-
23rd May 2013, 05:42 PM
#11
Senior Member
Seasoned Hubber
இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் - என்று கோபால் சார் தன்னுடைய ஆய்வின் தலைப்பை குறிப்பிட்டிருப்பதோடு நில்லாமல் அதனை நிலைநாட்டும் படியான கருத்துக்களையும் பதித்து வருகிறார். இன்னும் வர உள்ள கட்டுரைகள் நம்முடைய ஆவலைத் தூண்டும் வகையில் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளன என்பதும் திண்ணம். அது வரையில்...
நம் நடிகர் திலகம் சாதனை பற்றிய மற்றோர் திரியில் அடியேனால் துவக்கப் பட்ட நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும் தொடரின் மீள்பதிவு
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்
His system of actinghas developed an international reach.
அவருடைய நடிப்பு முறை உலக அளவிலான வீச்சை ஏற்படுத்தி வளர்த்தது.
He treated theatre-making as a serious endeavour, requiring dedication, discipline and integrity.
அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவை உண்மையாக தேவைப்பட்ட நாடக உருவாக்கத்தை அவர் ஒரு தவமாக்க் கருதி மேற்கொண்டார்.
Throughout his life, he subjected his own acting to a process of rigorous artistic self-analysis and reflection.
தன்னுடைய நடிப்பினை கலைத்தன்மைக்குட்பட்ட தீவிர சுயபரிசோதனைக்கும் அதன் வெளிப்பாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுமையாக உட்படுத்திக் கொண்டார்..
His development of a theorized praxis – in which practice is used as a mode of inquiry and theory as a catalyst for creative development – identifies him as the first great theatre practitioner.
ழக்கம் என்பதை கேள்வி வடிவமாகவும் கோட்பாடு என்பது ஆக்கபூர்வமான உருவாக்கத்திற்கான விளக்கமாகவும் அடிப்படையாக்க் கொண்டு அவர் உருவாக்கிய கோட்பாடு செயலாக்கம் – அவரை முதன்மையான சிறந்த நாடக தொழிலராக அறிய வைக்கிறது.
மேற்கண்ட வாசகங்கள் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களைப் பற்றி விக்கிபீடியா இணைய தளத்தில் அறிமுகமாக உள்ளவை. ஒவ்வொரு வார்த்தையும் நடிகர் திலகத்திற்கு எந்த அளவிற்குப் பொருந்துகிறது.
இது நம்முடைய அலசலின் துவக்கம் தான். இனி வரும் காலங்களில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புக் கோட்பாடு பற்றியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய நடிப்பிற்கும் உள்ள ஒற்றுமை அல்லது வேற்றுமை அல்லது இரண்டும் ... என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
அன்புடன்
மேற்காணும் பதிவுக்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post927638
இது துவக்கப் பதிவு மட்டுமே. இனி வரும் காலங்களில் முன்னர் உரைத்த முகவுரை மற்றும் கோபால் சாரின் ஆய்வுரை இவற்றையொட்டி பதிவுகள் இடம் பெறும்.
Last edited by RAGHAVENDRA; 23rd May 2013 at 06:49 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd May 2013 05:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks