-
11th June 2015, 07:31 PM
#31

Originally Posted by
vasudevan31355
இது மதுர கானங்கள் திரி. அடித்துக் கொள்வதற்கு, மண்டை உடைத்துக் கொள்வதற்கு, அடுத்தவனை சண்டை மூட்டி விட்டு சுகம் கண்டு இன்பம் கொண்டாட இது கலகத் திரி அல்ல. இது ஒரு பொதுத் திரி. பாடல்கள் பற்றிய திரி. ஒருவர் புகழ் பாடும் திரியும் அல்ல. இது ஒரு முட்டாளுக்குக் கூடத் தெரியும்.
கள்ள வேடம், கபட வேடம் போட்டு ஊரை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கவில்லை. கமல் 5 சிம் கார்ட் வைத்து 'உன்னைப் போல ஒருவன்' படத்தில் மாய்மாலம் செய்வது போல 5 ஐ டி வைத்து ஈனப் பிழைப்பு பிழைக்கவும் வில்லை.
முன் போல அவசரப்பட்டு தவறாக எழுதி மன்னிப்பு கேட்டு மண்ணைக் கவ்வவும் வில்லை.
தமிழ் டைப் அடிக்கத் தெரியாது என்று அண்டப் புளுகு விடவுமில்லை.
கணணி பழுது என்று காது குத்தவும் இல்லை.
அன்றைக்கும்,இன்றைக்கும் என்றைக்கும் நடிகர் திலகம்தான் தெய்வம்.
இது ஊருக்கும் தெரியும். உலகத்துக்கும் தெரியும்.
தானே பதிவு போட்டு இன்னொருத்தர் பெயரில் தானே பாராட்டிக் கொள்ளும் லூஸு வேலையும் இல்லை. மென்டல் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நிலையிலும் இல்லை.

உளவு வேலை பார்க்கும் சி.ஐ.டி சங்கரும் இல்லை.
இதற்கு மேல் முட்டாள்களுக்கு பதில் சொல்லப் போவதுமில்லை.
தெரிந்ததெல்லாம் இறைவன் நடிகர் திலகம் ஒருவரே!
1) நடிகர்திலகம் திரியில் நான் பதிவிட்டதற்கு அங்கேதானே பதில் சொல்ல வேண்டும். இங்கே பதில் பதிவிட்டு இந்த திரியில் கலகத்தை துவக்கியது நானா நீங்களா?.
2) கணினி பழுது யாருக்கும் வரும். உங்களுக்கும் வந்திருக்கிறது.
3) தமிழில் டைப் பண்ண முன்பே கற்றுக்கொண்டுவிட்டேன் (பிரபுராம் அவர்கள் வழிகாட்டலில் ). சமீபத்தில் தமிழ் கன்வெர்ட்டர் வேலை செய்யவில்லை என்றுதான் ஆங்கிலத்தில் பதித்தேன்.
4) பல ஐ.டி. விவகாரம் ஏற்கெனவே மாடரேட்டர்களால் ஆராயப்பட்டு புகாரில் உண்மையில்லை என்று அறிந்த பிறகே என்னை தொடர்ந்து அனுமதித்துள்ளனர்.
நீங்கள் வனவாசம் போயிருந்த நாட்களில் ரவி, சி.க., இவர்களோடு சேர்ந்து இந்த திரியை இழுத்த கல்நாயக்கை கூட முன்பு என்னில் ஒருவன் என்றார்கள்.
(ஸ்டெல்லா என்ற பெயரில் உங்கள் பதிவுகளை "மட்டுமே" பாராட்டிக் கொண்டிருக்கும் அந்த அம்மையார் யார்?. அவருக்கு சின்னக்கண்ணன், ரவி, கல்நாயக், ராகவேந்தர், கலைவேந்தன் பதிவுகளெல்லாம் கண்ணுக்கு தெரியலையோ? . அது உங்களின் இன்னொரு ஐ.டி தானே)
-
11th June 2015 07:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks