Results 1 to 10 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல் - ஸ்பெஷல் வாசு சாருக்கு சமர்ப்பணம்



    வாசு சார் தாங்கள் ஒவ்வொரு பங்கேற்பாளரையும் மறக்காமல் பாராட்டி நன்றி தெரிவித்த பதிவிருக்கிறதே.. இதைப் பாராட்டுவதற்கே தனித்திரி தொடங்கலாம்.. நன்றியை எப்படிப் போற்ற வேண்டும், எப்படிப் பாராட்ட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்துள்ள பதிவு அது... தாங்கள் கூறியது போல் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அபாரம்.

    இதைப் படிக்கும் போது எனக்கு உடனே நினைவுக்கு வந்த பாடலைத் தங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன். இத்திரியில் உள்ள பங்கேற்பாளர் ஒவ்வொருவருக்கும் இப்பாடல் பொருந்தும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வைர வரிகளுடன் இப்பாடலைப் படித்தும் கேட்டும் ரசியுங்கள்.

    நன்றி இன்பமிங்கே இணையதளம்

    ஆளுக்கொரு வீடு திரைப்படத்திலிருந்து கே.ஜமுனா ராணி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மெல்லிசை மன்னர்களின் இசையில்...

    இப்பாடலில் மேண்டலின் அக்கார்டின் புல்லாங்குழல் மூன்றும் நம்மை மயக்கும் விதம்... ஆஹா... கேட்டு அனுபவியுங்கள்...

    http://www.inbaminge.com/t/a/Aalukkoru%20Veedu/

    இப்பாடலில் மெல்லிசை மன்னர் 54 ஆண்டுகளுக்கு முன் புரிந்துள்ள சாகசத்தை இன்று வரை யாராலும் கற்பனை கூட செய்ய முடியாது.. இந்தப் பாடலில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வரிகளை எழுதும் போது இந்த அளவிற்கு இப்பாடல் பிரமாதமாக உருவெடுக்கும் என நினைத்துக் கூட பார்த்திருப்பாரா எனத் தெரியாது..

    இந்தப் பாடலில் இசைக் கருவிகளைப் பற்றி மட்டும் எழுத வேண்டும் என்பதற்காகத் தான் இது எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் பாடல் முழுவதுமே இசைக் கருவிகளின் சிறப்பு பரவியுள்ள படியால் தனித்தனியே எழுதுவது சிரமமாயுள்ளது.

    கோரஸ் குரலுடன் துவங்குகிறது பாடல்.. தொடர்ந்து மேண்டலின்..மற்றும் கைதட்டல் ஓசைகள்...

    தொடர்ந்து பல்லவி அம்பது வருஷம்....

    பல்லவி முடிந்த உடனே ஒரு அக்கார்டின் கிளம்புகிறது... அந்த அக்கார்டின் துக்கடாக்களின் இடையில் ஒரு சின்ன கார்டு...அந்த துண்டு இசைக் கருவியின் ஓசையை காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்க வேண்டும்.
    இந்த அக்கார்டின் முடிந்தவுடன் மேண்டலின் நுழைகிறது...மேண்டலின் முடிந்த வுடன் புல்லாங்குழல். புல்லாங்குழல் முடிவில் ஒரு மாத்திரை அளவில் அக்கார்டின்... மீண்டும் மேண்டலின்..

    சரணம் துவக்கம்...

    சரணத்தின் கூடவே ஒரு லேசான புல்லாங்குழல் கூடவே இணைந்து வருகிறது...

    மீண்டும் பல்லவி...

    தொடர்ந்து பிஜிஎம் புல்லாங்குழலுடன் துவக்கம்...

    இப்போது வயலின்கள்.... சேர்ந்து கொள்கின்றன....

    இது முடியும் போது மீண்டும் ஒரு மாத்திரையளவில் ஒரு கார்டு...

    இம்முறை தனி கிடார் broken pieces...

    தொடர்ந்து கோரஸ்...

    தொடர்ந்து அக்கார்டின்...

    அதைத் தொடர்ந்து சரணம்...

    பின் பல்லவி..

    பல்லவி முடிவில் கோரஸ் ஹம்மிங்... லலலாலலலா லலலாலா...

    இந்த ஒவ்வொரு லலலாவுக்கும் இடையில் ஒரு கார்டு...

    இப்போது அடுத்த சரணத்திற்கு லீடாக அக்கார்டின் அதைத் தொடர்ந்து மேண்டலின்...

    இதைத் தொடர்ந்து புல்லாங்குழல்...

    அந்த புல்லாங்குழல் இடைவெளியில் ஒரு கார்டு ...

    வாழ்க வாழ்க வென்று பாட்டு முடிகிறது..

    ......

    இப்போது நாம் என்ன செய்வோம்...

    மீண்டும் இதே பாட்டை ரிபீட் செய்வோம்... ஒவ்வொரு இசைக் கருவியாய் போட்டுப் போட்டுக் கேட்போம்...

    இது தான் மெல்லிசை மன்னரின் இசைக்குள்ள சிறப்பு...


    பாடல் வரிகள்

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்கவே

    பல்லவி

    அன்பும் அறிவும் ஆசையும் நெறஞ்ச
    ஐயா வாழ்க வாழ்க..
    ஐம்பது வருஷம் இவரைச் சுமந்த
    அன்னை பூமி வாழ்கவே..

    அன்பும் அறிவும் ஆசையும் நெறஞ்ச
    ஐயா வாழ்க வாழ்க..
    ஐம்பது வருஷம் இவரைச் சுமந்த
    அன்னை பூமி வாழ்கவே..


    சரணம் 1

    சின்னக் குழந்தையைப் போலே
    துள்ளி விளையாடும் குணம் வாழ்க
    ஐயா.. குணம் வாழ்க

    ஒரு தினையளவு கூட
    சுயநலம் இல்லாத மனம் வாழ்க
    ஐயா மனம் வாழ்க..
    ஒரு தினையளவு கூட
    சுயநலம் இல்லாத மனம் வாழ்க
    ஐயா மனம் வாழ்க..


    ....அன்பும் அறிவும்

    கோரஸ் ஹம்மிங்...

    சரணம் 2

    காசு பணங்களை கைவிடலாகிய
    கை வாழ்க வாழ்கவே
    ஐயா கை வாழ்க வாழ்கவே

    காலந் தெரிஞ்சி அதை விடுதலை செய்த
    பை வாழ்க வாழ்கவே
    ஐயா பை வாழ்க வாழ்கவே
    ..... அன்பும் அறிவும்

    சரணம் 3

    அளவுக்கு மீறி நேசம் வைப்பதால்
    ஆபத்து வருமென்று
    ... ஆபத்து வருமென்று
    அள்ளி அள்ளியே வழங்குகின்றார் இவர்
    வள்ளல் வழியின்று
    வள்ளல் வழியின்று
    இமயமலையும் இவரும் ஒன்று...

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்கவே
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்கவே
    Last edited by RAGHAVENDRA; 14th August 2014 at 08:47 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •