-
4th April 2015, 08:56 AM
#11
Junior Member
Devoted Hubber
ஆய்வோம் அவன் ஆற்றல் அவன் ஏற்றம்
அறிவோம் அவன் அருமை அவன் பெருமை
இதமானது எது இறைவன் யார் ஆதாரமெது
அச்சுதன் யார் பக்தவத்சலன் யார் -தேடினார்
தேடி தெளிந்தார் தெளிந்தது பகன்றார்
நாடினார் நாடி கண்டுகொண்டார் பீஷ்மர்
நாராயணா வென்னும் நாமம் - நவின்றார்
ஆயிரம் திருநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம்
தருகிறான் விஷ்ணு தயக்கமின்றி கேள்
தருமம் பொருள் வம்சம் செழிக்கும்
துதிப்பவன் இருவினை இடரும் தீரும்
தூய்மையுடன் ஆயிரம் நாமம் சொன்னால்
நெறி சொல்லி நின்றாரில்லை பேரறிவு பீஷ்மர்
பெருமாள் பேர்பாட ஆயிரம் வைஷ்ணவ
அருந்தெய்வ திருநாமம் அடுக்கடுக்காய்
அருளினார் அழகாய் அம்பு படுக்கையில்
அஞ்சன வண்ணன் அமலன் விமலன் பேரோடு
இருடிகேசன் கோவிந்தன் பத்மநாபன் போக்தன்
அமரப்ரபு மதுசூதன் கேசவன் ஸ்ரீமான் என
அனந்த கல்யாண குணமாய் ஆயிரம் பேர்
அத்துடன் அநேகரூபன் அஜாதன் வனமாலி
ஆதித்யன் தாமோதரன் திரி விக்கிரமன்
அனுகூலா அச்சலா என சில நாமம் செதுக்கி
செவ்விய சஹஸ்ரனாம மாலை சேர்த்தார்
மாதவன் பேர் பாடவே மானுடம் உய்யவே
மண்ணு புகழ் மஹாவிஷ்ணு திருவடி சேரவே
// தொடரும் ... இது விஷ்ணு பற்றி அல்ல ராமனின் புகழ் சொல்ல :: எனது கிறுக்கல்கள் //
Last edited by Muralidharan S; 5th April 2015 at 07:48 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th April 2015 08:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks