http://i61.tinypic.com/o91w75.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரி பாகம் 15 துவங்கி இருக்கும் நண்பர் திரு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் சார்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...b32ab7dcfdd349
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சுந்தரராஜன் சார்.
மதுரையில் சிவாஜி மன்றத்தின் சார்பில் நீங்கள் செய்த நற்பணிகளுக்கு தமிழ் புத்தாண்டு அன்று பாராட்டு தெரிவித்திருந்தேன். கவனித்தீர்களா? தங்களின் அவன் ஒரு சரித்திரம் தொடரும், கவியரசர் கண்ணதாசன் தேவிகா பற்றி கூறியதை விளக்கியிருந்த விதமும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
காதல் என்றொரு நாடகத்தை
என் கண் வழி மேடையில் நடித்ததில்லை
கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை
இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்
எனக்கு எனக்கென்று இருந்த இளமையை
தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்
என்னைக் கொடுத்து விட்டேன்
என்னைக் கொடுத்து விட்டேன்
கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை
என் காலம் கடந்து வந்தேன்
மாலைப் பொழுதில் இளம் தென்றல்
தொடாத மலராய் நானிருந்தேன்
மன்னன் வந்த அந்த வேளையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன்
மடியில் ஏன் விழுந்தேன்
https://youtu.be/Mn_pLcD1yX8
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரித்தோடி வரும் மாது
ஓடும் உனை நாடும் எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும் உன்தன் பதில் கொண்டு வந்து போடும்
இது தான் அந்த நிலவோ என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை என்று போராடும் கண்ணில் வண்டு
வருவார் இன்று வருவார் என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும் என்று வழி பார்க்கும் காதல் செண்டு
முதல் நாள் இரவில் தனியே என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞ்சம் கவனி என்று இழுத்தோடி வரும் கண்கள்
அருகில் மிக அருகில் கண்டு அணைமீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும் இன்று அலைபாய்ந்து வரும் உள்ளம்
https://youtu.be/-kFMG2nMl0I
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா
காண்பதில் தான் இன்பம் என் தோழா
இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை என் தோழா
இன்பம் உண்டாவதில்லை என் தோழா
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா
கிட்டுவதே இல்லை என் தோழா
உனை ஈன்ற தாய் நாடு ஆஆஆஆஆஆஆஆஆஆ
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
உண்டாகும் என்றே சொல் என் தோழா
நாடோடி மன்னன்
Singers: Seerkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Pattukottai Kalyanasundaram
இயற்றியவர்: சி.ஏ. லக்ஷ்மணன்
Music: S.M. Subbiah Naidu - இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
Year: - ஆண்டு: 1958
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...5b237fd102716f
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
பாடல் :கண்ணதாசன்
இசை :கே .வி .மகாதேவன்
பாடியவர் :டி .எம் .சௌந்தராஜன்
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...8d94039fb06c07
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
ரிக்ஷாக்காரன் படத்துக்காக தேசிய அளவில் சிறந்த நடிகர் விருதான "பாரத்" விருதைப் பெற்ற மக்கள் திலகம், விருதுடன்...
https://scontent-sin.xx.fbcdn.net/hp...54&oe=55E05F85
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
கணேசனுக்கு முன்பாகவே பத்மினிக்கு நன்கு அறிமுகமானவர் எம்ஜிஆர். ‘மோகினி’ சினிமாவில் நாட்டியம் ஆட, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்றனர் திருவாங்கூர் சகோதரிகள். அந்த நொடி முதலே, எம்.ஜி.ஆர். - பத்மினி நட்பு அரும்பு விட்டது.
எம்.ஜி.ஆர். பிரபலமாகி மிக நீண்ட காலம் கடந்தே, எம்.ஜி.ஆரின் நிழல் காதலி பத்மினி ஆனார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம், 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன். அதில் பத்மினி, வெள்ளையம்மாளாகத் தோன்றினார். மதுரை வீரனின் முதல் மனைவி பொம்மியாக பானுமதி நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பானுமதி - பத்மினி இருவரும் இணை சேர்ந்தது, மதுரைவீரனுக்குப் புது மகத்துவத்தை ஏற்படுத்தியது. புரட்சி நடிகரின் முதல் வெள்ளிவிழாப் படம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
மதுரை வீரன்
பத்மினி நாயகியாக நடித்த படங்களில் நாட்டியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. மதுரை வீரன், கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரிப்பு. செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் அதன் முதலாளி லேனா செட்டியார். அதில், பத்மினிக்கு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் முழங்கால்களுக்கும் வேலை சற்றுக் கூடுதல்.
‘உத்தமவில்லன்’ கமலுக்கு அறியாப் பருவத்தில் நடனத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது, ‘ஏச்சிப் பிழைக்கும்…’ பாடலுக்கான எம்.ஜி.ஆர். - பத்மினியின் அங்க அசைவுகள்தான். அந்தக் காட்சிக்காகவே, மதுரை வீரனை மறக்காமல் நூறு நாள்களுக்கு மேல் பார்த்து ரசித்து, அதேபோல் பாதம் தூக்கி ஆடினார் பரமக்குடி கூத்தபிரான். கமலின் கலை வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி, மதுரை வீரனில் இருந்து மையம் கொண்டது.
அந்நாளில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் தங்கராஜ். மதுரை வீரனில் எம்.ஜி.ஆரும் – பத்மினியும் தனக்கு அளித்த ஒத்துழைப்பு குறித்து கூறியுள்ளார் –
‘பட்சிராஜா ஸ்டுடியோஸ் ஏழை படும் பாடு, பிரசன்னா படங்களின்போதே பத்மினிக்கு சினிமா நடனம் சொல்லித் தந்துள்ளேன். பத்மினி நல்ல டான்ஸர். அவரை மாதிரி பரதம் தெரிந்தவர்களுக்கு, ஒருமுறை சொல்லிக்கொடுத்தால் போதும். புரிந்துகொண்டு ஆடி பிரமாதப்படுத்திவிடுவார்கள்.
‘ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க…’ பாடலுக்கான ஒத்திகையில் நான் ஆடிக்காட்டியதும், இந்த மூவ்மென்ட் கஷ்டமாக இருக்கும்போலிருக்கிறதே’ என எம்ஜிஆர் முணுமுணுத்தார். பிறகு அவரே, ’எனக்குத்தானே பெயர் கிடைக்கும்; நானே முயற்சி செய்து ஆடிடறேன்’ என்று சொன்னபடியே நன்றாக ஆடினார். எம்.ஜி.ஆர். தயங்கியதுகூட, பத்மினியுடன் ஆடும்போது நம் ஆட்டம் அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்றுதான்’.
எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த, 'ஆடல் காணீரோ...' சூப்பர் ஹிட் பாடலுக்கு பத்மினி ஆடிய திருவிளையாடல் நடனம், மிகப் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. ஒப்பற்ற அந்த நாட்டியம், படத்தின் வேகமான ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் என்று, எம்.ஜி.ஆர். அதை நீக்கி விடுமாறு சொல்லி விட்டார்.
செட்டியார், பப்பியின் பரம விசிறி. அதேநேரத்தில், எம்.ஜி.ஆரின் உத்தரவை அவரால் உதாசீனம் செய்யவும் முடியவில்லை. யவ்வன பம்பரமாகச் சுழன்றாடும் பப்பியின் பாதங்களை விட்டுத்தர முடியாது என மனத்தின் குரல் கூவியது. ஹீரோவின் தயவும் தேவை. வேறு வழியின்றி, இடைவேளையில் தசாவதார பாடல் காட்சி காட்டப்பட்டது.
எம்.ஜி.ஆர். - பத்மினி ஜோடியாக நடித்த ஐந்தும் சமூகப்படங்கள் அல்ல. அத்தனையும் ராஜா - ராணி கதைகள். மதுரைவீரனுக்கு அடுத்து, மெர்ரிலாண்ட் ஸ்டுடியோ தயாரித்த ராஜராஜன், மன்னாதி மன்னன், ராணிசம்யுக்தா, விக்ரமாதித்தன் ஆகியவை மற்ற நான்கு படங்கள்.
டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் - ஏ.பி.கோமளா ரேர் காம்பினேஷனில், ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே…’ பாடல் மட்டும் ராஜராஜனை ஞாபகப்படுத்துகிறது.
ராஜராஜனில் ஒரு விசேஷம். அண்ணன் - தம்பிகளான எம்.ஜி.சக்ரபாணியும் எம்.ஜி.ராமச்சந்திரனும், அக்கா - தங்கைகளான லலிதா, பத்மினியுடன் நடித்த ஒரே படம். ‘ஆடும் அழகே அழகு…’ எனத் தொடங்கும் பாடலுக்கு, லலிதா - பத்மினியின் நடனம் நிறைவாக இடம் பெற்றது. அதன்பின்னர், லலிதா திருமணமாகிச் சென்றுவிட்டார். மீண்டும் நடிக்க வரவில்லை.
1960-ல் ராஜா தேசிங்கு - எஸ்.எஸ்.ஆர்., 1961-ல் அரசிளங்குமரி - எம்.என்.நம்பியார், 1971-ல் ரிக்ஷாகாரன் - ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரது மனைவியாகவும் பத்மினி, எம்.ஜி.ஆர். படங்களில் நடித்துள்ளார். சகோதரி பத்மினியுடன் கடைசியாக நடித்த ராசியோ என்னவோ, ரிக்ஷாக்காரனுக்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது.
தனக்கு முக்கியத்துவம் தராத எந்த சீனிலும் தான் இடம் பெறுவதை எம்.ஜி.ஆர். அனுமதிக்கமாட்டார். நாயகன் வெறும் காட்சிப் பொருளாகக் காட்டப்படுவதை விரும்பாதவர். அவரது ஆரம்ப சினிமா நாள்களில், வசனம் பேசவும் வாய்ப்பு கிடைக்காமல் வதைக்கப்பட்டிருக்கிறார். முந்தைய உள்குத்துக் காயங்களின் எதிரொலியால், எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார். ஆனால், அதற்கு விதிவிலக்கு மன்னாதி மன்னன்.
மன்னாதி மன்னன்
கறந்த பால் போல் கொஞ்சமும் கலப்படமற்ற லதாங்கி ராகப் பாடல், ‘ஆடாத மனமும் உண்டோ…’
எம்.எல்.வசந்தகுமாரி - டி.எம்.சௌந்தரராஜன் குரல்களில் அது ஒரு கோமள கீதம்! கேட்கக் கேட்கத் திகட்டாத கானம் என்பார்களே அப்படி.
காட்சியைச் சற்றே மனத்தில் இருத்திப் பாருங்கள். பத்மினியும் எம்.ஜி.ஆரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே பாடும், பப்பி அற்புதமாக ஆடும் அபிநயச் சித்திரம்! அதில் ஒரே இடத்தில் உதயசூரியன்போல் தகதகக்கும் திறந்த மார்போடு அமர்ந்து, எம்.ஜி.ஆர். வாத்தியம் வாசிக்க, அதற்கேற்ப பத்மினியின் பாதங்களும் ஒலிக்கும். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நூற்றுக்கான சினிமாக்களில், அவர் இதுபோல் வேறு எந்தப் படத்திலாவது சும்மா உட்கார்ந்து பாடியதை யாரும் பார்ப்பது துர்லபம்.
நாடோடி மன்னனுக்கும் மன்னாதி மன்னனுக்கும் ஒரே வசனகர்த்தா கண்ணதாசன். மன்னாதி மன்னனில், ‘அச்சம் என்பது மடமையடா…’ உள்ளிட்ட பெரும்பாலான பாடல்கள் அவர் எழுதியவை. ஆனால், ‘ஆடாத மனமும்…’ மட்டும், மருதகாசியின் கை வண்ணம். எத்தனை முயன்றும் கவிஞருக்கு வார்த்தைகள் சரியாக அமையாததால், மருதகாசியிடம் எழுதி வாங்கினர்.
கடந்த வார தினமணி நாளிதழில் தொடர் கட்டுரையின் ஒரு பகுதி---1
[IMG]https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11059855_952951704726525_858736799331440147_n.jpg?
oh=53bc5e2a5f6060008edc7941df1ec35e&oe=559A7E9F&__ gda__=1439995486_bbe6f073d3a076869f0ea270895efd63[/IMG]
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Senthil Sir,
"Sorgam" song reminds me of 1970's. In madras [ Poonamalee High Road] there is RBI Staff and Offiers quarters, next to EGA. There is RBI Prepratory school with open auditorium. They used to screen one movie per month. 90% NT movies, balance GG movie and religious movies. Many movies I have seen many a times! The simple reason it in those days it used to rain. So If it rains, the same movie will be screened the following week. Sorgam was screen nearly 4 times before they managed to screen the complete movie. Generaly RBI staff/their family and children used to come; some with chair, some with carpet[jamakalam] and reserve the place. Even persons, not staying in the quarters, from the same locality used to be present. The Open ground and all the surrounds used to be full. I can recall Sorgam/Ooty varai uravu/thangaikkaga/raja/enga mama/saraswathi sabatham being screened many times because of rain. As regards GG movie, it was Santhi Nilayam/Ramu which was screen more than three time again because of rain.
Yes, one may wonder why I have not mentioned about MT movies. Yes, they screened MT movie only once, that day no idea from where the rush came it was something like a public meeting, the staff members who were staying right opp to the auditorium were fortunate because they watched from their residence. There was no place left blank including behind the screen. They decided NOT to screen MT movies thereafter.
All things changed after 1975 [ Doordarshan TV came] and they stopped screening movies like before.
Could I request you to post the same Sorgam Video but Ponmagal Vandhal - KJ Yesudas Version please.
தூத்துக்குடி திரையரங்கம் ஏற்படுத்திய கின்னஸ் சாதனை அதனைத் தொடர்ந்த விழாச் செய்திகளை அழகுறப் பதிவு செய்த அருமைச் சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள். தங்களது பதிவு ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
https://www.youtube.com/watch?v=uGDqJH4hfPc
மக்கள் திலகம் நாட்டியப் பேரொளி பற்றிய கட்டுரைக்கு நன்றி. ஆனால் அதில் ஏற்கனவே இந்தத் திரியில் நான் சுட்டிக் காட்டிய தவறு மறுபடியும் மேலும் பல தவறுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தசாவதாரப் பாடல் காட்சி இடம் பெற்ற படம் மதுரைவீரன் அல்ல. ராஜாதேசிங்கு. மதுரைவீரன் படத்தில் ஆடல் காணீரோ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது . மக்கள் திலகம் அதற்கு மறுப்பேதும் சொல்ல வில்லை. ராஜாதேசிங்கு படத்தில் நாட்டியப் பேரொளி இஸ்லாமியப் பெண்மணி. கதைக்குச் சம்பந்தமே இல்லாத , பொருத்தமும் இல்லாத தசாவதாரப் பாடல் படத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை. எனவே தான் இடைவேளையின் போதும் சில திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் திரையிடப்பட்டன. மக்கள் திலகத்தின் நடனத் திறன் பற்றி பலரும் பல விதமாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிருந்த கோவில் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலுக்கு நடனமாட எம்.ஜி.ஆர் பயந்தார் என ஒரு கதையும், மக்கள் திலகமாவது பயப்படுவதாவது அந்தப் பாடலில் என்னை உடனாட தேர்வு செய்ததோடு அருமையாக ஆடி அசத்தியவர் எம்.ஜி.ஆர் என்று விஜயலட்சுமி.எல். அவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலுக்கு நான் தான் நடன அமைப்பு செய்தேன் என்று ரகுராம் முதல் புலியூர் சரோஜா வரை அனைவருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீமுருகன் படத்திலேயே மூன்று அருமையான நடனங்கள் இடம் பெற்றதென்றும் அதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் முறையாக பரதநாட்டியம் பயின்றதாகவும் மக்கள் திலகம் அவர்களே பதிவு செய்திருக்கிறார். வீரதீரமாக கதாநாயகன் நளினமாக நடனமாடுவது கம்பீரமாக இருக்காது என்ற எண்ணத்தில் சில படங்களில் நடனக் காட்சிகளை தவிர்த்தார். ஆனால் தேவைப் படும் காட்சிகளில் நடனத்தில் நம்மை கட்டிப் போட்டு வைத்தது என்றுமே மறக்க இயலாதது.
இனிய நண்பர் திரு சுந்தராஜன் அவர்களின் பதிவுகள் அருமை .நன்றி .
இனிய நண்பர்திரு முத்தையனின் ''விவசாயி '' ஸ்டில்ஸ் மிகவும் அருமை .
நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்ட இனிய நண்பர்திருஜெய்சங்கர் அவர்களை
அன்புடன் வரவேற்கிறேன் . தொடர்ந்து திரியில் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .
கலைவேந்தன் சார்
மக்கள் திலகம் அல்லது எம்ஜிஆர் என்ற பெயரை எழுதவோ அல்லது உச்சரிக்கவோ தயங்கும் ஒரு சில நண்பர்கள் இருக்கிறார்கள் . ஆனால் நம்மைவிட உள்ளுக்குள் அதிமாக எம்ஜிஆர் நினைவில் வாழ்பவர்கள் அவர்கள் .விட்டு விடுங்கள் கலைவேந்தரே .உங்கள் அழைப்பு அவருக்கு வலையாக தெரிகிறது .உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .
മനസിലായെ! In English understood.
வினோத் சார்
எனக்கு நினைவு தெரிந்தவரை காஞ்சிபுரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் 1967 முதல் 1977 வரை தீவிரமாக இருந்துள்ளேன் .அதே போல் என்னுடைய நண்பர்கள் சிலர் சிவாஜி மன்றத்தில் ரசிகராக இருந்தார்கள்.மறந்து கூட எம்ஜிஆர் பெயரை சொல்ல மாட்டார்கள் அதே போல் நாங்கள் கூட சிவாஜி பேரை சொல்ல மாட்டோம் .இரு சாராரும் அடை மொழியில் பெயரை கூறுவோம். காவல்காரன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 11 ஆண்டுகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் வெளியான நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் திருவிழாவாகவே காட்சி தந்தது . சிவாஜி ரசிகர்கள் நம் படத்தை பல் வேறு கோணங்களில் விமர்சனம் செய்தார்கள். பதிலுக்கு நாமும் அவர்கள் படம் வந்த நேரத்தில் விமர்சனம் செய்தோம் . சில சமயங்கள் நாகரீகம் எல்லை மீறி போனதுண்டு .
காலங்கள் மாறியது
மக்கள் திலகமும் முதல்வரானார் .எல்லா துறையிலும் புகழுடன் வாழ்ந்து பல சரித்திர சாதனைகள்
புரிந்து தெய்வமாகி விட்டார் .மக்கள் திலகமும் சிவாஜியின் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .இருவரும் மேடையில் அண்ணன் - தம்பி என்று பாச மழையில் நனைந்தார்கள் .மக்கள் திலகம் உடல் நலன் குன்றிய போது சர்வ மத பிராத்தனையில் திரு சிவாஜி கலந்து கொண்டு பிராத்தனை செய்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த மக்கள் திலகத்தை சந்தித்தார். இதுதான் அன்பு . இருவரும் பரஸ்பர உறவில் தங்களை அடையாளம் காட்டிய போது ஒரு சில ரசிகர்கள் இரண்டு பக்கமும் இன்னும் அந்த கால கட்டத்தில் நிறப்து வியப்பாக உள்ளது .
நகைச்ச்சுவை என்ற பெயரால் நாமும் பல உதாரணங்களை கூறலாம்.கிண்டல்செய்யலாம்.நமக்கு அது தேவை இல்லை .திரு கோபால் அவர்கள் திரியில் அவருடைய அபிமான திரு சிவாஜி படங்களை
தோற்றத்தை ,கருப்பு தினம் ,குப்பை படங்கள் , என்று கூறியதை போல் நம் ரசிகர்கள் ஒரு நாளும் கூற மாட்டார்கள் .எம்ஜிஆர் என்ற அந்த மூன்றெழுத்து கோபாலுக்கு மட்டும் சிம்ம சொப்பனமாக இருப்பது வியப்பில்லை.அவர் 50 ஆண்டுகள் பின் நோக்கியே வாழ்கிறார் .அப்படியே இருந்து போகட்டும்.
You are very correct my Dear Brother C.S. Kumar.
To my knowledge, in my School Days, few colleagues
identified themselves as Sivaji Fans, purposely criticize our beloved God M.G.R. starred movies, in order to find faults, which warranted unnecessary, despite the great success of our MT Films and acceptance by the Tamil Cine Fans. We, the majority MGR fans, offend them in several ways and made them to keep quiet.
After quitting out by our Great M.G.R. from the Tamil Cine Field, in the year 1977, to assume office as CM of Tamil Nadu, some of these few colleagues (Sivaji Fans) turned out to be the sympathizers of our beloved God M.G.R., in Politics and started seeing Thalaivar Films many times and appreciated his natural acting.
I can quote even name of these colleagues.
We cannot correct persons, born with inborn qualities of Refusal to think, Broad-mindedness, and not accepting the Golden Words Phrase / Idiom / Slogan, quite often, quoted by our beloved Great Peraringar Anna "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"
சட்டமன்ற நிகழ்வு - 1982
பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் 1982ம் வருடம் ஜூலை மாதம், உலகமே போற்று வியந்த "சத்துணவு" திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த சத்துணவு திட்டமானது, பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த "மதிய உணவு" திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நம் புரட்சித்தலைவர் நடைமுறைப்படுத்திய "சத்துணவு" திட்டத்தின் படி, தமிழகமெங்குமுள்ள ஏழை குழந்தைகள், ஆண்டு முழுவதும் பயன் பெறுவர். இதற்காக, அப்போது தமிழக வரவு - செலவு திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இது குறித்த மான்ய கோரிக்கை விவாதம் நடந்த போழ்து, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. குமரி அனந்தன் அவர்கள், (1980 சட்டமன்ற தேர்தலில், இவர் தோற்றுவித்த காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு, நம் புரட்சித்தலைவரின் ஆதரவுடன் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர்) எழுந்து, இந்த சத்துணவு திட்டம் தேவையற்றது, இதற்கு ஒதுக்கப்படும் 200 கோடி ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். உடனே, நம் பொன்மனம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள், தனக்கே உரிய பெருந்தன்மையுடன், எழுந்து, "குமரி அனந்தன் அவர்களே ! தாங்கள் சொன்னபடி தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும் ? என்று வினவினார்.
"எப்படியும் ஆயிரம் பேருக்காவது வேலை கிடைக்கும்" என்று பதிலுரைத்தார் திரு. குமரி அனந்தன்.
மீண்டும், நம் இதய தெய்வம், புன்னகை வேந்தன் புரட்சித்தலைவர் அவர்கள், சிரித்துக்கொண்டே, "தமிழ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள் ஆகியவற்றில் ஒரு மையத்துக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர், அவர்களுக்கு உதவியாக 2 சமையல் செய்யும் ஆயாக்கள், என மொத்தம் 60,000 பேர், அதுவும் பெண்கள், வேலை பார்க்கிறார்கள் தெரியுமா" என்று புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைத்ததை கூறியதும், அமைதியாய் அமர்ந்து விட்டார் அனந்தன் அவர்கள்.
அன்று சட்டமன்றத்தில், சத்துணவு திட்டத்தை திரு. குமரி அனந்தன் போலவே கலைஞர் கருணாநிதி அவர்களும் குறை கூறினார். ஆனால், திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே பின்னாளில் முதல்வராக (அதுவும் புரட்சித்தலைவர் மறைந்த பிறகுதான்) பொறுப்பேற்ற பிறகு, கூடுதலாக ஒரு முட்டையுடன் இந்த சத்துணவு திட்டத்தை தொடர்ந்தார்.
இதை இப்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் -
தற்போது நடைமுறையில் இருக்கும் பல மக்கள் நல திட்டங்கள், தீர்க்க தரிசனத்துடன், நம் தமிழ் நாடாண்ட மன்னவனாம், மக்கள் நலத்தையே குறிக்கோளாக கொண்டு, ஓய்வே கொள்ளாத ஒப்பற்ற தெய்வமாய், மக்கள் என்றும் போற்றும் மக்களின் முதல்வரான நம் பொன்மனச்செம்மல் அவர்களால் தொடங்கப்பட்டு, அவருக்குப்பின் வந்தவர்களால் கைவிடப்படாத அளவுக்கு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக சென்ற வெள்ளிகிழமை முதல் ஏவிஎம் வசம் உள்ள "அன்பேவா" திரையிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன் !
ரசிகர்கள் சார்பில் ரசிகர்மன்ற வினைல் பேனேர் மற்றும் கட்சி வண்ணத்தில் காகித மாலை அணிவிக்கபட்டுளது !
https://www.youtube.com/watch?t=188&v=kbHbRtEzYkk
Thanks AB Sir, for referring to both the Thilagams.
M.G.R
கடந்த நூற்றாண்டின் அதிசயம். எழுபதாண்டு கால வாழ்க்கை.வெறும் இருபத்தைந்தாயிரத்து ஐநூறு நாட்கள் வாழ்ந்த, குறைந்த மனித வாழ்நாளின் அதிக பட்ச, உச்ச சாதனைகளை புன்னைகை மாறாமல் நிகழ்த்தி, புன்னகை மாறாமல் மறைந்து விட்ட அதிசயம்.
கை வைத்த இடத்தையெல்லாம் பொன்னாகவும், கால் வைத்த இடத்தையெல்லாம் இமயமாகவும் மாற்றிக் காட்டிய ஆச்சர்யம்.
சிறுவயதில் வாசித்த படக் கதைகளில் வரும் சாகாசக் கார கதாநாயகர்களின் பிம்பம் கலையாமல் தமிழ் மக்கள் மனத்தை வசியம் செய்த பேராளுமை…
வாழ்நாள் முழுதும் அள்ளிக் கொடுப்பதையே முழுநேரமாய் செய்திருந்தால் கூட இத்தனை கதைகள் இவரைப் பற்றி சாத்தியமா என்பது விடையற்றதொரு வினா…
சரித்திர கால தமிழ் இளவரசனாக திரையில் தோன்றி நாம் கண்களுக்குள் நிறைந்த வீரம்…
சமகால மன்னனாக தமிழ் மனங்களை நிறைத்த கம்பீரம்…
சேரனுக்கு உறவெனினும், செந்தமிழர் நிலவு என என்றென்றும் தமிழ் வானில் உலவும் பவுர்ணமி…
1980 களின் தொடக்கம். கடலூர் கமலம் திரை அரங்கம். ஒரு மாலை வேளை. பஞ்சாமிர்தம் குச்சி ஐஸ் விரல் இடுக்குகளில் பிசு பிசுத்து, முழங்கை வரை வடிகிற பதினோரு வயது சிறுவனாக பெருங்கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நிற்கிறேன்.அப்பா எப்படியும் படம் பார்க்க டிக்கட் வாங்கி விடுவாரா?? மனம் பதைக் கிறது… வரும் போது அப்பா எதிர் காற்றில் சைக்கிள் மிதித்தவாறே ” படம் வந்து பதினெட்டு வருசமாகுது… நாலாவது தடவையா இங்க போட்டிருக்காங்க…” அப்பா.. வாத்தியாரின் மிகப் பெரிய ரசிகர்.தலைக்கு மேல் பதாகையில் நெற்றியில் புரளும் சுருள் முடி துலங்க மக்கள் திலகம் புன்னகை செய்கிறார். மாலை நேரக் கடற்காற்றில் பதாகை மெல்ல அலையென அசைய புரட்சித் தலைவரின் புன்னகை தீர்க்கமாக மனத்தில் வந்தமர்கிறது.
“சசி… வா போகலாம்” அப்பா முகத்தில் ஏமாற்றம்.
“அப்பா…டிக்கட்…????”
“…ம்ம்… நாளைக்கு வரலாம் டிக்கட் கெடைக்கல..”
தொண்டை அடைக்க…”அப்பா…ட்ரை பண்ணிப் பாருங்கப்பா…” பதாகையில் நாகேஷின் முகம் அஷ்ட கோணல் காட்டி அலைக் கழிக்க அப்பா…”வாடா படம் பாக்க போகலாம்…” சட்டைப் பையிலிருந்து கைகளில் டிக்கெட் எடுத்து சிரிக்கிறார்.”தியேட்டர் மேனேஜர் தெரிஞ்சவர் தான்…டிக்கட் வாங்கிட்டேன்”
சந்தோஷம் பொங்க அண்ணாந்து பார்க்கிறேன்…
“ஆயிரத்தில் ஒருவன்”
பதாகையில் மக்கள் திலகம் கண்சிமிட்டி சிரிக்கிறார்… எனக்கு மட்டும் பிரத்தியேகமாக… அப்பா கையைபிடித்து அவசரப் படுத்துவதையும் தாண்டி நின்று பார்க்கிறேன்… அண்ணாந்து பார்க்கிறேன்…
பார்க்கிறேன்… அன்று தொடங்கி கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அலுக்காமல், ஆச்சர்யம் கலையாமல், ஆர்வம் குலையாமல் குழந்தையாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன். வாழ்வின் கால வெளியில் எத்தனையோ பழையன கழிந்தும், புதியன புகுந்தும், நினைவுகள் உதிர்ந்தும், உறவுகள் மலர்ந்தும் இருந்தாலும், mgr என்ற தனி மனிதனின் நினைவுகளும்,அவர் பற்றிய வியப்பும், அவர் அளித்த நம்பிக்கைகளும் என்னைத் தொடந்து கொண்டிருப்பது அவர் மீது கொண்ட ஈர்ப்பைத் தாண்டிய நேசம்.
வாசித்த இலக்கியமும், புதினங்களும், பின் நவீனத்துவமும், மாய யதார்த்த புனைவுகளும், புதுமைப் பித்தன், லா.ஸா.ரா, தி.ஜா, கு.பா.ரா, நா.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்….இரா.முருகன்… இன்னபிற இலக்கிய ஆளுமைகளின் தாக்கமும், mgr ஐ என்னிலிருந்து விலக்கவேயில்லை. எழுத்தாளர் கலாப்ரியா ஒருமுறை சுபமங்களா நேர்காணலில் தன்னை நெல்லை mgr ரசிகர் மன்றத்தில் செயல்பட்ட ஒரு அடிப்படை ரசிகனாகவே முன்னிறுத்தியிருந்ததைப் போல, mgr என்ற ஒற்றை மந்திரச் சொல் மட்டும் என்னை என்றும் குழந்தையாகவே உணரச் செய்கிறது. கடந்த பதினைந்து வருட காலத்தில் உலக சினிமா மெல்ல அறிமுகமாகி, எனக்கு திரைப்படத்தின் வெவ்வேறு ரசனைச் சாளரங்களைத் திறந்து விட்டபோதிலும்,
“நேத்துப் பூத்தாளே ரோஜாமொட்டு… பறிக்கக்கூடாதோ லேசாத் தொட்டு…”
என அறுபது வயது mgr, பஞ்சகஜம், சிலுக்கு ஜிப்பாவில் லதாவைச் சுற்றி உரிமைக்குரல் கொடுப்பது தொலைக்காட்சியில் ஒலிப்பதை நின்று ரசித்து, மகிழாமல் இன்றுவரை என்னால், தாண்டிப் போக முடிந்ததே இல்லை.
“தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாகக் கொடுத்தே பழக்கப் பட்டவன் இந்த மணிமாறன்”
–என்ற குரல் கேட்கும் போதெல்லாம் போகிற போக்கில், லட்சம் நம்பிக்கைகளை மனத்தில் விதைத்துச் செல்கிறது.
“புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ?
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ?”
–என்ற அறைகூவல் ஒலிக்கும் போதும், தூண்களுக்கு இடையில் தாவி அவர் எதிரிகளை தாக்கும் போதும் மனசு குழந்தையென இன்று வரை குதூகலித்து மகிழ்கிறது.
வருடங்களைத் தாண்டி என்றும் தொடர்கிற இந்த நம்பிக்கை, இந்த மகிழ்ச்சி, இந்த குதூகலம்… இது என்ன வகை ஈர்ப்பு? என்ன வகை ரசனை? என்ன வகை உளவியல்? என்னைப் போன்ற கோடிக் கணக்கான தமிழ் மனங்களை வென்றெடுத்து சிறைப் படுத்தி வைத்திருப்பது எது?
courtesy- vallamai
thiru sasikumar
இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதராக நிலைத்த, பேச்சாற்றலும், சொலல் வல்லனுமாகிய கலைஞரை சோர்வுறச் செய்து எளிதாய் இகல் வெல்ல வைத்த — இவரின் ஆற்றல் எது?
நாடகத் தன்மைக் குறைந்த இயல்பான நடிப்பா?
பட்டுக்கோட்டை, கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகளும், tms -ன் குரலும், அதற்கேற்ற இவரின் அசைவுகளும் காட்சியமைப்புமா?
திட்டமிட்டு, அளந்து அடியெடுத்து வைத்து, அரசியலில் முன்னேறிய நேர்த்தியா?
தான் ஈடுபட்ட திரைத்துறையில் சகலமும் கற்றுத் தெளிந்த ஈடுபாடா?
தான் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் கொண்டிருந்த கண்டிப்பான ஆளுமையா?
எல்லா இடங்களிலும் வெற்றி பெற விழைந்து செயல்படுத்திய மதிநுட்ப ராஜ வியூகமா?
தனது குறைகளை மறைத்து, நிறைகளை மட்டுமே வெளிப் படுத்திய லாவகமான தலைமைக்குண தந்திரமா?
இவை அனைத்தும் தான் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது.
இவற்றைத் தாண்டிய ஒரு தகுதி…
இவற்றுக்கும் மேலான ஒரு உணர்வுபூர்வமான, உளப்பூர்வமான தகுதி…
எது?
அன்பு…
தன்னிலை மறந்த பேரன்பு…
…சக மனிதரிடம் அவர் கொண்டிருந்த எல்லையில்லா பேரன்பு…
நான்கைந்து வருடங்களுக்கு முன்… mgr -ன் பிறந்த தினம். ஒரு தொலைக்காட்சியில் அவரின் பழைய படப் பதிவுகளின் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது… ஏதோ அவசர வேலையில் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தவன், இந்தப் காட்சிகளைக் கண்டு நின்றுவிடுகிறேன்… தொப்பியும், கருப்புக் கண்ணாடியுமாக, தமிழக முதல்வராக… மேடையில் நின்று ஆதரவற்ற எளிய பெண்களுக்கு புடவையும், அரிசியும்,உதவித் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்… மக்கள் கூட்டம் பேரன்பில் கூச்சலிடுகிறது… ஒவ்வொருவராக வரிசையில் நின்று மெல்ல அருகில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, புன்னகைத்து அன்பாகக் கொடுத்தனுப்புகிறார். அப்போது, அப்போது, மேடையின் கீழே, இழுத்துப் போர்த்திய கிழிசல் புடவையோடு ஏறத்தாழ ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி வரிசைக்குள் வர காவலர் அந்தப்பெண்மணியை விலக்குகிறார். அதை கவனித்த mgr, அந்தப் பெண்மணியை தன்னிடம் வரவிடுமாறு சைகையில் சொல்ல, அந்த பெண்மணி வற்றி வதங்கிய உடலோடும், கிழிசல் மறைத்த உடையோடும், தயங்கித் துவண்ட நடையோடும், மெல்ல…மெல்ல..நெருங்கி mgr அருகே வருகிறார். கைகூப்பி வணங்குகிறார். வணக்கம் சொல்லிய முதல்வர் ஏதோ கேட்டவாறே,புடவை,அரிசி,உதவித்தொகை இருக்கும் பையை கொடுக்க, அந்தப் பெண்மணி அதீத சங்கோஜம் கொண்டு, அவரிடமிருந்து விலகி தனது கிழிந்த புடவைத் தலைப்பை விரித்து அதில் வாங்கிக் கொள்ள முனைகிறார். Mgr அருகே வரச் சொல்லி சைகை காட்டியும், அந்தப் பெண்மணியின் பஞ்சடைந்த கண்கள் மெல்லத் தாழ்கின்றன… கூச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையும் mgr -ன் முகத்தை நேரிட்டுக் காண மருகித் தயங்குகின்றன… அருகே இருந்த உதவியாளரிடம் கையிலிருப்பதைக் கொடுத்து விட்டு, பொன்மனச்செம்மலின் கரங்கள் அந்த பெண்மணியின் இரு கரங்களையும் பற்றுகின்றன… மெல்ல அந்த கரங்களை பற்றி, தனது இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்கிறார். சில நொடிகள் கடக்கின்றன… சிறுவயதில் தான் கண்ட தனது தாயின் ஏழ்மையை இவர் நினத்தாரோ? அல்லது, திரையரங்கில் மட்டுமே பார்த்து வியந்த, கனவு நாயகனின் கைகள் தனது கைகளைப் பற்றிய நெகிழ்வை அந்தப் பெண்மணி உணர்ந்தாரோ? இருவருமே கலங்கி நிற்கின்றனர்… கண்ணாடியை உயர்த்தி கண்ணீரைத் துடைத்து, அந்தப் பெண்மணியின் விழிநீரை கைக்குட்டையால் துடைத்து உதவிப் பொருட்களை அதிகமாகவே வழங்கி, வணங்கி வழியனுப்புகிற mgr…
உடல் முழுக்க சிலிர்க்கிறது… அந்தப் பெண்மணி மனம் எத்தனை நெகிழ்ந்திருக்கும்? எத்தனை இயல்பாக அந்தப் பெண்ணின் தாழ்வு மனத்தை தகர்த்தெறிந்தார்?
என்ன விதமான அன்பு? எத்தனை அழகான வெளிப்பாடு?
மரபு தாண்டிய பேரன்பு… தமிழ் மண்ணின் பெரும்பான்மையான ஏழை, எளியோர் தமது சொந்தமாகவே எண்ணி அனைத்துக் கொண்ட நேசம்…
தமிழ் மண்ணையும், தமிழரையும் தமது வாழ்வெல்லாம் மனத்தில் சுமந்த ஈரம்…. ஈழம் மலர உதவிக் கரம் நீட்டிய மாண்பில் தழைத்திருந்த மனித நேயம்…
மனித நேயமும், அன்பும் தான் அவர் வாழ்ந்த நாட்களின் கடைசி நாள் வரை தமிழ் மக்களின் மன்னாதி மன்னனாக வலம் வரச் செய்தது. மறைந்தாலும் மக்கள் மனங்களில்… பேரரசனாக இன்றும் தொடர காரணம் மனிதர்களிடத்தில் அவர் கொண்ட பேரன்பைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்?
“பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்”
–என்ற பாடல் வரிகள் ஒலிக்க படத் தொகுப்பு நிறைவுற்று நெடுநேரமாகியும்… எழுந்து சென்று பணிகளைத் தொடர இயலாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
மனசுக்குள் நினைவுகள் கலவைகளாக புரண்டன…
courtesy- vallamai
thiru sasikumar
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய போட்டி கட்டுரைகள் சமீபத்தில் வல்லமை இணைய தளத்தில் வெளிவந்த தொகுப்பினை நான் திரியில் பதிவிட்டேன் .இன்று வல்லமை இணைய தளத்தில் திரு சசிகுமார் , துபாய் எழதிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது .
காலம் கடந்தாலும் கடல் தாண்டி வாழும் தமிழ் உள்ளங்கள் இன்றும் நம் மக்கள் திலகத்தை பற்றி நினைவு கூர்வது மகிழ்ச்சியான செய்தியாகும்.வல்லமை இணைய தளத்திற்கும் , திரு சசிகுமார் அவர்களுக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்வோம் .
திருச்சி -கெயிட்டி அரங்கில் அன்பே வா படம் பற்றிய தகவலை வழங்கிய திரு ரவிகிரண் அவர்களுக்கு நன்றி .
FROM MY PIC FILE
http://i59.tinypic.com/2qklz89.png
FROM MY PIC FILE
http://i62.tinypic.com/30krdef.png