-
2nd June 2013, 05:21 PM
#11
Senior Member
Diamond Hubber
சிலர் இவரது நடிப்பைத் தாழ்த்தி உரைக்கையில் அல்லது வீழ்ந்தார் அவ்வளவுதான் என்ற ஏளனக் கூச்சல்கள் வருகையில் சீரியஸ் ஆக மாட்டார். பொறுமை எல்லை கடக்குமளவிற்குப் போன பின் ஒருமுறை அவர் கர்ஜித்தது
"யாராவது கட்டபொம்மனை இந்த மாதிரி வடித்துக் காட்டுங்கள்
நான் எனது தொழிலை விட்டு விடுகிறேன்".
ஏன் இதைக் குறிக்கிறேன் என்றால் அவர் உயிர்ப் பாத்திரமான வ.உ.சி மாதிரி செய்து காட்டுங்கள் என்று அவர் உரைக்கவில்லை. கட்டபொம்மன் போல் செய்ய முடியுமா என்றுதான் கணை எழுப்பினார்.
இதிலிருந்து அந்த கட்டபொம்மனுக்குக்காக அவர் பட்ட பாடு தெரிகிறது. .
கட்டபொம்மனை இயல்புமீறி ஒரு ஆக்ஷன் கிங் ஆக அவர் ஒரு இடத்தில் கூட காட்டியதில்லை சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தும்கூட. இன்னும் சொல்லப் போனால் போர்க் காட்சிகள் கூட தத்ரூபத்தைதான் காட்டும்.
வீரத்தில் பழுதானவனில்லை... ஆனால் வீரம் மட்டும் காப்பாற்றாதே...மலையோடு எலி போதுவதைப் போலத்தான் மோத முடிந்தது. பீறிட்டுப் பாயும் பீரங்கி குண்டுகளின் தாக்குதல்களுக்கு வாட்களும் வேல்களும் ஈடுகொடுக்க முடியுமா!
இதை மிக அற்புதமாய் பிரதிபலிப்பார். படைகள் எதிரிகளிடம் சிக்கித் திணறும் போது உள்ளுக்குள் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்த மேதை படிப்படியாக முக, உடல், குரல் உணர்வுகளுடன் பார்ப்பவரை தன் கவலைகளோடு ஒன்ற வைப்பார். அதுதானே நடிகனுக்குக் கிடைக்கும் வெற்றி! அதே சமயம் வீரம் கிஞ்சித்தும் குறையாது.. அது வீம்புக்காக அல்ல என்பதையும் அழகாகப் புரிய வைப்பார். அதே சமயம் தோல்வியின் அவமானம் அகத்தைக் கொத்தித் தின்னுவதை உன்னிப்பாக அவரை கவனித்தால் உணரமுடியும். இழிநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்ற கவலை ரேகைகள் படர ஆரம்பிப்பதை தான் காட்டிக் கொடுக்கப்பட்டவுடன் காட்ட ஆரம்பித்து விடுவார்.
சிறுவயதில் கண்ட கூத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் இவரின் அணுக்களில் குடிகொண்டதால் வேறு இன்னும் வரலாற்றுச் சிறப்படைந்த வரலாற்றுப் பாத்திரம்.
Last edited by vasudevan31355; 2nd June 2013 at 06:34 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd June 2013 05:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks