-
19th July 2016, 09:21 PM
#11
Senior Member
Diamond Hubber
சுசீலா அம்மாவின் இன்னொரு பிடித்தமான பாடல். கண் தெரியாத சரோ, காலில்லாத சௌகார் பங்கு கொள்ளும் பாடல் 'கண்மலர்' படத்தில். அதிகம் பிரபலமில்லைதான். ஆனால் ஈர்க்கக் கூடிய ஆற்றல் உண்டு.
அடி ஆயீ ஆயீ ஆயீ ஆயீ கல்யாண காலமடி
கச்சேரி மேளமடி பொற்கோல மேடையிலே
பூப்போட்ட வாசமடி
குறமகள் வள்ளியொரு முருகனைக் கண்டாளாம்
குலமகள் வள்ளியொரு கண்ணனைக் கண்டாளாம்
முருகனும் வள்ளியுமோ திருத்தணி சென்றாராம்
கண்ணனும் வள்ளியுமோ தனித்தனி நின்றாராம்.
அமைதியான அழகான எனக்கு நிரம்ப பிடித்தமான பாடல். இரண்டு நாட்களாக மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. சரி! எழுதி விடுவோம் என்று எழுதி விட்டு வீடியோ எடுக்க 'யூடியூப்' சென்று பாடலை பார்த்து ரசித்து விட்டு அற்புதமான இப்பாடலை அப்லோடு செய்த ரசனையுள்ள மகராஜன் யார் என்று பார்த்தால் அட நம்ம மதுண்ணா. அதானே பார்த்தேன்! அரவிந்த் கார்த்திக் என்ற பெயரில். ஒரே ரசனையை எண்ணி வியந்து இரட்டிப்பு சந்தோஷம்அடைந்தேன். நன்றி மதுண்ணா!
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
madhu thanked for this post
-
19th July 2016 09:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks