கீழே அவர் படத்தையே போட்டு நிறைவாக்கி விட்டீர்கள். நடிகர்திலகத்தின் பத்து வித வித்தியாச கெட்டப் அருமை. இந்தப்படத்திலே அவர் தசாவதாரம் எடுத்து விட்டார் எனலாம்.
தங்களின் சீரிய முயற்சிகளுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.
அரங்க வாசலில் வைக்கப்பட்டிருந்த ரங்கதுரை பானருக்கு கூடை கூடையாய் மாலைகள், தெருவெங்கும் உடைக்கப்பட்ட தேங்காய்கள், பஸ்களையெல்லாம் நகர முடியாமல் நிறுத்திய பத்தாயிரம் வாலாக்கள், மாலைக்காட்சிக்கு நடந்த அமர்க்களத்தில் மவுண்ட் ரோடே சற்று நேரம் ஸ்தம்பித்து போனது உண்மை.
அரங்கத்தின் உள்ளே வழக்கம் போல் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு அனைத்தும் அரேங்கேறியது. நல்ல வேளையாக இம்முறை யாரும் அரங்கத்தினுள்ளில் சூடம் ஏற்றவில்லை. மதன மாளிகையில், அம்மம்மா, இன்குலாப் மற்றும் ஜிஞ்சினுக்கான் பாடல்களுக்கு ஆர்ப்பாட்டம் கட்டுக்கு அடங்காமல் போனது. அந்த பாடல் காட்சிகளின் போது திரை அமைந்திருக்கும் மேடையில் குறைந்தபட்சம் ஒரு ஐம்பது பேராவது ஆட்டம் போட்டிருப்பார்கள். வழக்கம் போல் நமது ஹப்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். இந்த ரசிகர்களின் ஆரவார காட்சிக்கு ஒய்.ஜி.மகேந்திரா அவர் குடும்பத்தினர், மோகன்ராம் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் வந்திருந்து முழுமையாக இருந்து ரசிகர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
அன்புடன்
ராஜபார்ட் ரங்கதுரை : சாந்தி : 5.6.2011 ஞாயிறு மாலை
'ராஜபார்ட்'டின் பதாகைக்கு மலர்மாலை அணிவிக்கப்படும் காட்சி
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3703.jpg
பூரண மலர் அலங்காரம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3726.jpg
167வது திரைக்காவியம் : 167 சிதறு தேங்காய்கள் உடைக்கும் வைபவம்
http://i1094.photobucket.com/albums/...GEDC3699-1.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3700.jpg
அன்புடன்,
பம்மலார்.
ராஜபார்ட் ரங்கதுரை : சாந்தி : 5.6.2011 ஞாயிறு மாலை
பத்தாயிரம் வாலா பட்டாசு அமர்க்களம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3707.jpg
அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3704.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3706.jpg
மக்கள் வெள்ளம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3705.jpg
அன்புடன்,
பம்மலார்.
ராஜபார்ட் ரங்கதுரை : சாந்தி : 5.6.2011 ஞாயிறு மாலை
அகன்ற திரையில் அண்ணலுக்கு ஆராதனை
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3716.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3720.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3721.jpg
இதயராஜாவின் ரோஜாக்களும் கலைநிலாவும் இணைந்து வழங்கிய குறும்பிரசுரம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3733.jpg
அன்புடன்,
பம்மலார்.
Thanks a lot Swamy and Ragavendran sir for your wonderful photos of RPR photos and Sunday gala photos.
Simply enjoying....
Cheers,
Sathish
Due to unavoidable, unable to postponed. really missed
ராஜபார்ட் ரங்கதுரை - சாந்தி திரையரங்க ஞாயிறு மாலை நிகழ்ச்சி தொகுப்புகள் அருமை. நன்றி திரு.முரளி ஸ்ரீநிவாஸ், திரு.பம்மலர்ர், திரு.ராகவேந்திரன்.
இந்த திரைப்படத்தை கண்டுகளித்த திரு. y g மகேந்திரா அவர்கள் தி ஹிந்து நாளிதழுக்கு அனுப்பிய கடித நகலை (ஒரு அருமையான விமர்சனம்) நமது திரி ரசிகர்கள் படிப்பதற்காக கீழே அளித்துளேன்.
A letter from YGEEM to Malathi of HINDU after seeing yesteryear classic movie RAJAPART RANGADURAI
Dear Ms Malathi
We missed u very much at "RAJAPART RANGADURAI" yesterday. This picture tho' a success in 1973 didnt leave much of an impression in those days--bcos SIVAJI was coming out with more phenomenal hits. Yesterday I realised how much we had underestimated this pcture.
The screenplay was so smooth, the atmosphere of the "Spl Nadagam" maintained so well, performances uniformly good and the highlight was the stunningly underplayed performance of SIVAJI. His body language ( a term that every Tom, Dick and Harry of an actor uses these days) was so typical of the professional drama artiste of those days- (Naturally so since he was part of that clan.himself ) While his portrayal of Rangadurai the man was so natural, as Rangadurai the actor he gave the correct melodramatic feel in the scenes where he donned a variety of special Nadagam roles. AND BELIEVE ME ANY SORT OF GETUP SUITS THIS AMAZING ACTOR. The gait, the exaggerated hand gestures, the lift of the eyebrows were all so typical.of a drama actor of yore. Forgetting the fact that I am a confirmed Sivaji Rasigan I tell u this man was God's gift to the acting fraternity in India,
Three scenes stand out as examples of classic subtle acting--
1) the scene where he just gives a pathetic but accusing look at the groom who cheats his sister-no dialogues at all !
2) his controlled,and subdued emotional outburst at the groom in front of his sister's funeral pyre and
3) the best where his brother wants him to act like a rich brother in front of his father in law---the pathos in his voice when he asks Srikanth "Yen Thambi Ennai Un Annan Mathiri Nadikkava Solre", just leaves u gasping.
This is subtelty at its best not to be confused with present day actors and directors who call non-acting as subtle acting--wooden faces with no modulation and the same monotonous sing song tone mouthing such "profound" dialogues like "Yen" "Ethukku" "Eppadi" in instalments. I do agree change is the order of the day but that will never make the Petronas Tower Bulding a better architectural creation than the TaJ Mahal. SIVAJI IS THAT TAJ MAHAL OF ACTING--A CREATION OF GOD THAT WILL BE ADMIRED FOREVER AND EVER--AN ACTOR FOR ALL SEASONS AND ALL THE RIGHT REASONS !!
And what a part the trio of MSV, KANNADASAN and TMS played to embellish the film. Melody, Lyrics and Singing at its very best!! What has this country done for these three by way of recognition ?--NOTHING..And here's the best -SIVAJI was never given the NATIONAL AWARD for acting in his lifetime. (OF course looking at the list of those who have got it in the recent past--thank God he didnt get it !!) Compromises apart this country has not honored him the way it should have and FOR THAT ALONE I AM ASHAMED TO BE AN INDIAN.
Sorry but I just felt like sharing this outburst with someone who has respect for real talent and values. IF BY CHANCE THE FRIDAY REVIEW HAS A "LETTER TO THE EDITOR" COLUMN I WOULD BE GRATIFIED IF THEY COULD PUBLISH THIS
Thank U and Regards
Y GEE MAHENDRA
Dear friends,
05.06.2011, Chennai Shanti, again became festive and fans restive. Those who assemble at NT's films screening at theatres, can't escape from being got emoted, which was proved once again yesterday. Rajapart Rangadurai took every one of us with him into nostalgia. For those of us who witnessed during the first release, it was a re-enactment of the festivities, in fact even better than the first release celebrations. As Pammalar has substantiated this fact with his images (hope me too share some images shortly), no body was exception including the elite such as YGM and his family, Mohan Raman Sir, Krishnan Sir and so on. In fact YGeeM has been impressed so much that he has addressed a letter under copy to me, the gist of which, I am producing below.
Thank you, YGeeM Sir,Quote:
This picture tho' a success in 1973 didnt leave much of an impression in those days--bcos SIVAJI was coming out with more phenomenal hits. Yesterday I realised how much we had underestimated this pcture. The screenplay was so smooth, the atmosphere of the "Spl Nadagam" maintained so well, performances uniformly good and the highlight was the stunningly underplayed performance of SIVAJI. His body language ( a term that everyTom, Dick and Harry of an actor uses these days) was so typical of the professional drama artiste of those days- (Naturally so since he was part of that clan.himself ) While his portrayal of Rangadurai the man was so natural, as Rangadurai the actor he gave the correct melodramatic feel in the scenes where he donned a variety of special Nadagam roles.AND BELIEVE ME ANY SORT OF GETUP SUITS THIS AMAZING ACTOR . The gait, the exaggerated hand gestures, the lift of the eyebrows were all so typical.of a drama actor of yore. Forgetting the fact that I am a confirmed Sivaji Rasigan I tell u this man was God's gift to the acting fraternity in India, Three scenes stand out as examples of classic subtle acting--1) the scene where he just gives a pathetic but accusing look at the groom who cheats his sister-no dialogues at all ! 2) his controlled,and subdued emotional outburst at the groom in front of his sister's funeral pyre and 3) the best where his brother wants him to act like a rich brother in front of his father in law---the pathos in his voice when he asks Srikanth "Yen Thambi Ennai Un Annan Mathiri Nadikkava Solre", just leaves u gasping.
This is subtelty at its best not to be confused with present day actors and directors who call non-acting as subtle acting--wooden faces with no modulation and the same monotonous sing song tone mouthing such "profound" dialogues like "Yen" "Ethukku" "Eppadi" in instalments. I do agree change is the order of the day but that will never make the Petronas Tower Bulding a better architectural creation than the TaJ Mahal. SIVAJI IS THAT TAJ MAHAL OF ACTING--A CREATION OF GOD THAT WILL BE ADMIRED FOREVER AND EVER--AN ACTOR FOR ALL SEASONS AND ALL THE RIGHT REASONS !!
And what a part the trio of MSV, KANNADASAN and TMS played to embellish the film. Melody, Lyrics and Singing at its very best!! What has this country done for these threeby way of recognition ?--NOTHING..And here's the best -SIVAJI was never given the NATIONAL AWARD for acting in his lifetime. (OF course looking at the list of those who have got it in the recent past--thank God he didnt get it !!) Compromises apart this country has not honored him the way it should have and FOR THAT ALONE I AM ASHAMED TO BE AN INDIAN.
Raghavendran
சென்னை சாந்தியில் 05.06.2011 ஞாயிறு மாலைக் கொண்டாட்டக் காட்சிகளின் சில படங்கள்
அலங்காரம் கலையாத மலர் மாலை இங்கே - அணிவிக்க அழைக்கின்றோம் அண்ணனை - எங்கே
என்று கூறாமல் கூறும் மாலைகள் தயாராக...
http://i872.photobucket.com/albums/a...nigarlands.jpg
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு என்று அண்ணன் பதிலளித்து நம்முள் வாழ்கிறார் என்று கூறாமல் கூறும் அன்பு உள்ளங்கள் மாலைகளை அணிவிக்க அணிவகுத்து நிற்கும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...arations01.jpg
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் - உதய காலம் வரை உத்தமர் சேவைகளாம் என்று ரசிகர்கள் அரங்கினுள் ஆர்ப்பரிக்கும் காட்சிகள்
http://i872.photobucket.com/albums/a...fansgala04.jpg
http://i872.photobucket.com/albums/a...fansgala03.jpg
தொடரும்
அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் நம்மை வளர்த்தார். தாயென்றும் தந்தையென்றும் அவர் நம்மை வளர்த்தார். அவர் நமக்காக வாழ்கின்ற உள்ளம் அல்லவோ என்று ரசிகர்கள் உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்குடன் ஆர்ப்பரிக்கும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...fansgala08.jpg
பாரதமே என்னருமை தாயகமே என்று இறுதி வரை வாழ்ந்து காட்டிய தேசிய திலகம், விடுதலை வீரர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் போது நாமும் தேசீய உணர்வுடன் அல்லவா பொங்கி எழுகிறோம்.
http://i872.photobucket.com/albums/a...fansgala10.jpg
அன்புடன்
நரசு ஸ்டூடியோஸ் தயாரித்து நடிகர் திலகம் நடித்த ஸ்ரீ வள்ளி திரைப்படம் நெடுந்தகடு வடிவில் வெளியிடப் பட்டுள்ளது.
http://i872.photobucket.com/albums/a.../SriValliF.jpg
http://i872.photobucket.com/albums/a.../SriValliR.jpg
அன்புடன்
Thanks a lot Mr. Ragavendra sir for RPR Sunday's gala photos.
I hope Barrister Rajinikanth will visit soon at Shanthi and make us happy.
Cheers,
Sathish
Dear raghavendra sir and pammal sir,
thankyou very much for gala photos.
dear murali sir,
thanks for the short and sweet note on sunday alapparai.
Hope barrister will get arousing and unforgettable welcome.
பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் படங்களை மறுபடியும் திரை அரங்கத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். அதுவும் சக ஹப் நண்பர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. கிருஷ்ணாஜி, திரு. ராதா அவர்களுடன் காணக் கிடைத்தது இன்னும் பெரிய கொடுப்பனை.
படம் 1973 இறுதியில் வெளிவந்த போது, நான் அன்று படித்துக் கொண்டிருந்த பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், 1974 ஏப்ரல் மாதத்தில், இந்தப் படத்தின் அற்புதப் பாடலான, "இன்குலாப் ஜிந்தாபாத்" பாடலைப் பாடியது நினைவுக்கு வருகிறது.
1974-க்குப் பிறகு, கடந்த ஞாயிறு அன்றுதான், ரங்கதுரையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும், படம் முதலில் வெளிவந்தபோது கிடைத்த வரவேற்பு - ஏன் அதை விட மேலான உணர்ச்சிமயமான வரவேற்பு - அன்று கிடைத்தது - இது, இன்றும், என்றும், நடிகர் திலகத்துக்கு மட்டுமே சாத்தியம்.
நடிகர் திலகம் ரங்கதுரை என்ற நாடக நடிகனின் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக, சித்தரித்திருந்தார். அவர் எந்தப் படம் நடித்தாலும், ஏதாவது ஒரு காட்சியிலாவது, அவரது பிரத்தியேக ரசிகர்களுக்கு நடித்து விடுவார் - கதாபாத்திரத்தை சிதைத்து விடாமல். இந்தப் படத்தில், அவரது ட்ரேட் மார்க் ஸ்டைல் - "மதன மாளிகை" பாடலில் மட்டுமே அவருக்கு அந்த வாய்ப்பு அமையும் - இத்தனைக்கும் - ஒரு கட்டத்தில் அவர் சாதாரணமாக நின்று கொண்டிருப்பார். அந்தக் காலத்திலேயே, கைத்தட்டல்களை அள்ளிய கட்டம் -அன்றும் அது குறையவில்லை.
ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப் பற்றி சுருக்கமாக அழகாகப் பதிவிட்ட திரு. முரளி அவர்களுக்கும், அங்கு நடந்த அளப்பரைகளை படத்திற்கு வராதவர்களுக்கு, அற்புதமாகக் காட்சிக்கு விருந்தாக்கிய, திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களுக்கும் கோடி நன்றிகள். திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் திருமதி. மாலதி ரங்கராஜன் (ஹிந்து நாளிதழ்) அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் சூட்டோடு சூடாகப் பதிவிறக்கம் செய்த திரு. ராகவேந்தர் அவர்களுக்கு மற்றுமோர் நன்றி.
எத்தனையோ படங்களுக்கு அவருக்கு பாரத் அவார்ட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், கண்டிப்பாக, இந்தப் படத்திற்கும் அது அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால், இல்லை - என்னும் போது, திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் குறிப்பிட்டது போல், இந்தியனாகப் பிறந்ததற்கு உண்மையிலேயே வெட்கமாயிருக்கிறது.
அன்புடன்,
பார்த்தசாரதி
05.06.11 அன்று மாலை சாந்தியில் நம் ஹப் நண்பர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. கிருஷ்ணாஜி, திரு.பார்த்தசாரதி உடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்களின் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு சொல்லில் அடங்காது, குறிப்பாக மதன மாளிகையில், அம்மம்மா, இன்குலாப் மற்றும் ஜிஞ்சினுக்கான் பாடல் காட்சிகளின் போது ரசிகர்களை நிர்வாகிகள் மிகவும் கஷ்ட்டப்பட்டு கட்டுபடுத்தினார்கள், பலமுறை இந்த படத்தை பார்த்த போதும் நம் ரசிகர்களின் அளப்பரையோடு பார்க்கும் போது நம் மகிழ்ச்சிக்கு அளவேது?
ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வை படம் பிடித்து இங்கு நம் பார்வைக்கு வைத்த திரு ராகவேந்தர் மற்றும் திரு பம்மலார் அவர்களுக்கு நம் நன்றிகள்.
பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்த சதீஷ், கார்த்திக, ரங்கன், ராதாகிருஷ்ணன், பம்மலார், பார்த்த சாரதி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.
மேலும் இது போன்ற வாய்ப்புகள் அமையும் என்று நம்புவோம்.
அன்புடன்
பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள் - 01
எந்த ஒரு சமய நிகழ்ச்சி அல்லது பண்டிகை என்றாலும் உடனே மக்கள் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம். எப்படி விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்டு மக்கள் வணங்கி தங்கள் நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார்களோ, அதே போன்று முழுமுதற் பாடலாக அல்லது படமாக நடிகர் திலகத்தின் படங்கள் அல்லது பாடல்களே இடம் பெறுகின்றன. குறிப்பாக திருவிளையாடல். அவ்வாறு பக்தி மணம் கமழும் பாடல்களை நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து இங்கே நாம் பகிர்ந்து கொள்வோம்.
தொடக்கமாக, மிகவும் அபூர்வமான ஒரு பக்திப் பாடல். தற்போதைய தலைமுறை ரசிகர்கள் பலர் இப்பாடலைக் கேட்டிருக்க அல்லது பார்த்திருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம், அதனால் இப்பாடலை அறிமுகப் படுத்துவது பெருமையாகவும் உள்ளது.
கிட்டத்தட்ட ராமாயணத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம் நானே ராஜா. கல்பனா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் டி.ஆர்.ராம்நாத். அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளும். இப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டி.எம்.எஸ். குரல் கொடுத்துப் பாடியிருக்கும் ஒரு பக்திப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. வேறொரு தலைப்பில் இதே படத்தில் இடம் பெற்ற மிகப் பிரபலமான பாடலான மந்த மாருதம் தவழும் பாடல் இடம் பெற உள்ளது.
இங்கே இடம் பெறும் பக்திப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்த ஆதியந்தம் இல்லா அருள்ஜோதியே என்ற பாடலாகும். தனிப்பட்ட முறையில் இப்பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாகும்.
இப்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றமும் ஒய்யாரமும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.
இதோ அந்த பக்திப் பாடல்
http://www.youtube.com/watch?v=la5-yM9mPQE&
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்
கிறங்க வைக்கும் பாடல் மயங்க வைக்கும் ராகம் - 01
காதலியிடம் சிருங்கார ரசம் கொட்டும் பாடலாகட்டும், வார்த்தைகளில் போதை கலந்து கிறங்க வைக்கும் பாடலாகட்டும், எந்த விதமான சூழ்நிலைப் பாடலாயினும் தன்னுடைய நடிப்பால் அதை சிறக்கச் செய்யும் நடிகர் திலகத்தின் பாடல்களில் இந்த வகைப் பாடல்களை இங்கே நாம் அலசலாம். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல் நானே ராஜா படத்தில் நம்மை அள்ளிக் கொண்டு போகும் பாடலான மந்த மாருதம் பாடல் இங்கே இடம் பெறுகிறது. இந்தப் படப்பாடல்கள் கடைசியில் சிறிது முன்பாகவே முடிவது நமக்கு வருத்தமே என்றாலும் கிடைத்த வரையில் மன நிறைவு கொள்வோம் என்கிற எண்ணத்தில் இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது.
பாடல் - மந்த மாருதம் தவழும்
குரல் - டி.எம்.சௌந்தரராஜன்
இசை - டி.ஆர்.ராம்நாத்
படம் - நானே ராஜா
http://www.youtube.com/watch?v=MfdZ03zVK1A&
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்
ராகவேந்தர் சார் மற்றும் பம்மலார் சார்,
நடிகர்திலகத்தின் 'ராஜபார்ட் ரங்கதுரை' காவியத்தின் ஞாயிறு விழாக்காட்சிகள் அனைத்தும் அருமை. மிக அழகாக படமெடுத்து, எங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கி விட்டீர்கள். நிச்சயம் அவற்றைப்பார்க்கும்போது பழைய காலங்கள் நினைவுக்கு வந்து, இப்போது நாம் அங்கில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகின்றது.
அரங்கத்துக்கு வெளியே நிகழ்ந்த கோலாகலங்களையும், அரங்கத்தின் உள்ளே நடந்த அலப்பரைகளையும் காட்சி வடிவில் தந்து விட்டீர்கள். சாந்தி வளாகத்தினுள் ஒரு படம் கூட எடுக்கப்படவில்லை என்பது மட்டுமே குறை. அதை பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் ஈடு செய்து விட்டன.
சாலைகளில் செல்வோரையும், பேருந்துகளில் செல்வோரையும் கவனத்தைக் கவர சரவெடிகள் அவசியம்தான். ஆனால் 176 தேங்காய்கள் உடைப்பு என்பதுதான் சற்று நெருடுகிறது. அந்தப்பணத்தை மன்றத்தினர் இன்னும் சற்று பயனுள்ளதாக செலவழித்திருக்கலாம். உதாரணமாக, கவுண்ட்டரில் இருந்து டிக்கட் வாங்கிக்கொண்டு வெளியே வருவோருக்கு அவ்விடத்தில் மன்றத்தினர் நின்று இனிப்புகள் வழங்கலாம். நாங்கள் மன்ற செயல்பாட்டில் இருந்தபோது அப்படி செய்வது வழக்கம். பாதுகாப்புக்கருதி தீபாராதனையை ரசிகர்கள் கைவிட்டது மகிழ்ச்சியான விஷயம்.
முரளிசார், பார்த்தசாரதி சார் மற்றும் ராதா சார்,
ஞாயிறு மாலை அரங்க நிகழ்வுகள் பற்றிய உங்களின் சுருக்கமான வர்ணனைகள் மனதைக்கவர்ந்தன. நன்றி.
ஒய்.ஜி.மகேந்திரனின் கடிதத்தைப் பதிவேற்றிய சந்திரசேகர் சார் அவர்களுக்கும் நன்றி.
எல்லாம் சரி, நமது உறுப்பினர்கள் (Hubbers) அனைவரும் சேர்ந்து எடுத்து இங்கு பதிப்பதாக வாக்களித்த குரூப் போட்டோ என்னவாயிற்று..??. அதிலும் இம்முறை கிட்டத்தட்ட எல்லோரும் ஒன்றினைந்து படத்தைப்பார்த்திருக்கிறீர்கள்.
அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களுக்கு,
திரு. ஒய்.ஜி.எம். அவர்களின் கடிதத்தை சூட்டோடு சூடாகப் பதிவிட்டீர்கள். அவசரத்தில், உங்கள் பெயரைச் சொல்வதற்கு பதில், திரு. ராகவேந்தர் பெயரைக் குறிப்பிட்டு விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.
திரு ஒய்.ஜி.எம். அவர்களுக்கும் ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.
நன்றியுடன்,
பார்த்தசாரதி
நான் இந்த ஹப்-க்கு வருவதற்கு முன்னால் சென்னையில் 5 வருடங்கள் இருந்த போது எனக்கு இது போன்ற எந்த தொடர்புகளும் கிடைக்காமல் போனதே என வருத்தமாக இருக்கிறது ..ஏனென்றால் அப்போது இண்டு இடுக்குகளில் எங்கு நடிகர் திலகம் படங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனியாக சென்று உட்கார்ந்து ரசித்திருக்கிறேன் ..சாந்தி தியேட்டருக்கு பல முறை சென்று சுவரில் எழுதப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் பட வரிசையை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன் :lol: எந்த அரங்கிலும் நடிகர் திலகம் சம்பந்தமாக எந்த நிகழ்வு நடந்தாலும் கூட வர நட்புகள் யாருமின்றி சென்று வந்து கொண்டிருந்தேன் அப்போது மன்றம் அறிமுகமாகி இந்த நட்புகள் கிடைத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்குமே என இப்போது மனம் ஏங்குகிறது
Heh, unggalukku appadi. Here the are not even re-screening the films. Apart from latter films, I had never seen any of them on big screen :cry:
திரு பார்த்தசாரதி அவர்களே, நன்றி நமக்குள் யாருக்கு சொன்னாலும் ஒன்றுதான். தவறில்லை.
திரு கார்த்திக் அவர்களே நன்றி.
இத்தகைய அருமையான் ஒரு விமர்சனத்தை தி ஹிந்து நாளிதழுக்கு எழுதிய நம்மைபோன்ற ஒரு தீவிர ரசிகர் திரு y .g . மகேந்திரா அவர்களுக்குத்தான் இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்லவேண்டும்.
ஜோ சார்,
அவ்வாறு நீங்கள் வந்திருந்தபோது 'சாந்தி'யில் நின்றவரகளிடம் பேச்சுக்கொடுத்து பழக்கம் ஏற்படுத்தியிருந்தாலே, அங்குள்ள ரசிகர் வட்டத்தில் இணைந்திருப்பீர்கள். ஆரம்ப காலத்தில் நானும் அப்படித்தான். அங்கு சிறு சிறு குழுக்களாக ரவுண்ட் கட்டிப்பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் தலையை விட்டு, கவனிக்க ஆரம்பித்து, பின்னர் பேச்சில் பங்குகொண்டு, படிப்படியாக தீவிர ரசிகர்களின் தொடர்பு ஏற்பட்டு, பின்னர் நானும் அங்கு முக்கியஸ்தர்களில் ஒருவனாக ஆனதும், மன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, பட வெளியீடுகளில் முக்கிய பங்காற்றியதும் வாழ்வின் வசந்த காலங்கள்.
இங்கே கூட சில பக்கங்களுக்கு முன் ராகவேந்தர் அவர்களிடம் பழைய சாந்தி நண்பர்கள் பலரைப் பற்றி விசாரித்ததும், அதற்கு அவர் விவரமாக பதிலிறுத்ததையும் பார்த்திருப்பீர்கள். இன்றைக்கும் சென்னை செல்லும்போதெல்லாம் தவறாமல் சந்திக்கும் பிரமுகர்களில் "மாப்பிள்ளையும்" (திரு.வேணுகோபால் சார்) ஒருவர்.
சென்னையிலும் ஒரு கிளை அலுவலகத்தை ஏற்படுத்தாத என் நிறுவனத்தை இப்போது சபிக்கிறேன். அது மட்டும் நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
திரு Y.G. மகேந்திரா அவர்களின் கடிதம் நாளைய அதாவது 10.06.2011 தேதியிட்ட, ஹிந்து நாளிதழில், வெளியாக உள்ளது. அதன் இணைய இணைப்பைக் கீழே காண்க.
http://www.thehindu.com/arts/cinema/article2090497.ece
அன்புடன்
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 02
இந்தப் பாடல் காதலை வெளிப்படுத்துவதாக அமைந்தாலும் இருவர் ஒரு பெண்ணிடம் தம் காதலை கூறுவதாக அமைக்கப் பட்டது. மிகச் சிறந்த நகைச்சுவைப்படமான மணமகன் தேவை படத்தில் இடம் பெற்றது. நடிகர் திலகத்திற்கு கண்டசாலா பாடிய பாடல்களில் ஒன்று. உடன் பாடுபவர் பி.பானுமதி. டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு குரல் கொடுத்திருப்பவர் பிதாபுரம் அவர்கள். இசை ஜி.ராமநாதன். மிகவும் அருமையான ஹிட் பாடல். சூழ்நிலையை பாடலே விளக்கும்.
http://www.youtube.com/watch?v=RovoI4VGj6k
அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்
கடந்த ஞாயிறு அன்று அனைத்து சாலைகளும் சென்னை சாந்தி நோக்கி என்றால் மிகை ஆகாது . அந்த அளவுக்கு மக்கள் வெள்ளம் நமது வலைபதிவர்களுடன் கழித்த நேரம் சுமார் 2 மணி நேரம் மட்டுமே ஆனால் இனிமையான நேரம் 22 /12 /1973 ரங்கதுரை அவர்கள் முதன் முதலாக திரையில் தோன்றிய நேரம் நினைவுக்கு வந்தது அன்று சனி கிழமை என்று நினவு .எனக்கு அப்போது வயது 13 திருநெல்வேலி MDT ஹிந்து ஹை ஸ்கூல் 9th ஸ்டாண்டர்ட் படித்து கொண்டு இருந்தேன் பள்ளி அன்று விடுமுறை என்னுடைய கிளாஸ் டீச்சர் திரு வானமாமலை அவர்கள் ஒரு சிவாஜி ரசிகர் .வகுப்புகள் எடுக்கும் போது (45 நிமிடங்கள் ஒரு வகுப்பு ) குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் திரு சிவாஜி அவர்கள் பற்றி பேசுவார் அவர்கள் முந்தைய தினம் "நாளை நடிகர் திலகத்தின் புதிய திரை படம் வர இருப்பதால் திங்கள் கிழமை 10 நிமிடங்கள் ராஜபார்ட் ரங்கதுரை பற்றி விவாதிப்போம் " என்று கூறி விட்டு சென்று விட்டார் அதனால் எப்படியாவது திரை படம் பார்த்து விடவேண்டும் என்று பிடிவாதம்
திருநெல்வேலியில் எல்லோருமே சனி அன்று தாமிரபரணியில் எண்ணெய் குளியல் எடுப்பது வழக்கம் எங்கள் வீட்டில் எனக்கும் என் உடைய தம்பிக்கும் கையில் எண்ணெய் கிண்ணமும் சியக்காய் தூள் கொடுத்து அனுப்பினார்கள் அப்போது தாமிரபரணியில் மழை காலம் முடிந்து வெள்ளம் வடிந்து நீர் கரை ஓரம் ஓடி கொண்டு இருந்தது. அன்று ராகு காலம் 9 முதல் 10 .30 வரை. ஆகையால் திரைப்படம் 8 .55 க்கு ஆரம்பித்து விடுவார்கள் என்றும் நானும் எனது தம்பியும் இன்னொரு நண்பர் கனகராஜ் (திருநெல்வேலி அண்ணாமலை ஸ்டோர் owner ) (அவரும் சிவாஜி ரசிகர்) குளிக்காமல் நேராகவே பார்வதி திரை அரங்கு சென்று விட்டோம் . பாதி டிக்கெட் கொடுத்து கொண்டிருக்கும் போது (தரை டிக்கெட் 45 காசுகள் ) முதல் பாட்டு போட்டு விட்டார்கள் அடித்து பிடித்து உள்ளே சென்று நின்று கொண்டே பாதி படம் பார்த்தோம் இடைவேளைக்கு பிறகுதான் உட்கார இடம் கிடைத்தது கையில் எண்ணெய் கிண்ணமும் சியக்காய் தூள் வேறு யாரும் அதை தட்டிவிடாமல் பார்த்து கொண்டே படம் பார்த்தோம் பிறகு மதியம் 1 மணிக்கு சென்று டவுன் குறுக்குதுறை அருகே சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு சென்றோம் சுகமான மலரும் நினைவுகள் . நடிகர் திலகத்தின் tobe ஓர் நாட் to பே விசில் காதை பிளந்தது அப்போது அதை பற்றி விவாதம் குரல் நடிகர் திலகமா அல்லது வேறு யாரவது ஒருவர் உடையதா என்று . அப்போது மதி ஓளி பத்திரகையில் வேறு அது நடிகர் திலகம் குரல் தான் ரீ ரெகார்டிங் ஜ.ஜ. மாணிக்கம் ஓலிபதிவு குரலை மாற்றி உள்ளது ஆங்கில வேடத்திற்கு என்று மதி ஓளி சண்முகம் எழுது விட்டார்கள் . பசுமையான இனிமை யான நினைவுகள்
அன்பு கிருஷ்ணாஜீ,
தங்களுடன் அன்று படம் பார்த்தது சுகமான அனுபவம் என்றால், 73ல் தாங்கள் அனுபவித்தது அதை விட சுவாரஸ்யமானது. புராணத்தில் நாரதர் எண்ணெய்க் கிண்ணத்தை வைத்துக் கொண்டு நாராயணனை மறந்தது போல் அல்லாமல், தாங்கள் நம்முடைய ஆண்டவனையும் மறக்காமல் எண்ணெய்க் கிண்ணத்தையும் மறக்காமல் படம் பார்த்தது நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுவையான அனுபவம் இருக்கும் என்பது திண்ணம்.
ஷேக்ஸ்பியர் நாடக வசனத்தைப் பேசியவர், பேராசிரியர் சுந்தரம். இவர் பாடகி எஸ்.ஜானகியின் கணவர்.
அன்புடன்
27.05.2011 அன்று மாலை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களின் உரையாற்றும் நிழற்படம்
http://www.facebook.com/photo.php?fb...64145250307603
http://www.facebook.com/photo.php?fb...64145250307603
அதிலேயே மற்ற நிழற்படங்களையும் பார்க்கலாம். FACE Book இணைய தளத்தில் உள்ளதால், அநேகமாக பயனாளர் குறியீடு தேவைப்படலாம்.
அன்புடன்
கிருஷ்ணாஜி,
வெகு நாள் கழித்து வந்தாலும் சுவையான மலரும் நினைவுகளோடு வந்ததற்கு இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் 22-12-1973 அன்று சனிக்கிழமைதான். சில வாரங்களாக விகடனில் மூங்கில் மூச்சு என்ற பெயரில் ஒரு தொடர் வெளியாகிறது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த சுகா என்பவர் [இவர் காங்கிரஸ் பேச்சாளார் தமிழ் கடல் நெல்லை கண்ணனின் மகன்] தன் நெல்லை அனுபவங்களை அதிலும் குறிப்பாக தியேட்டர் அனுபவங்களை எழுதி வருகிறார். இந்த வாரம் கூட நெல்லையில் வெளியான பழைய படங்களைப் பற்றியும் அந்த ஊர் மனிதர்கள் எப்படி அந்தப் படங்களை துரத்தி துரத்தி பார்த்தார்கள் என்பதை சுவைப்பட எழுதியிருக்கிறார். அதை படித்து விட்டு இங்கே வந்தால் நீங்கள் பார்வதி தியேட்டர் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை என் அனுபவம் வேறு வகையானது. படம் வெளியான நாள் டிசம்பர் 22 அன்றுதான் பள்ளிக்கூடத்தில் அரை வருட தேர்வுகள் முடியும் நாள். எனவே ஓபனிங் ஷோ போக முடியவில்லை. மதுரையில் சென்ட்ரலில் ரிலீஸ். சாதாரணமாகவே அனைத்து நடிகர் திலகத்தின் படங்களையும் ஓபனிங் ஷோ பார்த்து விடக் கூடிய அன்று கல்லூரி மாணவனாக இருந்த என் கஸின் இந்தப் படத்தையும் ஓபனிங் ஷோ பார்த்து விட்டான். படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் [தேவி சித்ரம்] வேறு அவனது நண்பனின் உறவினர் என்பதால் வேலை எளிதானது. மீண்டும் அன்றிரவு காட்சியும் வேறு நண்பர்களுடன் போய் விட்டான். எனக்கு பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவல். படத்திற்கு நல்ல ரிப்போர்ட் என்பதோடு மட்டுமல்லாமல் தியேட்டர் எங்கள் வீட்டிற்கு அருகாமையிலும் என்பதால் அடிக்கடி தியேட்டர் வாசலில் போய் பார்க்க பார்க்க ஆவல் அதிகரித்துக் கொண்டே போனது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் சோதனையாக பார்க்க முடியவில்லை. திங்களன்று போகலாம் என்று வீட்டில் ஞாயிறு அன்றே அனுமதி வாங்கியாகி விட்டது.
திங்களன்று காலை அதே நினைவோடு எழுந்து மத்தியான காட்சிக்கு காலையிலே மானசீகமாக தயாராகி கொண்டிருக்கும் போது வானொலி செய்தி வருகிறது. நோய்வாய்ப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியார் ஈ.வெ.ரா. காலமானார் என்று [24-12-1973 ]. ஐயோ இன்று படத்திற்கு போக முடியாது போலிருக்கே என்று ஒரே கவலை, வருத்தம். தியேட்டர் பக்கம் சென்று பார்த்தால், காட்சிகள் இருக்குமா என்பதைப் பற்றிய அறிவிப்பு ஒன்றுமில்லை. காலையிலிருந்து மதியம் ஒரு மணி வரை எத்தனை முறை போய் தியேட்டர் பக்கம் போய் வந்தேன் என்பதற்கு கணக்கே இல்லை.
ஒரு மணிக்கு மேல் அம்மாவை கன்வின்ஸ் செய்து அவர்களையும் அழைத்துக் கொண்டு போனேன். படம் வெளியான முதல் ஒரு சில வாரங்களில் சென்ட்ரலில் பெண்களை பின் கேட் வழியாகவே உள்ளே அனுமதிப்பார்கள். அதன் வழியே உள்ளே சென்றால் நல்ல கூட்டம். கேட் கீப்பரிடம் ஷோ இருக்கிறதா என்று கேட்ட போது இருக்கிறது என்று பதில் வந்தாலும் மனதில் ஒரு கலக்கம் .தீடிரென்று காட்சி ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வருமோ என்ற பயம். டிக்கெட் வாங்கி உள்ளே சென்று உட்கார்ந்த பிறகும் பயம் விலகவில்லை. படம் தொடங்கி சற்று நேரம் வரை அதே நினைப்பு. பிறகு படத்தில் லயித்து விட்டேன், இடைவேளை வருகிறது. மீண்டும் அதே உணர்வு. அம்மா வேறு முன்பு நடந்த ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் [ இப்படிதான் தேவியில படம் பார்த்துக் கொண்டிருந்தோம். நேரு போய் விட்டார் என்று நியூஸ் வந்தது. படத்தை நிறுத்திட்டான்]. இடைவேளை சீக்கிரம் முடியாதா என்று ஒரு பதைபதைப்பு. இடைவேளை முடிந்ததும் படம் ஆரம்பித்தது, தொடர்ந்தது, நிறைவடைந்தது. படத்தை ரசித்தேன் என்றாலும் இந்த டென்ஷன் படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்திருந்ததால் இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் நண்பர்களுடன் சென்று படத்தை பார்த்தேன் ரசித்தேன்.
உங்கள் அனுபவத்தை படித்தவுடன் என் அனுபவம் நினைவுக்கு வந்தது. மீண்டும் நன்றி.
அன்புடன்
ஜோ போன்ற பெரியாரிஸ்ட்களுக்கு sorry.