-
5th May 2016, 09:13 PM
#11
Senior Member
Senior Hubber
நேற்று கோபாலின் ராக மறு இடுகைகளைப் படித்து எழுதினேன்..கடைசியில் கொஞ்சம் பெர்ஸனல் சமாச்சாரம் எழுதி இட்டிருந்தேன்..அப்படியே நிறுத்தவும் செய்துவிட்டேன்.. கொஞ்சம் சோகமானேன்..
பின் .. அதுவே கூடாதென டெலீட்டும் செய்து விட்டேன்..கொஞ்சம் யோசித்தால் modify செய்து பகிர்வதில் தவறென்று படவில்லை இப்பொழுது.. எனில் இப்போது இடுகிறேன்..
*
கோ..
சிந்துபைரவி ராகம் எனத் தேடியதில் கிடைத்த்தில் பிடித்தது..( நீங்கள் சொன்ன பாடல்கள் தவிர)
வதனமே சந்த்ர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ
மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி
சுபபந்து வராளி..
சுபன்னு போட்டுட்டு சோஓஒகப் பாட்டா இருக்கு.. நீங்கள் சொன்னதிலும் நான் பார்த்ததிலும்..
இந்த நாடகம் அந்த் மேடையில் எத்தனை நாளம்மா
காலமகள் கை கொடுப்பாள் சின்னய்யா.. விக் விக் விக்..
மாயா மாளவ கெளளை..
திலீபன் அந்த மாலை வேளையில் அந்த வீட்டிலருகே உள்ள மரத்தடியில் நின்ற போது குப்பென்று மல்லிகை மணம் அவனைச் சூழ்ந்தது..அப்படியே உயிரை உலுக்குவதுபோல் வீணையின் ஒலி.. கொஞ்சம் ஆழக் கேட்டால் ராகமும் அவனுக்குப் புரிந்தது.. மாயா மாளவ கெளளை”
ஜாவர் சீதாராமனின் உடல், பொருள் ஆனந்தியில் வரும் வார்த்தைகளை – சற்று முன்பின் இருக்கலாம் – நினைவிலிருந்து எழுதுகிறேன்..
ஒரு ஜோரான த்ரில்லர் எனச் சொல்லலாம்..
அதில் நீங்கள் சொன்னபாடல் துள்ளுவதோ இளமை மிகப்பிடிக்கும்..
நான் பார்த்ததில் பிடித் பாடல்கள்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (இதை எப்படி விட்டீங்க)
பூங்கதவே தாழ் திறவாய்.. (ரொம்பவே பிடிக்கும் கேட்க மட்டும்)
4 பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எழுத்தாளர் சாருகேசியை ஒரு இலக்கிய சிந்தனை சந்திப்பில் சந்தித்திருக்கிறேன்..
அப்புறம்..தையத் தக்கா எனக் குதித்து ராகவேந்திர ரஜினி பாடப் பாட ஆடிடும் பூங்கொடியான அம்பிகை… ஆடமுடியாமல் முழித்து திடுக்காகி நிற்க வைக்கும் ராகம் சாருகேசி.. ஸ்வாமி ராகம் பெயரைச் சொல்லி என்னை அபினயிக்க விடாமல் செய்துவிட்டீர்களே என அடிபம்ப்பின் கைப்பிடி மாதிரி வளைந்து வணங்குவார். இதைத்தவிர சாருகேசிபற்றி எனக்குத் தெரியாது ( மற்ற எல்லா ராகங்களும் கூடத் தான்) ஆனால் அந்தப் பாட்டே சாருகேசி ராகம் என இப்போது தான் தெரியும்..
ஆடற்கலையே தேவன் தந்தது
ஆடல் காணீரோ ஓ திருவிளையாடல் காணீரோ..
5.நட பைரவி.. ஹை.. நீங்கள் போட்ட பாட்ஸ் எல்லாம் எனக்கும் பிடிக்குமே..
உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா
போடச் சொன்னா போட்டுக்கறேன் போடும் வரை கன்னத்திலே..
இதுவரை எழுதியதில் பிழை இருந்தால் நான் எடுத்த லிங்க்கையே சாரும்..என்னைத் திட்டுவதாய் இருந்தால் கொஞ்சிக் கொஞ்சி த் திட்டவும்..
இல்லை என்றால்..கன்னத்தில்…
போடச்சொன்னா போட்டுக்கறேன்..
6 பாகேஸ்வரி..
மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை..
7 ஆபேரி சிங்கார வேலனே தேவா பற்றி முன்பு எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன் ..நிங்ஙள் எழுதின எல்லாப் பாட்ம் என்குபிடிக் கும்..
பழமுதிர்ச் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி.. எனி டைம் பிடிக்கும்..
8 சக்ரவாஹம்..
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.. ஒருகாலத்தில் அடிக்கடி கேட்டு முணுமுணுத்த பாட்டு..ம்ம்
9 க்ல்யாணி
சொன்ன எல்லாப் பாட்மே பிடிக்கும்…என்றாலும்..
ஆடும் அருள் ஜோதி.. ராகம் தாளம் bhaவம் சேர்ந்த பரதக்கலை.. பாட் ரொம்பப் பிடிக்கும்.. முகத்தில் முகம் பார்க்கலாமும்..
மோஹனம்.
நிலவும் மலரும் பாடுது
பழகத்தெரிய வேணும்
மலர்கள் நனைந்தன பனியாலே.
பிருந்தாவன சாரங்கா..
ரங்கா புர விஹாராவில் முன்பு நிறையவே உருகியிருக்கிறேன்..இன்ன ராகம் எனத் தெரியாது..
சொன்ன பாடல்கள் எல்லாம் மனம் கவர்ந்தவை..
முத்து நகையே உன்னை நானறிவேன்..எனக்கு மிக ப் பிடித்த உருக்கமான பாடல்..
கண்ணழகு பார்த்தால் பூவெதற்கு
கையழகு பார்த்தால் பொன்னெதற்கு
காலழகு பார்த்தால்
காலழகு பார்த்தால் தெய்வத்திற்குக்
கருணை என்றொரு பேர் எதற்கு..
ந.தியின் முக உணர்ச்சிகளும் மறக்க முடியாது தான்..
மிச்ச ராகங்களுக்கு அப்புறம் வரேனே..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th May 2016 09:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks