-
22nd September 2015, 03:51 AM
#11
Junior Member
Senior Hubber
தாயாகி வந்து
தமிழாக நின்றவனே - என்
உயிராகி வந்து
உணர்வாகி உள்ளவனே
நானாகி வந்து
நினைவாகி பதிந்தவனே
தனியாக நின்ற என்
துணையாக வந்தவனே
நெருப்பான என்னை
நிலவாகத் தணித்தவனே
நெறியாக வாழ
அறிவாகி நின்றவனே
கனவான என்னை
நனவாக்கித் தந்தவனே
கல்லான மனத்தை
கனியாக்கி மகிழ்ந்தவனே
கருவாகி வந்து
கவியாக மலர்ந்தவனே
இரவாகி வந்து
இரண்டறக் கலந்தவனே
கண்ணாகி நின்று
கனிவைத் தந்தவனே - என்
கலையாக நின்று
பெருமை தந்திடாயோ
தமிழ்க் கவியாகி வந்து என்
பெயர் தன்னை சொல்லிடாயோ
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
22nd September 2015 03:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks