-
28th October 2015, 10:49 PM
#11
Senior Member
Senior Hubber
Originally Posted by
madhu
சிக்கா...
எட்டாத உயரம் அல்ல எட்டாயிரம் இன்னும்
எத்தனையோ எட்ட வேண்டும் நீர் சீக்கிரம்
ஆமா.. அதென்ன பழைய பாட் என்பதால் மதுண்ணா... எனக்கு புத்ப் பாட் புடிக்தா என்ன ?
இந்தப் பாட்டும் புடிக்கும் தெரிஞ்சுக்குங்
தெகிடி பாட்டுக்கு நன்றி மதுண்ணா.. அதுல பார்த்தேள்னாக்க தெகிடி நல்ல சஸ்பென்ஸ் படம்..கொஞ்சம் ஃபேமஸான ஹீரோ போட்டு எடுத்திருக்கலாம்..அஷோக் செல்வனும் குறைவிலாமல் நடித்திருப்பார்.. செம முழி கொண்ட ஜனனி அய்யர்..கொஞ்சம் மஞ்சள் வெண்ணிலா போல வட்ட முகம்..பளீர் பல்வரிசை (கோல்கேட்டா க்ளோஸப்பா)
படம்பார்க்கும்போதே வரிகள் வித்தியாசமாக இருக்கேன்னு நோட் பண்ணினேன்..பட் மறுபடி கேட்க பார்க்க ச் சந்தர்ப்பம் வரவில்லை.. நீங்க கொடுத்தீஙக்.. ஸோ..
லிரிக்ஸ் எழுதினது கபிலனாம்.. (இவர் கபிலன் வைரமுத்து இல்லைன்னு நினைக்கறேன்)
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உன்னை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடீ
முதன் பெண் தானே நீ தானே
எனக்குள் நானே ஈர்ப்பேனே
**
நல்லாத் தான் இருக்கு வரிகள்..என்னைக் கவர்ந்த புது(?) பாடல்
யுகபாரதி..தனக்கென ஒரு கோடெழுதி தாண்டாத கவிஞர்..எனக்கு மிகப் பிடிக்கும்..
சிவப்பதிகாரத்தில் சட்டென மனம் கொய்யும் இரண்டாவது பாடல் (முதல்பாட் சித்திரையில் என்ன வரும்)
அடிதொட முடிதொட
ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை
பொடிபட பொடிபட
நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை
முடிதொட முகந்தொட
மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிட பருகிட
ஏக்கம் இளகிட
கூடும் அனலிது குளிர்வீசும்
தளும்பினேன் எனைநீதொட
மயங்கினேன் சுகம்சேர்ந்திட
குலுங்கினேன் உடல்கூசிட
கிறங்கினேன் விரல்மேய்ந்திட
பாய்ந்திட ஆய்ந்திட
காணுகின்ற காதல்
என்னிடம் நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்
உடலெது உடையெது
தேடும் நிலையிது
காதல் கடனிது அடையாது
இரவெது பகலெது
தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது
கனவெது நினைவெது
கேட்கும் பொழுதிது
காமப் பசிவர அடங்காது
வலமெது இடமெது
வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது
உறங்கலாம் அதிகாலையில்
ஒதுங்கலாம் இனிமாலையில்
தயங்கலாம் இடைவேளையில்
நிரம்பலாம் உயிர்ச்சோலையில்
கூடலில் ஊடலில்
காணுகின்ற காதல்
என்னிடம் நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்
அற்றை திங்கள் வானிடம்
அல்லிச் செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல்
என்னிடம் நான்
தேடுகின்ற யாவும்
உன்னிடம்
ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனா என நினைவில்லை..பட் மிக மனங்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று..(ராகதேவன் என்னவாக்கும் ராகம்)
மறக்காததற்குக் காரணம் ஹீரோயின் மம்தா மோகன் தாஸ்.. அழகு மட்டுமல்ல அவரது மனவுறுதியினாலும் தான்..இன்னும் நோயை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2015 10:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks