படம்: தென்றலே என்னை தொடு (1985)
இயக்குனர்: சி. வி. ஸ்ரீதர்
பாடலாசிரியர்: வாலி
இசை: இளையராஜா
ராகம்: சாரங்க தரங்கிணி/ஹம்சநாதம்
பாடியவர்கள்: எஸ். ஜானகி & கே.ஜே. யேசுதாஸ்




தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்

தூரல் போடும் இன்நேரம்
தோளில் சாய்ந்தாள் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் நேரம்

தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு

தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்
சாரம் ஊரும் நேரம்

தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்...