உங்கள் பாராடுக்களுக்கு நன்றி

என் தவம் தலைவன் பணி செய்து கிடப்பதே

இது என் அனுபவம்



Kanavan film
கணவன் படம் kotehena colombo திரை அரங்கில் மிண்டும் திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடியபோதில் ஒரு நாள் கல்லூரியை cut அடைத்து விட்டு கையில் புத்தகத்துடன் காலைக் காட்சிக்கு நான் போனேன். இடைவேளையின் போது எனது பக்கத்து இருக்கையில் உள்ள தலைவர் ரசிகர் , கடை ஒன்றில் வேலை செய்பவர், எனக்கு கூல் டிரிங்கும் சுடச் சுட வடையும் வாங்கித் தந்தார். மறுத்த போதும் என்னை force பண்ணி வாங்க வைத்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவர, அதன் பின் எனக்கு சொன்னவை .


படிக்கும் காலத்தில் படிக்க வேண்டும், காலத்தே பயிர் செய்ய வேண்டும் , இனிமேல் கல்லூரியைக் cut பண்ண கூடாது.


எனக்குத் தெரியாத் ஓர் அன்பர், நான் MGR ரசிகர் என்பதால் மட்டுமே தன பணம் செலவு செய்து என் வயிறு நிரம்பிய பின் தலைவர் போலவே எனக்கு அறிவுரையும் தந்தார் நான் நலம் வாழ.


MGR போல் அவர் ரசிகர்களும் மனித நேயம் கொண்டவர்கள் அன்றி வேறில்லை.