-
9th October 2015, 10:11 AM
#11
Senior Member
Seasoned Hubber
இன்றைய தினகரன் சினிமா பகுதியில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி திரு கே.என். சிவராமன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் நடிகர் திலகத்தை குறைத்து எழுதுவதே பிரதானமாக தொனிப்பது வருத்தத்திற்குரியது. கண்டிக்கத்தக்கது.
பல தவறான தகவல்கள் இன்றும் தொடர்வது, அதுவும் ஊடகங்களில் எழுதும் நிருபர்கள் தங்கள் சொந்தக் கருத்தை இதில் திணிப்பது இன்னும் தொடர்கிறது.
முதலில் இந்த மூவேந்தர் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும். சிவாஜி எம்.ஜி.ஆர். இவர்கள் இருவர் தான் ஆளுமை புரிந்தனர். இதை சமீபத்திய தொலைக்காட்சி சர்வே ஒன்றும் ஊர்ஜிதப் படுத்துகிறது.
அதே போல உருவ ஒப்பீடுகளும் அளவீடுகளும் இதில் இடம் பெறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.
நடிகர் திலகம் தன்னுடைய மிகவும் இளமையான காலத்திலேயே வயதான பாத்திரங்களை ஏற்று நடித்தது இந்த ஆசிரியர் வசதியாக மறைத்து விட்டிருக்கிறார். இதைச் சொல்லக் காரணம், அவர் நடிகர் திலகத்தை ஒப்பீடு செய்வதால்.
நடிகர் திலகம் வெள்ளைக்கார தோரணைக்கு மாறிக்கொண்டிருந்த போது என்று மறைமுகமாக நக்கலடித்திருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையறிந்து அதற்கேற்ற உடல் மொழியையும் உடையமைப்பையும் வகுத்தவர் நடிகர் திலகம். தேச பக்தி இன்று தமிழகத்தில் உயிரோட்டமாக நிலவுவதற்குக் காரணமே அவருடைய பாத்திரங்கள் தான். ஏதோ மேம்போக்காக ஒரு கமெண்ட் அடிப்பது சரியில்லை. உயர்ந்த மனிதன் வந்த போது உடனே அன்பளிப்பில் கிராமத்தானாக நடித்த படம் வந்தது. பார் மகளே பார் வந்த போது அதே ஆண்டில் கிராமத்தானாக கல்யாணியின் கணவனில் நடித்தார். ஒவ்வொன்றும் நேரெதிர் குணாதிசயங்களைக் கொண்ட பல படங்களை ஒரே சமயத்தில் தந்தவர், ஒரே சமயத்தில் நடித்தவரும் கூட. அவருடைய கால் தூசுக்குக் கூட நம் நாட்டில் எந்த நடிகனும் வர முடியாது.
கட்டுரையாளரின் காழ்ப்புணர்ச்சியையே அவருடைய வரிகள் காட்டுகிறது.
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை என்ப்தை இந்த கட்டுரையாளருக்கு யாராவது உணர்த்தினால் நன்று.
இந்தக் கட்டுரையாளரை மட்டுமல்ல, பொதுவாகவே நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதெல்லாம் தயவு செய்து ஒப்பீட்டைத் தவிருங்கள்.
அவரவர் தங்கள் பாட்டுடைத் தலைவரை புகழ்வது அவரவர் விருப்பம், உரிமை. ஆனால் அது இன்னொருவரை ஒப்பிடும் போதோ அல்லது அதன் மூலம் அப்படி ஒப்பிடப்படுபவரின் அபிமானிகளை மனதளவில் காயப்படுத்தும் போதோ விவாதங்களும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தவிர்க்க முடியாதவையாகும்.
Last edited by RAGHAVENDRA; 9th October 2015 at 11:23 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 7 Likes
-
9th October 2015 10:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks